Friday, October 1, 2010

ரேப் ட்ராகன் - 21


அவர்

இணைய தளபதி ரஃபிக் அவர்களின் ரிஸ்க் ரொம்மான்ஸ்ஸ்ஸ்

சொகுசு விடுதியின் அறையினுள் தன்னுயிரை நீக்க திடம் கொண்ட ரஃபிக்கின் மனக் கண்களின் முன்பாக அவன் கடந்தகால வாழ்வின் பளபளக்கும் பக்கங்கள் விசிறிகளாக விரிந்து மடங்கின. அப்பக்கங்களை தீராத தாகத்துடன் சுவைத்துக் கொண்டு பஞ்சணை வீரமரணத்திடம் தன்னை மெல்ல மெல்ல அந்த வீர வாலிபன் கையளித்துக் கொண்டிருந்த சமயத்தில்… ஆம், நானும் அறிவேன்….என்று ஒலித்த அந்த இனிய குரல் ரஃபிக்கை மீண்டும் அந்த சித்தரவதை கூடத்திற்கு அழைத்து வந்தது.

- ஆகா.. என்னே இனிமையான குரல், இது என்ன குயின்ஸ்லேண்ட் குயிலின் கீதமா இல்லை கீரின்லேந்து கிளியின் சங்கீதமா… ஏன் இந்தக் குரல் என் நரம்புகளை கரைக்கிறது, என் ரத்தத்தின் வெப்பத்தை மூட்டுகிறது, ஏன் என் இதயத்தில் காதலின் வரவேற்பு சங்கீதம் ஆலாபனை செய்கிறது.. ஏன்.. ஏன்..ஏன்… ரஃபிக்கின் மனதில் கேள்விகள் அலை அலையாக கரைமோதின.

பஞ்சணையில் விலங்கிடப்பட்ட நிலையில் கிடந்த ரஃபிக்கின் விழிகள் அந்த இனிய குரல் வந்த வழியில் தம் பாதங்களை பதித்தன. மேலே பயணித்தன. அவன் விழிகளின் பயணம் முடிவடைந்த இடத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுருவம் அந்த வாலிபனின் மனதை லப்பு டப்பு என்று துடிக்க வைப்பதற்கு பதிலாக காதல்…காதல்.. காதல் என வேகமாக துடிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய ரஃபிக்கின் விழிகள் கலங்க ஆரம்பித்தன.

சொகுசு விடுதியின் கூரையில் தலைகீழாக தன் பேரழகை தொங்க விட்டிருந்த அந்த நங்கையின் கபில நிற விழிகள் ரஃபிக்கின் இதயத்தை கூரான ஊசி முனைகள்போல் துளைபோட்டன. தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அங்க லாவண்யங்ளை தாகம் கொண்ட சிசு போல் பருக ஆரம்பித்தான் ரஃபிக். அவனது கலங்கரை விளக்கில் ஒரு விம்மல் உதித்தது.

கபிலவிழியாள் தலைகீழாக தொங்கினாலும் அவள் வாளிப்பான தொடைகளிலிருந்து பிடிவாதமாக கீழே இறங்க மறுத்த அந்த அதி குட்டைப் பாவாடையை தன் மனதில் சபித்தான் புரட்சிக்காரன். தட்டையாக வழுக்கி நீண்ட அவளின் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில் நிமிர்ந்து நின்ற குன்றுகள் அவனை எச்சில் விழுங்க வைத்தன. பின்புறமாக உதித்த மேடுகளை முழுமையாக தரிசித்திட அவன் உள்ளம் ஏங்கியது. திறந்திருந்த அவளது வயிற்றுப் பகுதியில் அழகான சிரிப்பாக இருந்த அந்த தொப்புளை ஊடுருவி நின்ற வளையலின் முனையில் மினுங்கிய பச்சைக் கல்லின் மீது ஜோ என்ற எழுத்து பதிந்திருந்தது. புரட்சிக்காரனின் ஒழுக்கம் அவனிடமிருந்து விடைபெற்றது. புரட்சி அவனில் கருகியது. அவன் உதடுகள் விடாது துடித்தன. நாக்கு அலைபாய்ந்தது.

- தலைகீழாக தொங்கும் பேரழகே, உன்னிடம் என் மனம் திறந்தேன். நான் உன்மீது காதல் கொண்டேன். என் உடல், பொருள், ஆவி என யாவும் இனி உனக்கே தந்தேன். என்னை ஏற்றுக்கொள் இல்லை மேலும் உன் விழிகளை என்மீது பாய்ச்சி என் உயிரைக் கொள்…. உணர்சிப்பிழம்பாக விழுந்த ரஃபிக்கின் காதல் வார்த்தைகளை கேட்ட அந்தக் கபிலவிழியாள் கூரையிலிருந்து அறைக்குள் குதித்தாள். அவள் கூரையிலிருந்து குதித்தது ஒரு கரும் பறவையின் தரையிறங்கலின் அழகை தன்னில் கொண்டிருந்தது.

கபிலவிழியாளின் இடையூறால் சற்று வெலவெலத்துப்போன இரு அழகிகளும் ரஃபிக்கின் இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு மனம் நொந்து புண்ணாகினார்கள்.

- நயவஞ்சக புரட்சிக்காரா, எம் காதல்களையும், கெஞ்சல்களையும் மறுத்து எம்மை வன்முறையின் பாதையினை அணைக்கத் தூண்டிய நீ, இந்த வவ்வால் மாமியைக் கொஞ்சிக் குலாவி சரசமாடத் துடிக்கிறாய், டேனி, இவனை இப்போதே கொல்ல வேண்டும் என என் மனம் துடிக்கிறது என்ற இளவரசி, அறையில் தன் மனத் துடிப்பை நிறைவேற்றக்கூடிய ஆயுதங்கள் ஏதேனும் உண்டா என தன் பார்வையை ஓட்டினாள்.

கூரையில் இருந்து அறையினுள் இறங்கிய கபிலவிழியழகி, இருளிற்கு கறுப்பு சாயம் பூசியது போன்ற வண்ணம் கொண்ட தன் நீண்ட கருங்கூந்தலை தடவிக் கொடுத்தாள். பருத்த தன் வாழைத் தண்டுத் தொடைகளை அசைத்து ஒரு கவர்ச்சியான நடை நடந்தவாறே ரஃபிக் விலங்கிடப்பட்டிருந்த பஞ்சணையை நெருங்கிய அவள், சாட்டை அடியால் ரஃபிக்கின் உடலிலிருந்து துளிர்த்துக் கொண்டிருந்த குருதியை நோக்கி தன் விழிகளை செலுத்தினாள். அவள் கரங்கள் ரஃபிக்கை நோக்கி நீண்டன. அவள் விரல்கள் ரஃபிக்கிலிருந்து துளிர்த்த ரத்தத்தை தொட்டு அவள் இதழ்களிற்கு மீண்டன. அவளது நீண்ட நாக்கு, விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த குருதியைத் தீண்டியது. ம்ம்ம்ம்ம்…… ரத்தத்தின் உன்னத சுவையை அனுபவிப்பதுபோல் தன் கண்களை மூடினாள் கபிலவிழியாள்.

- புரட்சிக்காரனின் ரத்தமும் புனிதர்களின் ரத்தம் போல் இனிக்கவே செய்கிறது என்று ரஃபிக்கின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட கபிலவிழியாள் கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். அளவிற்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருந்த கபிலவிழியாளின் வேட்டைப் பற்கள் தந்தங்கள் போல் தோற்றம் தந்தன. அந்தப் பற்களின் கவர்ச்சியில் ரஃபிக் தன்னை இழந்தான். ஆகா .. அந்தப் பற்கள் என் மேனியில் பதியாதா, என் உடலை செல்லமாக கடிக்காதா என அவன் மனதினுள் விம்மினான். கபிலவிழியாளின் விரல்கள் தன் மீது பட்டதால் தான் பிறந்த பலனை அடைந்த புரட்சிக்காரன்….

- புரட்சிக்காரனின் உதடுகளை உன் நாக்கு ஒரு முறை சுவைத்தது எனில், அமிர்தத்தின் இலக்கணம் என்ன என்பதை அது தெரிந்து கொள்ளும் பாக்யம் பெறும் பேரழகியே என்று குழைவாக பேசினான்.

ரஃபிக்கின் இந்தக் குழைவான குரலை பொறுத்துக் கொள்ளமுடியாத டேனி, துரோகி, ஓரவஞ்சனைக்காரா என்று ரஃபிக்கை பார்த்து கத்தினாள்.

- அடக்கு உன் குரலை என டேனியை நோக்கி சீறினாள் கபிலவிழியாள். அந்தக் குரலில் சேர்ந்திருந்த வன்மையில் டேனி ஒடுங்கினாள்.

- தங்கலிங்க ரஸவாதம் தெரிந்த ஒருவரை நீ அறிவாய் என்று சற்று முன் கூறினாய் அல்லவா கபிலவிழியாளின் கேள்வி டேனியை நோக்கி நீண்டது.

- ஆமாம்… அச்சம் கலந்த குரலில் பதில் தந்தாள் டேனி.

- அவரின் கண்கள் கிளிகள் பார்த்து வெட்கம் கொள்ளும் பச்சை வண்ணமாக இருந்திருக்குமே… கபிலவிழியழகின் குரலில் இனிமை எல்லை மீற ஆரம்பித்தது

அவர் என்ற சொல்லை கபிலவிழியாள் உச்சரிக்கையில் அவள் கொண்ட மாற்றங்களை கூர்ந்து அவதானித்துவிட்ட ரஃபிக்… அவன் யாரோ, எவனோ, அந்தப் பச்சைக் கண்ணனைக் கொல்லாது நான் என் உயிரை விடமாட்டேன் என உணர்சிவசப்பட்டுக் கத்தினான். யாரோ ஒரு முகம் தெரியாத அந்நியனை கபிலவிழியாள் அன்பு சொரியும் குரலில் அவர் என்று அழைத்தது ரஃபிக்கின் உயிரை உலுக்கியது.

- புரட்சிக்காரனே, அவரைக் கொல்லும் முன்பாக நீ என்னைக் கொல்ல வேண்டும் அதன் முன் நான் உன்னைக் கொன்றிருப்பேன் என்று ரஃபிக்கிற்கு பதிலடி தந்தாள் கபிலவிழியாள்.

அவர், அவர் என்ற சொற்களில் கபிலவிழியாள் சொரிந்த பிரியம் ரஃபிக்கிற்கு விஷமாகக் கசந்தது…. புரட்சித்தாயே இது என்ன புதிய சோதனை, இந்தக் கதையை எழுதுபவனிற்கு நல்ல புத்தியைக் கொடு தாயே என்று குரலெடுத்துக் கதறினான் ரஃபிக். அவன் மனதில் அரும்பிய காதல் மொட்டில் கண்ணீரின் பனித்துளி தன் மென்சோக சித்திரத்தை வரைய ஆரம்பித்தது.

Thursday, September 23, 2010

வீட்டுப்பேயின் கொடுமைகள்


அம்ப்ரெல்லா நிறுவனத்தின் தயாரிப்பாகிய டி வைரஸின் கைங்கர்யத்தினால் உலகின் மனிதகுலத்தின் பெரும்பகுதி ரத்தவெறி கொண்ட நடைபிணங்களாக உருமாறிவிடுகிறது. இந்த கொடிய வைரஸின் தாக்குதலிருந்து தப்பிப்பிழைத்த மனிதர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களை பாதுகாப்பான இடமொன்றிற்கு அழைத்து செல்லும் தன் பயணத்தை தொடர்கிறாள் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் பிறிதொரு உற்பத்தியான ஆலிஸ் [Milla Jovovich]. ஆனால் ரத்தவெறி கொண்ட நடைபிணங்களையும், பலம்வாய்ந்த அம்ப்ரெல்லா நிறுவனத்தையும் தன் பயணத்தில் இன்னமும் எதிர்த்துமோத வேண்டிய கட்டாயம் ஆலிஸிற்கு இருக்கிறது…

நல்ல கதை வேண்டாம். ஏன் கதையே வேண்டாம். சிறப்பான மோஸ்தருடன் உருவாக்கப்படும் ஆக்‌ஷன் காட்சிகளும், திறமை வாய்ந்த இயக்குனர் ஒருவர், தன் இயக்கம் மூலம் திரைப்படத்தை நளினமாக நகர்த்திச் செல்லும் வேகமும், பெரும்பாலான சமயங்களில் ஆக்‌ஷன் திரைப்பட பிரியர்களின் மனங்களை ஒரளவேனும் திருப்தி கொள்ளவைத்து களிப்பூட்டும். Paul W.S. Anderson இயக்கியிருக்கும் Resident Evil: After Life ல் சுவாரஸ்யமான புதிய கதைதான் இல்லை- தொடர்ந்து இதே கதைதானே என்ற உணர்வு எழாமலில்லை- என்றால், ஏனையவைகளும் அங்கு இல்லை. ஆனால் அவதாரில் பயன்படுத்தப்பட்ட 3D Fusion Camera System இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தில் அதன் பயன் என்ன என்பதை புரிந்து கொள்வதில்தான் சிரமமிருக்கிறது.

குளிர்பதனப்பெட்டியிலிருந்து அழுகிய தக்காளியை ஒத்த கதை ஒன்றை எடுத்துக்கொண்டு தைரியமாக படத்தை இயக்கியிருக்கிறார் ஆண்டர்சன். இந்த தைரியம் இனிவரும் நாட்களில் பல புதிய இயக்குனர்களிற்கு முன்னுதாரணமாக திகழும் என்றால் அதில் எந்த ஐயமும் எனக்கில்லை.

