tag:blogger.com,1999:blog-28583060950290438712024-03-13T02:29:56.491+01:00கனவுகளின் காதலன்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger304125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62371924984206768532015-03-28T21:54:00.001+01:002015-03-28T21:54:45.937+01:00இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV-wkDps9pojVhvQcFMKn-dAFqcjSVN4IRVqOMhkQ0_RHdfCWR1EyXT4IlsaaNJnOdw069E4PEHTHRfJq9u0syugjYLno-nOPOS7lYNvjhp8OaYgxUbhkQPVW1hl4vYFfp_an-yWzqz4_f/s1600/runallnight.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV-wkDps9pojVhvQcFMKn-dAFqcjSVN4IRVqOMhkQ0_RHdfCWR1EyXT4IlsaaNJnOdw069E4PEHTHRfJq9u0syugjYLno-nOPOS7lYNvjhp8OaYgxUbhkQPVW1hl4vYFfp_an-yWzqz4_f/s1600/runallnight.jpg" height="320" width="213" /></a></div>
<b>வாழ்க்கையின் </b>ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழலையும், அவரளித்த அவமானங்களையும் விலத்தி நின்று தனியே போராடி முன்னேறி செல்ல துடிக்கும் ஒரு மகன் தன் தந்தையை தன் வாழ்வின் எல்லைக்குள் வராது விடச்செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். குற்றவாளி அமைப்பு ஒன்றின் தலைவனின் விசுவாசமான முன்னாள் அடியாளான தன் தந்தையை பற்றி எண்ணிட அந்த மகனிடம் கசப்பேறிக் காய்ந்த நினைவுகளை தவிர என்னதான் இருக்க முடியும். ஆனால் ஒரு இரவு முடிவதற்குள் அவன் உள்ளம் தன் தந்தையின் இருளான நிழலிற்கு இடமளிக்குமா. தந்தை, மகன், குடும்பம், உறவுகள், நட்பு, விசுவாசம் என்பவற்றினூடாக உணர்சிகரமாகவும், மிக வேகமாகவும் நகர்கிறது இயக்குனர் <b>Jaume Collet - Serra</b> இயக்கியிருக்கும் <b>Run All Night</b> திரைப்படம்.<br />
<br />
<b>ஷான் </b>எனும் குற்றக்குழு தலைவனின் முன்னாள் தளபதி ஜிம்மி. இன்று தன் கடந்தகாலத்தின் இருளான நினைவுகளை மறப்பதற்காக மதுவில் ஆழ்கிறான். இன்றைய தலைமுறையின் நகைப்பின் உச்சப்பொருளாகிறான். அவனது வாழ்க்கை என்பது அர்த்தம் அற்ற ஒன்றாக அவன் பறித்த உயிர்கள் கேட்கும் கனவுக்கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறது. தன் தலைவனான ஷானிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம் அபாரமானது. கடந்தகாலத்தில் அவன் அதற்காக சென்ற எல்லைகள் இன்றும் அவனை அவன் உறவுகள் அஞ்ச வைப்பதாகவே இருக்கிறது. ஷானின் மதுவிடுதியில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து எழுந்து சூடாக்கி ஒன்றை வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் போட்டு சொதப்பும் பரிதாபமானவனாக ஜிம்மி பாத்திரத்தில் லியம் நீசன் அறிமுகம் ஆகும்போதே அவரின் பண்பட்ட நடிப்பு ஆக்கிரமிப்பை செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரடியாக அலட்டாமல் தன் நடிப்பை வழங்கும் எட் ஹாரிஸும் ஷான் வேடத்தில் இலகுவாக பொருந்திக் கொள்கிறார்.<br />
<br />
<b>நட்பும்</b>, விசுவாசமும் உதிர்ந்து செல்லக்கூடிய எல்லை என ஒன்று உண்டாஎன ஜிம்மி அறியும் வேளையும் வருகிறது. அந்த தருணமே ஜிம்மி உண்மையிலேயே எப்படியான ஒரு தந்தை என்பதை சொல்ல ஆரம்பிக்கிறது. துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வால் ஷானின் மகனை ஜிம்மி தன் மகனான மைக்கேலை காப்பாற்றுவதற்காக கொல்ல நேரிடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் ரசிகர்களை உணர்ச்சிகரமான மென் திருப்பங்களோடு மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவை நோக்கி படு வேகமான கதையுடனும், வன்முறை தெறிக்கும் நிகழ்வுகளுடனும், அழுத்தமும், பதட்டமும், வேகமும், திகிலும் குறையாது அழைத்து செல்கிறது. காவல்துறை, அடியாள் கூட்டம், தொழில்முறைக் கொலைஞன் என தன்னாலான அனைத்து அழிவு சக்திகளையும் ஷான் ஜிம்மியின் மகனை ஒரு இரவு முடிவதற்குள் முடிப்பதற்கு ஏவ அவற்றை எவ்வாறு ஜிம்மி எதிர் கொள்கிறான் என்பது மிகச் சாதரணமான ஒரு கதையே ஆனால் அதை இயக்குனர் திரையில் தந்திருக்கும் விதமே அந்த நிகழ்வுகளின் பின்னான அழுத்தத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கடத்தி இவ்வகையான ஆக்சன்கள் இன்றும் சிறப்பான ஒரு திரையனுபவத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கிறது. ஷானுக்கும், ஜிம்மிக்கும் இடையிலான அந்த உச்சக் கட்டம் கண்ணியம் தவறாத ஒரு அஸ்தமனம் போல அழகானது. அரவணைப்பும், விசுவாசமும் சிலரிற்கிடையே மரணத்திலும் புது அழகாக உருப்பெறுகிறது போலும். தன்னை வெறுக்கும், தன் குழந்தைகளை கூட தன் தந்தையிடம் அறிமுகப்படுத்த விரும்பாத ஒரு மகனிடம் தந்தை எனும் இடத்தை பெறுவதற்காக குற்றவாளியான அவன் தந்தை செய்ய வேண்டியது எல்லாம் அவனும் தன்னை போல ஆகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அல்லவா. அதைவிட சிறப்பாக அந்த தந்தை என்னதான் தன் மகனிற்கு இந்த குரூரமான சமூகத்தில் தந்துவிட முடியும்.<br />
<br />
<b>சில </b>உறவுகளின் இடைவெளிகளில் பேசப்படாத வார்த்தைகள் துளிகளாக நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. துளிகள் நிரம்பி வழியும் தருணத்தில் குரல் ஏதுமின்றி தன்னை அக்கறை எனும் அடையாளமாக காட்டி செல்கிறது பாசம். அது சொற்களால் ஆனது அல்ல செயல்களால் ஆனது. அந்தப் புரிதலில் மலர்வது மனதில் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்.</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-5763813418749821512015-03-22T09:45:00.000+01:002015-03-22T09:45:22.469+01:00ஆந்தைகளின் இரவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYxt6QlI-ecIvH5RQ9tv3wnIEJlToLTUiUIv3yRXsTBCVz4Mo3Sz1wQdc_NVC4lOnnzt-dM2rCwFcpwiyadYbvA6k4ScP1jMKYKdalHZMCovAP-GGctxkxys9Ulk4dXPCCVHFjzjf4UY7Y/s1600/Couv_165831.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYxt6QlI-ecIvH5RQ9tv3wnIEJlToLTUiUIv3yRXsTBCVz4Mo3Sz1wQdc_NVC4lOnnzt-dM2rCwFcpwiyadYbvA6k4ScP1jMKYKdalHZMCovAP-GGctxkxys9Ulk4dXPCCVHFjzjf4UY7Y/s1600/Couv_165831.jpg" height="200" width="128" /></a></div>
<b>ஒருவன் </b>தன் வாழிடம் குறித்து தனக்கு அனைத்தும் தெரியும் எனும் நம்பிக்கையை கொண்டிருக்கலாம். அதன் இண்டு இடுக்குகள் அனைத்திலும் தான் அறியாத எதுவுமே இல்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கலாம். அங்கு வாழ்பவர்கள் மீதும் அவர்களின் வாழ்க்கைநிலை மீதும் அக்கறை கொள்பவனாக இருக்கலாம். அந்த வாழ்க்கைநிலையை மேம்படுத்த புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்பவனாக இருக்கலாம். அந்த வாழிடத்தின் காவலனாகவும், நீதியின் மேகவொளிச்சித்திரமாகவும் அவன் தன்னை நிலைநிறுத்தி இருக்கலாம். ஆனால் இவை யாவுமே கேள்விக்குறியாகி நிற்கும் தருணம் எப்போதாவது வருவதுண்டு. செல்வந்தன் ப்ருஸ் வெய்னிற்கு மரணதண்டனையை ஆந்தைகள் அவை வழங்கும் தருணமே அது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwR_PbEDuisQJu3hg2_5ECx0YulvyV4KyLJQD-C9KF6dFG66wUUDGYdsYAy48kQH1MGTVOGtUdLOpH9lDvquDs2AzzsN8v5aAWhgkjp7fTcemSTfVtpXAqe16oYPUZeK3UAX-HEEZeLaI6/s1600/9782365772068-couv-M244x367.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwR_PbEDuisQJu3hg2_5ECx0YulvyV4KyLJQD-C9KF6dFG66wUUDGYdsYAy48kQH1MGTVOGtUdLOpH9lDvquDs2AzzsN8v5aAWhgkjp7fTcemSTfVtpXAqe16oYPUZeK3UAX-HEEZeLaI6/s1600/9782365772068-couv-M244x367.jpg" height="200" width="132" /></a><b>கோத்தம் </b>நகரின் முன்னேற்றத்திற்கான புது திட்டங்களை ப்ரூஸ் வெய்ன் முன்னெடுக்கையில் கிடைக்கும் இந்த தகவல் பேட்மேனை விசாரணை களத்தில் இறக்குகிறது. புதிய ஒரு துவக்கத்தை ஆரம்பிக்கும் பேட்மேன் கதைவரிசைகளில் பேட்மேனிற்கு உக்கிரமான சவாலாக ஆந்தைகள் அவை எனும் ரகசிய அமைப்பையும் அறிமுகம் செய்கிறது. கதையின் ஆரம்பமே அர்க்ஹாம் மனநல காப்பகத்தில் பேட்மேனும் ஜோக்கரும் ஒரே அணியாக இனைந்து நின்று எதிரிகளை துவம்சம் செய்வதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார் கதாசிரியர்<b> Scott Snyder</b>. மிக ஆச்சர்யம் தரும் காட்சி உருவாக்கம் அது. அதன் பின்பாகவுள்ள மர்மம் தெரியவரும்போது பேட்மேன் கதைகளில் அறிவியல் நுட்பங்களும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பதும் கதைக்களங்களும், பாத்திரங்களின் மனநிலைகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதும் தெளிவாகிறது.<br />
<br />
<b>முதல் </b>பாகமான <b>Court of Owls</b> ஆரம்பத்தில் மட்டுமல்லாது கதை நெடுகிலும் ஆச்சர்யங்களை கதாசிரியர் தந்து செல்கிறார். இலகுவில் முறியடிக்கப்படமுடியாத பேட்மேனை ஆந்தைகள் அவை புதிர்ச்சுழலில் சிக்கவைத்து மனப்பிறழ்வு எய்ய செய்யும் நிலைவரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, தன் நகரென பேட்மேன் எண்ணியிருந்த கோதத்தை தம் லாசரஸ் குழந்தைகளான ஏவலர்கள் துணையுடன் தமதாக்கி கொள்ளும் திட்டத்தை அவர்கள் செயற்படுத்தும்வரை கதையின் முதல்பாகம் மெதுவாக நகர்ந்தாலும் அதில் இருக்கும் நவீனமும், மர்மமும் கதையை விறுவிறுபாக்குகிறது. ஆந்தைகள் குறித்த தொன்ம நம்பிக்கைகள் கதையில் அதிகம் ஆந்தைகள் அவையின் இயல்பை தெளிவாக்க கையாளப்பட்டிருக்கும்விதம் சிறப்பாக இருக்கிறது. வவ்வால்களிற்கும், ஆந்தைகளிற்கும் இடையில் முன்னொரு காலத்தில் வெய்ன் மாளிகையில் இடம்பெற்ற போட்டியின் முடிவையே உபகதையாக கதாசிரியர் ஒரு முக்கிய தருணம்வரை கொண்டு சென்று உக்கிரமாக முடிப்பது ஆக்சன் கதை பிரியர்களை முழுமையாக நிறைவடையச் செய்யும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA4CYFWVfAU5qtU-UucLq606_dHqN1uVyw2OEfEV4pESbA7XQyCVXma60MkNCv6KQSt0eBuLCYpRNmXKDA55jIIAuD7pB5M-foXMkX_Jp1hS9Hq-Wgat01hHF6ptAmx7R1yHzq1Hjb2cAR/s1600/batmanlacourdeshiboux2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA4CYFWVfAU5qtU-UucLq606_dHqN1uVyw2OEfEV4pESbA7XQyCVXma60MkNCv6KQSt0eBuLCYpRNmXKDA55jIIAuD7pB5M-foXMkX_Jp1hS9Hq-Wgat01hHF6ptAmx7R1yHzq1Hjb2cAR/s1600/batmanlacourdeshiboux2.jpg" height="200" width="130" /></a></div>
<b>அதிகாரமும்</b>, பலமும், செல்வாக்கும், செல்வமும் நிறைந்த ஆந்தைகள் அவைதான் ப்ரூஸ் வெய்னின் முன்னைய தலைமுறை உறுப்பினர் சிலரின் அழிவிற்கு காரணம் எனும் கருத்தை கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர் ஸ்காட் ஸ்னைடர். கதையின் இரண்டாம் பாகத்தில் தனியாக கூறப்பட்டு இருக்கும் ஆல்பிரட்டின் தந்தையான ஜார்விஸ் பெனிவொர்த்தின் கதை அதை உறுதிப்படுத்துவதாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஆல்ஃபிரட்டின் தந்தையின் இறப்பிற்கும் காரணம் என ஆந்தைகள் அவையையே சுட்டுகிறது. இக்கதையை போன்றே மிஸ்டர் ப்ரீஸின் கடந்த காலத்தை நோக்கி சென்று மிஸ்டர் ப்ரீஸின் அன்னையுடனான அவனின் உறவைச் சொல்லும் மனதை நெகிழச்செய்யும் கதை ஒன்றும் உண்டு. இக்கதைகள் இரண்டும் ஆந்தைகள் அவையின் ஆதிக்க நீட்சியை விபரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கதைகள் ஆகும்.<br />
<br />
<b>ஆந்தைகள் </b>அவை கோத்தம் நகரை தமதாக்க அறிவியல்நுட்பங்களை பயன்படுத்தி <b>Talons </b>எனும் வீரர் குழுவை உருவாக்குகிறார்கள் ஆனால் அவர்கள் எதிர்பாராத திருப்பம் ஒன்று கதையில் உண்டு. பேட்மேனிற்கு சகலவகையிலும் சவாலாக அமையும் அந்த திருப்பம் அருமையான ஒன்று. கதையின் இரண்டாம் பாகமான <b>Night of Owls</b> வேகமும் விறுவிறுப்பும் திருப்பங்களிற்கும் பஞ்சமில்லாத ஒன்று. முதல் பாகம் மெதுவாக நகர்ந்தது எனும் எண்ணத்தை இப்பாகம் இல்லாது ஆக்கி கதையை முழுமையாக்கும். கதையின் முடிவானது ஆந்தைகள் அவை மீண்டும் வரும் என்பதை மறைமுகமாக சொல்லி கோதத்தை அவற்றின் உகிர்களின் பிடியிலிருந்து விடுவித்து பேட்மேனின் கரங்களில் அளித்து நிறைவடைகிறது. ஸ்னைடர் மற்றும் சில கதாசிரியர்களின் சலிக்க வைக்காத திருப்பங்கள் நிறைந்த கதை சொல்லலும், அசத்தலான சித்திரங்களிற்கு பொறுப்பான <b>Greg Capullo</b> வின் திறமையும் பேட்மேன் கதை வரிசைகளில் இவ்விரு தொகுப்புகளையும் குறிப்பிடத்தக்கவையாக சொல்ல வைக்கின்றன.</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73587917045844698002015-03-15T05:19:00.000+01:002015-03-15T05:27:36.646+01:00மம்மியுடன் மங்காத்தா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4wHUIhHF0KpqD2B9XOxhusgFk19vwGONleUGMot85QbFgeBAGIyHavuV_tNQvOjE5SKqYc9GBYgJjzmnoU6979WLO7RfS92uPoqpfrdGMTggadZcESE3CHCoDG_s9p13m0xCln08NFnKk/s1600/Couv_209426.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4wHUIhHF0KpqD2B9XOxhusgFk19vwGONleUGMot85QbFgeBAGIyHavuV_tNQvOjE5SKqYc9GBYgJjzmnoU6979WLO7RfS92uPoqpfrdGMTggadZcESE3CHCoDG_s9p13m0xCln08NFnKk/s1600/Couv_209426.jpg" height="320" width="248" /></a></div>
<div style="text-align: left;">
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ர பிம்பமோ - 21</span></b></div>
<b><br /></b>
<b>கியோவா </b>செவ்விந்தியர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தன் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஜெஸ் ஹாக் எனும் வயதான ரேஞ்சரை காப்பாற்றுகிறது டெக்ஸ், கார்சன் அணி. செவ்விந்தியர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட ஜெஸ் ஹாக், செர்னாவின் பண்ணை உரிமையாளர் ஒக்டாவியோவின் இரு குழந்தைகளையும் கடத்தி சென்ற ஹுவான் ரஸாவின் தடத்தை தொடர்ந்து தான் சென்று கொண்டிருப்பதாக டெக்ஸிடம் தெரிவிக்கிறார். அதிரடி ரேஞ்சர்கள் இருவரும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்பதற்கு ஜெஸ் ஹாக்குடன் தாம் துணையிருப்பதாக கூறி மெக்ஸிக்க எல்லையை கடந்து தேடலை ஆரம்பிக்கிறார்கள் ... இச்சம்பவங்களிற்கிடையே மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் எகிப்திய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது .....<br />
<br />
<b>ஆம் </b>நண்பர்களே மெக்ஸிக்கோவை டெக்ஸ் விடுவதாக இல்லை. அம்மண் எம் நாயகனிற்கு அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருக்கிறது. நம் நாயகன் டெக்ஸும் அந்த அறைகூவல்களை தன் அதிரடிகளால் எதிர்கொண்டுகொண்டே இருக்கிறார். மெக்ஸிக்கோ என்பது அவர் மாமியார்வீடு என்பது போன்ற ஒரு உணர்வை டெக்ஸின் ரசிகர்கள் அனுபவிக்க ஆரம்பித்து குறிப்பிடத்தக்க காலம் ஓடிவிட்டது. மெக்ஸிக்கோவின் வடகிழக்கு எல்லை நகர்களின் தெருக்கள் எல்லாம் தாம் பிறந்த ஊரின் தெருக்கள் போல் டெக்ஸின் ரசிகர்களிற்கு தோன்றுவது அதனால்கூடவாக இருக்கலாம். அம்மண்ணின் கதிரவனின் அனற்கதிர்களை நழுவச்செய்யும் ஒரு பெருந்தொப்பி, புழுதிக்காற்றினை மேனியில் ஏந்திட ஒரு பான்ச்சோ மேலணி சகிதம் நாமும்கூட அந்த தெருக்களின் குட்டிச்சுவர்களில் சாய்ந்து நின்று டெகிலா தந்த இன்பத்தின் இழையில் கிதார்களில் சில பாடல்களை இசைக்கும் நினைவுகள் அந்த சுவர் ஓரமாக முளைத்து நிற்கும் கள்ளியின செடிகளின் விளிம்புகளில் அதிகாலையில் தொங்கி நிற்கும் நீர்த்துளிகள்போலவே மென்மையானவை ...<br />
<br />
<b>ஆனால் </b>மென்மை என்பது மெக்ஸிக்கோவில் மிகவிரைவில் ஆவியாகிவிடக்கூடியது. அம்மண்ணின் ஆன்மாக்களின் உக்கிரத்தின் வெம்மை அத்தகையது. அதனாலேயே மெக்ஸிக்க மண்ணில் டெக்ஸ் நடத்தும் அதிரடிகளிலும் உக்கிரத்தின் அளவு அதிகமாக இருப்பது உண்டு. ஆனால் <b>TEX #452, #453,#454 </b>ல் தொடராக வெளியாகிய இக்கதையில் அந்த உக்கிரத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. மாறாக காதல், நட்பு, தொல் எகிப்தின் மர்மங்கள் என்பன கலந்த, ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கலவையாக இக்கதை கதாசிரியர்<b> Mauro Boselli</b> யால் உருவாக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
<b>மீண்டும் </b>மொரிஸ்கோ எனும் தலைப்பில் இக்கதையின் முதல்பாகம் ஆரம்பமாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் எகிப்தில் பாட்சா மெஹ்மெட் ஆண்டிருந்த காலத்தில் கதை சொல்லப்படுகிறது. பாட்சா மெஹ்மெட் எகிப்து நாட்டின் கலைப்பொக்கிஷங்கள், தேசிய சொத்துக்கள் அயல்நாடுகளிற்கு எடுத்து செல்லப்படுவதற்கு தடையை விதித்து இருந்தார் இருப்பினும் அரசு எந்திரத்தில் நிரம்பியிருந்த ஊழல் அத்தடை செவ்வனே நடைமுறைக்கு உள்ளாவதை சிரமமான ஒன்றாக்கியிருந்தது. இக்காலகட்டத்தில் ஓக்டாவ், டேவிஸ் எனும் இரு அகழ்வாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றுபவனாக எல் மொரிஸ்கோ பாத்திரம் அறிமுகமாகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DOsXsooANQXDiqQySb6UptCKBZ4OWBS15MKEFYhvekQs9nbu07Ht446Cio_M9Dc3qoT8IfDTtZfzcIZysqm8Tlgck1i4XemdoRr25yb_SFxzp3chzf_uxuMWXw0G-BJNcq2TEWlgjs6c/s1600/Couv_209427.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DOsXsooANQXDiqQySb6UptCKBZ4OWBS15MKEFYhvekQs9nbu07Ht446Cio_M9Dc3qoT8IfDTtZfzcIZysqm8Tlgck1i4XemdoRr25yb_SFxzp3chzf_uxuMWXw0G-BJNcq2TEWlgjs6c/s1600/Couv_209427.jpg" height="320" width="248" /></a></div>
<b>அக்காலத்தில் </b>எல் மொரிஸ்கோவின் பெயர் அஹ்மெட் ஜமால் ஆகும். தன் தந்தையை போலவே மருத்துவனாக பணியாற்றினாலும் அகழ்வுகள் மற்றும் எகிப்தின் தொன்மங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுபவனாகவும், பண்டைய எகிப்தின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் வேட்கை கொண்டவனாகவும் எல் மொரிஸ்கோ சித்தரிக்கப்படுகிறான். இயற்கை விஞ்ஞானம், மருத்துவம் போன்றவற்றில் கல்வி கற்ற எல் மொரிஸ்கோ தன்னுடன் மருத்துவம் கற்ற சக மாணவியான அழகி நெஃப்ரெட் மீது மென்மையான ஒரு காதலையும் கொண்டவனாவான். அழகி நெஃப்ரெட் எகிப்தின் தொன்மையான சாஸ்திரங்களிலும், ஞானங்களிலும் சிறப்பான பரிச்சயம் கொண்டவளாக கதையில் திகழ்கிறாள். பண்டைய எகிப்தின் காதல் கவிதைகளை எல் மொரிஸ்கோவும், நெஃப்ரெட்டும் படித்து தம் மனங்களை இணைத்துக் கொள்ளும் காட்சி டெக்ஸ் கதைகளில் அரிதாக கிடைக்ககூடிய காதல் காட்சிகளில் ஒன்றென கூறலாம்.<br />
<br />
<b>துருக்கியின் </b>ஆதிக்கத்தில் இருந்து வந்த எகிப்தை அதன் பிடியிலிருந்து விடுவிக்க பாட்சா மெஹ்மெட் மேற்கு நாடுகளின் நட்பையும் உதவியையும் நாடினார். ஆகவே அத்தருணத்தில் எகிப்தின் மீது இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளின் செல்வாக்கு சற்று அதிகமாக இருந்தது. மொரிஸ்கோ இணைந்து பணியாற்றும் அகழ்வாய்வாளர்கள் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களே. எகிப்தின் அருங்காட்சியகங்கள் எலிகளாலும், திருடர்களாலும் நிரம்பி இருக்கிறது, பண்டைய எகிப்து நாகரீகத்தின் பொக்கிஷங்கள் பாதுகாப்பாக பேணப்படும் இடம் மேற்குலகின் அருங்காட்சியகங்களே எனும் கருத்து இந்த அகழ்வாய்வாளர்களின் கருத்தாக கதையில் ஒலிக்கிறது. அகழ்வாய்வாளர்கள் மொரிஸ்கோவிற்கு தெரியவந்த ஒரு ரகசியத்தின்படி ஒரு அகழ்வில் ஈடுபடுகிறார்கள். இந்த ரகசியம் மொரிஸ்கோவிற்கு தெரியவந்ததற்கு காரணமாக இருப்பது அழகி நெஃப்ரெட்டின் நெருக்கமே.<br />
<br />
<b>மொரிஸ்கோவின் </b>மீது நல்லெண்ணம் கொண்ட நெஃப்ரெட், தான் செயல்படும் தேசியவாதக் குழுவான ஹோரஸின் மைந்தர்கள் எனும் அமைப்பில் அவனையும் சேர்த்து விடுகிறாள். அந்த அமைப்பின் நூலகத்திலேயே சுவாரஸ்யமான ஒரு தகவலை மொரிஸ்கோ அறிந்து கொள்கிறான். ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பு மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனும் தகவல் கதையில் முன்வைக்கப்படுகிறது. அமெனோபிஸ் IV அல்லது அகெனெட்டான் எனும் பெயரில் அழைக்கப்பட்ட பாராவோன் எகிப்தின் பண்டைய தெய்வ வழிபாட்டிலிருந்து விலகி தன்னை முழுமையாக சூரியக்கடவுள் வழிபாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டான். இதை கடுமையாக எதிர்த்த மாந்தீரிகனும், மதகுருவுமான அஹ்ரான் பண்டைய எகிப்தின் தெய்வ வழிபாடுகள் அழிந்து போய்விடல் ஆகாது என்பதற்காக ஆரம்பித்த மதக்குழுதான் ஹோரஸின் மைந்தர்கள். எகிப்திய மதகுருவான அஹ்ரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியையும் கொண்டவன் என்பது பண்டைய ஆவணங்களில் எழுதப்பட்டிருக்கும் தகவல் ஆகும். இந்நிலையில் அஹ்ரானின் கல்லறை இருக்கும் இடம் குறித்த தகவலை கண்டுபிடிக்கும் மொரிஸ்கோ அந்த தகவலை தன் சகாக்களுடன் பகிர்ந்துகொள்ள அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடிக்கும் அகழ்வு இயன்றளவு ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicBDT3OXFZBOdNCPYprifAGpAyJuRLUWvCitr0TegH1bfeQbe-Q8NEGf4PnUeZ4nLF88YZ7k9nBAJUHnJr5M-ArxbYbJa2N9Vl8xjjG_E42aMVYMmUr8qfnnAFG2xaSr2lsmUysGrQy-HU/s1600/rm1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicBDT3OXFZBOdNCPYprifAGpAyJuRLUWvCitr0TegH1bfeQbe-Q8NEGf4PnUeZ4nLF88YZ7k9nBAJUHnJr5M-ArxbYbJa2N9Vl8xjjG_E42aMVYMmUr8qfnnAFG2xaSr2lsmUysGrQy-HU/s1600/rm1.jpg" height="181" width="400" /></a></div>
<b>அன்றைய </b>காலகட்டத்தில் அகழ்வுகளை மேற்கொள்பவர்கள், திருடர்கள், போட்டி அகழ்வாய்வாளர்கள், அரசின் சட்டதிட்டங்கள் போன்றவற்றால் பல வகையிலும் பாதிக்கப்பட்டார்கள். இது போதாது என்று எகிப்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அயலவர்கள் சூறையாடுகிறார்கள் எனும் எண்ணத்தை வலுவாக கொண்ட ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பும் அகழ்வாளர்களின் முயற்சிகளிற்கு தன்னாலான சிரமங்களை அளித்து வந்தது. ஆகவே ஓக்டாவ், டேவிஸ், மொரிஸ்கோ தம் அகழ்வை மிக ரகசியமாகவே நடத்த வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள். அவர்கள் அகழ்வு செய்யும் இடத்தில் பணியாற்றும் பணியாளர்களை கூட அவதானமாக கண்காணிக்க வேண்டியதொரு நிலை அவர்களிற்கு இருந்தது. இந்நிலை பதட்டத்தை அந்த அகழ்வு தளத்தில் அதிகரிக்கவே செய்தது. பதட்டங்களினதும், அச்சங்களினதும் மத்தியில் நண்பர்கள் மூவரும் அஹ்ரானின் கல்லறையை கண்டுபிடித்து விடுகிறார்கள். உள்ளே நுழையவும் செய்கிறார்கள்.<br />
<br />
<b>அஹ்ரானின் </b>கல்லறை பொறிகள் நிரம்பியதாக இருக்கிறது. அஹ்ரானின் அமைதியை கலைப்பவர்களை அழிக்கும் உத்திகள் கல்லறைகளில் ஒளிந்த ரகசியமாக காத்திருக்கிறது. இவை போதாது என்று அஹ்ரான் தன் கல்லறையில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாபமும் உள்ளே நுழைபவர்களிற்கு அச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. என் ஓய்வை குலைக்க துணிபவர்களிற்கு அய்யோ கேடு ... ஏனெனில் என் மரணத்தை நான் அவர்களிற்கு தந்து அவர்கள் உயிரை எனதாக்கி கொள்வேன் .. இவ்வுலகில் மீண்டும் என் பாதங்கள் பதியும் மாறாக அவர்களோ என்றென்றைக்கும் இறந்தவர்களின் உலகில் அலைந்து திரிவார்கள் என்பதே அஹ்ரானின் சாபம் ஆகும். இதை எல்லாவற்றையும் மீறி ஆய்வாளர்கள் அஹ்ரனின் ஈமப்பேழையை திறக்கிறார்கள் ஆனால் அது வெறுமையாக இருக்கிறது. ஆய்வாளர்களுடன் கல்லறைக்குள் இறங்கிய பணியாளர்கள் கொல்லப்படுகிறார்கள் ... அஹ்ரனின் சாபம் பலிக்க தொடங்கிவிட்டது எனும் அச்சம் ஆய்வாளர்களை ஆக்கிரமிக்கிறது. தம் உயிரைக் காக்க அஹ்ரனின் கல்லறையை விட்டு அவர்கள் விலகி செல்கிறார்கள். ஹோரஸின் மைந்தர்களிற்கு அஞ்சி மொரிஸ்கோ எகிப்தை விட்டு வெளியேறுகிறான்...<br />
<br />
<b>இந்நிகழ்வுகள் </b>நடந்து முப்பது வருடங்களின் பின்பாகவே டெக்ஸும், கார்சனும் கடத்தப்பட்ட குழந்தைகளை தேடி ஜெஸ் ஹாக்குடன் சாகசத்தை ஆரம்பிக்கிறார்கள். இதே சமயத்தில்தான் மெக்ஸிக்கோவின் டுராங்கோ நகரில் ஒரு எகிப்திய மம்மி கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த மம்மி வேறு யாருடையதும் அல்ல ஹோரஸின் மைந்தர்கள் அமைப்பை நிறுவிய அஹ்ரா<br />
னின் மம்மியே அது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKseTBQG1pk6tvqy7-xLLQFrNA02iVdcSHp7-oTIi54j4_RLjORQyitSsJOA4tfyw-oqPaaVo24gZpLZnot59XeI5i2xIHk-Sigx9YU_JEoDUW-ggw788jGVcrPHIGxzi9ZvHMPrmjTY0r/s1600/rm2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKseTBQG1pk6tvqy7-xLLQFrNA02iVdcSHp7-oTIi54j4_RLjORQyitSsJOA4tfyw-oqPaaVo24gZpLZnot59XeI5i2xIHk-Sigx9YU_JEoDUW-ggw788jGVcrPHIGxzi9ZvHMPrmjTY0r/s1600/rm2.jpg" height="181" width="400" /></a></div>
<b>டெக்ஸும் </b>கார்சனும் கதையில் வந்து சேர்ந்து கொள்ளும் தருணம் முதல் அவர்கள் கேட்கும் கேள்வி குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதே. குழந்தைகளை கடத்தி செல்பவனும் திறமையில் குறைந்தவன் அல்ல. கார்சனால்கூட அவன் தடத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் எனும் ஒரு எண்ணம் கதையின் ஆரம்ப பகுதியில் ஹுவான் ரஸாவின் பாத்திரத்தின் வீர்யத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்படும். இறுதிவரையில் ஹூவான் ரஸாவும் அந்த வீர்யத்தை தக்க வைத்துக் கொள்ள கதையில் வாய்ப்பு தரப்படுகிறது. டெக்ஸைவிட அதிகமாக கதாசிரியர் கருத்தில் கொண்டிருப்பது ஹுவான் ரஸாவின் பாத்திரத்தையே. அவனது நுட்பங்கள், தந்திரங்கள், தைரியம், தீய செயல்களை செய்பவனாக இருந்தாலும் அவன் மனதின் ஆழத்தில் இருக்ககூடிய ஈரம் என அவனை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் மோரோ பொசெலி.<br />
<br />
<b>ஒரு </b>பக்கத்தில் குழந்தைகளை தேடிச் செல்லும் ரேஞ்சர்களின் கதை எனில் மறுபுறம் மொரிஸ்கோவும் அவன் முன்னைநாள் நண்பர்களும் எதிர்கொள்ளும் அமானுடச் சாயல் கொண்ட நிகழ்வுகள் என கதை இரு தடங்களில் பயணிக்கிறது. எகிப்தின் தொன்ம தெய்வங்களும், அவர்களின் ஏவலாட்களும் மெக்ஸிக்கோவின் இரவுகளில் உருவாக்கும் திகில் படிப்படியாக கதையில் கலக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கனவுக்கும், தொன்ம நம்பிக்கைகளுக்கும் இடையில் கதையிழை நெய்யப்பட்டு கொண்டே செல்கையில் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கவே செய்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjMUFTlSIEQWKHSGwu9MjiY0cOi4AFk10rdr-YHPyr6mcG5OVQ1hKang3sBAsktilFcwWra0xIeS2W-6DmG0lbt3HQRgBIsa799HgPbEa-8Hvwo5fy5zwi2UcYzhCGfMI3wbA9eVS6oEqo/s1600/rm3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjMUFTlSIEQWKHSGwu9MjiY0cOi4AFk10rdr-YHPyr6mcG5OVQ1hKang3sBAsktilFcwWra0xIeS2W-6DmG0lbt3HQRgBIsa799HgPbEa-8Hvwo5fy5zwi2UcYzhCGfMI3wbA9eVS6oEqo/s1600/rm3.jpg" height="183" width="400" /></a></div>
<b>ஹுவான் </b>ரஸாவின் தந்திரங்களை வென்று குழந்தைகள் கொண்டு செல்லப்படும் இடத்தை டெக்ஸ் குழுவினர் ஊகித்து கொண்டு அதை நோக்கி பல தடைகளை எதிர்கொண்டு பயணிக்கிறார்கள். முதிய ரேஞ்சராக அறிமுகமாகும் ஜெஸ் ஹாக், பார்வைத்திறன் குன்றியவராக சித்தரிக்கப்படுகிறார். அவருடனான டெக்ஸ், கார்சனின் சந்திப்பு வயதாகும் ரேஞ்சர்களின் வாழ்க்கை எவ்விதமானது எனும் ஒரு கேள்வியை அகத்தில் எழுப்பவே செய்கிறது. டெக்ஸ், கார்சன் போன்ற பாத்திரங்களை வயதானவர்களாக அல்லது வயதானவர்களாக அவர்களது வாழ்க்கை எப்படியானது என்பதை நாம் எண்ணியே பார்ப்பது இல்லை அல்லவா. ஆனால் வயதான ரேஞ்சர் ஜெஸ் ஹாக் பாத்திரம் அந்த சலனத்தை என்னில் உருவாக்கி சென்றது. வயதானபோதும், பார்வை குன்றியபோதும் ஜெஸ் ஹாக்கின் குறி மட்டும் தப்பாது உயிர்களை எடுப்பது இப்பாத்திரத்தின் மீதான ஒரு முரண். ஆனால் கதையின் ஒரு கட்டத்தில் அவர் கார்சனை நோக்கி சுட்டு விடுவது மென்மையான ஒரு நகைச்சுவையை கதையின் அந்த சமயத்தில் அள்ளித் தருகிறது.<br />
<br />
<b>எல் மொரிஸ்கோவின்</b> நண்பர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்பில் இருந்த எகிப்தின் பண்டைய சடங்கு பொருட்களும் திருட்டு போகின்றன. டுராங்கோவில் எல் மொரிஸ்கோவும் அவனிடம் இருக்கும் சில பொருட்களிற்காக தாக்கப்படுகிறான். இவையெல்லாம் ஹோரஸின் மைந்தர்களாலேயே நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைகளின் கடத்தல்களிற்கும், பண்டைய எகிப்தின் மதச்சடங்கு பொருட்களை ஹோரஸின் மைந்தர்கள் தேடி அபகரிப்பதற்கும், டுராங்கோவில் வந்து சேர்ந்த மம்மிக்கும் இடையில் என்ன தொடர்பு என்பதை வாசகர்கள் இலகுவில் ஊகித்து விட முடியும். நரபலி சடங்கு, மம்மியை உயிர்ப்பிக்க வைத்தல் எனும் சொற்களில் அவற்றை இங்கு அடக்கி விடலாம். ஆனால் மாவீரன் டெக்ஸ் இருக்கையில் அஹ்ரனின் மம்மி விழிக்குமா என்பதுதான் கேள்வி. கதையும் அக்கேள்விக்கான விடையை வாசகர்களிற்கு சிறிது ஏமாற்றத்துடன் தந்து நிறைவடைகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZs_-HJU8hkLPY1tSKobQXSw_AOuv5m3WisQi10ZoXoXHH4QeOsdx8jC0jfIaolxSZXWuidlOxCPOZvDV9-smFNa9Ui8vRSYH8LhVjWcUqD3xs6C5Vx8g5DM1q3yU97KNchMDoDvudwRKF/s1600/Couv_209428.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZs_-HJU8hkLPY1tSKobQXSw_AOuv5m3WisQi10ZoXoXHH4QeOsdx8jC0jfIaolxSZXWuidlOxCPOZvDV9-smFNa9Ui8vRSYH8LhVjWcUqD3xs6C5Vx8g5DM1q3yU97KNchMDoDvudwRKF/s1600/Couv_209428.jpg" height="320" width="248" /></a></div>