டோக்கியோவில் அமைந்திருக்கும் அம்ப்ரெல்லா நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆரம்பிக்கும் சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பமாகிறது திரைப்படம். அந்த முதல் நிமிடங்கள் முதலே ரத்த வெறி பிடித்து, மனித மாமிசம் தேடி அலையும் நடைபிணங்களைவிட தான் மிகவும் கொடியவன் என்பதை ரசிகர்களிற்கு உணர்த்துவதில் பெரும் வெற்றி காண்கிறார் இயக்குனர் திரு ஆண்டர்சன் அவர்கள். டோக்கியாவில் விழ ஆரம்பித்த அடி, அலாஸ்கா வழியாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரம்வரை தொடர்கிறது. பலமாக. படத்தின் பாதியில் எழுந்து சென்றவர்கள் பாக்யம் செய்த ஆத்மாக்கள்.
resident-evil-afterlife-2010-8882-1940635060 கவர்ச்சி என்பது பூஜ்ஜயத்திற்கும் கீழே இறங்கி உறைந்துவிட்ட தாரகை மிலா ஜோவோவிச், நுட்பமான மெல்லசைவில், விறுவிறுப்பு அற்ற விதமாக உருவாக்கப்பட்டிருக்கும், பார்த்துப் புளித்துப்போன சண்டைக் காட்சிகள் ஆ லா மேட்ரிக்ஸ், சாம்பலில் ஷாம்பூ குளியல் எடுத்த பூனைகள்போல் இயக்குனரின் ஸ்டார்ட் ஆக்‌ஷன் குரலிற்காக காத்திருக்கும் வீர்யமிழந்த நடைபிணங்கள் என ஏமாற்றம் மென்னியைக் கடிக்கிறது. இது போதாது என்று பின்னனி இசையானது ரசிகர்களின் செவிப்பறையை வெளியே இழுத்து எடுத்து கூரான ரம்பத்தால் உராய்கிறது.

கதையும் இல்லை, கதாநாயகியும் அவுட் என்றால் துணைப்பாத்திரங்களின் தெரிவு மகா கொடுமை. அவர்களின் நடிப்பு மெகா கொடுமை. இவர்கள் எல்லாரையும் விட வில்லன் பாத்திரம் அல்டிமேட் கொடுமை. ரெஸிடெண்ட் எவில் திரைப்படம் கொடுமையையே கண்ணீர் வடிக்க செய்யும் ஒரு கொடுமை.

அட படத்தின் முடிவிலாவது ரசிகர்களை நிம்மதியாக வெளியேற விட்டார்களா!!! திரையில் எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தை இடைநிறுத்தி, சனிபகவான் தனக்கு சந்தா கட்ட மறக்காதீர்கள் என மெயில் அனுப்பியதுபோல் ஐந்தாம் பாகத்திற்கு அச்சாரம் போடுகிறார்கள்.

ரெஸிடண்ட் ஈவில் திரைப்பட இயக்குனர், தமிழ் கூறும் நல்லுலகின் எந்த மோசமான இயக்குனருடன் போட்டியிட்டாலும், தமிழ் கூறும் நல்லுலகிற்கே வெள்ளிக் கரடி கிடைக்கும். அதேபோல் ரெஸிடெண்ட் ஈவிலின் நடிப்புத் திறமைகளுடன் தமிழ் சினிமா உலகின் இளைய தளபதி, கேப்டன், பசுநேசன் ஆகியோரின் முழுத்திறமைகளையும் கலந்துகட்டி மோதவிட்டால்கூட தமிழின் மும்மூர்திகளே ஆஸ்கார்களை அள்ளுவார்கள். உலகின் மிக மோசமான திரைப்படங்கள் பட்டியலில் உடனடியாக சேர்ந்து கொள்வதற்கான முழுத்தகுதியும் ரெஸிடெண்ட் ஈவிலிற்கு இருக்கிறது. ரெஸிடென்ட் ஈவில், ஆக்‌ஷன் சினிமாவினதும், அதன் ரசிகர்களினதும் அதி உச்ச அவமானம்.
DiableDiableDiableDiable

தலைப்பு உபயம் பாண்ண்ண்டி மைனர் அவர்கள்.

ட்ரெயிலர்[ ம்க்க்கும்]

Wednesday, September 22, 2010

ஏதாவது ஒரு கரையில்


டக்ளஸ் மக்ரேயும் [Ben Affleck], அவனது சகாக்களும், வங்கிக் கொள்ளைகளிலும், பணத்தை பாதுகாப்பாக எடுத்து செல்லும் கவசவாகனக் கொள்ளைகளிலும் நிபுணர்கள். ருசுக்கள் எதையும் விட்டுவிடாது இவர்கள் நிகழ்த்தும் கொள்ளைகளால், FBI யும், பாஸ்டன் காவல்துறையும் இவர்களை கைது செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.

இந்நிலையில் வங்கிக் கொள்ளை ஒன்றில் டக்ளஸ் மக்ரே குழுவினரால் பணயக்கைதியாக்கப்பட்டு சில மணி நேரங்களில் விடுவிக்கப்படும் பெண்னான கிளேய்ர் [Rebecca Hall], சட்டத்தின் காவலர்களிடம் ஏதேனையும் உளறிக் கொட்டிவிடுவாள் எனும் அச்சத்தில், அவளைக் கண்காணிக்கும் பொறுப்பை டக்ளஸ் தான் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் கிளேய்ரை கண்காணிக்க சென்ற டக்ளஸ் மெல்ல மெல்ல தன் மனதை அவள் கொள்ளையடிப்பதை உணர ஆரம்பிக்கிறான்….

நடிகர் பென் அஃப்லெக், சூப்பர் ஹீரோ வேடம் முதல் சிஐஏ எஜென்ட் வேடம் வரை பல வேடங்களில் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் பிரபலத்திற்கும் அவரிற்குமிடையிலான இடைவெளி பிடிவாதமாக சுருங்க மறுத்துக் கொண்டிருக்கிறது. அவர் சிரத்தையுடன் நடிக்கும் போதெல்லாம் அந்த நடிப்பிலிருந்து ரசிகர்களின் கவனத்தைக் குலைக்கும் அவரது நீண்ட கீழ்தாடையை இதற்கு காரணமாக சொல்லலாமா.

ஆனால் நடிகர் பென் அஃப்லெக்கிற்குள் ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறார் என்பதனையே The Town திரைப்படம் தெளிவாக்குகிறது. நட்பு, குடும்பம், காதல், வஞ்சம் என த்ரில்லர் திரைப்படங்களின் மரபான பாதையிலிருந்து விலகாது தரமான ஒரு த்ரில்லரை தந்திருக்கிறார் இயக்குனர் பென் அஃப்லெக். அதேபோல் இயக்குனர் பென் அஃப்லெக், நடிகர் பென் அஃப்லெக்கிற்கு அவரது திரைவாழ்க்கையின் முக்கிய பாத்திரத்தை வழங்கியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவரது முதல் இயக்கமான Gone Baby Gone திரைப்படமானது டெனிஸ் லுகேன் எழுதிய நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. இம்முறை நாவலாசிரியர் Chuck Hogan எழுதிய Prince of Thieves நாவலைத் தழுவி The Town உருவாக்கப்பட்டிருக்கிறது. [சக் கோஹனுடன் இணைந்து பிரபல இயக்குனர் Guillermo del Toro, காட்டேரி நாவல்களை எழுதி வருகிறார்.]

the-town-2010-13579-1862857043 பாஸ்டன் நகரின் புறநகர் பகுதியான சார்ல்ஸ்டவுனில் வாழ்ந்து வரும் சில அயர்லாந்து சந்ததியினரின் பரம்பரை தொழிலாக கொள்ளை அடித்தல் இருந்து வருகிறது. சார்ல்ஸ்டவுனில் இருக்கும் இந்த குற்ற சமூகத்தின் மீதான மேலோட்டமான ஒரு பார்வையை இத்திரைப்படம் முன்வைக்கிறது. ஆட்டுவிப்பவர்கள், ஆடுபவர்கள், பலியாபவர்கள், பரிதாபமான பெண்கள், சிதைந்துபோன குடும்ப அமைப்பு என உலகில் எங்குமிருக்ககூடிய ஒரு குற்ற சமூகத்தின் கூறுகளை சார்ல்ஸ்டவுன் குற்ற சமூகமும் தன்னுள் கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் பிரதான பாத்திரமான டக்ளஸ் மக்ரே குற்ற சமூகத்தின் சராசரி மனிதனிலிருந்து சற்று வேறுபட்டவனாக சித்தரிக்கப்படுகிறான். இதனையே ஒரு குற்றச் சாட்டாக, டக்ளஸ் மக்ரேக்கு ஒரு சகோதரனாக இருக்கும் ஜேம்ஸ் [Jeremy Renner ] பாத்திரமும் படத்தின் முக்கியமான ஒரு தருணத்தில் அவன் முன் வைக்கிறது.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் பணயக்கைதியாக கொண்டு செல்லப்பட்டு பின் விடுவிக்கப்படும் கிளேய்ரின் பயம் பீடித்த கண்ணீர் தருணங்களினுள் ஆறுதல் காற்றாக நுழையும் டக்ளஸ், பின் படிப்படியாக கிளேய்ரின் குணாதிசயங்களில் தன்னை மயக்கி கொள்ள ஆரம்பிக்கிறான். கிளேய்ரிடம் அவன் நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக அவன் கடந்த காலத்தின் கதை சுருக்கமாக விபரிக்கப்படுகிறது.

சிறுவயதில், தன்னையும், தன் தந்தையும் தவிக்க விட்டு பிரிந்து சென்ற தன் தாய் குறித்த ஏக்கம் டக்ளஸில் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. அதேபோல் இளம் பருவத்தில் அவன் கண்ட எதிர்காலக் கனவுகள் சிதைந்து போனதால் அவன் குற்ற வாழ்க்கைக்குள் நுழைந்தது அவனுடன் ஆறாத வெப்பமாகவே பயணிக்கிறது. கிளேய்ருடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க விரும்பும் டக்ளஸ், கொள்ளை அடிப்பதை நிறுத்துவது எனும் முடிவிற்கு வருகிறான்.

the-town-2010-13579-226254045 கிளேய்ரிற்கும், டக்ளஸிற்கும் இடையிலான காதல் காட்சிகளில் மிகைத்தன்மை என்பது இல்லை ஆனால் அக்காட்சிகளில் பதிக்க வேண்டிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த பென் அஃப்லெக் சிரமப்படுகிறார். இவர்கள் இருவரிற்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் மனதை நெகிழ்ச்சியோடு தொட்டாலும் அவற்றில் போதிய உணர்ச்சிகள் இல்லையே என்ற ஒரு உணர்வு. மாறாக கொள்ளை அடிப்பதை நிறுத்தி விட்டு சார்ல்ஸ்டவுனையே விட்டு தான் கிளம்பி செல்லப்போவதாக டக்ளஸ் தன் நண்பனான ஜேம்ஸிடம் தெரிவிக்கும் தருணத்தில், ஜேம்ஸ் பாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர் ஜெரெமி ரென்னெரும், நடிகர் பென் அஃப்லெக்கும் பின்னி எடுத்திருக்கிறார்கள். பென் அஃப்லெக் ஒரு நல்ல நடிகன்கூட என்று உரத்துச் சொல்லும் தருணம் அது. துரதிர்ஷ்டவசமாக முரட்டுச் சுபாவம் கொண்ட ஒரு கொள்ளையனாக மிரட்டுவதை தவிர ஜெரெமி ரென்னெரிற்கு தன் திறமையைக் காட்ட தகுந்த வாய்ப்பு படத்தில் இல்லை.

சிறு பாத்திரங்களில், சிறு கணங்களே வந்தாலும் டக்ளஸின் தந்தையாக வரும் நடிகர் Chris Cooper ம், பூக்கடைக்கார மிரட்டல் தாதாவாக வரும் நடிகர் Pete Postlethwaite ம் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ரோஜா தண்டுகளை வெட்டியவாறே நடிகர் பீட் பொஸ்தில்த்வெய்ட், தன் வார்த்தைகளால் பென் அஃப்லெக்கிற்கு போடும் போடு, அட்டகாசம்.

டக்ளஸ் கூட்டத்தை கைது செய்வதற்காக எந்த வழியையும் கையாள தயங்காத FBI, கிளேய்ரின் உயிரிற்கு ஆபத்தை விளைவிப்போம் என மிரட்டி டக்ளஸை வலுக்கட்டாயமாக இணைத்து நடாத்தப்படும் ஒரு கொள்ளை, தன் தாய் பிரிந்து சென்றதற்கான உண்மைக் காரணத்தை அறிந்து கொள்ளும் டக்ளஸ் என படத்தின் பின்பகுதி வேகம் பிடிக்கிறது.

அசர வைக்கும் சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள், அதிரடி துப்பாக்கி மோதல்கள், நெகிழ வைக்கும் முடிவுகள் என திரைப்படத்தின் இறுதி 30 நிமிடங்களிலும் தேர்ந்த அனுபவம் கொண்ட ஒரு இயக்குனர்போல் பார்வையாளனை அணுங்கவிடாது திரைவசியம் செய்கிறார் இயக்குனர் பென் அஃப்லெக். ஒரு நல்ல நடிகன் என்பதைவிட ஒரு சிறந்த இயக்குனராக அவர் வழங்கியிருக்கும் The Town கண்ணியமான ஒரு படைப்பு ஆகும். டக்ளளஸ், கிளேய்ரை ஏதாவது ஒரு கரையில் காண்பானோ இல்லையோ, பென் அஃப்லெக்கின் அடுத்த இயக்கத்தின் வரவிற்காக ரசிகர்கள் நிச்சயம் காத்திருப்பார்கள். [***]

ட்ரெயிலர்

Tuesday, September 21, 2010

புலப்படாதவை


தான் வாழப்போகும் நாட்கள் இனி அதிகம் இல்லை என்பதை தன் மனதில் கொண்ட மனிதனிற்கு அவன் கடந்தகாலத்தின் நெருக்கமான, அந்தரங்கமான கணங்கள் சிலவற்றை மீட்டெடுப்பது என்பது சகஜமான ஒன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. புற்றுநோயால் பீடிக்கப்பட்டு தன் வாழ்வின் அந்திமத்தை எட்டிவிட்ட ஆடம் வாக்கரும் இவ்வாறாகவே தனக்கு அந்தரங்கமான கணங்கள் சிலவற்றை நினைவுகூருகிறான்.