<b>கதையில் </b>டெக்ஸ், கார்சன் பங்கு சிறிது குறைவே. ஹுவான் ரஸா, மொரிஸ்கோ எனும் பாத்திரங்கள் கதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்கள் என்று இங்கு கூறலாம். எகிப்திய வரலாறு கற்பனை கலந்து சிறப்பாக கூறப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட நரபலிச்சடங்கிலும் இறந்தோர் உலகின் ஏழு கதவுகளையும் ஒரு உயிர் தாண்டி வரும் நிலை எளிதாக சொல்லப்படுகிறது. இறந்தவர்களை உயிர்பிற்பதற்கான சடங்குகளில் பயன்படும் கருவிகள் கதையில் சித்தரிக்கப்படுகின்றன. எகிப்து, மற்றும் மாயா நாகரீங்கள் அட்லாண்டிஸ் நாகரீக வழிவந்தவையே எனும் நம்பிக்கை கொண்டவனாக ஒரு மதகுரு பாத்திரம் உலாவருகிறது. இந்த எல்லா தகவல்களும் வாசிப்பை சுவாரஸ்யம் ஆக்குகின்றன என்பது உண்மையே ஆனால் இறுதியில் நிகழ வேண்டிய அம்முக்கிய சம்பவம் வாசகர்களை அதிர வைப்பதற்கு பதில் அழ வைத்து விடுவதாக இருக்கிறது. கதையின் சம்பவங்களிற்கு தரப்படும் விளக்கங்கள் நம்பகத்தன்மையை கதைக்கு தருவதிலிருந்து தொலைவில் சென்று நிற்கின்றன. விறுவிறுப்புடனும், திகிலுடனும் நகர்ந்த கதை இறுதியில் வேகம் தளர்ந்து வீழ்ந்த கதையாகி விடுகிறது.<br />
<br />
<b>கதைக்கு </b>சித்திரங்களை வழங்கியிருப்பவர் <b>Guglielmo Letteri</b> . இவர் வரையும் பாத்திரங்கள் தலைகளை சரித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதையும், அவர்களின் கழுத்துப்பகுதி ஒரு ஆமையுடையதைப்போல சுருங்கிப் போய் இருப்பதையும் வாசகர்கள் நன்கு அவதானிக்க முடியும். ஆரம்ப பக்கங்களில் ஓவ்வாத ஒரு உணர்வை லெட்டெரியின் சித்திரங்கள் வழங்கினாலும் கதையின் நகர்வோடு அவை பிடித்தவையாக மாறிடும் அதிசயத்தை நீங்கள் உணரலாம். உணர்வுகளை முகங்களில் சிறப்பாக கொணரும் கலைஞர்களில் லெட்டெரி ஒருவர். நரபலித்தருணக் காட்சிகளில் குழந்தைகள் இருவரினதும் முகபாவங்கள் இதற்கு சான்றாக இருக்கும். எகிப்தின் தொன்மங்கள் சம்பந்தப்பட்ட தருணங்களில் இவர் சித்திரங்கள் வழங்ககூடிய காட்சித்தகவல்கள் சிறப்பாக இல்லை எனினும் கதையின் திகிலை இருளுடன் சிறப்பாக லெட்டெரி கொணர்ந்திருக்கிறார்,<br />
<br />
<b>கதையை </b>படிக்க ஆரம்பிக்கையில் மூவாயிரம் ஆண்டுகளிற்கு பின் கண்விழிக்கும் அஹ்ரனின் மம்மி போயும் போயும் டெக்ஸின் முகத்திலா விழிக்க வேண்டும் எனும் ஒரு பாசவுணர்வு டெக்ஸின் ரசிகர்களில் அரும்பலாம். டெக்ஸும் மம்மி இன்னிக்கு இருக்குடி உனக்கு மங்காத்தா எனும் வகையில் பேய்க்குன்றை நோக்கி பயணித்திருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல சக்தி எல்லாரையும் காத்து விட்டது கதையின் இறுதியில். வாசகர்களை தவிர்த்து.<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48665991448583800712015-02-22T09:50:00.000+01:002015-02-22T09:50:07.106+01:00Bs & Cs - Feb 2015<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZNXlWV2d0Pc7ZYj6tFB2AgU_PkYL7BZuJai-bH630bhGORkQ3jc5x1tC-l52rqnVgJO4-1d_eiuR-kDXxFQ84b1rrAzhDIcDV48YLBNMzIbOn_u6c9mxa7NyqcMY9ElIKn7mvMab9Dd_1/s1600/t%C3%A9l%C3%A9chargement.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZNXlWV2d0Pc7ZYj6tFB2AgU_PkYL7BZuJai-bH630bhGORkQ3jc5x1tC-l52rqnVgJO4-1d_eiuR-kDXxFQ84b1rrAzhDIcDV48YLBNMzIbOn_u6c9mxa7NyqcMY9ElIKn7mvMab9Dd_1/s1600/t%C3%A9l%C3%A9chargement.jpg" height="200" width="130" /></a></div>
<b>காடு </b>இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.<br />
<br />
<b>காட்டின் </b>குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.<br />
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.<br />
<br />
<b>நான்கு </b>பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.<br />
<br />
<b>தங்கப்பன்</b>, வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.<br />
<br />
<br />
<br />
<br />
<b>அமானுஷயர்களால் </b>ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiA0ISkozPxMIhn3FW8IagciS3J_TlZnstf2oLlvnsf5gX3YlLIDrhCREQ4yi8a9ScPEYloC3N47SXIfQsfSnluFK4r064UiLH6plziqFJhuFmOqtDCxRhkg54tSpH3gREz1__xBUGg7k9/s1600/the-last-werewolf.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiA0ISkozPxMIhn3FW8IagciS3J_TlZnstf2oLlvnsf5gX3YlLIDrhCREQ4yi8a9ScPEYloC3N47SXIfQsfSnluFK4r064UiLH6plziqFJhuFmOqtDCxRhkg54tSpH3gREz1__xBUGg7k9/s1600/the-last-werewolf.jpg" height="200" width="130" /></a></div>
<b>நீங்கள் </b>நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை <b>Glen Duncan</b> எழுதிய <b>The Last Werewolf </b>நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.<br />
<br />
<b>காயமுற்றதன் </b>பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.<br />
<br />
<b>அவனை </b>தீவிரமாக வேட்டையாட துடிக்கும்<b> WOCOP </b>அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.<br />
<br />
<b>கதை சொல்லியின்</b> மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.<br />
<br />
<b>நரோநாய்களிற்கு </b>பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC-pvbMcyPZKEeNDT044w7IL0bcU41j1S9QYQG8s3BgK-ymNdJ_jaysaXer9A9JIwDW89x69haJAZ4yX0FQgs_X-V1W5asFQsOzQLK0yeekEzQz71wmd7olgFB7UV4n2_IFRRPeXyuQRk5/s1600/Couv_85034.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC-pvbMcyPZKEeNDT044w7IL0bcU41j1S9QYQG8s3BgK-ymNdJ_jaysaXer9A9JIwDW89x69haJAZ4yX0FQgs_X-V1W5asFQsOzQLK0yeekEzQz71wmd7olgFB7UV4n2_IFRRPeXyuQRk5/s1600/Couv_85034.jpg" height="200" width="150" /></a></div>
<b>டெம்ப்லர்கள் </b>இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம் <b>Raymond Khoury</b> எழுதி பின் நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் <b>Le Dernier Templier.</b> வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.<br />
<br />
<b>ந்யூயார்க் நகர்</b>, மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....<br />
<br />
<b>இதன்பின் </b>வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...<br />
<br />
<b>புனித </b>நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ... இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.<br />
<br />
<b>மதம் </b>எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை. காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் <b>Miguel Lalor</b> . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1PH-jXPQHp5Yu9OMT2JUl3H3cE5DpZ_wax8wTv6dWoEwbgKjSJjVegJ66RO3k8R886pOJ7Asya7k-SfUZX88y09Rb6v4fvKNYa3f13_GSUgpG3FIiS5yhe2VlBKVV1PthKu88aLiHVqQf/s1600/american-sniper-poster.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1PH-jXPQHp5Yu9OMT2JUl3H3cE5DpZ_wax8wTv6dWoEwbgKjSJjVegJ66RO3k8R886pOJ7Asya7k-SfUZX88y09Rb6v4fvKNYa3f13_GSUgpG3FIiS5yhe2VlBKVV1PthKu88aLiHVqQf/s1600/american-sniper-poster.jpg" height="200" width="135" /></a></div>
<b>இத்தனைபேரை </b>கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?<br />
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.<br />
<br />
<b>American Sniper </b>திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.<br />
<br />
<b>க்ளிண்ட் ஈஸ்ட்வூட்</b> தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல் குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>க்ரிஸ் கைலின்</b> கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglYougYxUvgG_Z7EqmrdAruDAK_pwbNXDCnaYG9acYNlPjP8gkSGqGBoQ_8YR_M6zSsonE5hoJik8S5eRjRT793YY3IZuF1iMYDG-Sp1shyUsHt4CQL6Y-AOhHxja7vbJQ7eQup4_Cxnx-/s1600/kingsman-secret-service-most-poster-3-309x480.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglYougYxUvgG_Z7EqmrdAruDAK_pwbNXDCnaYG9acYNlPjP8gkSGqGBoQ_8YR_M6zSsonE5hoJik8S5eRjRT793YY3IZuF1iMYDG-Sp1shyUsHt4CQL6Y-AOhHxja7vbJQ7eQup4_Cxnx-/s1600/kingsman-secret-service-most-poster-3-309x480.jpg" height="200" width="128" /></a></div>
இதன் பின்பாக <b>Kingsman </b>பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். <b>Matthew Vaughn</b> இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின் ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான <b>Inferno</b> வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான <b>Kick-Ass</b> இதுதான்.<br />
<div>
<br /></div>
</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51439477039544979832015-02-01T06:27:00.000+01:002015-02-01T06:27:22.657+01:00கான்ஃபெடரேட் தங்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWiuJFj9DChYrbL6-w19bDLoDGWrFQgK68XL-UvjuiLlGFFBfEgL8qm4bH_5O5k2fJuNpqQ-j_hBOjiCe_bLy8ebURC6gI8gXc9ypMjoZ0sgS-hi5pnHeAu_pYIix0FjvigLrA32VeGFnS/s1600/2205043412-large-blueberry-tome-13-chihuahua-pearl.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWiuJFj9DChYrbL6-w19bDLoDGWrFQgK68XL-UvjuiLlGFFBfEgL8qm4bH_5O5k2fJuNpqQ-j_hBOjiCe_bLy8ebURC6gI8gXc9ypMjoZ0sgS-hi5pnHeAu_pYIix0FjvigLrA32VeGFnS/s1600/2205043412-large-blueberry-tome-13-chihuahua-pearl.jpg" height="320" width="244" /></a></div>
<b>ஏப்ரல் </b>1865ல் பிரிவினை கோரிய அமெரிக்க தெற்கின் தலைநகரான ரிச்மாண்ட், யூனியன் படைகளின் கைகளில் வீழ்ந்தபோது அமெரிக்க உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்தது. நகர் யூனியன் படைகளின் கைகளில் வருவதற்கு முந்தையநாளின் இரவில் தெற்கின் படைவீரர்களும், அவர்களின் ஜனாதிபதியான ஜெஃபர்சன் டேவிஸும் நகரிலிருந்து தப்பி சென்று தலைமறைவானார்கள். அவர்கள்கூடவே அவர்கள் கஜானாவின் 500,000 லட்சம் மதிப்பு வாய்ந்த தங்கடாலர்களும் நகரிலிருந்து தலைமறைவாகின.<br />
<br />
<b>இந்த </b>பணத்தின் உதவியுடன் மறுபடியும் யூனியன் படைகளிற்கு எதிரான போராட்டத்தை மீட்டெடுக்க முடியும் என ஜெஃபர்சன் நம்பிக்கை கொண்டிருந்தார். மீண்டும் புரட்சி ஒன்று ஆரம்பம் ஆகக்கூடாது எனும் நோக்கில் யூனியன் அரசு இந்த தங்கடாலர்களை தேடும் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நடவடிக்கைகள் எந்த பயனையும் நல்குவதாக இருக்கவில்லை. தெற்கின் சார்பாக யூனியன் படைகளிற்கு எதிராக யுத்தத்தை நடாத்திய தளபதிகளான லீ, கிர்பி ஸ்மித் ஆகியோரின் சரணடைவின் பின்பாக ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் க்ரீன்ஸ்போரோ எனும் சிறுநகரில் பின்னர் ஜெஃபர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடமும்கூட கான்ஃபெடரேட் கஜானாவின் தங்கடாலர்கள் என்ன ஆனது என்பது குறித்து யூனியன் அரசால் அறிந்துகொள்ள முடியாமலே போனது. கான்ஃபெடரேட் தங்கம் என அழைக்கப்படும் <b>Blueberry</b> கதை வரிசையானது இந்த தங்கடாலர்களை கண்டடைவதற்கான சகசங்களை எடுத்து சொல்வதாக இருக்கிறது. அந்த தேடலில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு அரசதிகாரங்களின் காய்நகர்வுகளிற்கு பலியாகும் மனிதர்களின் கதையாகவும்கூட இதை நாம் பார்க்க முடியும். <b>Chihuahua Pearl</b>, <b>L'Homme qui valait 500 000 $</b>, <b>Ballade por une Cercueil</b> ஆகிய மூன்று ஆல்பங்களில் கான்ஃபெடரேட் தங்கம் கதையானது பிரதானமாக சொல்லப்படுகிறது.<br />
<br />
<b>மெக்ஸிக்க </b>எல்லையை அண்மித்த பகுதிகளில் தன் ரோந்துப்பணியை முடித்துவிட்டு நவஹோ கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் லெப்டினெண்ட் ப்ளுபெரி, அமெரிக்க எல்லைக்குள் ஒரு மனிதனை விரட்டி வரும் மெக்ஸிக்க வீரர்களை தடுத்து அவர்களை அமெரிக்க எல்லையை விட்டு நீங்க செய்கிறார். இந்த மெக்ஸிக்க வீரர் குழுவிற்கு தலைமை தாங்கி வரும் காமாண்டர் விகோ தன் பெயரை ப்ளுபெரி நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டே மெக்ஸிக்கோ எல்லை நோக்கி திரும்புகிறான். அமெரிக்க எல்லைக்குள் புகுந்து தப்பிய மெக்ஸிக்கனை விசாரிப்பதற்காக ப்ளுபெரி அவனை தொடர்ந்து செல்கிறான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மனிதன் ஒரு பள்ளத்தில் வீழ்ந்து மரணமாகிறான். அவன் உடலை சோதனைபோடும் ப்ளுபெரி அமெரிக்க ஜனாதிபதிக்கு அவன் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருப்பதை அறிகிறான். நவஹோ கோட்டைக்கு அக்கடிதத்தை அவன் எடுத்து சென்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த சில வாரங்களின் பின் ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகரான ஜெனரல் மக்பெர்சன் அவனை வந்து சந்திக்கிறார். காணாமல் போன கான்ஃபெடரேட் தங்கம் இருக்குமிடம் தெரிந்த ஒரு மனிதனை மெக்ஸிக்க சிறையொன்றில் இருந்து விடுவிக்கும் பணியையும் ப்ளுபெரி பொறுப்பேற்றுக் கொள்ள வைக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS2mD_Ll3MWM4V3N6piSfGzdAnzH1U-n9fPF9o9fIWXS92JHKhJZbe8J75N25VKF8OIyQNsFEnjIYnnuAVxZoFSweuIorc3OZ35urNmFHvpN6dUMcEjDfmK8DQOhcrMRMvi10nI3SpBywg/s1600/blueberry14_bel.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS2mD_Ll3MWM4V3N6piSfGzdAnzH1U-n9fPF9o9fIWXS92JHKhJZbe8J75N25VKF8OIyQNsFEnjIYnnuAVxZoFSweuIorc3OZ35urNmFHvpN6dUMcEjDfmK8DQOhcrMRMvi10nI3SpBywg/s1600/blueberry14_bel.jpg" height="320" width="234" /></a></div>
<b>அமெரிக்க </b>அரசு ராஜீய வழியில் மெக்ஸிக்க சிறையில் இருக்கும் கைதியை விடுவிக்க விரும்புவது இல்லை. மெக்ஸிக்க அரசு ஏற்கனவே இந்த கான்ஃபெடரேட் தங்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதை அமெரிக்க அரசு அறிந்தே இருக்கிறது. ஆகவே மிக ரகசியமாக இவ்விடயத்தையும் ரகசியம் தெரிந்த மனிதனை மீட்டு தங்கடாலர்களை அமெரிக்க மண்ணிற்கு எடுத்து வருவதையுமே விரும்புகிறது. ஆகவே அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றவே தகுதியற்றவன் எனக் கருதப்படும் ப்ளுபெரியை இந்த ரகசிய நடவடிக்கையை அவன் மேற்கொள்ளாவிடில் அவன் பதவி உடனடியாக பறிக்கப்படும் என மிரட்டி பணியவைக்கிறது. ப்ளுபெரியும் மீட்கப்படும் தங்கடாலர்களில் தனக்கு ஒரு சிறுதொகை தரப்படும் எனும் வாக்கு ஜெனரல் மக்பெர்சனிடமிருந்து கிடைத்த பின்பாகவே இந்த ரகசியப் பணியில் ஈடுபட சம்மதிக்கிறான். மெக்ஸிக்கோவின் சிறுநகரான சிகுகுவா நோக்கி அவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். தனக்கு துணையாக நண்பர்கள் ஜிம்மி மற்றும் ரெட் நெக் அந்நகரில் வந்து தன்னுடன் சேர்ந்து கொள்வதற்கான செயல்களிளும் இறங்குகிறான்.<br />
<br />
<b>இங்கு </b>மக்பெர்சனிடம் மீட்கப்படும் தங்கடாலர்களில் ப்ளுபெரி பங்கு கேட்பதைப்போலவே, ஜிம்மியை தேடிச்செல்லும் ப்ளுபெரி ஜிம்மிக்கும் தங்கடாலர்களின் மீது ஆசையை உருவாக்க வேண்டி இருக்கிறது. ப்ளுபெரியைப் போலவே ஜிம்மியும் சமூகசேவை செய்வதில் ஆர்வமற்று தன் தங்கம் தேடும் காரியத்தில் மதுவுடன் மூழ்கி கிடக்கவே விரும்புகிறான் ஆனால் ப்ளுபெரி அவனிற்கு உன் வாழ்க்கை முழுதிலும் நீ இங்கு எடுக்கப்போகும் தங்கத்தை காட்டிலும் அதிகமாக மெக்ஸிக்கோவில் சில நாட்களில் உனக்கு கிடைக்கும் என ஆர்வமூட்டி ஜிம்மியை தன்னுடன் மெக்ஸிக்கோவில் வந்து சேர்ந்து கொள்ள சம்மதிக்க வைக்கிறான். இதன் பின்பாகவே ஜிம்மி, ரெட் நெக்கை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் ப்ளுபெரி ராணுவ பொருளாளரை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்படுவதையும், அவனை உயிருடன் பிடித்து கொடுப்பவர்களிற்கு 1000 டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படும் எனும் சுவரொட்டிகளை ஜிம்மி காண்கிறான். அதுகுறித்து ப்ளுபெரியை எச்சரிக்கவும் செய்கிறான். மெக்ஸிக்கோவில் தன் ரகசியப்பணியை இலகுவாக்குவதற்காக ஜெனரல் மக்பெர்சன் செய்திருக்கும் காரியம் இது என்பதை புரிந்து கொள்ளும் ப்ளுபெரி தன் பயணத்தை தொடர்கிறான். ஆக தங்கடாலர்களின் மீது கொண்ட ஆசையால் அரசின் ரகசிய ஆட்டத்தில் தம்மை பலிகொடுக்க முன்வந்த இரு நபர்களாக இங்கு ப்ளுபெரியையும், ஜிம்மியையும் பார்க்கமுடியும் அல்லவா.<br />
<br />
<b>அதேவேளையில் </b>அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆட்டத்தினுடன் அமெரிக்க அரசின் வேண்டுகோள் ஏதுமின்றி தம்மை அதில் இணைத்துக் கொள்பவர்களையும் கதைவரிசை கொண்டிருக்கிறது. முன்னைநாள் அமெரிக்க தெற்கின் ராணுவ வீரர்களும், இன்னாள் வழிப்பறி கொள்ளையர்களுமான ஹைஜாக்கர்ஸ் எனும் குழுவின் தலைமைகளான கிம்பாலும், பின்லேயும் அவ்வகையை சார்ந்தவர்கள் எனலாம். வாஷிங்டனிற்கு தகவல் அனுப்ப செல்லும் நவஹோ கோட்டையின் தபால் ஊழியரை கொல்வதன் வழியாக அவர்கள் அமெரிக்க அரசு கான்ஃபெடரேட் தங்கத்தை மீட்க ஒருவனை மெக்ஸிக்கோவிற்கு அனுப்பியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுகிறார்கள், அத்தங்கடாலர்களை தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்குகிறார்கள்.<br />
<br />
<b>மெக்ஸிக்கோவினுள் </b>ரகசியமாக நுழைய விரும்பும் ப்ளுபெரி அதற்காக மிம்ப்ரேஸ் எனும் எல்லைப்புற கிராம வழியை தெரிவு செய்கிறான் ஆனால் அங்கு வெகுமதி வேட்டையன் ஏப் டொனாகனுடன் அவன் மோத வேண்டி வருகிறது. ப்ளுபெரியை உயிருடன் பிடித்தால் 1000 டாலர் வெகுமதி என்பதற்காக ப்ளுபெரி சிந்திப்பது போலவே சிந்தித்து ப்ளுபெரிக்காக மிம்ப்ரேஸ் பண்டகசாலையில் மாறுவேடமிட்டு காத்திருந்து தோற்கும் ஏப் டொனாகன் இக்கதை வரிசை அதன் முடிவை எட்டும்வரை அவ்வெகுமதிக்காக மட்டுமே ப்ளுபெரியை தேடியலைபவனாக சித்தரிக்கப்படுவான். மிக முக்கியமான ஒரு தருணத்தில் ப்ளுபெரியை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றி விடுபவனாக கதையில் வரும் டொனாகன் 1000 டாலரைவிட அதிகம் அள்ள கிடைக்கும் வாய்ப்பைகூட விரும்பாதவனாகவே இருப்பான். ப்ளுபெரி உயிருடன் இருப்பது அவனிற்கு அதிக பணத்தை எடுத்து வரக்கூடிய ஒன்று எனும் எண்ணமும் அவன் மனதில் துளிர்த்திருக்கும். ஆனால் அவன் எந்த தொகையும் கிடைக்கப்பெறாதவனாகவே கதையின் கட்டங்களில் மறைந்து போவான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMn0THAnooY12jBiTTyWhRlElL5TOz_qIY_uL029ds8Ic0_dqTNKLj1IeXISIYE7Jy3iHJhqBYj33KbQU1Ry_jTDDsRDUmAre7wlQethqMSXLZrCb6-u7azsEu7B769os7V8_03i4xPpjO/s1600/Couv_579.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMn0THAnooY12jBiTTyWhRlElL5TOz_qIY_uL029ds8Ic0_dqTNKLj1IeXISIYE7Jy3iHJhqBYj33KbQU1Ry_jTDDsRDUmAre7wlQethqMSXLZrCb6-u7azsEu7B769os7V8_03i4xPpjO/s1600/Couv_579.jpg" height="320" width="239" /></a></div>
<b>மிம்ப்ரேஸில் </b>ஏப் டொனாகனை முடக்கிவிட்டு மெக்ஸிக்க எல்லைக்குள் நுழையும் ப்ளுபெரி அங்கு அவனிற்காக காத்திருக்கும் காமண்டர் விகோவிடம் மாட்டிக் கொள்வான். கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்த விகோ அந்த தங்கடாலர்கள் அமெரிக்க மண்ணை அடைந்திடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன். மெக்ஸிக்க அரசு அவனை அந்தப் பணிக்கென சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கும். கதையின் மிகப்பெரிய மர்மத்தை அவிழ்ப்பவனாகவும், உச்சக்கட்டத்தில் ப்ளுபெரியை பழிவாங்குவதில் வெல்பவனாகவும் இருக்கும் விகோ இக்கதையின் மிக முக்கிய பாத்திரங்களில் ஒருவன். இருப்பினும் சிகுவகுவா பேர்ல் ஆல்பத்தின் பின்பாக அவன் பாத்திரம் முதன்மை பெறுவது கான்ஃபெடரேட் தங்கம் எனும் கதைவரிசை நிறைவுறும் சவப்பெட்டிக்காக ஒரு உலா எனும் ஆல்பத்திலேதான். சார்லியரின் கதைகளில், எதிர் பாத்திரங்களும் அவர்களின் புத்திசாலித்தனமும், கதையின் பிரதான பாத்திரத்திற்கு சளைக்காத வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இக்கதை வரிசை தொடரில் அதிகம் உண்டு எனலாம். காமாண்டர் விகோ அவ்வகையான பாத்திரங்களில் ஒருவன். ப்ளுபெரியை கைது செய்து பின் தப்பியோட விட்டு சிகுகுவாவிற்கு அவனை தேடி வந்து அங்கு அவனைப்பற்றிய விசாரிப்புகளை மேற்கொண்டு சிகுகுவா கவர்னர் லொபெஸிடம் ப்ளுபெரியை கைதுசெய்யும் பொறுப்பையும், கான்ஃபெடரேட் தங்கத்தையும் குறித்து தெளிவுபடுத்தி செல்லும் விகோ தன் புத்தியால் பிறரை வைத்து தன் இலக்குகளை வெல்பவனாக இருப்பான். இறுதியில் அவன் வெல்லும் முதன்மையான இலக்கு ப்ளுபெரி. அவ்வகையில் இக்கதையில் வெல்பவன் விகோதான்.<br />
<br />
<b>மெக்ஸிக்கோ </b>எல்லையில் நுழைந்த பின்பாக காமாண்டர் விகோவின் சதியிலிருந்து தப்பும் ப்ளுபெரி மெக்ஸிக்கோவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கான்ஃபெடரேட் தங்கடாலர்கள் குறித்து தெரிவித்த நபரைச் சந்திப்பதற்காக சிகுகுவா எனும் நகரிலிருக்கும் ஹாசா ரோஹா எனும் கேளிக்கை விடுதிக்கு செல்லவேண்டி இருக்கும். அங்கு அவன் வூடினி எனும் வித்தைக் கலைஞனையும், சிகுகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகியையும் சந்திக்க வேண்டி வரும். வூடினி ஒரு விலாங்கைப்போல வால் காட்ட வேண்டிய இடத்தில் வாலையும் தலை காட்ட வேண்டிய இடத்தில் தலையும் காட்டி தன் பையை நிரப்புவதில் தேர்ந்தவன். கதையில் தகவல் வேண்டும் பாத்திரங்கள் அனைவரிற்கும் வேறுபாடு காட்டாது தகவல் தரும் வூடினி பாத்திரம் சிறிதளவே கதையில் இடம்பிடித்தாலும் கதையின் முக்கிய தருணங்கள் சிலவற்றில் அப்பாத்திரத்தின் பாதிப்பு இருக்கவே செய்கிறது. சிகுவகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகி வூடினிக்கு மாறாக இக்கதைவரிசை ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பவளாக இருக்கிறாள்.<br />
<br />
<b>ஹாசா ரோகா</b> விடுதியில் வூடினியின் மூலம் சிகுவகுவா பேர்லை சந்திக்கிறான் ப்ளுபெரி. அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக தகவல் தந்தது அவளே என்பதை அறிகையில் ப்ளுபெரிக்கு மட்டுமல்ல வாசகர்களிற்கும் அத்தருணம் ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கும் ஆனால் சிகுவகுவா பேர்ல் உருவாக்கும் ஆச்சர்யங்கள் அந்த தருணத்துடம் மட்டும் நின்று போவது இல்லை. தங்கடாலர்களை அடைவதில் மட்டுமே கண்ணாக இருக்கும் சிகுகுவா பேர்ல் அதற்காக எடுக்கும் முகங்கள் அவளை சமூகத்தின் அறம்சார்ந்த பார்வைகளில் ஒழுங்கான ஒருத்தியாக காட்டாது. ஆனால் அவள் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் யாவும் தான் விரும்பியதை அடைந்து தன் வாழ்வில் ஒரு நிலையான வசதியான கட்டத்தை அடைய விரும்புபவர்கள் பார்வையில் அதற்கான முயற்சிகளாகவே தெரியும். தங்கத்திற்காகவே அவள் அமெரிக்க தெற்கின் முன்னாள் காலனலான ட்ரெவரை மணப்பாள். அதை அவள் வெளிப்படையாகவே சொல்லுவதற்கு தயங்குவது கிடையாது. கவர்னர் லொபெஸை அவள் மணக்க சம்மதம் தெரிவிப்பதும்கூட தங்கடாலர்களிற்காகத்தான். இதை அந்த ஆண்களும் அறியவே செய்கிறார்கள். ஆனால் சிகுவகுவா பேர்லை அவர்களால் வெறுக்க முடிவது இல்லை. காலனல் ட்ரெவர் தன் ரகசியத்தை சொல்லி செல்வதும் அவளிடமே. அவள் காரணமாக ஓயாது இழப்புக்களை சந்திக்கும் கவர்னர் லொபெஸ் இறங்குவதும் அவளிடமே. ஏன் அவளை சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவளை முத்தமிடும் ப்ளுபெரி அவள் மீது ஒரு ஈர்ப்பை கண்டடைவதும் பின் அவள் தனக்கு எதிராக செயற்பட தயங்காதவள் என அறிகையில் அவளை எதிர்கொள்வதும், பெண் எனக்கூட பாராது கன்னத்தில் அவளை அறைவதும் என கதைவரிசையில் உலவிடும் ஆண்பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்களில் சிகுகுவா பேர்ல் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் கதையின் ஆரம்பத்தில் ஹாசா ரோகாவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரோட்டி வழியாக சிகுகுவா நகரையே தன் கவர்ச்சியிலும், குரலிலும் கட்டிப்போட்ட நிலையில் அறிமுகமாகும் அப்பெண், கதையின் இறுதியில் சலினாஸ் எனும் ஒரு சிறுநகரின் விடுதியொன்றின் முன் தொங்கும் அறிவிப்பாக தன் வாழ்க்கையை தொடர்பவளாக நிற்பது மனதில் ஒரு வேதனையான சலனத்தை உருவாக்கியே செல்லும். ஆனால் அவள் வாழ்க்கை அவ்விடுதியுடன் முடிந்து விடுவது இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOvz1FVJ5aEkRfe_Di9yXbmdTwP38DM3ZOV-RZJY0Mh_BhdrD9O3k2_mcy1v19uNKwrxtEKi4QxNf1KIWGzLHst6lQPfoKcphDjQuxTo4xAdaa9RhukdrhZzKkzWJN5ftBpIzu-Vbom7eL/s1600/blueberry6.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOvz1FVJ5aEkRfe_Di9yXbmdTwP38DM3ZOV-RZJY0Mh_BhdrD9O3k2_mcy1v19uNKwrxtEKi4QxNf1KIWGzLHst6lQPfoKcphDjQuxTo4xAdaa9RhukdrhZzKkzWJN5ftBpIzu-Vbom7eL/s1600/blueberry6.jpg" /></a></div>
<b>கான்ஃபெடரேட் </b>தங்கம் கதைவரிசையின் இன்னும் இரு முக்கிய பாத்திரங்களாக கவர்னர் லொபெஸையும், காலனல் ட்ரெவரையும் குறிப்பிடலாம். கவர்னர் லொபெஸ் அறிமுகவாவது கூட ஹாசா ரோஹா விடுதியில்தான். பாடகி சிகுவகுவா பேர்ல் மீது ஆசை கொண்டவனாக, அவளை நெருங்கும் ஆண்களை வெறுப்பவனாக, சிகுவகுவா பேர்லின் வார்த்தைகளை தட்டாதவனாக அறிமுகமாகும் கவர்னர் லொபெஸ், காமாண்டர் விகோ மூலம் கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்தபின் அதையும் கூடவே சிகுவகுவா பேர்லையும் அடைந்திட ஓயாது போராடுபவன். மெக்ஸிக்க ஜனாதிபதி ஹுவாரஸ் இந்திய வம்சாவளியினன் என்பதை சுட்டிக் காட்டுகையில் கொன்கிஸ்டார்களின் இனவெறி அவனுள் ரகசியமாக ஓடிக்கொண்டிருப்பதை ஒருவர் உணரமுடியும். இக்கதையின் சிறப்பான பாத்திரம் என்றால் அது கவர்னர் லொபெஸ் என்றால் அது மிகையல்ல. சிகுவகுவா பேர்ல் தன்னை ஏமாற்றுகிறாள் என்பதை அறிந்த பின்னும்கூட அவளை மதிப்புடன் பார்ப்பது, அவள் சதிகளிற்கு மாற்றுசதிகளை சிந்திப்பது, ப்ளுபெரியை அவன் செல்லும் இடமெல்லாம் சலிக்காது துரத்தி சென்று துயரமான ஒரு முடிவை எய்துவது என அருமையான அதேவேளை கண்ணியமும் உறுதியும் நிறைந்த பாத்திரப்படைப்பு கவர்னர் லொபெஸ். மிக மிடுக்காக கவர்னர் லொபெஸை ஜான் ஜிரோவின் தூரிகைகள் உயிர்ப்பித்து இருக்கும். தங்கம் பலியெடுத்தபின்னும்கூட அதை தேடி வருபவனாக அவனை கதையில் சித்தரிப்பார்கள் அந்தளவு விடாப்பிடியன் லொபெஸ். ஆனால் அவனை மட்டுமா கான்ஃபெடரேட் தங்கம் பலியெடுக்கிறது.<br />
<br />
<b>கான்பெடரேட் </b>தங்கத்தை அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவிற்கு எடுத்து வந்து பின் கவர்னர் லொபெஸின் சிறையை வந்தடையும் ட்ரெவர் ஒரு புதையல் காத்த பூதம். ராணுவ ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும், கன்ணியத்தையும் தவற விரும்பாத ஒருவன். தன்னையும், ஜைஜாக்கர்கள் குழுவை சேர்ந்த கிம்பாலையும், பின்லேயையும் வேறுபட்ட ஆளுமைகளாக பிரிப்பதிலிருந்தே அவன் வேறுபட்ட ஒருவன் என்பதை அறியலாம். தன்னிடம் இருக்கும் ரகசியத்திற்காக சிகுவகுவா பேர்ல் தன்னை மணந்திருந்தாலும் அவள்மேல் அவன் கொண்ட காதலை இழப்பது இல்லை. அதேபோல தான் மறைத்து வைத்திருக்கும் தங்கம் தெற்கின் விடுதலைப்போராட்டத்திற்கானது எனும் எண்ணமும் கொண்டவன். ஆனால் இவை எல்லாம் கொடுங்கனவாகிப் போய்விடுகின்றன. ஒரு ஜோடி காலணிகளுக்காக அவன் கொலை செய்யப்படும் வேளையில் அவன் கொண்டு செல்வது என்ன எனும் கேள்வி உருவாகாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் கொண்டு செல்லாத ரகசியம் ஒன்று உண்டு. அவன் மிகப் பாதுகாப்பாக காத்து வந்த தங்கடாலர்கள் பற்றியது அது. அதை கதையில் அறிந்தவன் இறுதியில் சிரிக்க ஆரம்பிப்பான். அந்த சிரிப்பை காலனல் ட்ரெவர் இறந்துகிடக்கும் அத்தருணத்துடன் பொருத்திப் பார்ப்போமேயானால் இறந்துபோன அந்த மனிதன் மீதான எம் இரக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.<br />
<br />
<b>தங்கடாலர்களை </b>காத்து நின்ற ட்ரெவெர் போலவே அதை சுருட்டலாம் என எண்ணம் கொண்டு மெக்ஸிக்கோவினுள் நுழைந்து தங்கத்தின் பின் ஓடி சதிகளின் பின் சதிகளாக தொடரும் பின்லே மற்றும் கிம்பால் கூட தம் உயிர்களை தங்கத்தின் முன்பாக இழக்கவே செய்கிறார்கள். ஆனால் தங்கத்தின் நிறம் அப்போது மாறிவிட்டிருக்கும். அவர்கள் வாழ்வின் வண்ணங்களைப் போல. சொந்த மண்ணின் விடுதலைக்காக போராடி சொந்த நாட்டின் மனிதர்களிடமே தோல்வியுற்ற அம்மனிதர்களிற்கு கிடைப்பது ஆறு அடி மண்ணே. இக்கதைவரிசையின் பரிதாபமான பாத்திரங்களில் ஹைஜாக்கர்ஸ் குழுவும் அடங்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் விடுதலைக்காக பேணப்பட்ட பணம் இன்னொரு நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வதும்கூட விடுதலைகளை நிர்ணயிப்பதில் பணத்தின் பங்கை தெளிவாக காட்டவே செய்கிறது.<br />
<br />