தன்னுடன் ரகசியமாக இருந்துவந்த வாழ்க்கையின் அந்தக் கணங்களை மூன்று பகுதிகளாக பிரித்து அவன் எழுத ஆரம்பிக்கிறான். ஆடமின் பல்கலைக்கழக நண்பனும், இன்றைய நாள் பிரபல எழுத்தாளனுமான ஜிம் என்பவனின் பார்வைக்கு தன் வாழ்க்கை கணங்களின் காகிதப் பிரதிகளை ஆடம் அனுப்பி வைக்கிறான். ஜிம்மால் தன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆடமிடம் இருந்திருக்கலாம். அல்லது பிரபல நாவலாசிரியன் ஒருவன் தன் எழுத்துக்களை எவ்விதம் எடைபோடுகிறான் என்பதை தன் இறுதி மூச்சின் முன்பாக அறிந்து கொள்ளும் ஆர்வமாகவும் அது இருக்கலாம். ஆனால் நாவலின் கணிசமான புலப்படாத கூறுகளில் ஒன்றாகவே இதுவும் அமைகிறது.

1967ம் ஆண்டுப் பகுதியில் ஆடமின் வாழ்க்கையில் நடந்தேறிய சில நிகழ்வுகளை முன்வைத்து இளவேனிற்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் என மூன்று பகுதிகளாக தன் வாழ்க்கையை எழுத்துக்களில் புலப்படத்த ஆரம்பிக்கிறான் ஆடம்.

Paul Auster எழுதியிருக்கும் Invisible நாவலின் முதல் பகுதியானது மேல்கூறிய எந்த விபரங்களையும் வாசகனிற்கு புலப்படுத்தாது, நேரடியாகவே ஆடம் வாக்கரின் 1967 இளவேனிற்காலத்தின் வாழ்க்கைக்குள் வாசகனை நுழையச்செய்கிறது. கதையை ஜிம் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதும், ஆடம் வாக்கர் 60 வயதில் புற்றுநோய் தீவிரமான நிலையில் தன் நினைவுகளை எழுதுகிறான் என்பதும் இளவேனிற்காலத்தின் முடிவினிலேயே வாசகனிற்கு புலனாகிறது. இளவேனிலின் முடிவு வரை வாசகன் ஆடம் வாக்கரின் கடந்த காலங்களின் நினைவுகளின் துணையுடன் அவனுடைய புலப்படாத நிகழ்காலத்தில் பயணம் செய்கிறான்.

ஆடமின் இளவேனிற்கால நினைவுகளின் மீள்வருகையில், கொலம்பிய பல்கலைக்கழக இலக்கியதுறை மாணவனான ஆடம், நீயூயார்க்கில் நிகழும் விருந்தொன்றில் ருடொல்ஃப் பார்ன் என்பவனுடனும் அவன் துணைவியான மார்கோ என்பவளுடனும் அறிமுகமாகிக் கொள்வதும் தொடரும் நாட்களில் ஆடமிற்கு தன்னைவிட வயதில் மூத்தவளனான மார்கோவுடன் உருவாகும் ஒரு காதல் உறவுமாக கதை ஆரம்பிக்கிறது. ஆடமிற்கும், மார்கோவிற்கும் இடையில் நிகழும் ஒரு வாரக் காதலில் கதாசிரியரின் வரிகள் எம்மை ஆடமின் உணர்வுகளில் கரையச் செய்கின்றன. காதலும், காமமும் அதிக வார்த்தைகளின்றி அவர்களிற்குள் கொதித்து அடங்குகையில் ஆசிரியரின் வரிகள் எம்மை சொற்களின் எளிமையான சக்தியை உணரச் செய்கின்றன.

ஆடமின் இந்த உறவானது மார்கோவை அவன் துணைவனான ருடொல்ஃபிடம் இருந்து பிரிக்கிறது. ஆனால் மார்கோ ஒரு வார்த்தைகூட சொல்லாது ஆடமையும் பிரிந்தே செல்கிறாள். அதன்பின் நிகழும் ஒரு அசம்பாவிதம் ஆடமை, ருடொல்பிடம் இருந்து வெகுதூரம் ஓடச்செய்கிறது. மார்கோ வழியாக ஆடம், தன் மீதே தான் கொண்டிருந்த அச்சங்களையும், ஐயங்களையும் களைந்தான் எனில் ருடொல்ஃப் வழியாக தன்னுள் வாழ்ந்திருந்த ஒரு கோழையையும், தன் ஆளுமையின் ஒரு வெறுக்கத்தக்க பக்கத்தையும் தெளிவாக புலனாக்கி கொள்கிறான். இதனாலேயே அவன் வாழ்நாள் முழுவதும் ருடொல்ஃபை மன்னிக்க முடியாதவனாக இருக்கிறான்.

நாவலின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ஆடம் எழுத முடியாத ஒரு மனத்தடை நிலையில், நாவலின் முதல் பகுதியை சிறப்பான ஒன்றாக விமர்சித்து, நாவலைத் தொடர சில வழிகளை ஆடமிற்கு கூறுகிறான் ஜிம். கதையின் இரண்டாம் பகுதியான வசந்தம், அமெரிக்காவை விட்டு பிரான்ஸ் நாட்டிற்கு ருடொல்ஃபும், மார்கோவும் தத்தமது காரணங்களிற்காக சென்றுவிட்ட நிலையிலிருந்து ஆரம்பமாகிறது.

ஆடம் தங்கியிருக்கும் வீட்டில் அவனுடன் கூட தங்க வரும் அவன் மூத்த சகோதரி க்வெய்னுடனான ஒரு மாத காதல் உறவை சங்கோஜத்தையும், வெட்கத்தையும் துறந்து ஆடம் இப்பகுதியில் விபரிக்கிறான். சமூகம் விதித்த நெறிகளிற்கு முரணான இந்த உறவு குறித்த எந்த குற்றவுணர்வும் ஆடமிற்கோ அவன் சகோதரிக்கோ அந்த உறவு நிகழும் சமயத்தில் இருப்பதில்லை. மிக நிச்சயமாக நாவலின் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பகுதியாக இது அமைகிறது. சிறுவயதில் இறந்துபோன சகோதரன் ஆண்டியின் பிரிந்து செல்ல மறுக்கும் நினைவுகளிலிருந்து க்வெய்னும், ஆடமும் எவ்வாறு வெளியேற ஆரம்பிக்கிறார்கள் என்பதும் இப்பகுதியில் விபரிக்கப்படுகிறது.

ஆனால் ஆடமின் நாவல் குறித்து பின்பு ஜிம் வழியாக அறிந்து கொள்ளும் க்வெய்ன், அவன் எழுதிய வசந்தம் பகுதியில் தனக்கும் ஆடமிற்குமிடையில் நிகழ்ந்தாக எழுதப்பட்ட உறவை மறுத்துவிடுகிறாள். இது, நிகழ்ந்திருக்காத கணங்களை வாசகன் கண் முன்பாக புலனாக்க வைப்பதற்கான ஆடம்மின் முயற்சியா அல்லது தன் மனக்கண்களிலிருந்து, அல்லது பிறரின் பார்வையிலிருந்து இந்த நினைவுகளை மறையச் செய்வதற்கான க்வெய்னின் எத்தனமா என்பதற்கு விடையை அது புலனாகும் பட்சத்தில் வாசகனே தேடிக் கொள்ள வேண்டியதுதான்.

2009-11-06-PaulAuster_credit_LotteHansen2 நாவலின் மூன்றாம் பகுதியை ஜிம் படிக்கும் முன்பாகவே நோய் முற்றி ஆடம் இறந்து விடுகிறான். 1967ன் பின்பான ஆடமின் வாழ்க்கை குறித்த சிறிய பார்வை வாசகனிற்கு கிடைக்கிறது. கனவுகளுடனும், லட்சியங்களுடனும் வாழ்ந்திருந்த மனிதர்கள் மாயமாகிவிட அவர்கள் இடத்தில் காலமும், வாழ்க்கையும் வேறுமனிதர்களை புலனாக்கும் ரஸவாதத்தின் விந்தை மகத்தானது. தோற்கடிக்க முடியாதது. புலப்படாதது.

இலையுதிர்காலமான மூன்றாம் பாகத்தில் பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க செல்லும் ஆடம், அங்கு மார்கோ மற்றும் ருடொல்ஃபை மீண்டும் சந்தித்து கொள்வதையும், சிசில் எனும் இளம் நங்கையுடன் அவன் நட்பையும், மிகவும் அவமானத்தை ஏந்தி உடைந்த நிலையில் ஆடம் பிரான்ஸ் நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவதையும் முன்வைக்கிறது. இதன் பின் 2008ல் பிரான்ஸிற்கு பயணிக்கும் ஜிம், ஆடம் தன் இலையுதிர்காலத்தில் விபரித்த சிசிலை சந்தித்து ஆடம் குறித்த அவள் அனுபவங்களையும், உணர்வுகளையும் அறிந்து கொள்வதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.

ஒரு இளைஞனின் தவிப்புக்களை, அவமானங்களை, அழுத்தங்களை, அந்தரங்கங்களை தன் எளிமையான ஆனால் அசர வைக்கும் கதை சொல்லலால் உணர்ச்சி ததும்ப தந்திருக்கிறார் நாவலாசிரியர் பால் ஆஸ்டர். ஒரு திகில் நாவலிற்குரிய விறுவிறுப்பை அவர் தன் கதை நகர்வில் சாத்தியமாக்கியிருக்கிறார். கதை மாந்தர்களிற்கிடையில் நிகழும் உரையாடல்கள் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

கதை மாந்தர்கள் கதையின் ஓட்டத்தில் மாயமாகிறார்கள் பின் கதையின் வேறு ஒரு தருணத்தில் புலப்படுகிறார்கள். அவர்கள் பிறர்மேல் கொண்டுள்ள உணர்வுகளின் உண்மை முகங்களை கதை காலத்தை எடுத்துக் கொண்டே புலப்படுத்துகிறது. சில நிகழ்வுகளிற்கான முடிவுகள் கதையில் புலனாவேதேயில்லை என்பதாக புலனாக கதை ஒன்றை வாசகனை உருவாக்க விட்டு விடுகிறார் பால் ஆஸ்டர்.

பால் ஆஸ்டர் கதையை நகர்த்தி சென்றிருக்கும் விதம் உணர்ச்சி சுழலில் வாசகனை சிக்க வைக்கிறது. நாவலின் முடிவானது கதையோட்டம் உருவாக்கிய எதிர்பார்ப்பை திருப்தி செய்யாவிடிலும்கூட சிறப்பான பாத்திர படைப்புக்களாலும், அற்புதமான கதை சொல்லும் திறனிற்காகவும் தவிர்க்க முடியாத நாவலாகவே பால் ஆஸ்டரின் Invisible அமைகிறது. காதலும், காமமும், அன்பும், கண்ணீரும் புலப்படாமலே மறைந்து வாழ்ந்து மறையும் சந்தர்ப்பங்கள் மனித வாழ்வில் இல்லை என்று முற்றாக மறுத்து விட முடியுமா என்ன.

Wednesday, September 15, 2010

சிறையறை - 211


ஸ்பெயின் நாட்டு சிறையொன்றில், சிறைக்காவலனாக புதிய வேலையொன்றை தேடிக்கொள்ளும் Juan, தான் பணியை பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டிய நாளிற்கு ஒரு நாள் முன்பாக அவன் பணியாற்றவிருக்கும் சிறையை ஆவல்மிகுதியால் பார்வையிட வருகிறான்.

துரதிர்ஷ்டவசமாக, Malamadre எனும் சிறைக்கைதியின் தலைமையில், கைதிகளின் உக்கிரமான போராட்டம் ஒன்று சிறையில் அன்று வெடிக்கிறது. கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் பகுதியின் முழுக்கட்டுப்பாடும் சிறைக்கைதிகளின் பக்கம் வந்துவிட, அப்பகுதியினுள் அகப்பட்டுக்கொண்ட ஹுவான், தான் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதிபோல், போராடும் சிறைக்கைதிகளிடம் நடிக்க ஆரம்பிக்கிறான்.

நீதி அமைப்புக்களின் தீர்ப்பின் பின்பாக சிறையில் தம் வாழ்க்கையை கழிப்பதற்காக அடைக்கப்படும் மனிதர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து பார்வையாளர்களின் கவனத்தை திருப்ப முற்படுகிறது Celda 211 எனப்படும் இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம். பொதுவாக சிறையில் வாடும் விஐபி அல்லாத கைதிகளின் போராட்டங்கள் பற்றி அதிகம் வெளியே தெரிய வருவதில்லை. அப்படியே வெளியே வந்தாலும் சிறிய, முக்கியத்துவம் இழந்த செய்திகளாக அவை அமுக்கப்பட்டு போகின்றன. அக்கலகங்கள் ஏன் உருவாகின்றன என்ற கேள்விகளும் அதிக எண்ணிக்கையில் உரக்க எழுப்பப்படுவதில்லை. [ நான்கூட இது குறித்து சிந்தித்ததில்லை]

தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளிற்கு எதிராக, வேறுவழிகளற்ற நிலையில் வன்முறைப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் சிறைக்கைதிகளின் மத்தியில் ஒரு புதிய சிறைக்காவலனை அங்கம் கொள்ளச் செய்வதன் வழியாக, அவன் பார்வை மூலம் அக்கைதிகளின் கோரிக்கைகளில் இருக்ககூடிய நியாயங்களையும், சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களும் மனிதர்களுமே என்பதையும் உணர்த்த முயல்கிறது திரைப்படம்.

சிறைக்கைதிகளின் தற்கொலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித தன்மையற்ற வன்முறைகள், தண்டனை முறைகள், கைதிகளின் நியாயமான கோரிக்கைகளிற்கு காது கொடுக்காது சிறை அதிகாரிகளிற்கு சாதகமாக செயற்படும் நீதி அமைப்பு என்பவற்றினை திரைக்கதையில் விபரித்து தமது வாழ்வை சிறையில் நொருக்கும் மனிதர்கள் குறித்த ஒரு பார்வையை திரைப்படம் வழங்குகிறது.

சிறையில் இடம்பெறும் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளிற்கு தமது சுயலாபத்திற்காக இடம்தரும் சிறை அதிகாரம் குறித்த மெலிதான விமர்சனமும் திரைப்படத்தில் உண்டு. இவ்வகையான கண்மூடல்களால் மட்டுமே சிறையை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் எனச் செயற்படும் சிறை அதிகாரிகளின் கையாலாகத்தனத்தை இது வெட்டவெளிச்சமாக்குகிறது.

Celda-211 சிறைக்கைதிகளின் போராட்டத்தை அடக்க, கட்டுக்குள் கொண்டுவர நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகள், ரகசிய பேரங்கள், பொய்கள், துரோகங்கள் என்பன எந்த ஒரு அதிகாரமும் தமெக்கெதிரான போராட்டங்களை எதிர்கொள்ளும் நரித்தனமான முறைகளிலிருந்து விலகிச் சென்றுவிடவில்லை. சிறை உடைப்புக்கள்போல் சிறையில் நடைபெறும் கலகங்களும் அதன் பின்பான உண்மைகளும் பரபரப்பாக ஊடகப்படுத்தபடுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திலும்கூட ஊடகங்கள் உண்மை நிலையை அறிய திணற வேண்டியிருப்பது யாதார்த்த நிலையை சற்று தொட்டுப் பார்க்கிறது. கைதியோ, காவலனோ அதிகாரத்தின் வெற்றி என்பதற்கு முன்பாக எல்லா உயிர்களும் துச்சமே என்பதை கதை தெளிவாக்குகிறது.

கைதிகளோடு இணைந்து போராடுபவனாகவும், சிறை அதிகாரிகளிற்கு போராட்டம் குறித்த தகவல்களை ரகசியமாக வழங்குபவனாகவும் இருக்கும் ஹுவான், தொடரும் அசம்பாவிதங்களினால் கைதிகளின் போராடத்தை தானே முன்னின்று நடத்துபவனாக உருவெடுக்கிறான். ஆனால் அவன் அவ்வாறு மாறுவதற்கு வலி நிறைந்த சம்பவம் ஒன்று காரணமாகிவிடுகிறது. தன்னால் உணரப்படும் வலிகள் மட்டும்தான் இன்னொருவனின் நியாயமான கோரிக்கை குறித்து ஒருவனை சிந்திக்கவைக்க முயலும் என்பது வேதனையான ஒன்றுதான். ஆனால் சிறை அதிகாரிகளின் பக்கம் இருந்து கைதிகளின் பக்கம் வரும் வலிமிகுந்த ஹூவான் பாத்திரத்தை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் முன்பின் அறியாத ஹுவானின் மீது சிறைக்கைதி மலாமாத்ரே கொள்ளும் நம்பிக்கை நம்பக்கூடியதாக இல்லை.

ஆரம்பத்தில் சற்று வேகமாக செல்வது போல் பிரம்மையை தந்தாலும் சிறப்பான ஒரு த்ரில்லராக திகழ்ந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் வீர்யம் இழந்த திருப்பங்களாலும் இயக்குனர் Daniel Monzon ன், விறுவிறுப்பை படிப்படியாக இழக்கும் கதைசொல்லலாலும் தனது உக்கிரத்தை இழந்து நிற்கிறது. பிரதான பாத்திரங்களான ஹூவான், மலாமாத்ரே பாத்திரங்களை ஏற்றிருக்கும் கலைஞர்களான Alberto Ammann மற்றும் Luis Tosar ஆகியோரின் நடிப்பு பார்வையாளனை தூரத்தில் நிற்க வைக்கிறது. உணர்ச்சிகரமான காட்சிகளில் தட்டுப்பாடாக இருக்கும் உணர்ச்சிகள், படத்தின் வேகத்திற்கு தடையாகும் தேவையற்ற, அர்த்தம் குறைந்த பிளாஷ்பேக்குகள் என்பன எல்லாம் சேர்ந்து ஸ்பெயின் நாட்டின் 8 தேசிய விருதுகளை[Goya] வென்ற படைப்பா இது என்ற ஐயத்தை மனதில் பலமாக எழுப்புகின்றன.

சிறை அறைகளின் சுவர்களில் மனிதர்களால் கிறுக்கப்பட்டிருக்கும் சில கிறுக்கல்கள் வெறும் கிறுக்கல்கள் அல்ல, வலிநிறைந்த, சிதைந்து போன மனித வாழ்க்கை சரிதங்களின் உயில்கள் அவை. சிறையறை 211ன் சுவரிலும் உயில்கள் வாழ்கின்றன. (**)

ட்ரெயிலர்

Wednesday, September 8, 2010

பிரான்ஹாக்களின் ஸ்பிரிங் பிரேக்


சிறிய நிலநடுக்கம் ஒன்றின் காரணமாக விக்டோரியா ஏரியின் அடித்தரையின் ஒரு பகுதி பிளவுற, அந்த ஏரியின் தரையின் கீழ் இருந்த ஒரு நிலகீழ் ஏரியானது விக்டோரியா ஏரியுடன் இணைகிறது. இதனால் அந்த நிலத்தடி ஏரியினுள் இன்னமும் வாசம் செய்து கொண்டிருந்த, 2 மில்லியன் வருடங்களிற்கு முன்பு வாழ்ந்திருந்த, கொடிய பிரான்ஹா மீன்களின் மூதாதையர்களும் விக்டோரியா ஏரியினுள் குடிபுகுகிறார்கள். இந்தக் கொடிய ஆதி பிரான்ஹாக்களின் அகோரப் பசிக்கு விருந்து படைப்பதற்குத் தயாராக ஏரியில் காத்திருக்கின்றன ஸ்பிரிங் பிரேக் கேளிக்கை கொண்டாட்டத்தில் கலந்து கும்மாளமிட, விக்டோரியா ஏரியில் குழுமியிருக்கும் வனப்பான, வாளிப்பான, செழிப்பான அமெரிக்க இளம் சமுதாயத்தின் உடல்கள்…

1980களில் வெளியான பிரான்ஹா திரைப்படங்களின் ரீமேக் அல்ல பிரெஞ்சு இயக்குனர் Alexandre Aja இயக்கியிருக்கும் Piranha 3D. ஆனால் 1980களில் பல்கிப் பெருகிய திகில் காமெடி வகைத் திரைப்படங்களின் வரிசைக்கு களங்கம் விளைவிக்காதவாறு அவர் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

piranha-3d-2010-14883-415851601 நிறைய பிகினிக்கள், எக்கச்சக்கமான சிலிக்கோன் முலைகள், லீட்டர் லீட்டராக போலி ரத்தம், 3D நுட்பம், படத்தின் நிஜ ஹீரோக்களான அட்டகாசமான கிராபிக்ஸ் ஆதி பிரான்ஹாக்கள், ஒரு வரிக்கதை, நீர் நிலைகளை குப்பைத் தொட்டிகள் ஆக்காதீர் என்ற ஒரு உபதேசம்!! இவற்றுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு பக்கம் காவல்துறையின் எச்சரிக்கையை சட்டை செய்யாது ஏரியில் கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களை, மாமிசப் பிரியர்களான பிரான்ஹாக்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக காவல்துறை போராடுகிறது. மறுபக்கம் போர்னோ படப்பிடிப்பிற்காக வந்த ஒரு குழுவின் படகு கொடிய பிரான்ஹாக்கள் நிறைந்த ஏரியில் மூழ்க ஆரம்பிக்கிறது.

இந்த இரு நிகழ்வுக்களிற்குமிடையில் மாறி, மாறி திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர். போர்னோ படப்பிடிப்புக் குழுவினரின் படகில் லோகேஷன் காட்டச் செல்லும் அண்ணன், அவன் பேச்சைக் கேட்டு வீட்டில் இருக்காது படகில் மீன் பிடிக்க சென்று ஒரு தீவில் தனியே மாட்டிக்கொள்ளும் அவன் சிறுவயதுச் சகோதரங்கள், ஆபத்தில் மாட்டிக் கொண்ட தன் குழந்தைகளை மீட்க ஓடோடி வரும் ஷெரீப் அம்மா என திகில், காதல் சென்டிமெண்ட், அம்மா பிள்ளைகள் சகோதர செண்டிமெண்ட், பாலியல் காட்சிகள் என்பவற்றின் கலவையாக படம் நீந்துகிறது.

இதில் பாலியல் காட்சிகள் முதல் கொண்டு திகில் காட்சிகள் வரை பெரிதான தாக்கம் எதனையும் பதிவை எழுதும் முதிர்ந்த வாலிபர் மீது ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே சில காட்சிகளில் சிரிக்க முடிகிறது. விறுவிறுப்பு பீர் குடித்தது போல் மிதமான உணர்வில் அலைகிறது. அற்புதமான போர்னோ நடிகையான Riely Steele, மற்றும் கவர்ச்சி சுனாமி Kelly Brook ஆகியோரின் மார்பகங்களையும், மன்மத மேடுகளையும், பிருஷ்டங்களையும் 3D யில் பார்ப்பது என்னவோ புதிய அனுபவம்தான். ஆனால் ஒளிப்பதிவு இன்னமும் தெளிவாக இருந்திருக்கலாம். கடற்கன்னிகள்போல் அவர்கள் ஏரி நீரினுள் ஆடும் ஆட்டம் செம காமெடி. இரு அற்புதமான அழகுகளின் திறமையை வீணே ஏரியில் தூக்கி கடாசியிருக்கிறார்கள்.

piranha-3d-2010-14883-1397131742 பிரான்ஹாக்கள் விதம்விதமாக மனித உடல்களை சுவைப்பதையும், பிரான்ஹாக்களின் தாக்குதலிலிருந்து தப்பி ஓட விழையும் மனிதர்களின் உடல்கள் குரூரமான முறைகளில் சிதைக்கப்படுவதையும் சூடாக ரத்தம் வழிய வழிய அழகாக காட்டியிருக்கிறார்கள். பிரான்ஹாக்கள் ஏரியில் குழுமியிருக்கும் இளைஞர்கூட்டத்தை தாக்கும் அந்தக் காட்சி ரத்தக் களரிக்கு சரியான உதாரணம்.

போர்னோ நடிகையின் மார்பகங்களில் பொதிந்திருந்த சிலிக்கோன்கள் பிரான்ஹாக்களின் அன்பான கவனிப்புக்களின் பின்னே நீரினுள் மேலெழுவதை காமெடி என்று ஏற்றுக் கொண்டாலும் துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை பிரானாக்கள் விழுங்கி, கடித்து, குதறி, சப்பி, வெளியே காறி உமிழ்வது ஆண்களின் அடிவயிற்றை டச் பண்ணுகிறது. அதுவும் 3Dயில். இக்காட்சியை கைதட்டி ரசித்து மகிழ்ந்த பெண் ரசிகைகளிற்கு என்ன தண்டனை தரலாம்.[ பிரான்ஹா தொட்டிக்குள் இறக்கலாமா ] ஆண்களின் மனதை நோகடிப்பதற்கு ஒரு எல்லையே இல்லையா.

படத்தில் உண்மையிலேயே கொட்டம் அடிப்பவர்கள் ஆதி பிரான்ஹாக்கள். அவலட்சணமான அழகில் அவை அடிக்கும் கூத்து அருமை. ஒரு மனிதனைக்கூட மிச்சம் விடாமல் கடிக்க துடிக்கும் பிரான்ஹாக்களின் வேகம், அசைவு, நளினம், முகபாவம் என்பன ரசிக்க வைக்கின்றன. உண்மையில் இது பிரான்ஹாக்களின் ஸ்பிரிங் பிரேக் என்றால் அது மிகையல்ல. சில தருணங்களில் வேகமாக நீந்தி வந்து விட்டு அவை அடிக்கும் அந்த பிரேக், கூல்.

பிரான்ஹாக்களை அழித்தொழிக்கும் முயற்சிக்கு இயக்குனர் அதிகம் சிரமப்பட்டிருக்கவில்லை. எனவே உச்சக்கட்டக் காட்சிகள் சற்று ஏமாற்றத்தையே தருகின்றன. மேலும் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போட்டுத்தான் திரைப்படத்தை நிறைவு செய்கிறார்கள். இவ்வகையான திரைப்படங்களில் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக நல்ல ஆச்சர்யங்கள் கிடைப்பதுண்டு. துரதிர்ஷ்ட்டவசமாக பிரான்ஹா 3D யில் முலைகளையும், பிருஷ்டங்களையும், பிரான்ஹாக்களையும், ரத்தத்தையும் தவிர பாராட்டிக் கொள்ள ஏதுமில்லை. [*]

ட்ரெயிலர்

Tuesday, September 7, 2010

ரேப் ட்ராகன் - 20


த மேன் வித் த கோல்டன்.....