<b>முடிவாக </b>ப்ளுபெரியை கமாண்டர் விகோ சிறைக்கு அனுப்பி வைப்பதுடன் இக்கதை வரிசை நிறைவுக்கு வருகிறது. ஆனால் விகோவை மீண்டும் சந்திப்பேன் என சூளுரைக்கிறான் ப்ளுபெரி. அது பிறிதொரு தருணத்தில். ப்ளுபெரி கதைகளின் கதாசிரியர் சார்லியர் தன் திறமையின் உச்சதருணங்களில் இருந்தபோது உருவாக்கப்பட்ட கதை இது. திருப்பத்திற்கு திருப்பம், சதிக்கு சதி, அதிரடிக்கு அதிரடி என மிக பரபரப்பாகவும் வேகமாகவும் சலிப்பின்றி பயணிக்கும் இக்கதை வரிசை ப்ளுபெர்ரி கதை வரிசைகளில் முதலிடம் பிடிக்ககூடிய ஒன்றாகும். கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஜான் ஜிரோவும் சளைத்தவரல்ல கதையின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம்பெற்று செல்வதையும் நாம் அவதானிக்க முடியும். வறள் நிலமான மேற்கின் நிலவியல் ஆகட்டும், வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் ஆகட்டும் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். வெஸ்டெர்ன் கதைகள் பல வந்திருக்கலாம் ஆனால் கான்பெடரேட் தங்கம் கதைவரிசை தரும் அனுபவம் வேறானது, தனித்தது. அதனாலேயே இக்கதை வெளியாகி ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஓடிவிட்ட பின்பாகவும் கூட மறுவாசிப்பில் இது இன்னும் புதிதாகவும் உயிர்ப்பாகவும் உணர்வுகளின் துடிப்புக்களை இழக்காமலும் இருக்கிறது.</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17348939397441086082015-01-11T11:09:00.000+01:002015-01-11T11:09:00.887+01:00ராஜாளிப்பாறை காதலன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJCrhm9XEt6M6niz-fwJdL7I3AhWFtQ7HrNfAToj0Wp2Y8FDY-qvpkzQrz1CuGlHdksy0lcSykpUB4f4jSuQ9Jk1GYboYdprGpiW26l-4KzK8WttTpE4Vd3EOUfdrwokuz4K03C1FVG4sd/s1600/9782353251506_1_75_1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJCrhm9XEt6M6niz-fwJdL7I3AhWFtQ7HrNfAToj0Wp2Y8FDY-qvpkzQrz1CuGlHdksy0lcSykpUB4f4jSuQ9Jk1GYboYdprGpiW26l-4KzK8WttTpE4Vd3EOUfdrwokuz4K03C1FVG4sd/s1600/9782353251506_1_75_1.jpg" height="320" width="224" /></a></div>
<br />
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ர பிம்பமோ - 20</span></b><br />
<b><br /></b>
<b>கனேடிய </b>குதிரைப்பொலிஸ்படை அதிகாரி காலனல் ஜிம் பிராண்டன், தனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போன நிலையில் ஒரு குற்றவாளியை சட்டத்தின் பிடியினுள் இட்டு வரும் பொருட்டு <b>பனிச்சிங்கம்</b> டெக்ஸின் உதவியை நாடுகிறார். ஜிம் பிராண்டன் மீதும் கனேடிய பட்டை விஸ்கி மீதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடான நட்பு கொண்ட டெக்ஸ், தனது பங்காளி கார்சன் மற்றும் கனடாவில் இடம்பெறும் டெக்ஸ் சாகசங்களில் டெக்ஸிற்கு <b>GPS </b>ஆக பணியாற்றும் க்ரோ ஜான் சகிதம் ஜிம் பிராண்டனை வந்து சந்திக்கிறார் ....<br />
<br />
<b>டெக்ஸ் </b>கனடாவிற்கு செல்கிறார் என்றாலே மனதில் அந்தப் பெரும்நிலத்தினை காணும் ஆர்வம் குடிவந்து விடுகிறது. அழகான இயற்கையின் துணையுடன் டெக்ஸ் செய்யும் சாகசங்கள் அக்கதைகளின் சித்திரங்கள் வாயிலாக எம்முடன் ஒன்றிக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமாக அவற்றில் இருக்கும். <b>TEX Special n°11 </b>ன் கதையான<b> L'ultime Frontiere </b>ன் அட்டைப்படத்தை பாருங்கள் சாஸ்காச்சேவான் ஏரியில் சிறுபடகொன்றில் ஜிம் பிராண்டன் துடுப்பு போட டெக்ஸ் தன் கையில் வின்செஸ்டரை தயார்நிலையில் தாங்கியவாறே வெண்பனிபோர்த்த அந்த மலைப்பகுதியில் சிறுபடகில் ஒரு சீறும் எரிமலையாக நிற்பது எவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னட்டையில் இக்காட்சி தரும் உணர்வுகளுடன் கதையில் இக்காட்சியை தேடினால் அது கதையில் எங்கும் கிடைக்காது. ஆம் நண்பர்களே கதையில் வராத சம்பவங்களை சித்திரப்படுத்தும் முன்னட்டை கொண்ட டெக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதனால் வாசக அன்பர்கள் உடனே வேதனையாகி கண்ணீர் சிந்தக்கூடாது. கதையில் டெக்ஸ் பூர்வகுடிகளின் இச்சிறுபடகில் பயணிப்பது மட்டுமல்லாது சாஸ்காச்சேவான் ஏரியின் காவல் தேவதை கதறி அழும் வகையிலான ஆக்சன்களையும் செய்வார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJxPQeBOx3u2LGrtrCAoRkdxleXVcB3vA19sdBAMczgWTlAmntaiWiA3qHo93zR3v1WzfDhTn30iCKMShcwWDnOiu9jBqTLD35HrSu-Dojw35iMoe83o_sITFFqCzmXI1CPEB45SVfvwI7/s1600/uf1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJxPQeBOx3u2LGrtrCAoRkdxleXVcB3vA19sdBAMczgWTlAmntaiWiA3qHo93zR3v1WzfDhTn30iCKMShcwWDnOiu9jBqTLD35HrSu-Dojw35iMoe83o_sITFFqCzmXI1CPEB45SVfvwI7/s1600/uf1.jpg" height="320" width="226" /></a></div>
<b>ஜிம் பிராண்டனின்</b> அழைப்பை ஏற்று கனடாவில் அமைந்திருக்கும் சஸ்கட்டூனிற்கு டெக்ஸ் வந்து சேருவதற்கு ஒன்றரை மாதங்களின் முன்பாக குதிரைப்பொலிஸ் காலனல் ஜிம் பிராண்டன் ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கான ஒரு ரகசியத்தாக்குதலில் இறங்குவார். ஆனால் மூர்க்கமும், தந்திரமும், வெள்ளையர்கள் மீதான வெறியும் கொண்ட அந்த கலப்பின கொலைகாரன் ஜிம் பிராண்டனையே மரணத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் அளவிற்கு பதிலடி தருவான். வெள்ளையின தந்தைக்கும், செவ்விந்திய தாய்க்கும் பிறந்த அந்த கலப்பின இளைஞன் இரு வருட காலமாக சாஸ்காச்சேவானை அண்மித்த பகுதிகளில் தன் கொலைவெறியை அரங்கேற்றி வரும் ஒருவன். அவன் பெயர் யேசு ஸேன்.<br />
<br />
<b>யேசு ஸேனின்</b> தந்தையான சிலாஸ் தன் பாதி வாழ்க்கையை காடுகளிலே கழித்து ஏறக்குறைய ஒரு காட்டுவாசியாகிப் போனவன். மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்று ஜீவிதம் நடாத்தும் அவன் வாழ்க்கை இலட்சியம் பூர்வகுடிகளை கொல்வது மட்டுமே. ஒரு நாள் அவன் வழியில் குறுக்கிட்ட ஒரு பூர்வகுடி பெண்ணை அவன் வன்புணர்வு செய்கிறான். அன்றிரவே மது தந்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் அவனை அப்பூர்வகுடிப் பெண் கொலை செய்கிறாள். அப்பெண்ணின் குடி அவளை விலக்கி வைக்க தனித்து நின்று தன் மகனை அவள் வளர்க்கிறாள், அச்சிறுவன் மனதில் வெள்ளையினத்தவர்களின் மீதான வெறுப்பையும் ஊட்டுகிறாள். தன்னால் இயலாது எனும் நிலையில் மதகுருவானவர்களின் அனாதை விடுதி ஒன்றில் தன் மகனை கொண்டு சேர்க்கிறாள். யேசு ஸேன் எனும் பெயர் அந்த விடுதியை நடத்தும் குருக்களாலேயே அவனிற்கு வழங்கப்படுகிறது.<br />
<br />
<b>கிறிஸ்தவ </b>குருக்களின் வழிநடத்தலின் கீழ் யேசு ஸேனின் வாழ்க்கை அவனிற்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது இல்லை. பிரார்த்தனை, போதனை, கட்டுபாடு, ஒழுங்கு என அவனிற்கு பிடிக்காத விடயங்கள் அங்கு ஏராளமாக இருந்தன. கூடவே அவன் தாய் அவன் மனதில் வளர்த்த வெள்ளையினத்தவர் மீதான வெறுப்பு விடுதியில் வாழ்ந்திருந்த வெள்ளையின சிறுவர்கள் மீது அவன் வன்முறையை பிரயோகிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. நடப்பது நடக்கும் என்பது போல அவன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் சம்பவங்களும் நடந்தேறின.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfU_-UPWwe1K0Kpotx23_bvWjxkB4PktGkadudRiv0ka0dvbMzr0AVLJyTipatjxORsfeo9uZU0QEtm_u5xNoJJ1gwBt3dh1DEbmfxJQjhC_P28N4Bh6bl4Cg18BJkIydag7UlbPT5ots_/s1600/uf2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfU_-UPWwe1K0Kpotx23_bvWjxkB4PktGkadudRiv0ka0dvbMzr0AVLJyTipatjxORsfeo9uZU0QEtm_u5xNoJJ1gwBt3dh1DEbmfxJQjhC_P28N4Bh6bl4Cg18BJkIydag7UlbPT5ots_/s1600/uf2.jpg" height="320" width="226" /></a></div>
<b>டெக்ஸின் </b>பல கதைகளில் நாம் பார்த்தது போல மீண்டும் ஒரு மனித வேட்டையையே இங்கு கதாசிரியர் நிஸ்ஸி கதையின் ஆரம்ப பகுதியில் சொல்கிறார். ஜிம் பிராண்டனையும் அவனுடன் வந்த காவலர்களையும் யேசு ஸேன் தாக்கும் ஆரம்பக் காட்சியில் அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நிஸ்ஸி உறுதிப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் தலைத்தோல்களை உரித்தெடுக்கும் செயலை அவர் பூர்வகுடிகளிடம் கடத்தி விடுகிறார். சிலாஸ் பூர்வகுடிகளை கொல்வதில் எவ்வளவு விருப்பம் உள்ளவனாக இருந்தானோ அதேபோன்ற அல்லது அதனிலும் சற்று அதிகமான விருப்புடன் வெள்ளையினத்தவர்களை கொல்பவனாக யேசு ஸேனை அவர் சித்தரிக்க விரும்புகையில் தலைத்தோல்களை உரிக்கும் செயலிலிருந்து ஸேனை கதாசிரியர் விலக்கியது அவன்மீது வாசகர்கள் அதிகளவு எதிரான உணர்வுகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்பது கதையின் நகர்வில் பின் புலனாக ஆரம்பிக்கும்.<br />
<br />
<b>சஸ்கட்டூனிற்கு </b>வரும் டெக்ஸ் அண்ட் கோ ஜிம் பிராண்டனுடான சந்திப்பின் பின் செல்லும் முதலிடம் யேசு ஸேன் சில வருடங்கள் தன் வாழ்க்கையை கழித்த கிறிஸ்தவ குருமார்களால் நடாத்தப்படும் அனாதை விடுதியே. அங்கு செல்லும் வழியில் பிராண்டனாலேயே அவனை கைது செய்ய முடியல, நீ மட்டும் என்ன கிழிக்கப் போறே என சற்று சலித்துக் கொள்வார் கார்சன் அதற்கு டெக்ஸ் நான் அதிர்ஷ்ட நட்சத்திரத்தில பொறந்த பய என பதில் சொல்வார். அந்த பதிலுக்கு ஏற்றவாறு கதையின் பல காட்சிகளில் அதிர்ஷ்ட தேவதை டெக்ஸிற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பதை வாசக வெள்ளம் நுரைபொங்க ரசித்திட முடியும். அதில் ஒரு அதிர்ஷ்டம்தான் குருவானவர் எலியாஸ் டெக்ஸிற்கு தரும் தகவல்.<br />
<br />
<b>கதையின் </b>இப்பகுதி யேசு ஸேனின் இன்னொரு முகத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறது. வெறுப்பு மட்டுமல்லாது நட்பும், காதலும் கூட அவன் மனதில் வாழ்ந்திருக்கிறது என்பதை கடந்தகால சம்பவங்கள் வழியாக குருவானவர் எலியாஸ் வாசகர்களிடம் கடத்துகிறார். அனாதை விடுதியில் நட் மோர்கன் எனும் வெள்ளையினச் சிறுவனுடனும், ஷீபா எனும் பூர்வகுடி சிறுமியுடனும் யேசு ஸேனின் இனிய சில கணங்களை விபரிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர். ஆரம்பத்தில் அழகுச்சிறுமி ஷீபாவின் நட்பை வெல்ல போட்டியிடும் நட்டும், ஸேனும் காலத்தின் நகர்வில் அவள் மனதில் இடம்பிடிக்க போட்டி போட ஆரம்பிக்கிறார்கள். விதியின் ஓட்டம் ஸேனை கொலைகாரனாக்க, அவன் மனதில் இன்னும் அழியாமல் இருக்கும் வெறுப்பின் காரணத்தால் தன் மனதை நட்டிடம் தந்து விடுகிறாள் ஷீபா. திருமணமான நிலையில் கனவா ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு பண்ணையில் தம் வாழ்க்கையை இனிதே கழித்து வருகிறது இத்தம்பதி. ஆனால் யேசு ஸேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது தன் மனதில் தன் காதலியாக, தன் மனைவியாக எப்போதும் இருக்கும் ஷீபாவை நட்டிடமிருந்து கவர்ந்து செல்வது எனும் தீர்மானத்திற்கு அவன் வந்து விடுகிறான். அதை நிறைவேற்றவும் செய்கிறான். இதை நிறைவேற்ற தன் பழைய நண்பனான நட்டுடன் அவன் மோத வேண்டி வருகிறது. மூர்க்கமான ஒரு மோதலில் நட்டை நினைவிழக்க செய்கிறான் யேசு. ஆனால் அம்மோதலின் முன்பாக அவன் நட்டிடம் வழங்கிய ஒரு தகவலே அவனிற்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.<br />
<br />
<b>சிறுவர்கள் </b>நட், ஷீபா, ஸேன் ஆகியோரிற்கு இடையிலான நட்பும் பின் அது வளர்ந்து காதலாவதும் ஸேனை ஷீபா காதலிக்க மறுப்பதும் என கொடூரமான ஒரு உலகின் ஒரு சிறு தென்றல் தருணம் என கதையின் இப்பகுதி அமைகிறது. ஸேன் மீது வாசகர்கள் கொண்ட பார்வைகளும் கதையின் இப்பகுதியிலேயே மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும். அன்பை தேடும் ஒருவனாக, அது மறுக்கப்பட்ட நிலையிலும் அதை மூர்கத்துடன் தனதாக்க விழையும் ஒருவனாக ஸேன் மாற்றம் பெரும் தருணமிது. ஆனால் அவன் இழைத்த குற்றங்கள் அவனை விடுவதாக இல்லை. குருவானவர் எலியாஸின் சந்திப்பின் பின்பாக கனவா ஆற்றின் பண்ணை வீட்டிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஷீபாவை ஸேன் கவர்ந்து சென்றிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். தன் மனைவியை காப்பாற்ற புறப்படவிருக்கும் நட்டை அதை செய்ய வேண்டாம் என ஆலோசனை சொல்லவும் செய்கிறார்கள். அந்த உரையாடலின்போதே ஸேனைப் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ரேஞ்சர்கள் அறிந்து கொள்கிறார்கள். விஸ்கி மற்றும் துப்பாக்கிகளை கடத்துவதன் மூலமே ஸேன் பணம் சம்பாதிக்கிறான் எனும் தகவல்தான் அது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhivlWBwdxthOmZswNjW0pJAe0B1PYRNi6b_xBYRQLw_LK0aHZ5ge1CrJR8d1C_n5WgC1jLraVt-9fJpf3nMIcY4ZxFK3xt3U8WCSf1mG79TFtlVm16WFzJeGM8kS6ZsZMBpPiPSQ6556NR/s1600/uf3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhivlWBwdxthOmZswNjW0pJAe0B1PYRNi6b_xBYRQLw_LK0aHZ5ge1CrJR8d1C_n5WgC1jLraVt-9fJpf3nMIcY4ZxFK3xt3U8WCSf1mG79TFtlVm16WFzJeGM8kS6ZsZMBpPiPSQ6556NR/s1600/uf3.jpg" height="320" width="228" /></a><b>இந்த </b>தகவலை டெக்ஸ் அண்ட் கோ பெறும் தருணத்திலிருந்து கதை அதிரடியான ஓட்டம் பெற்று விடுகிறது. சஸ்கட்டூன் நகரில் செயற்படும் கடத்தல்காரர்கள் யாரென அறிந்து கொள்ள ரேஞ்சர்கள் கிளம்ப, தன் மனைவி ஷீபாவை தேடி நட்டும் தன் தேடலை ஆரம்பிக்கிறான். இத்தேடல்களின் பாதைகள் இட்டுவரும் எதிர்பாராதவொரு மனநெகிழ்வான முடிவை நோக்கி கதை வாசகனை வேகமாக இட்டு செல்கிறது.<br />
<br />
<b>டெக்ஸின் </b>வழமையான அதிரடிகள் ஆரம்பமாகும் தருணங்கள் அவர் கடத்தல்காரர்களை விசாரணை செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. முகமூடிகளை அணிந்து கொண்டு அவர் தன் விசாரணை முறையை மாற்றாது கடத்தல்காரர்களை அடி அடி என்று அடிக்கிறார். உடலை விறைக்க வைக்கும் ஏரி நீரில் அவர்களை போட்டு மூச்சு திணற வைக்கிறார். உண்மைகளை வலியுடனும், கண்ணீருடனும் சிந்த வைக்கிறார். தனிப்பட்ட முறையில் உண்மையில் இக்கதையின் நாயகன் டெக்ஸ் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கதையின் முடிவுப் பகுதி அப்படி.<br />
<br />
<b>ஷீபாவை </b>கவர்ந்து வந்து தன் மறைவிடமான ராஜாளிப்பாறையின் அருகிலான குடியிருப்பில் கட்டிப்போட்டு வைத்தாலும் கூட ஸேனால் அவள் மனதை மாற்றவோ, வெல்லவோ முடிவதில்லை. ஸேன் நினைத்திருந்தால் தன் தந்தைபோல ஷீபாவை வன்புணர்விற்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் அதை அவன் செய்வதில்லை. அவளின் மறுப்புக்கள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஒவ்வொரு இறப்புகளாக இறங்கி கொண்டே இருந்த போதிலும் ஷீபாவின் நலன்களை கவனிக்க அவன் தவறுவதே இல்லை. காதலிடமும், வாழ்க்கையிடமும் அவன் கேட்பது ஒரு வாய்ப்பைத்தான், ஆனால் அவை அவன் அபயக்குரலின் மொழி புரியாத சிலைகளாக ராஜாளிப்பாறையின் கூடாரத்திற்குள் உறைந்து போகின்றன.<br />
<br />
<b>டெக்ஸுடனான </b>இறுதி மோதலின்போதும்கூட ஸேன் பேசும் வசனங்கள், வாசகர்களை நெகிழ வைப்பதாக இருக்கும். ஏன் டெக்ஸே கூட வியந்துபோகும் ஒருவனாக மாறிப்போவான் ஸேன். எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது. மரணித்துக்கொண்டிருக்கும் விதையாக. நீர் ஊற்றுகிறோமா, தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.<br />
<br />