ஜிங்கிடிச் சித்தர் ரஃபிக் திருவிளையாடல்

ஹாஹாஹா.. என்ற அந்த கதாநாயகச் சிரிப்பை உதிர்த்தவாறே புரட்சிக்காரன் ரஃபிக் தன் இடுப்பை மேலும் கீழுமாக பஞ்சணையின் மீது கிண்டலாக ஆட்டிக் காட்டினான். முழுப்பலம் பெற்றிருந்த புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கானது இப்போது உலோகத்தை போன்ற உறுதித்தன்மையை பெற்று மிளிர்ந்தது. புரியும்படி கூறினால் ரஃபிக்கின் அங்கம், ஜகஜ்ஜால லிங்கம், சொக்கத் தங்கமாக மாறியிருந்தது.

தம்முள் ஒளியை நிரப்பவேண்டிய கலங்கரை விளக்கு இப்படி அநியாயத்திற்கு தங்க உலோகமாக மாறிவிட்டதே என்ற உண்மை அந்த அறையிலிருந்த இரு அழகிகளையும் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து அழகிகள் இருவரும் சிறிது கணத்திலே விடுபட்டார்கள்.

- ஒஹோ.. உங்களிற்கு ரஸவாதமும் தெரியுமா புரட்சிக்காரரே என்ற குந்தவி, ரஃபிக்கின் தங்கலிங்கத்தை தன் விரல்களால் சுண்டவே அது ணங் என்ற ஒலியை எழுப்பியவாறே சற்று அசைந்து ஆடியது.

வெகாமிபத்தின் விளைவும், ரஃபிக் குத்து வனச் சித்தர்களிடம் கற்றுத் தேர்ந்த ரஸவாத வித்தையும் இணைந்த விளைவால் கலங்கரை விளக்கானது மோசமான சக்திகளின் வாழ்விடமான பாரிஸ் பட்டணத்தின் அழுக்குக் கோபுரமான எய்ஃபல் கோபுரத்திற்கு யாரோ ஒரு கலைஞன் தங்கமுலாம் பூசிவிட்டதுபோல் தோற்றமளித்தது.

- இளவரசி யாம் கற்ற வித்தைகள் பலப்பல. இது அப்பலவுகளில் ஒரு பல. இன்னமும் என்னிடம் வித்தைகள் உண்டு ஆனால் நான் அடக்கமானவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றான் ரஃபிக்.

- இந்த இரவு முடிவதற்குள் உங்களை அடக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. அதன்பின் நீங்கள் அடக்கமாக இருக்கலாம். ஹ்ம்ம்ம்.. டேனி, இந்த உலோகத்திற்கு முன்பாக நான் பின்வாங்கப் போவதில்லை. இது ஒரு அனுபவம். இதில் புரட்சிக்காரனை தோற்கடிக்க நான் முயலப்போகிறேன்.

- ஆலிலை மீது கொம்பு விழுந்தாலும், கொம்பின் மீது ஆலிலை விழுந்தாலும் சேதம் ஆலிலைக்குத்தானே இளவரசி என்றாள் டேனி சற்று தயக்கம் நிரம்பிய குரலில்.

- கிழிவதைப் பார்த்தால் விளையாடாக் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான். இந்த தங்க அங்கம் இனி என்னுள் ஆகட்டும் அங்கம் என்று கூறியவாறே தன் அழகான கால்களை அசைத்து முன்னே வந்தாள் குந்தவி.

- சற்றுப் பொறுங்கள் இளவரசி, இதற்கு என்னிடம் ஒரு தந்திரம் இருக்கிறது என்ற டேனி, அறையின் ஒரு மூலையிலிருந்த மயிலிறகொன்றை எடுத்து வந்தாள். மயிலிறகை டேனியின் கைகளில் கண்ட ரஃபிக்….. இது குத்துவனசித்து, இந்த மயிலிறகிற்கெல்லாம் அஞ்சாது என்று வீராப்பாக கூறினான். அவன் கூறியதை ஆமோதிப்பதுபோல் அவன் தங்கலிங்கமும் முன்னும் பின்னுமாக தன் தலையை ஆட்டியது.

- அதனையும் பார்த்துவிடலாம் என்று கூறிய டேனி, புரட்சிக்காரனின் கால்களிற்கு மேலாக மயிலிறகால் மெதுவாக தடவிக்கொடுத்தாள். ரஃபிக்கின் உடலில் இருந்த மயிர்க்கால்கள் எல்லாம் இந்தப் புதிய தாக்குதலால் சடாரென தம் கண்களைத் திறந்தன. இதமாக, பதமாக ரஃபிக்கின் கால்கள் வழி மயிலிறகு மேலே ஏற ஆரம்பித்தது. பின் கால்களை விட்டுப் பறந்து அவன் மார்புகளை வருடியது. அதன் முனைகளில் சுழன்றது. மீண்டும் கால்களிற்கிடையில் இறங்கி ரஃபிக்கின் மதயானைத் தொடைகளை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தது. தொடைகளில் தன் பயணத்தை மேல்நோக்கி நகர்த்திய மயிலிறகு, தங்கக் கோபுரத்தின் அடிவாரத்தில் தன் மென்மையான விரல்களால் வருட ஆரம்பித்தது. கோபுரத்தின் மீது ஏறவும் முனைந்தது.

மயிலறகு தந்த உணர்ச்சிகள் தன் ரஸவாத சித்தியை மென்மையாக்குவதை ரஃபிக் உணர ஆரம்பித்தான். தங்கலிங்கம் தன் தங்க குணத்தை மெதுவாக இழக்கத் தொடங்கியது.

- சபாஷ் டேனி, மயிலிறகுப் பெண்ணே, மன்மத ரதியே இனி ஆரம்பிப்போம் எம் ஆட்டத்தை என்றவாறே ரஃபிக்கின்மீது பாய்ந்து அமர்ந்தாள் குந்தவி. தங்கமிழந்த லிங்கம் குந்தவியினுள் காணாமல்போனது. ம்ம்ம்ம்ம்ம்… புரவிமீது பயணித்து நாட்களாகி விட்டது என்று கூறிய குந்தவி, ரஃபிக்கின் மார்பில் ஓங்கி அடித்தாள்… கிளம்பு புரவியே உன் துள்ளலை இப்போது என்னிடம் காட்டு என்றாள்.

- இந்த சாட்டையை பிடியுங்கள் இளவரசி, புரவி முரண்டு பிடித்தாள் இதனால் நல்ல சாட்டையடி கொடுங்கள் என்றவாறே சாட்டையை குந்தவியிடம் தந்த டேனி… எனக்கும் புரவிமீது ஏற ஆசைதான் ஆனால் இடம் போதாமல் இருக்கிறதே என்று கூறவும் செய்தாள்.

- புரவியின் முகத்தின் மீது ஏறி அமர்ந்து கொள் டேனி, அந்தப் பயணம் ஒரு தனி அனுபவம் என்று கூறி ரஃபிகைப் பார்த்து சிரித்தாள் குந்தவி.

- வேண்டாம், வேண்டாம் புரவிக்கு மூச்சுத் திணறி உயிரைவிட்டுவிடும், நீங்கள் ஒரு சுற்று சுற்றிவிட்டு வாருங்கள், புரவிக்கு கொஞ்சம் தண்ணி காட்டி விட்டு நானும் ஒரு சுற்று சுற்றுகிறேன் என்றாள் இரக்கமான குரலில் டேனி.

- ஒரு மனிதனை மிருகம்போல் நடாத்துகிறீர்களே நீங்கள் என்ன பிறவிகள், இந்த உலகம் ஏன் இன்னமும் சுழல்கிறது. ரஃபிக்கின் இந்த வரிகள் முடியும் முன்பாகவே குந்தவியின் கையிலிருந்த சாட்டை சீறியது. அடி சிறிது பலமாக விழுந்துவிடவே ரஃபிக்கின் உடலிலிருந்து ரத்த துளிகள் அரும்பின.

- மனிதப் பிறவிகள் மட்டுமே ஏனைய பிறவிகளை மிருகங்கள்போல் நடாத்துபவர்கள் என்ற உண்மை தெரியாதவரா நீங்கள் புரட்சிக்காரரே... குந்தவியின் பதிலில் அனல் தெறித்தது.

- இளவரசி, இதில் என்ன வினோதம் எனில், இதனைப்போல் தங்கலிங்க வித்தை தெரிந்த ஒருவரை நான் ஏற்கனவே அறிவேன். தன் மன அமைதிக்காக மட்டுமே அவர் இந்த சித்தியை உபயோகப்படுத்துவார் என்ற டேனி, புரவியின் கேசத்தை ஆதரவாக கோதிவிட்டாள்.

- ஆம்.. நானும் அறிவேன்.

இதைச் சொன்னது புரவியை உற்சாகமாக ஓட்டிக்கொண்டிருந்த குந்தவியுமில்லை, வேதனை, வலியால் திணறிக்கொண்டிருந்த புரவியுமில்லை. ஆனால் அந்தக் குரல் இனிமையாகவிருந்தது. மயக்கியது. நடுநிசியின் யாழாய் இசைத்தது. இரவு பாடிய சங்கீதமாய் வழிந்தது. குந்தவியும், டேனியும் குரல் வந்த திசை நோக்கி தம் விழிகளை திருப்பினார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை பஞ்சணையிலிருந்து துள்ளிவிழச் செய்தது.

வானம் பார்க்கத் திறந்திருந்த அறையின் கூரையிலிருந்து வவ்வால் போல் தலைகீழாக அறைக்குள் தொங்கிக்கொண்டிருந்தாள் அந்த இனிய குரலிற்கு சொந்தக்காரி. தான்பட்ட வேதனைவலிகள் அனைத்தையும் கடந்து அவள் கண்களினுள் விழுந்த ரஃபிக்கின் ஹிருதயம் சிதறியது, துண்டுகளாகத் துடித்தது, காதல் காதல் என விம்மி வெடித்தது.

ரேப் [ட்ராகன்] வாரம் இனிதே நிறைவுற்றது.

Monday, September 6, 2010

ரேப் ட்ராகன் - 19


வெகாமிபம்

காவிய நாயகர் ரஃபிக் அட்டகாசம்

அய்யய்யோ அய்யய்யோ மோசம் போனோமே எனும் குந்தவியின் கதறல் பரிதாபமாக அந்த சொகுசு விடுதியறையின் சுவர்களை தழுவியது. வெண்ணெய் கசிந்து, ஒளி சுருங்கி, பிரகாசமிழந்து போன புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கை வேதனை கலந்த தன் விழிகளால் நோக்கினாள் குந்தவி. கலங்கரை விளக்கை மீண்டும் ஒளியூட்ட வேண்டுமானால் பொழுது விடிந்துவிடுமே என்ற மனக்கவலை அந்த அழகு மல்லிகையை ஆக்கிரமித்தது. ஆனால் புரட்சிக்காரன் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என்ற மன ஆறுதலை அடைந்தான்.

இனியாவது இந்த இளம் பருவப் பெண்களிடமிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்று அவன் மனம் கணக்குப் போட்டது. இந்த எண்ணத்துடன் தொண்டையை சற்றுச் செருமிய புரட்சிக்காரன்.. தாகமாகவிருக்கிறது அருந்த சிறிது நீர் கிடைக்குமா என்று குழைந்தான். நீரைக் குடித்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும் என்பது அவன் உடனடி விருப்பமாகவிருந்தது.

ஆனால் மாராக்கோ மாதுளை டேனியோ ஏதும் பேசாது அறையின் ஒரு பகுதிக்கு சென்று அங்கிருந்து ஒரு சிறு குப்பியை தன்னோடு எடுத்து வந்தாள்.

- டேனி, இது என்ன குப்பி? வினவினாள் குந்தவி. குந்தவியின் இக்கேள்விக்கு டேனியின் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை பதிலாகப் பூத்தது. அப்புன்னகை தன் எண்ணங்களை தவிடு பொடியாக்கப் போகிறது என்பதை ரஃபிக் உணர்ந்தான். வெறுப்புடன் உயரந்தது அவன் குரல்,

- வேறு என்ன, என்னைக் கொல்லும் ஆலகால விஷம்தான் அது. ஆண்களின் சாபங்களே, காமக் கொடுரீகளே இப்படி துளித்துளியாக என்னை துன்புறுத்துவதற்குப் பதிலாக என்னைக் கொன்றுவிடுங்கள் என்றான் ரஃபிக். உங்கள் கைகளில் உருட்டப்படுவதைவிட மரணத்தின் மடியில் வீழ்கிறேன் என்ற அவன் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

ஆனால் ரஃபிக்கின் புலம்பல்களை சட்டை செய்யாத டேனி…. இளவரசியே இதுதான் வெண்காண்டாமிருக இந்திரிய பஸ்பம். சுருக்கமாக வெகாமிபம் என்பார்கள். பிரபஞ்சம் எங்கும் இதன் புகழ் நிமிர்ந்து நிற்கிறது. இதனை இவரிற்கு புகட்டினால் ஒளியிழந்த விளக்கு ஒளிபெறும், மேலும் துரித வெண்ணெய் ஸ்கலிதங்களும் தடுக்கப்படும். விடிய விடிய பிரகாசம், தீராது சல்லாபம், நமக்கது உல்லாசம் என்றவாறே சிறிய கிண்ணமொன்றில் தேனை ஊற்றிய டேனி, வெகாமிபத்தை ஒரு சிட்டிகை அளவு அக்கிண்ணத்தினுள் இட்டாள், பின் எதையோ நினைத்துக் கொண்டவள்போல் குந்தவியைப் பார்த்த டேனி.. இளவரசி இந்த இரவின்பின் இவரை உயிருடன் விட்டு வைக்க வேண்டுமா? என தன் முகத்தில் ஒரு குறும்பு புன்னகையை வரவழைத்துக்கொண்டு வினவினாள்.

- இல்லை இந்த இரவின்பின் இவர் எமக்கு தேவையில்லை என்று குறும்பாக பதில் தந்தாள் குந்தவி.

- இதன்பின் நான் வாழ்ந்திருந்து என்ன பிரயோசனம். என்னை இப்போதே சாகடியுங்கள் ம்.. வாருங்கள் வந்து என் கதையை முடியுங்கள் என்று கதற ஆரம்பித்தான் ரஃபிக். ரஃபிக்கின் ஓலம் அடங்கும் முன்பாகவே வெகாமிபத்தை கிண்ணத்தினுள் வெறுமையாக்கிய டேனி அதனை தன் விரல்களால் வேகமாக குழைக்க ஆரம்பித்தாள். தன் அந்திம காலத்தின் உதயம் ஒரு கிண்ணத்தில் விடிவதை ரஃபிக் உணர்ந்தான். போர்க்களத்தில் வீரமரணம் அடைந்திருக்க வேண்டிய அவன் இந்தப் பஞ்சணையில் போரிட்டு மடிய வேண்டியிருப்பதை எண்ணி அவன் கண்கள் கலங்கின. ஆனால் அவன் தனக்குள் புதைத்திருந்த ஒரு வித்தை, அத்தருணத்தில் அவன் எண்ணங்களை மெதுவாக தட்ட ஆரம்பித்தது.

வெகாமிபத்தை தேனில் குழைத்தவாறே, அறையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கயிறை டேனி இழுக்கவே, அவர்கள் இருந்த அறையின் கூரை விரிய ஆரம்பித்தது. விரிந்த கூரையின் வழியாக ராப்பொழுது வானின் சந்திரனும், நட்சத்திரங்களும் ரஃபிக்கை மெளனமாக எட்டிப் பார்த்தன. சில நட்சத்திரங்கள் புரட்சிக்காரனின் நிலையைக்கண்டு தம் கண்களை கசக்கவும் செய்தன. புஷ்பக் விமானம் ஒன்று சந்திரனின் குறுக்காக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த டேனி..

- இளவரசி, புஷ்பக் விமானத்தில் காதல் செய்து களித்திருக்க வேண்டும் என்பது என் ஆசை என்று தன் மனதை திறந்தாள்.

- கவலை வேண்டாம் டேனி, புரட்சிக்காரரின் கதையை முடித்தபின்பாக வேறு யாராவது எம் கைகளில் மாட்டாமலா போய்விடுவார்கள். ஏமாளி ஆண்களிற்கா இந்தப் பாரிலே பஞ்சம்! என்று மயக்கும் சிரிப்புடன் பதில் தந்தாள் குந்தவி.

- சரியாகச் சொன்னீர்கள் என் அழகு இளவரசி, சரி அவரின் கன்னங்களை அழுத்துங்கள். நான் அவரிற்கு இந்தப் பஸ்பத்தை புகட்டுகிறேன் என்றாள் டேனி.

- அந்தச் சிரமம் உங்களிற்கு வேண்டாம், என் மரணம் என்பது உறுதியாகிவிட்டபின் அதனை ஒரு வீரனிற்குரிய லட்சணத்துடன், ஆசையுடன் ஆரத்தழுவிக் கொள்ளவே நான் விரும்புகிறேன். கொண்டுவா அந்த பஸ்பத்தை இங்கே காமமோக சாத்தானே என்று நிதானத்துடன் கூறினான் ரஃபிக்.

டேனி தன் உதடுகளில் பொருத்திய கிண்ணத்திலிருந்த பஸ்பத்தை ஒரே இழுப்பில் விழுங்கினான் ரஃபிக். வெகாமிபத்தின் ஓவர்டோஸால் சொர்க்கத்திற்கு அப்பால் சென்ற ஆன்மாக்களை அவன் உள்ளம் ஒரு கணம் எண்ணிப் பார்த்தது.

சிறிது நேரத்தில் வெகாமிபம் தன் பெருமையை நிலைநாட்ட ஆரம்பித்தது. கலங்கரை விளக்கில் ஒளி ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. ஒளி பெறுக.. ஒளி பெறுக…தலை நிமிர்க என்று ரஃபிக்கின் கலங்கரை விளக்கை பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் இரு பருவச்சிலைகளும்.

- இளவரசியே, கலங்கரை விளக்கின் ஒளியை நீங்கள் முதலில் உள்வாங்குங்கள் பின்பு நான் வாங்கிக் கொள்கிறேன் என்ற டேனி, குந்தவியின் இடையைத் தடவிக் கொடுத்தவாறே அவள் இடைக் கச்சையை மெதுவாக அவிழ்த்து விட்டாள்.

- என்ன ஒரு பெருந்தன்மை, என் வரலாறு இதை வெட்கமற்ற வரிகளாக எழுதட்டும் என்று கேலியுடன் கூறினான் ரஃபிக்.

டேனியின் ஈரமான உதடுகளில் ஒரு முத்தத்தைப் பதித்த குந்தவி, கலங்கரை விளக்கின் ஒளியைத் தேடிச் சென்றாள். ஆனால் ஒரு அதிர்ச்சி அவளை எதிர்பாரது எதிர்கொண்டது. அவள் கண்கள் வியப்பால் உறைந்தன. குந்தவியின் கண்களைப் பார்த்த டேனியின் பார்வை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது வீழ்ந்தது. அவள் இருதயம் ஒரு கணம் அடிக்க மறந்தது.

- ஹாஹாஹாஹா… என்று வில்லத்தனமாக சிரிக்க ஆரம்பித்தான் ரஃபிக்… பெண்களே இந்தக் கதையின் கதாநாயகன் யார் என்பது இப்போது உங்களிற்கு தெரிந்திருக்குமே…. ரஃபிக் தன் கதாநாயகச் சிரிப்பை நிறுத்தவேயில்லை.

Sunday, September 5, 2010

ரேப் ட்ராகன் - 18


பஞ்சணைப் பஞ்சாமிர்தம்

வாலிபக் கனி ரஃபிக் அதிரடி

சொகுசு விடுதி பஞ்சணையின் மீது விலங்கிட்ட தேவன் போல் கிடந்த புரட்சிக்காரன் ரஃபிக்கின் உடல்மேல், சிறிய பாலைவனப் பாம்புபோல் ஊர்ந்த குந்தவியின் விரல்கள், மலைபோன்ற அவன் மார்பின் உச்சிகளை மென்மையாக வட்டமிட ஆரம்பித்தன. ஒரே சமயத்தில் பல புள்ளிகளை நோக்கி ரஃபிக்கின் உடலில் உணர்ச்சிப் பரிகள் பாய்ந்தன.

- என்னை விட்டுவிடுங்கள், என் தவத்தைக் கலைக்காதீர்கள், என் இலட்சியத்தை அழிக்காதீர்கள், என் புரட்சியை கற்பழிக்காதீர்கள் ஹோய்..ஹோய்.ஹோய் என்று கதறினான் ரஃபிக். ஆனால் டேனியும், குந்தவியும் மனம் இரங்கினார்களில்லை. அவர்களிருவரின் விரல்களும், பற்களும், நாக்குகளும், இதழ்களும் ஒய்வே வேண்டாம் என உறுதி எடுத்துக் கொண்டவை போல் ரஃபிக்கின்மேல் இயங்கின.

திடீரென தன் வேகமான இயக்கத்தை நிறுத்திய குந்தவி, அறையில் பழங்கள் இருந்த மேசையை மீண்டும் அணுகினாள். பழங்கள் நிரம்பிய ஒரு தட்டையும், ஒரு சிறு கத்தியையும் எடுத்துக்கொண்டு பஞ்சணைக்கு திரும்பினாள்.

- இளவரசி, பழங்கள் எதற்கு? உங்களிற்கு பசியெடுத்து விட்டதா என்ன என்று வினவிய டேனியின் விரல்கள் ரஃபிக்கின் தொடைகளை கீறியவண்ணம் இருந்தன. இடையிடையே புரட்சிக்காரனின் பாதிச் சந்திரன்களிலும் அவை இறங்கி மீண்டன.

- ஆம், பஞ்சாமிர்தம் சாப்பிட ஆசையாகவிருக்கிறது டேனி என்றாள் குந்தவி.

- அடியே பாவிகளே, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளே, காம மோகினிகளே இங்கு ஒரு மனிதனின் உயிர் போன்ற மானம் பதினெட்டு அத்தியாயங்களாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் பஞ்சாமிர்தம் சாப்பிடப் போகிறீர்களா என்று ஓலமிட்டான் ரஃபிக்.

ரஃபிக்கின் இந்த உருக வைக்கும் ஓலத்தைக்கேட்ட இளவரசி தனது கையிலிருந்த சிறுகத்தியை ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் பதித்து, இந்தப் பழத்தையும் நறுக்கலாமா, பஞ்சாமிர்தத்தில் கலந்து உண்ணலாமா என்று கூறி உரக்கச் சிரிக்கவே, டேனி அந்த ஞானப் பழத்தை தன் கைகளால் மூடிக் காப்பதுபோல் நடித்தாள். கிராதகிகள் நறுக்கினாலும் நறுக்குவார்கள் என்று உள்ளூர நடுங்கினான் ரஃபிக்.

பழக்கூடையிலிருந்த பலவகையான கனிகளை வேகமாக நறுக்கிய குந்தவி, அந்தக் கனித்துண்டங்களை ரஃபிக்கின் உடலின் மீது பரவினாள். பழங்களின் குளிர்ச்சி ரஃபிக்கின் உடலை கிறுகிறுக்க வைத்தது. கனிந்து முற்றிய மாதுளை ஒன்றை உடைத்து அதன் செம்முத்துக்களை ரஃபிக்கின் மீது விதைத்தாள். அம்முத்துக்கள் ரஃபிக்கின் உடலில் ஜொலித்தன. ரஃபிக்கின் உடல் ஒரு பஞ்சாமிர்தக் கிண்ணமாக மாறியது. அவன் உடல் எங்கும் கனிச்சாறு வியர்த்தது. வியர்த்த கனிச்சாற்றை தன் நாவினால் ருசி பார்க்க ஆரம்பித்தாள் டேனி. கனித்துண்டங்களை கவ்வினாள். ரஃபிக்கை கவ்கவ்கவ்வினாள்.

இவ்வேளையில் தன் மார்க்கச்சையை அனாசயமாக களைந்த குந்தவி, அந்த மார்க்கச்சையை ரஃபிக்கின் வாயில் வைத்து அடைக்கவே ரஃபிக்கின் ஹோய் ஹோய் சங்கீதம் மட்டுப்பட்டது. ரஃபிக்கின் விழிகள் விரிந்தன. குந்தவியும் தன் பங்கிற்கு பஞ்சாமிர்தத்தை சுவைக்க ஆரம்பித்தாள். ஆகா.. என்ன உன்னதமான சுவை, அருமையான பஞ்சாமிர்தம் இது என அதன் சுவையையும் பாராட்டவும் செய்தாள்.

குந்தவி தன் மார்க்கச்சையை அவிழ்த்ததால், அந்த மார்க்கச்சை சிறையிலிருந்து விடுதலையடைந்த இரு தாமரைகளும், உணர்ச்சிகளின் உந்தலால் தம் மென்மையை இழந்தன. அழகான இரு ஸ்ட்ராபெர்ரிகளை பழத்தட்டிலிருந்து எடுத்த குந்தவி, அவற்றை கடினமாகிப்போயிருந்த தன் தாமரைகளின் நுனிகளில் குத்தி நிறுத்தியவளாக..

- புரட்சிக்காரரே பழம் சாப்பிடுங்கள் என்றவாறே ரஃபிக்கின் வாயிலிருந்த தன் மார்க்கச்சையை வேகமாக வெளியே இழுத்தெடுத்தாள். குந்தவி மார்க்கச்சையை வெளியே இழுத்த கணத்தில் ஆஆஆஆ என அகலத் திறந்த ரஃபிக்கின் வாயினுள் தாமரைகளையும், ஸ்ட்ராபெர்ரிகளையும் வேகமாகப் புதைத்தாள் குந்தவி. குந்தவியின் இந்த தகாத செயலைத் தடுக்க வேகமாக தன் வாயை ரஃபிக் மூடினான். ம்ம்ம்ம் மெதுவாக மெதுவாக புரட்சிக்காரரே என்று முனகினாள் குந்தவி. விருட்டென தன் தலையை அப்பால் திருப்பிய ரஃபிக், தாமரைகளும், ஸ்ட்ராபெர்ரிகளும் சேர்ந்தளித்த சுவையில் ஆகா என்ன சுவை… என்று உளறினான்.

- என்ன இன்னும் வேண்டுமா என்றவாறே குந்தவி தன் தாமரைகளை ரஃபிக்கின் முகத்தை நோக்கி அசைக்கவே, டபக் என முதலைபோல் தன் வாயை இறுக மூடினான் ரஃபிக். அவன் வாயை மூடினாலும் குந்தவி தன் தாமரைகளால் ரஃபிக்கின் முகத்தினை தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள். ரஃபிக்கிற்கு தாமரைகள் தாலாட்டுப் பாடின. அய்யய்யோ இந்த தாமரைகளால் நான் மூச்சடக்கி மாளப்போகிறேனே எனக் கலங்கினான் புரட்சிக்காரன். ஆனால் ரஃபிக்கின் மீசையோ, தாலாட்டுப் பாடிய தாமரைகளை குறுகுறுக்க வைக்கவே, தாமரைகளின் நுனிகளில் நகம் முளைத்தால் போல் ரஃபிக்கின் வதனத்தை அவை கீற ஆரம்பித்தன.