<b>கதைக்கு </b>சித்திரங்களை வழங்கி இருப்பவர் <b>Goran Parlov</b>. மேஜிக் விண்ட், நிக் ரைடர் போன்ற பொனெலி குழும கதைகளிற்கு தன் ஆற்றலை அர்பணித்தவர். யேசு ஸேனை பார்க்கும்போது அட இது மேஜிக்விண்டா எனும் ஒரு உணர்வு தோன்றுவதுபோல அவர் ஸேனை சித்திரப்படுத்தி இருக்கிறார். கனேடிய மலைகளும், ஏரிகளும், வனங்களும் அவர் கைகளில் அருமையாக வந்திருக்கின்றன. மனிதர்கள் ஓடும்போது பின்னே மரங்கள் நகர்வதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் ஒரு சித்திரக்கட்டம் இருக்கிறது அது என்னை மிகவும் கவர்ந்தது. சில சமயங்களில் சாதாரண கிறுக்கல்கள் போல தோன்றினாலும் கொரான் பார்லோவின் சித்திரங்கள் நின்று நிதானமாக ரசித்து பின் நகர வேண்டிய திறமையை தம்முள் உள்ளடக்கி இருக்கின்றன.<br />
<br />
<b>டெக்ஸின் </b>கதைகளில் அவரையே பின் தள்ளி எதிர் நாயகனான ஸேன் முன்னிடம் பிடிக்கும் வண்ணமாகவே இக்கதையை என்னால் உணர முடிகிறது. யேசு ஸேன் டெக்ஸ் கதைகளில் நினைவில் நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான் என்பது என் எண்ணம். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையை பிரபல காமிக்ஸ் கலைஞர் அமரர் ஹூகோ பிராட்டிற்கு சமர்பித்து இருக்கிறார். ராஜாளிப்பாறையை தழுவி ஓடும் ஆற்றின் மீதான காற்றில் கரைந்து உலவியிருக்கும் ஆன்மாக்களின் உதடுகள் முடிவிலா காலத்தின் எல்லைகளிலும் கிசுகிசுக்கும் ராஜாளிபாறைக் காதலனின் காதல் மொழியை.<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-85356795594019701542015-01-03T09:46:00.000+01:002015-01-03T18:10:54.364+01:00கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoDMgRMRoJM2cSupBubU_7CzxsdXQA0CHG4lHpxX33eDhtQj9RmRB25mRjyk0rrxEnEofjePDKH3gUyTW9qrUn_HMt0_3u5erAmcYDJmmYbTC19EOosKGwmL4OQxkQWwDdf_jMbQBnxypL/s1600/Couv_580.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoDMgRMRoJM2cSupBubU_7CzxsdXQA0CHG4lHpxX33eDhtQj9RmRB25mRjyk0rrxEnEofjePDKH3gUyTW9qrUn_HMt0_3u5erAmcYDJmmYbTC19EOosKGwmL4OQxkQWwDdf_jMbQBnxypL/s1600/Couv_580.jpg" height="320" width="240" /></a></div>
<b>சமீபத்தில் </b>சிகுகுவாபேர்ல் முதல் அரிசோனா லவ் வரையிலான ப்ளுபெரியின் பிரதான கதைவரிசை ஆல்பங்களை மீண்டும் படித்தேன். படித்தபின்பாக அவற்றின் தமிழ் வடிவங்களின் சில பக்கங்களை யதேச்சையாக காண நேர்ந்தது. தமிழில் டைகர் தொடரை படிக்காதது நல்லதே எனும் எண்ணம் வலுப்பெற்றது. இதில் ரத்ததடம் விதிவிலக்கு, சிறப்பான மொழிபெயர்ப்பு என அதை நான் உணர்ந்தேன். சமீபத்தில் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்பது அதன் காரணமாக இருக்கக்கூடும்.<br />
<br />
<b>சந்தேகமேயில்லாமல் </b>இந்த ஆல்பங்களில் சிகுகுவாபேர்ல், 500 000 டாலர் மனிதன், சவப்பெட்டிக்காக ஒரு உலா, எனும் கதைகள் அடங்கிய கான்ஃபெடரேட் தங்கம் இன்றும் சிறப்பாக இருக்கிறது. சார்லியரின் திறமையான கதைசொல்லலிற்கு சான்றாக இக்கதைவரிசையையே நான் தேர்ந்தெடுப்பேன். ஜிரோவின் சித்திரங்கள் அது உருவாக்கப்பட்ட காலத்தில் அதிக வரவேற்பை பெற்றிருக்கலாம், இன்றும் அச்சித்திரங்கள் சிறப்பாகவே உள்ளன ஆனால் தொடரின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம் பெற்று செல்வதை நாம் அவதானிக்கலாம். ஜிரோவின் சித்திரங்களில் தரம் ஏறிச்செல்லுவதாக நான் உணர்ந்த வேளையில் சார்லியரின் கதைசொல்லல் தடுமாற்றமான தருணங்களை சந்தித்து நகர்ந்தது என்பதே என் கருத்து.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>ஜனாதிபதி </b>கிராண்ட் மீதான முதல் கொலைச்சதி எனும் கதைவரிசை சட்டவிரோதி எனும் ஆல்பத்தில் ஆரம்பமாகிறது. 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கைதியாக ப்ளுபெரி, பிரான்சிஸ்வில் சிறைச்சாலையில் காமாண்டர் கெலி கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறார் ... இருப்பினும் பின் தன் நேர்மையை நிரூபிக்க தப்பி செல்கிறார் ... அதன் வழியாக ஜனாதிபதி கிராண்ட் கொலைச்சதியில் பலிக்கடாவாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சார்லியரின் திணறல் கதையை படிக்கையிலேயே உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதையின் திணறலை சமாளிக்கும் பொருட்டு ஜிரோ பெரிது பெரிதாக சித்திரங்களை வழங்கி இருக்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். ஏஞ்சல்பேஸ் எனும் பாத்திரம் முக்கியமான ஒன்றாக கதையின் ஆரம்பத்தில் சித்தரிக்கப்பட்டு பின் ப்ளுபெரியால் டெமொன்பேஸாக மாற்றம்பெறும் வில்லன்பாத்திரமாக மாறும். டுயுராங்கோ நகரில் மாறுவேடத்தில் ப்ளுபெரி ஓடுவது, கிழவியை காப்பாற்றுவது, போஸ்டர் ஒட்டுவது, தண்ணீர் தாங்கியில் ஒளித்து இருப்பது என ஒட்டுமொத்த யூனியன் படைகளையும் அதிகாரிகளையும் லாயக்கற்ற ஏமாளிகளாக சித்தரிக்ககூடிய கதை. இறுதியில் டென்னஸி ப்ளேக் கும்பலை முறியடித்து! ரயில் வெடிப்பில் மறைந்துபோகும் ப்ளுபெரி ராணுவ சர்வதிகார அரசொன்றின் உருவாக்கத்தையும் தகர்க்கிறார். போதாக்குறைக்கு குண்டு கூஃபி ஃபால்மர் குதிரைவண்டிலில் குற்றுயிரும் குலையுயிருமாக வந்து கிராண்டின் பழைய காதல் நினைவுகளை பழைய படம் ஒன்றினால் கிளறும் படாவதி செண்டிமெண்ட் காட்சி. இப்படியாக ஏஞ்சல்பேஸில் நிறைவுக்கு வரும் இக்கதை இக்கதை வரிசையில் சுமாரான ஒன்றே. இது போதாது என்று 30 வருட தண்டனையை 20 வருட தண்டனையாக கதையில் சார்லியர் குறைக்கும் காமெடி எல்லாம் உண்டு. அவை எடிட்டிங்கின்போது கண்டு கொள்ளப்படமால் போனது எவ்வாறு என்பது ஆச்சர்யமே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>நல்லது </b>ரயில்வெடிப்பில் காணாமல்போன ப்ளுபெரி என்ன ஆனார். எங்கே சென்றார். தேடப்படும் சிறைப்பறவை கதைவரிசையில் அதை நாம் கண்டு கொள்ளலாம்.<br />
<br />
<b>செவ்விந்திய </b>ஏஜெண்ட் டொல்சன் அநீதியான முறையில் செவ்விந்தியர்களுடன் நடந்து கொள்ள அதற்கு பதிலடி தருகிறார்கள் செவ்விந்தியர்கள். ஆனால் அந்தப் பதிலடியில் செவ்விந்திய வெள்ளைய தாக்குதல் உத்திகள் கலந்து பயன்படுத்தபடுகின்றன. வெள்ளையர்களிற்கு இது ஆச்சர்யமானாலும் அப்பாச்சேகளிற்கு இது ஆச்சர்யமல்ல. ஏனெனில் சகோ உடைந்தமூக்கார்தான் அவர்களை தன் தந்திரங்களால் வெற்றிகளிற்கு அழைத்து செல்வது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>அமெரிக்க </b>சட்டத்தால் தலைக்கு விலை வைக்கப்பட்ட நிலையில் [ 50000, 10000, 20000 என கதைநெடுக மாறும் தலைவிலை சார்லியரின் கைங்கைர்யம்] அப்பாச்சே பெருந்தலைவர் கொச்சிஸிடம் சென்று அங்கு அவர் மகள் ச்சினியை வளைத்துப்போட விட்டோரியோ எனும் அப்பாச்சேவுடன் முறுகும் ப்ளுபெரி செய்யும் சாகசங்கள் ஒன்று இரண்டல்ல ... ச்சினிக்கு பரிசு கொணர்வது, கழுகை பிடிக்க செல்வது, விட்டோரியோவின் தவறால் முற்றாக அழிக்கப்பட இருந்த கொச்சிஸ் கூட்டத்தை காப்பாற்றுவது .. பின் வெள்ளையின துரோகி என குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் யூனியன் துருப்புக்களின் சிறைக்கு வந்து சேர்வது ... இக்கதையின் இரு முக்கிய பாத்திரங்கள் எக்ஸ்கல் ஜெடியோன் ... செவ்விந்தயர் மண்டைத்தோலை கிழிப்பதை தொழிலாக கொண்டு இரு மோப்ப நாய்களுடன் அலையும் தடவேட்டையன், மற்றது சும்மா புளுகிக்கொண்டு திரியும் வைல்ட் பில் ஹிக்காக், இருவருமே ப்ளுபெரியினை பிடித்து தருவதால் கிடைக்கும் வெகுமதிக்கு வேட்டை போடுபவர்கள்... இதில் வைல்ட் பில் சாடிஸம் குறைந்தவனாக சித்தரிக்கப்படுவான் ... எக் ஸ்கல் இக்கதையின் மூன்று பாகங்களிலும் அப்பாச்சேக்கள், ப்ளுபெரி பின் ஓடி தேடிச் சென்று தன் உயிரைவிடுவான் .. வைல்ட் பில்லை விட மூர்க்கமான படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை உருவாக்கும் பாத்திரம் எக்ஸ்கல்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>நீண்ட பயணம்</b> ஆல்பம் ப்ளுபெரி எப்படி சான் கார்லோஸில் இருக்கும் செவ்விந்தியர்களை காப்பாற்றுகிறார் என்பது பற்றியது... மீண்டும் ஜிம்மி, ரெட்நெக், சிகுகுவா பேர்ல் இக்கதையில் அறிமுகமாவார்கள்... காப்பாற்றுவார்கள் ... உதவுவார்கள்... சொதப்புவார்கள்.... அதற்குள் ச்சின்னி விட்டோரியோவை மணந்து கொள்ள வேண்டும் என தன் மூக்கை சிந்தியபடியே காதலிற்கு குட்பை சொல்வார் ப்ளுபெரி ... வழமைபோலவே ராணுவவீரர்களிற்கு தண்ணி காட்டி ப்ளுபெரி தப்புவார் .. சான் கார்லோஸில் பீப்பீயை விடியும்வரை மூடு பனிக்குள் ஊதி கொச்சிஸை காப்பாற்றுவார் ... மூன்றாம் பாகத்தில் கொச்சிஸ் கண்மூடுவார் ... விட்டோரியோ தலைமையை ஏற்றுக் கொண்டு மெக்ஸிக்கோவிற்குள் தன் குடியை வழிநடாத்தி ச்சின்னியுடன் செல்ல ப்ளுபெரி தன் பங்கிற்கு மெக்ஸிக்கோவின் சிகுகுவாவை நோக்கி பயணிப்பார். செமையான இழுவை கொண்ட கதை ... செவ்விந்தியர்கள் ஓடுவதும் ... மாட்டிக் கொள்வதும் ...ப்ளுபெரி ஓடுவதும் மாட்டிக் கொள்வதும் ... பின்னர் தப்பிப்பதும் ... போக்கு காட்டி ஏமாற்றப்படும் ராணுவ வீரர்கள் ஏமாளிகளாக துரத்தி துரத்தி வருவதும் என முன்னொரு காலத்தில் அசத்தல் என சொல்லக்கூடிய கதை இன்று அப்படி தரப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது இருப்பினும் கிராண்ட் கொலைச்சதியைவிட இது சிறப்பான கதை என்பேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>இதன்பின் </b>வருவது ப்ளுபெரி சிகுகுவா சென்று அங்கு காமாண்டர் விகோ கவர்னராகியிருப்பதை அறிந்து அங்கு சிறையில் அடைபட்டு பின் விடுபட்டு மரணதண்டனை பெற்ற விகோவை காப்பாற்றி தன் நேர்மையை நிரூபிக்க அமெரிக்கா அழைத்து வர முயல்வது ... இறுதி சீட்டு ஆல்பம் கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்பு இதுதான் என சொல்லக்கூடிய ஒரு ஆல்பம். குறிப்பாக சித்திரங்களும் ... விக்கோவின் பாத்திரப்படைப்பும் அதற்கு நன்கு துணை செய்கின்றன ... வழமைபோல மாறுவேடம், மெக்ஸிக்க வீரர்களை ஏமாளியாக்குவது போன்றவற்றுடன் பித்துப்பிடித்த கொள்ளையனான பரோன் டு லிஸ்ட்ராக் பாத்திரம் ... உச்சக்கட்டத்தில் விகோ ப்ளுபெரியை மிஞ்சுவார்... லுலு பெல் என ஒரு அம்மிணி ... அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்ந்து சதிகளில் உதவி ப்ளுபெரி முன் சங்கோஜம் இன்றி மேலாடையைக் கழட்ட தயங்காதவர் .. சிகுகுவா பேர்லிற்கு டூப்பாக சார்லியர் உருவாக்கி இருக்கும் பாத்திரம் .. ஒரு வழியாக மெக்ஸிக்க சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ப்ளுபெரி அமெரிக்க எல்லைக்குள் நுழைவார் .. நீரோட்டத்தின் வேகத்துடன் அவர் கரையை அடையும் முறையை படமெல்லாம் போட்டு காட்டி இருப்பார்கள் ...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<b>இருந்த </b>ஒரே சாட்சியம் விகோவும் மண்டையைப் போட்டதால் விகோ தந்த ஆவணங்களை கொண்டு தன் நேர்மையை நிரூபிக்க ப்ளுபெரி எடுக்கும் முயற்சிகளே ஓட்டத்தின் முடிவு ஆல்பம். ரயிலில் போய் டொட்ஜிடம் வேண்டுகோள் வைப்பது, பிரான்சிஸ்வில் சிறையின் காமாண்டர் கெலிக்கு மொட்டைக் கடுதாசி அனுப்புவது, டெல்டா ராஞ்சில் மாட்டிக் கொள்வது, இறுதியாக மீண்டும் கிராண்டின் மீதான கொலைச்சதி 2 ஐ முறியடிப்பது. ஜெனரல் அலிஸ்டரின் மறுவரவு நல்ல சஸ்பென்ஸ். சார்லியரின் கதைசொல்லல் மிளிரும் தருணங்கள் கொண்ட ஆல்பம் இது. ஜிரோவும் தன் சித்திரங்களில் ஒரு நேர்த்தியை காட்டியிருப்பார். கிராண்ட் வரும் ரயில் அதை தடுத்து ப்ளுபெரி கிராண்டை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் போன்றன நல்ல பரபரப்புதான் என்றாலும் கதைதானே என ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. கதையின் இறுதியில் தன் நேர்மையை நிரூபித்து , தங்கத்தையும் ரெட்நெக், ஜிம்மியுடன் பங்கிட்டு கொண்டு அவசரமாக கிளம்புகிறார் ப்ளுபெரி ...எங்கு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAC2292ibsGdz5TReR1LAexLlt2-LyqOWOlydCnBIuUUyDcvnWeLNLCSjmoNtkZb9w0PIo-C1rXzdygRyqlZ5cnsw0AqpMd2FQFc7RD_9osJcIzRfaWg7HE5EeaCLBXcVYYZEI5zSIs5Bv/s1600/Blueberry23Alpen.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAC2292ibsGdz5TReR1LAexLlt2-LyqOWOlydCnBIuUUyDcvnWeLNLCSjmoNtkZb9w0PIo-C1rXzdygRyqlZ5cnsw0AqpMd2FQFc7RD_9osJcIzRfaWg7HE5EeaCLBXcVYYZEI5zSIs5Bv/s1600/Blueberry23Alpen.jpg" height="320" width="240" /></a></div>
<b>தகாமோவில் </b>சிகுகுவாபேர்லின் திருமணத்திற்கு ... அரிசோனா லவ் கதை சிகுகுவாபேர்ல் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது, அவரது உடலழகை கண்ணிற்கு விருந்தாக்குகிறது, ப்ளுபெரியை காமெடிபீஸ் ஆக்குகிறது, கூடவே ட்யூக் சாண்டனையும் ... நெகிழ்வான ஒரு முடிவு. ஆனால் கதை சுமாரிற்கும் கீழே.<br />
<br />
<b>காமிக்ஸ் </b>வரலாற்றில் ப்ளுபெரி தனி இடம் வகிக்கிறார். அதற்கு இங்கு குறிப்பிட்ட கதைகளில் சிலவும் அமெரிக்க ரயில்பாதை, சியாரா தங்கம் தொடர்களில் இடம்பெற்ற கதைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. பல விமர்சனங்கள் இருந்தாலும் ப்ளுபெரியின் அந்த இடம் தகுதியானதே என்பதையே இம்மறுவாசிப்பு எனக்கு உணரச்செய்தது. அதேபோல மறுபதிப்பு முயற்சியானது திருத்தப்பட்ட ஒன்றாக வருதலே நலம். சில விலகல்களை சரிசெய்வதன் வழி சிறப்பான ஒரு மறுபதிப்பாக அது உருப்பெறலாம். ஆனால் நம் குரலைக் கேட்கத்தான் காதில்லையே. என்ன ஆனாலும் எது நடந்தாலும் நான் சொல்வது மாறப்போவது இல்லை. <b><span style="font-size: large;">பரட்டை ஒழிக.</span></b></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84248531682820031852014-12-20T11:38:00.000+01:002014-12-20T11:38:09.061+01:00மரண நாடகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib34DXJAEEP5sx0y9fwNXnBwGkou7FPPzmFlS1_i3gdFhebu39_YLsrJKa9OXYW0to-ntrITrgHcC6xbiCIxrf-0VUJ3RUdsPG4aoiTI7s8Q3D_-Lr82OR7qDHpgxCVQYA5QrlvfmSyLMI/s1600/7P2ahS3NU8VPc2gY--.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib34DXJAEEP5sx0y9fwNXnBwGkou7FPPzmFlS1_i3gdFhebu39_YLsrJKa9OXYW0to-ntrITrgHcC6xbiCIxrf-0VUJ3RUdsPG4aoiTI7s8Q3D_-Lr82OR7qDHpgxCVQYA5QrlvfmSyLMI/s1600/7P2ahS3NU8VPc2gY--.jpg" height="320" width="238" /></a></div>
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ரபிம்பமோ - 19</span></b><br />
<br />
<b>கலாராடோ </b>பகுதிக்கு விஜயம் செய்யும் டெக்ஸும் கார்சனும் அங்கிருக்கும் ரேஞ்சர்களின் அலுவலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு பொறுப்பில் இருக்கும் ஊழியர், அருகிலிருக்கும் ஒரு சிறுநகரில் நிகழ்ந்த ரேஞ்சரின் கொலையொன்றின் விசாரணையில் தனக்கு உதவும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ரேஞ்சர்கள் இருவரும் ஊழியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கொலை நடந்த சிறு நகரை நோக்கி பயணிக்கிறார்கள் .....<br />
<br />