இதற்குள் ரஃபிக்கின் உடலின் பல பகுதிகளிலும் இரு அழகிகளும் சேர்ந்து நிகழ்த்திய பல்முனைத் தாக்குதல்களால் கிளர்ச்சியூட்டப் பெற்ற கலங்கரை விளக்கமானது தன் முழு பிரகாசத்துடன் ஒளிர ஆரம்பித்தது. அந்த ஜூவாலையின் கவர்ச்சி அழகிகள் இருவரினதும் உடல்களை கூசச் செய்தது.

- அற்புதமான ஒளி, உன்னதமான பிரகாசம், என்ன யெளவனம்… இந்த அற்புத ஒளியை எம்மில் உள்ளெடுத்துக் கொள்ளும் சுபவேளை நெருங்கி விட்டது இளவரசி என்றாள் டேனி.

ஆனால் கட்டற்ற உணர்ச்சிப் புரவிகள் புரட்சிக்காரனின் கலங்கரை விளக்கை தாக்கின, அதன் மீது சீறும் அலைகளாக மோதின. இதனால் கலங்கரை விளக்கம் கண்ட ஆட்டத்தில், துடிப்பில், அது கொண்டிருந்த உயிர் வெண்ணெய் உணர்ச்சி அலைகளாக வெளியே சீறிக் கசிந்தது.

- அய்யய்யோ… அய்யய்யோ மோசம் போனோமோ என்று விழிகள் துடிக்க பதறினாள் இளவரசி குந்தவி.

[ யாரங்கே... அந்த தீப்பந்தத்தை பற்ற வையுங்கள் ]

Saturday, September 4, 2010

ரேப் ட்ராகன் - 17


தொப்புள் தொட்டில் !

வைல்ட் ஸ்ட்ராபெர்ரி ரஃபிக் சாகஸம்

ஹோய்.. ஹோய்ய்ய்ய்.. ஹோய்ய்ய்ய்ய்.. என்ற ரஃபிக்கின் முனகல் ஒலி சொகுசு விடுதியின் அறையை கூசச் செய்தது. உடலில் வலியை உணரும்போது அய்யோ.. அம்மா.. கடவுளே .. வலி உயிர் போகிறதே.. ஆஆஆஆ என்றவாறாக மனிதர்கள் ஒலிகளை எழுப்புவது இயல்பான ஒன்று. ஆனால் புரட்சிக்காரன் ரஃபிக் எழுப்பிய அந்த ஒலியோ வினோதமான தன்மையைக் கொண்டிருந்தது. அது ஏன் என்ற காரணத்தை காண்பதற்கு செல்வோமா வெண்கமலங்களின் உள்ளங்களை விட பரிசுத்தமான மனம் கொண்ட வாசக வெள்ளமே.

டேனி தன் கையிலிருந்த சாட்டையால் ரஃபிக்கை அடித்தாள். பின் அடிவிழுந்த பகுதிகளை தன் அழகிய நாக்காலும், செவ்விதழ்களாலும் தடவிக் கொடுத்தாள். இங்கு, தூய உள்ளம் கொண்ட வாசக வெள்ளமானது சாட்டை அடியானது ரஃபிக்கின் கருங்கடல் போன்ற மார்பின் மீதோ, அல்லது கைகள் மீதோ, அல்லது இந்திரனின் அரண்மனைத் தூண்களை ஒத்த கால்களின் மீதோ விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டு கதையின் அடுத்த வரிகள் மேல் ஓடிச் சென்றிருக்கும்.

ஆனால் இந்தக் கதையை எழுதும் தீய சக்தியின் கற்பனை அப்படியான தூய்மையை கொண்டதாக இருக்கவில்லை. வவ்வால்கள் தம் இதயங்களில் பொறாமையுடன் பாதூகாக்கும் இருளைப்போன்றது அந்தக் கற்பனை. டேனி சாட்டையால் ரஃபிக்கை அடித்தாள். அந்த அடி குறி தவறாது ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மீது விழுந்தது. சாட்டை அடியால் துடித்துச் சரிந்த கலங்கரை விளக்கை டேனி தன் இதழ்களாலும், நாவினாலும் ஒத்தடம் தரவே சரிந்த விளக்கு நிமிர்ந்து உயிர்பெற ஆரம்பித்தது.

உடலின் விளக்கு உயிர்பெறும் வேளையில், ரஃபிக் அதுவரை காலமும் அடக்கி, அமுக்கி, சுருக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கட்டவிழ்த்துவிட்ட அரபுநாட்டுப் புரவிகள்போல் வேகமாக ஒரு புள்ளியை நோக்கி பாய ஆரம்பித்தன. இந்தப் புரவிகளின் பாய்ச்சலை தடுக்க முடியாத நிலையில் அந்தப் புரட்சி வீரன் ஹோய்ய்.. ஹோய்ய் என ஒரு இறுதி முனகலை எழுப்பினான். மராக்கோ மாதுளை டேனியின் நாவிற்கு மட்டும் விரல்கள் இருந்திருந்தால் அது குத்து நகர புத்தக கண்காட்சியில் ஒரு தலையணைப் புத்தகத்தை வெளியிடும் அளவிற்கு ஹோய் ஒலி அனுபவங்களை பெற்றிருந்தது என்பதை இலக்கிய வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

- டேனி, புரட்சிக்காரரிடமிருந்து புரட்சி மெல்ல மெல்ல விடைபெறுகிறது என்ற குந்தவி, அறையிலிருந்த மேசையொன்றில் வைக்கப்பட்டிருந்த பல வகையான கனிகளை நோக்கினாள். அவள் அழகிய விழிகள் நன்கு முற்றிக் கனிந்திருந்த ஸ்ட்ராபெர்ரிகள் மீது நிலைத்தன.

பழங்கள் இருந்த மேசையை நெருங்கிய இளவரசி குந்தவி, ஒரு கனிந்த ஸ்ட்ராபெரியை தன் விரல்களில் கவ்விக்கொண்டு ரஃபிக் மல்லாந்து கிடந்த பஞ்சணையை நெருங்கினாள். ரஃபிக்கை நோக்கி ஒரு மாயப் புன்னகையை வீசினாள். குந்தவியின் புன்னகையைப் பார்த்த ரஃபிக், இளவரசி போதும் இந்த விளையாட்டு, விலங்கிட்ட நிலையில் ஒரு அப்பாவியை சித்திரவதை செய்கிறீர்களே இதுவா உங்கள் பண்பு, என்னை விடுவியுங்கள் என்று கெஞ்சினான். ஆனால் அந்தக் கெஞ்சலில் உறுதி குறைந்திருந்தது.

கலங்கரை விளக்கிற்கு தொடர்ச்சியாக ஒத்தடம் தந்து கொண்டிருந்த தன் இதழ்களை அதனினின்று சற்றுப் பிரித்தெடுத்த டேனி, குந்தவியின் விரல்களிலிருந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரியை பார்த்தாள். அவள் விழிகள் குந்தவியை நோக்கி கேள்விகளாக உருவெடுத்தன.

- இளவரசி இந்தப் பழத்தை ஏன் விரல்களில் வைத்திருக்கிறீர்கள்!?

- டேனி, இனி இந்தக் கனி என் விரல்களில் இருக்கப்போவதில்லை என்றவாறே குந்தவி அந்த ஸ்ட்ராபெர்ரியை ரஃபிக்கின் வயிற்றில் வைத்து தன் நாக்கால் அவன் தொப்புளை நோக்கி அக்கனியை உந்த தொடங்கினாள். குந்தவியின் நாக்கும், ஸ்ட்ராபெர்ரியும் மாறி மாறி விதவிதமான உணர்வுகளை ரஃபிக்கின் உடலில் உந்தின. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ரஃபிக்கின் தொப்புளில் விழுந்தது அந்த சிவந்த ஸ்ட்ராபெர்ரி. சக்கரவர்த்திகளின் கீரிடங்களில் அழகாகப் பொருந்தி ஜொலிக்கும் சிகப்பு மாணிக்கம்போல் புரட்சிக்காரனின் தொப்புளில் பொருந்தி ஜொலித்தது அந்த ஸ்ட்ராபெர்ரிக் கனி.

strawberry_-7776 தன் விரல்களை அந்த ஸ்ட்ராபெர்ரியை சுற்றி நளினமாக நடனமாடவிட்டாள் குந்தவி. ரஃபிக்கின் தொப்புளைச் சுற்றி ஆயிரம் மின்னல் நுன்ணுசிகள் கும்மியடிக்க ஆரம்பித்தன. ஹோய்..ஹோய்ய்ய் என்று கதறினான் ரஃபிக். குந்தவியின் விரல்களை புகழ்ந்து உடனடியாக கவிதை பாட ஒரு கணம் அவன் மனம் துடித்தது ஆனால் புரட்சி அந்த வீரனை தடுத்தது.

- நன்றாக இருக்கிறதா புரட்சிக்காரரே என்ற டேனியின் நாக்கு இப்போது ரஃபிக்கின் தொப்புளை சுற்றி வட்டங்களை இட்டது. ஸ்ட்ராபெர்ரிக்கும் கலங்கரை விளக்கிற்கும் இடையில் அந்த பொல்லாத நாக்கு ஒரு பாதை சமைத்தது. ஆகா.. பேஷ் பேஷ் அருமையாக இருக்… என்று சொல்ல ஆரம்பித்த புரட்சிக்காரன் ரஃபிக், பாதகிகளே இந்த வித்தைகளை எல்லாம் எங்கு கற்றீர்கள், உங்களை நம்பி ஒரு ஆண்மகனை தனியாக விட்டுச் செல்ல முடியுமா, முடிந்தால்தான் அந்த ஆண்மகன் உயிருடன் இருப்பானா, கலிகாலம், கலிகாலம் என்று முடித்தான்.

ரஃபிக்கின் தொப்புள் தொட்டிலில் வீற்றிருந்த ஸ்ட்ராபெர்ரியை தன் முத்துப் பற்களால் கவ்வி பாதி கடித்தாள் குந்தவி. அவள் பற்கள் அளவான பதத்துடன் ரஃபிக்கின் தொப்புளை ஒரு செல்லக் கவ்வு கவ்வின. அதேவேளை டேனியின்பற்கள் கலங்கரை விளக்கின் மீது செல்லமாக தன் பற்களை பதித்தன. ஒஹோய்ய்ய்ய்ய்ய்ய் என்று துடித்தான் ரஃபிக். அவன் ஆவி அவனை விட்டு சற்று வெளியே எட்டிப்பார்த்து மீண்டது.

Friday, September 3, 2010

ரேப் ட்ராகன் - 16


ஒளி விளக்கு!

மல்லாந்த டைகர் ரஃபிக் சாகசம்

இருண்ட வீடு, மரணத்தின் கூடு என குத்து நகர இலக்கிய பெரும்புலவர் காருமேகம் அவர்கள் தன் ஏடுகளில் எழுதி வைத்திருக்கிறார். புரட்சிக்காரன் ரஃபிக்கின் இருண்ட கலங்கரை விளக்கில் ஒளியேற்ற விரும்பிய அழகிகளான குந்தவியும், டேனியும் அதற்கான முஸ்தீபுகளில் உடனடியாக இறங்க ஆரம்பித்தார்கள்.

கலங்கரை விளக்கை தன் கைகளால் மூடி மறைத்து, தன் மானத்தை கவரிமான் போல் காத்து நின்ற புரட்சிக்காரன் ரஃபிக்கை விரைந்து நெருங்கிய இரு அழகான பெண் வேங்கைகளும் ரஃபிக்கின் திமிறல்களையும், போராட்டங்களையும் முறியடித்து, அறையிலிருந்த பஞ்சணையில் அவனை இழுத்து வந்து வீசினார்கள்.

அந்த அழகுச் சிலைகளின் பிடிகளிலிருந்து விடுபடத் திமிறிய ரஃபிக்.. குந்தவி இது நல்லதல்ல, நானும் நீயும் காதல் வானில் கூடிப் பறந்த காலங்களை சற்று எண்ணிப்பார் என்று கெஞ்சினான். ரஃபிக்கின் இந்த சொற்கள் குந்தவியின் மனத்தை இளக்குவதற்கு பதில் மேலும் கடினப்படுத்தின.

- கடந்தகாலத்தில் நானும் இல்லை நீங்களும் இல்லை. எங்கள் ஆசைக்கு உடன்படுங்கள். உங்களை வருத்தாமல் நானும் டேனியும் நடந்து கொள்கிறோம்.. கண்டிப்பான குரலில் வார்த்தைகளை குந்தவி உதிர்த்தாள்.

- மன்னித்துவிடு இளவரசி உன் ஆசைக்கு என்னால் இணங்க முடியாது. இந்த புரட்சிக்காரனிற்கு தலை வணங்கிப் பழக்கமில்லை. தலையை எடுத்துத்தான் பழக்கம்.. அந்த இக்கட்டான நிலையிலும் தன் புரட்சித் தீயின் அனல் பொறி பறக்க பதில் தந்தான் அந்த ஒப்பற்ற புரட்சி வீரன்.

ரஃபிக்கின் வார்த்தைகள் குந்தவியை மேலும் சூடாக்கின. அறையில் இருந்த இரு கைவிலங்குகளை எடுத்து வந்த குந்தவி, அவ்விலங்குகளை ரஃபிக்கின் கரங்களில் மாட்டி பஞ்சணையின் தலைமாட்டிற்கு பின்பாக இருந்த வளையங்களில் அவற்றை பிணைத்தாள்.