<b>எங்கு </b>அநீதி தன் கொட்டத்தை மேடைபோட்டு கும்மியடித்து என்னை தட்டிக் கேட்க யாருமில்லை என உரக்க குரல் தருகிறதோ அதை தொடர்ந்த இரு பக்கங்களில் அப்பகுதியின் வழியாக டெக்ஸ் அண்ட் கோ தற்செயலாக சென்று கொண்டிருப்பதையும், கொட்டம் அடித்து உரக்க குரல் தந்த அநீதியை அடக்க விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் பொறுப்பை எடுத்து கொள்வதையும் ஆச்சர்யம் கண்களில் கண்ணீருடன் மல்க நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். எப்படி டெக்ஸ் சொல்லி வைத்தாற்போல் இப்பகுதியால் வந்தார், வென்றார், சென்றார் என்ற கேள்விகளிற்கு டெக்ஸின் அன்பு விசிறிகள் மனதிலும், சிந்தையிலும் இடமில்லை. எனவே காலாராடோ ரேஞ்சர்களின் அலுவலகத்தில் ஒரு சிறு பீர்கூட அருந்தாது நமது பிரியரேஞ்சர்கள் இருவரும் கொலை விசாரணைக்கு புறப்படுகையில் வழமைபோலவே பழக்கப்பட்ட டெக்ஸ் வாசக உதடுகள் மனதில் ஒரு விசிலை உற்சாகமாக அடித்து அவர்கள் இருவரையும் கனிசன் எனும் அந்த சிறுநகரிற்கு வழியனுப்பி வைக்கிறது.<br />
<br />
<b>கொலை </b>செய்யப்பட்ட ரேஞ்சர் ஜோன்ஸ், அபின் கடத்தல் விவகாரம் ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்ததை டெக்ஸுக்கு தெளிவாக்கி இருந்தார் ரேஞ்சர் அலுவலக ஊழியர். இதை தன் மூளையில் போட்டு கெட்டி சட்னிபோல அரைத்தபடியே கனிசன் நகரை வந்து சேரும் டெக்ஸ் முதலில் தன் விசாரணைகளை ஆரம்பிப்பது நகரின் ஷெரீப் அலுவலகத்தில். கனிசன் நகர ஷெரீப் தன் இருக்கையை விட்டு அதிகம் நகர விரும்பாத ஒரு மனிதன். கொலைவிசாரணையை சுறுசுறுப்பாக எடுத்து நடாத்துவது என்பது அவன் இயல்பிலேயே இல்லை. இதை டெக்ஸ் தெளிவாக புரிந்து கொள்கிறார், பதவிக்காகவும் அது தரும் பகட்டிற்காகவும் அதிகம் சிரமப்படாது மாதந்தோறும் தவறாமல் வந்துவிடும் சம்பளத்திற்காகவும் நீதி இவ்வாறான மனிதர்கள் கையில் உதாசீனம் செய்யப்படுவது அவரிற்கு சினத்தை தருகிறது. ஆனால் டெக்ஸால் செய்யக்கூடியது ஷெரீஃப் அணிந்திருக்கும் நட்சத்திரத்திற்கு அவன் அவமானம் என்பதை அவனிடம் சொல்வது மட்டுமே. அதன்பின்னாக கொலைநடந்த இரவன்று நகரை விட்டு எந்த தகவலும் தராது கிளம்பிச் சென்ற நாடக குழு பற்றி விசாரிப்பதற்காக அவர்கள் நகரின் நாடகசபா உரிமையாளரை தேடிச்செல்கின்றனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRF3x0sg6IHV5J9leJis50HtW0hNXcElyL11dpx_EDQybfysW78Uh9tj2gLjJXt3i0du6L4lZeZiBiBifh1hUyWDLzVPzyD-l3ikUrxy1UNsl73nwv-GoLZ4-L7jDj4JVzGmX1Z113urM/s1600/op1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRF3x0sg6IHV5J9leJis50HtW0hNXcElyL11dpx_EDQybfysW78Uh9tj2gLjJXt3i0du6L4lZeZiBiBifh1hUyWDLzVPzyD-l3ikUrxy1UNsl73nwv-GoLZ4-L7jDj4JVzGmX1Z113urM/s1600/op1.jpg" height="200" width="160" /></a></div>
<b>நாடகசபா </b>உரிமையாளர், மோர்கன் தியேட்டர் நாடககுழு ஒப்பந்தத்தை மதிக்காது இரவோடு இரவாக நகரைவிட்டு நீங்கியது குறித்து கோபத்தில் உழழ்பவர். விற்பனைசெய்த சீட்டுக்களிற்கு எல்லாம் பணத்தை திருப்பிதர வேண்டிய நிர்ப்பந்தம் வரும்போது கோபம் வருவது அதுவும் தன்மீது தவறு இல்லாதபோது வருவது நியாயமான ஒன்றே என்பதை தர்மத்தின் காவல்தூண்களான டெக்ஸ் ரசிக சிங்கங்கள் அறிவார்கள். ஆகவே நாடகசபா உரிமையாளரிற்காக இரு துளி கண்ணீரை பாசத்துடன் சிந்திவிட்டே கதையை தொடரக்கூடியதாக இருப்பது இங்கு டெக்ஸ் ரசிகர்களிற்கு பழகிவிட்ட ஒரு நற்பண்பாக நீடிப்பதை அவர்கள் அருகில் இருப்பவர்கள் அவதானித்திருக்கலாம். தன் கோபத்தின் மத்தியிலும் மோர்கன் நாடகக்குழு செல்லவிருக்கும் நகரங்களின் பட்டியலை டெக்ஸ் அண்ட் கார்சனிற்கு தருகிறார் நாடகசபா உரிமையாளர். ஒரு நாடகத்தின் திரைக்கு பின்னால் நடப்பது என்ன என்பதை பெரும்பாலும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வது இல்லை அதைப்போலவே நாடகசபா உரிமையாளரின் அலுவலக கதவிற்கு பின்பாக மறைந்து இருந்து ரேஞ்சர்களுடன் உரிமையாளர் நடத்திக் கொண்டிருந்த உரையாடலை ஓட்டுக் கேட்ட மனிதனையும் ரேஞ்சர்கள் கதையின் இறுதிவரையில் அறியப்போவதே இல்லை. நாடகக்குழுவின் அடுத்த நிறுத்தம் மொண்ட்ரோஸ் எனும் நகர் என்பதை அறிந்து கொண்ட ரேஞ்சர்கள் அங்கு செல்ல தீர்மானிக்கிறார்கள். அதற்கு முன் மொண்ட்ரோஸ் நகரை நோக்கி பறக்கிறது ஒரு தந்தி. ரேஞ்சர்களின் வருகையை அறிவித்து, எச்சரித்து.<br />
<br />
<b>இந்த </b>அவசரத் தந்திக்கான காரணம் என்ன எனும் கேள்வி நண்பர்கள் மனதில் எழலாம். அதற்கான விடை அபின் கடத்தல் என்பதாகும். அபின் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கும்போது சட்டத்தின் கண்களிற்கு தெரியாமல் அது பயணிப்பது அவசியமாகிறது. பாவனையாளர்களை அது சென்றடையும் வழிகளும், முறைகளும், அதை எடுத்து செல்லும் மனிதர்களும் சட்டத்தின் பிரதிநிதிகளுக்கு சந்தேகத்தை உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகிறது. வாரவாரம் நகரிற்கு நகர் பயணித்து கலைச்சேவையாற்றும் நாடகக்குழு ஒன்று அபின் கடத்தலிற்கு துணைபோகிறது என்பதை இயல்பாக யாருமே கற்பனை செய்து பார்க்கமாட்டார்கள். நகரிற்கு நகர் இடம்மாறும்போது அபின் பொதியும் அந்நகரிலிருக்கும் அபின் வினியோகியிடம் கைமாறுவது எவ்வித சிக்கலுமில்லாது நடந்துவிடும். வினியோகியிடமிருந்து அபினை கொண்டு வந்து தருபவனிற்கு பணமும் கைமாறிவிடும். கலைச்சேவை நல்ல ஒரு போர்வையாக இருக்க அதன் கீழ் போதைப்பொருள் கடத்தல் என்பது இலகுவாக அதிக பணம் சம்பாதிக்க வழி செய்து தருவதாக இருக்கிறது. இவ்வகையான வாய்புக்களை வாழ்க்கையில் எதற்கும் துணிந்து எவ்வழியிலாவது செல்வமும் வளமும் பெறவேண்டும் என எண்ணும் மனிதர்கள் தவறவிடுவது இல்லை. அவ்வகையான மனிதர்களில் ஒருவனே ரிக் டுவால்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh3o5fmsoEg4ul7hJjE_5Jimh7yAFGDxEb4mcfpHb3PN_xqS1CAW1p9CfwbBpX4zb1HYoMm7ecHjXh7BHfTMrvjK91UD0TZ3iT3hUgCLdXt-ilZIM7eRYC1OET1DEASK3CtDYN2m9g4cuL/s1600/op2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh3o5fmsoEg4ul7hJjE_5Jimh7yAFGDxEb4mcfpHb3PN_xqS1CAW1p9CfwbBpX4zb1HYoMm7ecHjXh7BHfTMrvjK91UD0TZ3iT3hUgCLdXt-ilZIM7eRYC1OET1DEASK3CtDYN2m9g4cuL/s1600/op2.jpg" height="148" width="320" /></a></div>
<b>மோர்கன் </b>நாடகக்குழுவின் நாடகங்களில் பெண்களை கவரும் ஆண்மகனாக வேடங்கள் தரிப்பவன் ரிக் டுவால். வேடங்களிற்கு ஏற்ப மோர்கன் நாடககுழுவின் உரிமையாளர் மோர்கனின் இரண்டாவது மனைவி ஏவாயையும் அவன் தன் காதல் வலைக்குள் வீழ்த்திவிட்டவன். வயதான கணவன், சலித்துபோன, எந்த சுகத்தையும் பகட்டையும் தராத, ஊர் ஊராக அரிதாரம் போட்டு அயர்ச்சியுறும் வாழ்க்கையிலிருந்து புதியதொரு சொகுசு வாழ்க்கையை தேடும் ஏவா, தன் ரகசியக் காதலன் ரிக் டுவாலின் அபின் கடத்தலில் அவனுடன் தயங்காது துணை நிற்பவள். அபின் கடத்தல் குறித்த விசாரணைகளில் ஈடுபட்ட ரேஞ்சர் ஜோன்ஸை தன் காதலன் ரிக் கொலை செய்தபோதும்கூட அவள் தன் புதிய வாழ்வை மட்டுமே எண்ணி ரிக்குடனான தன் உறவையும், அபின் கடத்தலில் தன் பங்களிப்பையும் தொடர்கிறாள். தங்களிருவரிற்குமான உறவு ரகசியமானது என்றும், அபினை தாம் கடத்தி செல்வது தங்களிருவரையும் தவிர்த்து வேறு எவரிற்கும் தெரியாது என்றும் அவர்கள் உறுதியாக நம்பி வருகிறார்கள். ஆனால் கள்ளக்காதல் தன் சித்திரங்களை பொதுவெளிகளில் தீட்டுவது இல்லை. அது அதற்காக ரகசியமான மறைவுகளை வேண்டுகிறது. ரகசியமான மறைவுகளில் தற்செயலாக குறுக்கே செல்லும் மனிதர்கள் பிறரின் கனவுகளை கலைத்துப்போட்டு தம் கனவுகளிற்குரிய சாலைகளை அதில் போட்டு விடுவார்கள் என்பது இக்கதைக்கும் விதிவிலக்கல்ல.<br />
<br />
<b>ரிக் டுவால் </b>அபினை சீனர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். ஒவ்வொரு நகரிலும் சீன ஏஜெண்டுகளிடம் அவன் அபினை தந்து பணத்தை பெற்றுக் கொள்கிறான். இந்த அபின் கடத்தலிற்கு தலைவனாக வுவாங் சிங் எனும் சீனன் இருக்கிறான். கனிசன் நகரிலிருந்து செல்லும் தந்தி வுவாங் சிங்கின் கவனத்திற்கு வருகிறது. ரிக் டுவாலை ரேஞ்சர்கள் கைது செய்தால் தன் அபின் கடத்தலும் வெளியே தெரியவரும் என்பதை உணர்ந்து கொள்ளும் வுவாங் சிங் மொண்ட்ரோஸிலேயே ரேஞ்சர்களை யாரும் அறியாது தீர்த்துக் கட்டுவது எனும் முடிவிற்கு வருகிறான். கனிசன் நகரில் மதுப்பிரியன் ஒருவனிடமிருந்து முக்கியமான தகவலை பெற்றுக்கொள்ளும் டெக்ஸும் கார்சனும் மொண்ட்ரோஸ் நகரிற்கு விரைந்து வருகிறார்கள்.<br />
<br />
<b>ஆனால் </b>வாழ்க்கை என்பது மேடையில் நிகழும் நாடகத்தைவிட வேடிக்கையானது என்பதற்கேற்ப நிகழ்வுகள் மொண்ட்ரோஸில் அரங்கேற ஆரம்பமாகின்றன. ரிக், ஏவா இருவரினதும் ரகசியக் காதல் நாடகக்குழுவின் தலைவரும் ஏவாவின் கணவருமான மோர்கனிற்கு தெரியவருகிறது. மொண்ட்ரோஸில் நாடகத்தை அரங்கேற்றியபின் மோர்கன் ஏவாவை பிரிந்து செல்வது எனும் முடிவிற்கு வருகிறார். கதையின் இத்தருணத்தில் தன்னைவிட வயதில் குறைந்த ஒர் பெண்ணின் ஆசைகளை தீர்க்க முடியாத, நாடகத்தை மட்டுமே தன் வாழ்வில் அறிந்த ஒரு வயதான கலைஞனின் வேதனை சிறப்பாக சொல்லப்படும். அக்கலைஞன் எடுக்கும் அந்த எதார்த்தமான முடிவும்கூட அப்பெண்ணின் அவன்மேல் கொண்ட நிஜமான காதலே என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கும்.<br />
<br />
<b>மொண்ட்ரோஸில் </b>நாடகம் மேடையேறும்போது மேடையில் ரிக் சுட்டுக் கொல்லப்படுவது போல ஒரு காட்சி வரும் ஆனால் நிஜமாகவே அவன் கொல்லப்படுவான். அவன் பயணிக்கும் வண்டியில் அவன் மறைவிடத்தில் பதுக்கி வைத்த அபினும் மாயமாக மறைந்துவிடும். ரிக் டுவாலை தன் கணவன் பொறாமையால் சுட்டுக் கொன்று விட்டான் என ஏவா குற்றம் சாட்ட அவரை நகர ஷெரீப் கைது செய்து சிறையில் அடைக்கிறார். உண்மையில் ரிக்கை கொன்றது யார்? அவனிடமிருந்த அபினை அபகரித்தது யார்? அபின் கடத்தல் தலைவன் வுவாங் சிங்கை டெக்ஸ் கும் கும் என்று குத்தி டுமீல் டுமீல் எனப் போட்டுத்தள்ளுவாரா எனும் கேள்விகளிற்கு விடையளிக்கிறது <b>TEX #451</b> ன் கதையான <b>Opium</b>.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO_UtSwO9WXE7dKPl4LDlMMEJOK7THjnaoeuRDsM25m3-Nc7rHraUqHD2es9OamLzuMqWIGb2LRK5lg-D1tR7U3eVzPQU12H8KG_GdiDGG5PmAdv_lBfl4M5XzXTJHKbYKGrmaPO6eP2S6/s1600/op3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO_UtSwO9WXE7dKPl4LDlMMEJOK7THjnaoeuRDsM25m3-Nc7rHraUqHD2es9OamLzuMqWIGb2LRK5lg-D1tR7U3eVzPQU12H8KG_GdiDGG5PmAdv_lBfl4M5XzXTJHKbYKGrmaPO6eP2S6/s1600/op3.jpg" height="151" width="320" /></a></div>
<b>கதை </b>அக்காலத்தின் மனிதர்கள் நாடிய சில போதைகள் குறித்து மேலோட்டமாக விபரிக்கிறது. தேனீரகங்கள், புகையகங்களில் ரகசியமாக பரிமாறப்பட்ட அபின் ஒரு போதை எனில் இரவுப் பொழுதுகளில் மேடைகளில் அரங்கேறும் நாடகங்கள் இன்னும் ஒரு போதையாக உருப்பெறுகின்றன. இரண்டையுமே அனுபவிக்க பணம் தந்தாக வேண்டும். ஆனால் அபின் தனக்கேயுரிய அழிவின் அழகை கொண்டிருக்கிறது. நாடகம் கலையின் கண்ணீரை தன் வேரிற்கு தந்து கொண்டேயிருக்கிறது. சீன சமூகம் முக்கியமான ஒரு அங்கமாக கதையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டாலும் பாதிக்கதையில் அது காணாமல் போய்விடுகிறது. கடும் உழைப்பும், சகிப்புத்தன்மையும் கொண்ட சீனர்கள் தம்மைவிட வளம் செழிப்பவர்களாக உருமாறுவது பிடிக்காத பொதுவான வெள்ளை மனப்பான்மையும் கதையில் சொல்லப்படுகிறது. இருப்பினும் சட்டத்தின் பிரதிநிதிகளிற்கே தண்ணீர் காட்டும் நுட்பங்களுடன் இயங்கும் சீனன் வுவாங் சிங்கின் கட்டுக்கோப்பான அபின் கடத்தல் அமைப்பு அவர்களின் திறமைக்கு சான்று.<br />
<br />
<b>நண்பர்கள் </b>தயவுசெய்து இக்கதையின் அட்டைப்படத்தை பாருங்கள். தன் ட்ராகனாசனத்தில் அமர்ந்திருக்கும் வுவாங் சிங்கையும், அவரை விறைப்பான கைகளுடன் நோக்கிக் கொண்டிருக்கும் டெக்ஸையும் பாருங்கள். செமையான ஒரு மோதல் உண்டு எனும் எண்ணம் உங்கள் மனதில் எழலாம். அதில் தப்பேயில்லை ஏனெனில் எனக்கும் அதே எண்ணம் எழுந்தது. ஆனால் இந்தக் காட்சியே கதையில் இல்லை! ஏன் வுவாங் சிங்கின் முகத்தையோ அல்லது அவன் யார் என்பதையோ டெக்ஸ் இக்கதையில் அறிவது இல்லை. அபின் கடத்தலின் தலைவன் யார் என்பதை டெக்ஸ் அறியாமலேயே இக்கதை நிறைவுபெறும். வுவாங் சிங்கும் கதையின் ஒரு தருணத்தில் ரேஞ்சர்களை கொல்வதற்கு அவசியமில்லை என நழுவிவிடுவான். என்ன ஒரு பெருத்த ஏமாற்றம் இது.<br />
<br />
<b>டாக்டர் </b>செவென்போல உருவச்சாயல் கொண்ட வுவாங் சிங், ஊதுபத்தி புகை அவரிருக்கும் அறையில் ட்ராகன் வால்போல நெளிந்து சுருண்டோட மங்கிய வெளிச்சத்தில் அறிவுக்களைகொண்ட வில்லத்தனமுகம் காட்டி கன்பூசியஸ் பெயரை கண்டபடி உபயோகித்து என்னில் உருவாக்கிய எதிர்பார்ப்பு எல்லாம் மணல்கனவாக சிதைந்தது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் அவர் தரும் பில்ட் அப்கள் எல்லாம் ஒரு பெரும் மோதலையே படிப்பவரின் மனதில் விதைக்கிறது. பாதியில் இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக கதை திரும்புகையில் கிடைக்கும் ஏமாற்றம் டெக்ஸே எம் மூஞ்சியில் ஓங்கி குத்துவது போல இருக்கிறது. <b>மேலும் இக்கதையில் டெக்ஸ் யாரையும் அடிப்பது இல்லை, துப்பாக்கியால் யாரையும் சுடுவதும் இல்லை என்றால் நம்புவீர்களா. நம்புங்கள்! டெக்ஸ் இக்கதையில் தன் துப்பாக்கியை ஒரு தடவைதான் உபயோகிப்பார், அதுவும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வண்டியை நிறுத்துங்கள் என எச்சரிப்பதற்காக மட்டுமே</b>.<br />
<br />