குந்தவி, கைகளில் விலங்கை மாட்டியபோது அதனை எதிர்த்துப் போராடிய ரஃபிக்கை அழகி டேனி தன் வலிய கரங்களால் அழுத்திப் பிடித்தாள். மேலும் ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் தன் கால் முட்டிகளை பதித்து, அதில் சிறிது அழுத்தத்தை அளித்து ரஃபிக்கை எச்சரிக்கவும் செய்தாள்.

வீட்டில் விளக்கேற்றி வைத்து, வீட்டிற்கு ஒளியைத் தரும் அந்த தீபத்தை, தம் கண்களாக மதிக்கும் பெண்களே சில சமயங்களில் தவறுதலாக அத்தீபத்தை மிதித்து விடுவதும் உண்டு. தன் கலங்கரை விளக்கை காப்பாற்ற விரும்பிய ரஃபிக் தன் திமிறலை சற்று அடக்கினான். ஆனால் அவன் கைகள் விலங்கிடப்படுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

ஒரு பஞ்சணையில் ஒரு புலியை விலங்கிட்டு நிர்வாணமாக மல்லாக்க வளர்த்தினால் அந்தப் புலியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புரட்சிக்காரன் ரஃபிக்கின் ரியாக்‌ஷன். ஆனால் புலியை பஞ்சணையில் விலங்கிட்ட அழகுப் பெண்களோ இந்த ரியாக்‌ஷனால் அசந்தார்கள் இல்லை.

விலங்கு கேளிக்கைக் காட்சிகளில் அடங்க மறுக்கும் விலங்குகளை சாட்டையால் அடித்து அடக்குவான் அவ்விலங்குகளின் தலைவன். அறையிலிருந்த சவுக்கு ஒன்றை தன் கையில் எடுத்த டேனி, அதன் கைப்பிடியை தன் செவ்விதழ்கள் பொதிந்த வாயால் கவ்வியபடியே ஒரு விலங்கைப் போல் ரஃபிக்கின் பஞ்சணையை நெருங்கினாள். அந்தப் பஞ்சணை மேல் ஏறிய அவள், ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் அந்த சவுக்கை தன் உதடுகளிலிருந்து நழுவவிட்டாள். சவுக்கு கலங்கரை விளக்கின் மேல் விழுந்த அதிர்ச்சியால் ஹாஆ என்றான் புரட்சிக்காரன்.

- டேனி, மயிலே மயிலே இறகு தா என்றாள் இந்த மயில் எதுவும் தராது எனவே… அன்பால் பகிர்ந்து சுவைப்பதில் இன்பம் உண்டு, அடித்து சுவைப்பதிலும் பேரின்பம் உண்டு. துன்பம் என்பதை உணராது இன்பத்தை எப்படி டேனி முழுமையாக சுவைக்க முடியும்?… இளவரசி குந்தவியின் வார்த்தைகளை செவிமடுத்தவாறே மராக்கோ மாதுளை டேனியின் கைவிரல்கள் ரஃபிக்கின் கலங்கரை விளக்கின்மேல் கிடந்த சவுக்கின் கைபிடியை வருடிக் கொடுத்தன.

கார்மேகங்கள் சூல் கொண்டு தம் இதழ் திறந்து அமுதமென மழையாய்ப் பொழிய, விருட்சத்திற்கும், நெற்கதிர்களிற்கும் மேல் வழிந்த அவ்வமுதம், கவனிப்பாரற்ற சிறு புற்களையும் நனைத்தாற்போல், சவுக்கை தடவிய டேனியின் விரல்கள் ரஃபிக்கின் கலங்கரை விளக்கையும் வருடிவிட்டன. இந்தப் புதிய அதிர்ச்சியால் உணர்ச்சிகள் திடீரென உந்தப்பட்ட புரட்சிக்காரன் ஹோய் என்ன ஒரு முனகலை எழுப்பினான்.

- வலிக்கிறதா புரட்சிக்காரரே…டேனியின் விரல் நகங்கள் ரஃபிக்கின் கற்பாறை போன்ற தொடைகளில் மேலும் கீழும் கீறியவாறே சென்றுவர ஆரம்பித்தன. புரட்சிக்காரனிற்கு வலித்தது ஆனால் அது ஒரு புரட்சிகரமான வலியாக இருந்தது.

சந்தர்பங்களும், சூழ்நிலைகளும் தனக்கு எதிராக சதி செய்ததால் தான் இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த சில உணர்ச்சிகள் அழகிகள் பக்கம் கட்சி தாவ ஆரம்பித்து விட்டன என்பதையும் ரஃபிக் உணர ஆரம்பித்தான்.

- டேனி, நிறுத்து உன் தடவல்களை.. என்று சீறீய ரஃபிக்கின் குரல் அடங்கு முன்னரே டேனியின் கைகளிற்கு வந்திருந்த சாட்டை ரஃபிக்கின் மீது சடாரெனப் பதிந்தது. புதிதாய் முளைத்த செடி ஒன்றை, இரு நாள் பசி கொண்ட ஆடு வேரோடு புசித்தால் அச்செடிக்கு என்ன வலி நேருமோ அதனைவிட வலியை அந்த சவுக்கடி ரஃபிக்கிற்கு வழங்கியது. ஆனால் சாட்டையடி விழுந்த வேகத்திலேயே டேனியின் உதடுகளும், அழகிய கூரான நாக்கும் சவுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்மேல் பதிந்து நடாத்திய சிகிச்சை அவனை அந்த வலியை மறக்கடிக்கச் செய்தது. இன்னொரு உலகின் அருகில் வந்த ரஃபிக், ஹோய்..ஹோய்ய்ய்ய். ஹோய்ய்ய்ய்ய் என்றான்.

ஒரு அன்பான வேண்டுகோள்:

அன்னப்பறவைகளின் ஹிருதயம் கொண்ட வாசகத் தென்றலே, பல இன்னல்களையும், இக்கட்டுக்களையும், வேதனைகளையும், மேரு மலை போன்ற உறுதியுடன் தாங்கி வரும் புரட்சிக்காரன் ரஃபிக்கின் உணர்வுகளில் நீங்கள் பங்கெடுக்க துடிப்பதை நான் உணர்கிறேன், இருப்பினும் SMS, மெயில், தொலைபேசி வழியாகவோ அல்லது பூங்கொத்துக்களை அனுப்பியோ அந்த வெந்த உள்ளத்தின் வேதனையை நீங்கள் இந்த வார இறுதியில் இன்னமும் அதிகரிக்காதீர்கள் என்று உங்களிடம் இரந்து வேண்டுகிறேன்.

Thursday, September 2, 2010

ரேப் ட்ராகன் - 15


கறையற்ற சந்திரர்கள்

வெகுசனங்களின் சந்திரன் ரஃபிக் சாகஸம்

ஒரு கவரிமான் தன் முடிகளில் ஒன்றைக்கூட இழந்துவிடும் நிலையில் தன் இன்னுயிரை ஈய்த்துவிடும் என்பது தமிழ் வெகுசன இலக்கியங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்தாகும். அப்படிப்பட்ட கவரிமான் வம்சத்திலே உதித்த புரட்சிக்காரன் ரஃபிக், தனது ஆடைகள் அனைத்தையும் இழந்த நிலையில், தன் இயற்கை அழகு மேனியுடன், குந்தவி, டேனி ஆகிய இரு கொடிய வேங்கைகள் முன் கையறு நிலையில் நின்றான்.

அவன் அழுதிருப்பான் ஆனால் அவனை அழவிடாது மீண்டும் வெகுசன தமிழ் இலக்கியங்கள் தடுத்தன. அழுவது ஆணிற்கு அழகில்லை என்பதும் அந்த இலக்கியங்களால் பரப்பப்பட்ட ஒரு கருத்தல்லவா. எனவே அழவும் முடியாது, வேங்கைகளிடமிருந்து தப்பவும் முடியாத நிலையில் புரட்சி மாதாவை வேண்ட நினைத்தான் ரஃபிக். ஓ.. இது என்ன வன்கொடுமை… என்று தன் மனதில் விம்மினான். அறையிலிருந்த சாளரத்தின் வழியே வெளியே பாய்ந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைத்த அந்த புரட்சிக்காரன் அந்த சாளரத்தை நோக்கி ஓடவும் செய்தான்.

ஆனால் பெண் வேங்கை டேனி, ரஃபிக்கிற்கு முன்பாக குறுக்கே பாய்ந்தாள். பாய்ந்ததோடு மட்டுமல்லாது ரஃபிக்கின் இரு கரங்களும் கூடி நின்ற இடத்தையும் தன் விரல்களால் சுட்டிக் காட்டி…புரட்சிக்காரரே கலங்கரை விளக்கை மறைப்பது நியாயமானது அல்ல. கப்பல்கள் பாறைகளில் மோதிடும், திசை தவறி பாதாளத்தில் அமிழ்ந்திடும். எங்கே உங்கள் கரங்களை சற்று விலக்குங்கள் பார்க்கலாம் என்றாள்.

- காமம் உன் கண்களை மறைத்து இருள் திரையை போர்த்துகிறது. உனக்கு தேவை பக்தியின் விளக்கு, அடக்கத்தின் ஒளி, பெண்மையின் பிரகாசம். டேனி மரியாதையாக எனக்கு வழிவிடு இல்லையேல்.. முரட்டுத்தனமாக பேசினான் ரஃபிக்.

- இல்லையேல்…என்ன செய்வீர்கள் பதிலிற்கு ரஃபிக்கை மேலும் சீண்டினாள் டேனி

- பெண்களே, என் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது, ஆணாள இயலாது. தானே கனிந்த பழம் இனிக்கும். கசக்கிக் கனிந்த பழம் தன் சுவை இழக்கும். மேலும் நான் ஒத்துழைக்காவிடில்… கலங்கரை விளக்கு ஒளி தராது.. எனவே… என்று இழுத்தான் ரஃபிக்.

- எனவே.. ம்.. மிகுதியையும் கூறுங்கள் என்றாள் குந்தவி.

- ஹாஆ… ஒளி தராத கலங்கரை விளக்கைக் கொண்டு எந்தக் கப்பலுமே அது செல்ல வேண்டிய உச்சத்தை அடைய முடியாது அழகுகளே… ஏளனமாக இதனைக் கூறிய புரட்சிக்காரன்… ஹாஹாஹாஆஆ என்று ஒரு வெற்றிச் சிரிப்பை உதிர்த்தான்.

- டேனி..

- என்ன இளவரசி?

- கலங்கரை விளக்கை இவர் கரங்கள் மறைக்கலாம் ஆனால் இந்த பாதிச் சந்திரன்களை அவை மறைக்கவியலுமா என்ற குந்தவி, ரஃபிக்கின் பின்னழகுகளை சுட்டிக் காட்டினாள்.

- ஆஹா..ஆஹா. இளவரசி..என்னே ஒரு கலை ரசனை. இந்த இரு பாதிச் சந்திரன்களின் அழகுகளும் வானத்து முழுநிலவின் வதனத்தையும் சிவக்கச் செய்யுமே.. என்ற டேனி, ரஃபிக்கின் பின்னால் ஓடிவந்து அவனின் சந்திரன்களை ரசிக்கவும் செய்தாள். முழு நிலவில்கூட கறை இருக்கிறது. ஆனால் இந்தச் சந்திரன்களின் அழகில் களங்கமில்லை. கறைபடாத சந்திரன்கள் இவை இளவரசி என்று மேலும் இழுத்தாள்.

- இந்தப் பாதிச் சந்திரன்களில் நாம் எம் தடங்களைப் பதிக்கலாம், களங்கத்தை கருக்கொள்ள வைக்கலாம் டேனி. கால்தடம், கைத்தடம், பற்தடம், நகத்தடம் என்று பல தடங்களை இன்று இந்த சந்திரன்களில் நாம் பதிந்திடும் பாக்யம் நமக்கு கிடைக்கப்போகிறது.

இரு அழகிகளினதும் இவ்வகையான விபரீதமான பேச்சுக்களும் புரட்சிக்காரனை சிறிது நிலைகுலைய வைத்தன. கலங்கரை விளக்கைக் காப்பதா, பாதிச் சந்திர அழகுகளை காப்பதா என்ற போராட்டத்தில் அவன் மனம் குதித்தது. ஒரு நீண்ட மனப் போராட்டத்தின் பின்பாக ஒரு கரத்தால் கலங்கரை விளக்கையும், மறுகரத்தால் சந்திரர்களையும் பாதுகாப்பது என்ற முடிவிற்கு வந்த ரஃபிக், அதனை நிகழ்த்தவும் செய்தான். இதற்காகவே காத்திருந்ததைப்போல் இரு பருவச் சிட்டுக்களும் அவன் முன்னால் ஓடி வந்து நின்றார்கள்.

- ஆஹா.. என்ன அழகான கலங்கரை விளக்கம். என்ன கம்பீரம். என்ன பிரம்மாண்டம். இரு பாறைகளிற்கு நடுவில் நின்று அது எழுந்து நிற்கும் அழகே என்னை கவிழ்க்கிறதே. இந்தக் கலங்கரை விளக்கு இனியும் இருண்டிருக்கக்கூடாது. பெண்கள் வீட்டின் விளக்குகளை ஏற்றுபவர்கள், ஒளியை உருவாக்குபவர்கள் என்று கூட தமிழ் வெகுசன இலக்கியத்தில் உண்டு என இந்தக் கதையை எழுதுபவன் எழுதக்கூடும். எனவே இருண்டிருக்கும் இந்த கலங்கரை விளக்கில் ஒளியை ஏற்றுவோம், அதன் பிரகாசம் எங்கள் கப்பல்களை நிரப்பட்டும். தானாகக் கனிந்த கனியைவிட கல்லால் எறிந்து வீழ்த்திய காயின் சுவையும் அதிகம் என்பதை புரட்சிக்காரரிற்கு உணர்த்துவோம். இவ்வாறு கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கி வேகமாக நகர்ந்தாள்.