<b>கதையில் </b>டெக்ஸின் உச்சபட்ச வன்முறை என்பது நாடக அரங்கில் நாடகம் நடைபெறும் வேளையில் டெக்ஸும், கார்சனும் இங்கிதம் இல்லாது உரையாடிக் கொண்டிருக்க அது பிடிக்காத ஒரு கனவான் அவர்கள் பேசுவதை நிறுத்த சொல்வார், இதனால் அப்செட் ஆகும் டெக்ஸ் டாய்! நாடகம் முடிய வெளில வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என அந்த நோஞ்சான் கனவானை மிரட்டுவது என்பதாக இருக்கிறது. இது டெக்ஸின் மீதான மதிப்பை இழக்கசெய்யும் ஒரு காட்சி அமைப்பாகவே இருக்கிறது நகைச்சுவையை தருவதாக அல்ல. கதையின் விசாரணையில் கூட ரேஞ்சர்கள் எதையும் கண்டுபிடிப்பது இல்லை, கதையின் துணைப்பாத்திரங்கள் அவர்கள் விசாரித்து அறிய வேண்டியற்றை எல்லாம் ரேஞ்சர்களை தேடி வந்தே சொல்லி விடுகின்றனர். இப்படி ஒரு அஹி[இ]ம்சையான டெக்ஸ் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. இவ்வளவு பரபரப்புடன் ஆரம்பமாகி இப்படியான ஒரு அமெச்சூர் நாடகம்போல முடிவடையும் கதையையும் நான் படித்தது இல்லை. கதையின் ஒரே ஆறுதல் தனக்கேயுரிய தனித்த பாணியில், இருளையும் ஒளியையும் பக்கங்களில் மனித உணர்வுகளுடன் இழையவிட்டு அட்டகாசமாக <b>Andrea Venturi </b>உருவாக்கியிருக்கும் சித்திரங்கள். அவரின் திறமை க்ளோடியோ நிஸ்ஸியின் மொக்கை கதை ஒன்றில் இப்படியாக வீணாகிப்போனதே என்பதும் வேதனையான ஒன்றுதான். நாடகம் எல்லாம் பார்க்கிற ஆள் நானில்ல என்று உதார்விடும் கார்சன் பாதி நாடகம் முடிய கதையில் ஒன்றிப்போய் அரங்கைவிட்டு வெளியேற மாட்டேன் என இருக்கையில் உறுதியாய் உட்காரும் அத்தருணம் ரசிக்க வைக்கும் ஒரு தருணம். இனி டெக்ஸ் ரசிகர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், பரட்டையின் தீவிரவாத ரசிகக்கண்மணிகள் கையில் இக்கதை கிடைக்ககூடாது என பயபக்தியோடு பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தை வேண்டி நிற்பதுதான். மரண நாடகம் முடிகையில் பாடையில் இருப்பது வாசகர்கள்.<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-81458031815008827732014-11-11T10:41:00.000+01:002014-11-15T16:21:52.193+01:00வெல்லப்படாதவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwf4tW_BQW9Jq5PhriybmFCoNFXzuaz05DAWXJe4ER89bbGvjqW5YQWrqmS34Ea1HWIYeY2T3ok55Rcx-rIuQhBGkbQ0SqdOzDhY4XBUUd4h9dj_bcZux0l5V0npBjEQ4LiOftQJ2j_QH0/s1600/1823225-tex0438.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwf4tW_BQW9Jq5PhriybmFCoNFXzuaz05DAWXJe4ER89bbGvjqW5YQWrqmS34Ea1HWIYeY2T3ok55Rcx-rIuQhBGkbQ0SqdOzDhY4XBUUd4h9dj_bcZux0l5V0npBjEQ4LiOftQJ2j_QH0/s1600/1823225-tex0438.jpg" height="320" width="241" /></a></div>
<b></b><br />
<div>
<b><b><br /></b></b></div>
<b>
<span style="font-size: large;">வதனமோ சந்த்ர பிம்பமோ - 18</span></b><br />
<div>
<b><br /></b>
<br />
<div>
<b>நெவெடா</b> மலைப்பகுதியில் டொனா மற்றும் லெனாவுடன் ஓய்வாக சில நாட்களை கழித்துவிட்டு நவஹோ குடியிருப்பிற்கு திரும்புகிறார் கார்சன். அங்கு அவரை வரவேற்கும் டெக்ஸ்,டெக்ஸாஸ் மற்றும் ந்யூ மெக்ஸிக்க எல்லைகளில் சமீப காலமாக நடந்துவரும் குற்ற செயல்களிற்கு பொறுப்பான ஒரு குழுவை நீதியிடம் எடுத்து வரும் பொறுப்பை ரேஞ்சர்களின் தலைமையகம் தன்னிடம் தந்திருப்பதை கூறுகிறார். இதனையடுத்து டெக்ஸ், கார்சன், கிட், டைகர் ஆகியோர் அந்த கேடிக்குழுவை தேடி பயணிக்கின்றனர்...<br />
<div>
<br /></div>
<div>
<b>தமிழ் </b>காமிக்ஸ் நாயகர்களில் கிங்கான டெக்ஸின் மாத வெளியீடு 438ன் கதையின் தலைப்பு Les Invincibles. கதையின் ஆரம்ப பக்கங்களை காண்கையில் அடடா இது டெக்ஸ் கதையா எனும் ஒரு சிறு சந்தேகம் எழுவது நியாயமானதே. ஏனெனில் கதை ஆரம்பிப்பது நமது ரேஞ்சர் சிங்கம் வலம் வரும் பிரதேசங்களிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரில் ஆகும். நீதிமன்றத்திலிருந்து வெல்வ்யூ சிறைக்கு சில கைதிகள் ஒரு வண்டியில் பொலிஸ் பாதுகாவலில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வண்டியை தாக்கி அதில் இருக்கும் தம் தோழர்களை விடுவிக்கிறது ஒரு குழு. சிறைக்கு செல்ல இருந்தவர்களும், அவர்களை காப்பாற்றியவர்களும் சுதந்திர அயர்லாந்தை வேண்டி ஆங்கிலேயர்களிற்கு எதிராக போராடுபவர்கள். வண்டியிலிருந்து தன் தோழர்களை மீட்பதில் முனைப்பாகவும், வன்முறையுடனும் இயங்குகிறான் ஒரு இளைஞன் அவன் பெயர் ஷேன். அவன் நண்பன் டானி மொரான். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழ்ந்த நட்புடன் இருப்பவர்கள். தம்மை யாராலும் வெல்லமுடியாதவர்கள் என அழைத்துக் கொள்பவர்கள். இந்த தருணத்தில் டெக்ஸின் நீண்டகால வாசகர்களிற்கு கார்சனின் கடந்த காலத்தில் இடம்பிடித்த அப்பாவிகள் குழு நினைவிற்கு வரலாம். ஏனெனில் கதையும், சித்திரங்களும் கார்சனின் கடந்த காலத்தில் பணியாற்றிய கலைஞர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இந்தக் கலைஞர்களின் கூட்டணியில் ஒரு மூன்றுபாக கதை என்கையில் வாசக மனம் எதிர்பார்ப்பில் சில எல்லைகளை தாண்டி செல்கிறது. அந்த எல்லைகளை வாசகனிற்கு சிறிதேனும் புலப்படுத்தும் விதமாகவே இம்மூன்றுபாக கதையின் [ டெக்ஸ் 438,439,440] முதல் பாகத்தின் கதை ஆரம்பமாகிறது.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0oyUsUXhbIMKA_-LVtV0iDeak156U4Jvm7GflpKZjBoribEspcrhuoo3OQhieRQQidEH_6OXszccI3byi7pvyuXjgaAHJO-4-Qo1mTr91X62fjnVu3Vil2nBJFqLkfq34v_S6TYBpMY-I/s1600/invin+1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0oyUsUXhbIMKA_-LVtV0iDeak156U4Jvm7GflpKZjBoribEspcrhuoo3OQhieRQQidEH_6OXszccI3byi7pvyuXjgaAHJO-4-Qo1mTr91X62fjnVu3Vil2nBJFqLkfq34v_S6TYBpMY-I/s1600/invin+1.jpg" height="320" width="227" /></a></div>
<div>
<b>தோழர்களை </b>மீட்கும் நிகழ்வானது துரதிர்ஷ்டமான தருணத்தை எட்டுகிறது. டானி குண்டடிபட்டு வீழ்கிறான். தன் நண்பணின் சலனமற்ற உடலை மனதில் வேதனையுடன் தாங்கியவாறே தப்பி செல்கிறான் ஷேன். இதன் பின் கதாசிரியர் <b>Mauro Boselli</b>, கதையை பத்து வருடங்கள் தாண்டி காலத்தில் எடுத்து செல்கிறார். மெக்ஸிக்கோவின் சிகுவாகுவா பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் சோதனையிடப்படும் ஒரு ரயிலில் வாசகர்களிற்கு ஷேனை மீண்டும் அறிமுகம் செய்கிறார் அவர். ரயிலை சோதனை போடும் பொலிஸ் அதிகாரி மெக்ஸிக்க எல்லையில் குற்ற செயல்களை நிகழ்த்தி வரும் அயர்லாந்து குழுவை தேடியே சோதனை நடாத்தப்படுவதாக சொல்கிறார். அயர்லாந்தை சேர்ந்த ஷேனை சற்று சந்தேகத்துடன் பொலிஸார் நோக்கினாலும் அவன் மெக்ஸிக்கோவின் பிரபல ஆயுத வியாபாரியான எடுவார்டோவின் பார்ட்னர் என்பதை அறியும்போது பலத்த பாதுகாப்புடன் ஷேனை அவர்கள் எடுவார்டோவின் மாளிகைக்கு அழைத்து செல்கிறார்கள். எடுவார்டோவும் அவர்களுக்கு நன்றி சொல்வதுடன் பிரதேசத்தின் அமைதியை குலைக்கும் அயர்லாந்து குழுவை விரைவில் பொலிஸார் அழித்தொழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார்.</div>
<div>
<br /></div>
<div>
<b>ஷேன் </b>எவ்விதம் மெக்ஸிக்க ஆயுதவியாபாரி எடுவார்டோவுடன் பார்ட்னர் ஆனான் என்பது இங்கு கதையில் சொல்லப்படுவது இல்லை. ஆனால் மெக்ஸிக்க எல்லைப் பகுதியில் தன் அக்கிரமங்களை நிகழ்த்தும் அயர்லாந்து குழுவுடன் தன்னையும் இணைப்பதே ஷேனின் நோக்கம். அதையே எடுவார்டோவும் விரும்புகிறான். இவர்கள் இருவரின் மனதிலும் இருப்பது ஒரு ரகசிய திட்டம். அந்த திட்டத்திற்கு காரணம் அயர்லாந்து குழுவினர் அறிந்த ஒரு தகவல். அந்த தகவல் மட்டும் உண்மையெனில் ஷேனும், எடுவார்டோவும் விரைவில் பெரும் செல்வந்தர்கள் ஆவார்கள். ஆனால் ஷேன் தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும், தன் மண்ணின் சுதந்திர போராட்டத்திற்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். என்றாவது ஒரு நாள் தன் தாய்மண் சுதந்திரமான ஒரு நாடாக வேண்டும் என்பதில் விடாத பற்று கொண்டவன். அயர்லாந்து குழுவில் இணைய அவன் முன்வருவதே அதில் கிடைக்ககூடிய பணத்தை தன் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு தருவதற்காகவே. ஆனால் அவன் தாய் மண்ணில் அவன் வன்முறைகள் சுதந்திர போராட்டத்திற்கு சரியாக இருக்காது என்பதால் அவனை தீர்த்துக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின்னாக அந்த கொலை முயற்சிகளிலிருந்து தப்பியே அவன் தன் தாய் மண்ணை பிரிகிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒரு தேசபக்தனாக, நட்பை பெரிதும் மதிப்பவனாக உருவாக்கப்படும் ஷேன் பாத்திரம் கதையின் இறுதிவரை அப்பண்புகளை இழக்காமல் பேணப்பட்டிருப்பது சிறப்பானது.</div>
<div>
<br /></div>
<div>
<b>கதையின் </b>இந்த தருணத்தில் ஷேன் தேடிச்செல்லும் குழுவும், டெக்ஸ் குழுவினர் தேடிச் செல்லும் குழுவும் ஒன்றுதான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் குறித்து ஷேனிற்கு ஏதும் தெரியாது எனினும் டெக்ஸிற்கு இக்குழு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். அது எப்படி என ஒரு கேள்வி எழும்போது வருகிறது ஒரு ப்ளாஷ்பேக். அமெரிக்க சிவில் யுத்தம் முடிவடைந்திருந்த காலப்பகுதியில் நீதித்துறைக்கும் டெக்ஸ்ஸிற்கும் உறவுகள் சுமூகமாக இருந்தது இல்லை. ஆகவே டெக்ஸ் மெக்ஸிக்கோ வந்து சில காலங்கள் தங்கிவிடுகிறார். இங்கு இளமையான ஒரு டெக்ஸை நாம் சந்திக்கலாம். எல் பாஸோ டெல் நோர்ட் எனும் சிறு நகரில் அவர் ஒரு விடுதியில் தங்குகிறார். ஒரு அழகான பெண்ணிற்கு டகிலா வாங்கி தரக்கூட அவர் பையில் பைசா இருக்காது. தன் அறையில் ஓய்வு எடுக்க செல்லும் போது அங்கு அவரின் ஆச்சரியமாக காத்திருக்கிறது அயர்லாந்து குழு.</div>
<div>
<br /></div>
<div style="text-align: left;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihyphenhyphentxVVOJrcKMAr9T8sPDRfn_A18Zphvy9YOqTdXh-qo71Z4obu8IlwnhFsP0fZ5EAP57nnQDra4xudaanxuONBHrYqph9GvK7mPuyLhv_V2U5z5ndZV4J-wbMEE7DN-wfWjwHUETm8zw0/s1600/Couv_166974.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihyphenhyphentxVVOJrcKMAr9T8sPDRfn_A18Zphvy9YOqTdXh-qo71Z4obu8IlwnhFsP0fZ5EAP57nnQDra4xudaanxuONBHrYqph9GvK7mPuyLhv_V2U5z5ndZV4J-wbMEE7DN-wfWjwHUETm8zw0/s1600/Couv_166974.jpg" height="320" width="225" /></a></div>
<div>
<b>அயர்லாந்து </b>குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் கான்ஃபெடரேட் வீரர்கள். யுத்தம் முடிவடைந்தபின் கூலிப்படைகளாக உலகின் பல பகுதிகளிலும் சென்று பணியாற்றியவர்கள். அவர்களின் ஒரே ஒற்றுமை அவர்கள் அயர்லாந்தவர்கள் என்பது மட்டும்தான். [சில விதிவிலக்குகள் தவிர்த்து. ] விடுதி அறையில் ஓய்வெடுக்க சென்ற டெக்ஸ் அங்கு அயர்லாந்து குழுவிடம் மாட்டிக் கொள்கிறார். ஹட்ச், ஹலோரான், வாட்ஸ், கெலி எனும் நான்கு பேரை கொண்ட குழுவாக அது அன்றைய நாட்களிலில் இருக்கிறது. இச்சம்பவம் விபரிக்கப்படும் தருணத்தில் சக்கரவர்த்தி மக்மிலியனிற்கும், ஜனாதிபதி குவாரஸிற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று மெக்ஸிக்கோவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குவாராஸிற்கு வாஷிங்டனின் ஆதரவு என்பதால் டெக்ஸும் அவரை ஆதரிக்கிறார். ஆனால் அயர்லாந்து குழு மக்மில்லியன் கீழ் கூலிப்படையாக பணியாற்றுகிறது. அவர்கள் அந்த சிறு நகரில் வந்திருப்பதற்கு காரணமே ஜனாதிபதி குவாரஸை கொல்வதற்காகத்தான். அயர்லாந்து குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹட்ச் என்பவன் டெக்ஸின் பால்யகால நண்பன். அவன் டெக்ஸாஸில் பிறந்திருந்தாலும் அவன் தந்தை அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதால் அதையும் தன் நாடு எனவே அவன் ஏற்றுக் கொள்கிறான். அயர்லாந்து குழுவும் அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்திற்காக பண உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</div>
<div>
<br /></div>
<div>
<b>அன்று </b>டெக்ஸ் தன் உயிரை தக்க வைத்து கொள்வதற்கு ஹட்ச்சும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அழகுப் பதுமை டொலெரெஸ். டொலெரெஸின் மார்பகங்களை ஓவியர் <b>Carlo Raffaele Marcello</b> அதிகம் காண்பிக்கவில்லை எனினும் அவள் கண்ணழகும் மார்பழகும் உள்ளத்தை கொள்ளை கொள்வதாக இருக்கின்றன. டொலெரெஸ் ஹட்ச்சின் காதலியாகவும் கதையின் இப்பகுதியில் சித்தரிக்கப்படுகிறாள். அயர்லாந்து குழுவின் கொலை சதியை முறியடிக்கும் டெக்ஸ், அவர்களை சுதந்திரமாக செல்ல விட்டு அமெரிக்கா திரும்புவதுடன் ப்ளாஷ்பேக் நிறைவுறுகிறது. ஷேன் எப்படி அயர்லாந்து குழுவுடன் இணைகிறான் என்பதுடனும் கல்வெஸ்டன் எனும் எல்லை நகரிற்கு செல்லும் டெக்ஸ் அங்கு பேட் மாக் ரையான் மற்றும் டானி மொரானை தம் குழுவில் இணைத்துக் கொண்டு மெக்ஸிக்க எல்லையை கடப்பதுடனும். முதல் பாகம் நிறைவு பெறுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
<b>தேசபற்று</b>, நட்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் தரும் விதமாக இப்பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தொடரும் பாகங்களில் இவை காலத்தின் ஓட்டத்துடன் எவ்விதம் மாற்றம் கொள்கின்றன என்பதை வாசகர்கள் காணலாம். அயர்லாந்து குழுவிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்பதுதான் கதையின் மர்மம் ஆனால் அந்த மர்மம் நண்பர்களுக்கு புதிதான ஒன்றல்ல. ரத்தப்படலம் தொடரிலும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJWT-fEY8AirgeJqQMcP1MP4AwU3ELnsqM9kPKU1uhFmBv5Tb4eufRNiIzRmXSo3HSXN-hXuW6qZj3CB32JlgVAjerIDBUEeNwbCbJRRmnKVrp7b0cHu99J0fVPSg54Fn18TNPi2Qafj2z/s1600/1823248-tt_tex0440.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJWT-fEY8AirgeJqQMcP1MP4AwU3ELnsqM9kPKU1uhFmBv5Tb4eufRNiIzRmXSo3HSXN-hXuW6qZj3CB32JlgVAjerIDBUEeNwbCbJRRmnKVrp7b0cHu99J0fVPSg54Fn18TNPi2Qafj2z/s1600/1823248-tt_tex0440.jpg" height="320" width="243" /></a></div>
<div>
<b>இரண்டாம் </b>பாகம் ஷேனை அயர்லாந்து குழுவில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் சோதனை, மெக்ஸிக்க பொலிசாரை எதிர்கொள்ளும் டெக்ஸ் அண்ட் கோ, ஒரு வழியாக வெளிவரும் அயர்லாந்து குழுவினர் அறிந்திருக்கும் அந்த தகவல், அந்த தகவல் வழியாக உருவாகும் ஒரு திட்டம், டெக்ஸ் அண்ட் கோவும் அயர்லாந்து குழுவும் எதிர்பாராது சந்தித்து கொள்ளும் தருணம், மெக்ஸிக்க பொலிஸ் இவர்களை சுற்றி வளைத்து தாக்குவது என நகர்கிறது. அதிரடி சண்டைகள் இருந்தாலும் வள வள வள வென பாத்திரங்கள் ஓயாது பேசிக் கொள்ளும் பாகம் இது. ஷேன், ஹெர்மொசில்லோ சிறையில் காட்டும் ஆக்ரோஷமாகட்டும், சந்த மார்த்தா கிராமத்தில் டெக்ஸ் காட்டும் அதகள நுட்பங்கள் ஆகட்டும் இந்த வள வள வளவுக்கு முன் அடங்கி போகின்றன. அயர்லாந்து குழுவின் திட்டம் நிறைவேறுமா எனும் ஒரு கேள்வியுடன் இரண்டாம் பாகம் நிறைவுக்கு வரும்.</div>
<div>
பிரிந்தவர்கள் கூடினால் என்பது போல டெக்ஸும், அயர்லாந்து குழுவும் குறிப்பாக ஹட்ச்சும் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி காரமும், உப்பும், பாசமும், நேசமும் கலந்த மாங்காய் துண்டுகளாக ருசிக்கின்றன. ஷேனும் அவனது முன்னைநாள் நண்பனும் மீண்டும் இணையும் காட்சி நட்பின் நாயகராவாக கிராமத்தை நனைக்கிறது. செத்து தொலைங்கடா எல்லாரும் என என் வாசக மனது வெடிக்கிறது. </div>
<div>
<br /></div>
<div>
<b>மூன்றாம் </b>பாகமானது சிங்கத்தின் குகைக்குள் சென்று சிங்கத்துடன் டின்னர் சாப்பிட்டு விட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடி செத்து மடிவது என்பதாக இருக்கிறது. கதை ஆரம்பத்தில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் பலவும் காய்ந்து போவது இந்த பாகத்தில்தான். நட்பு, காதல், தேசபற்று, வீரம், நீதி, என சும்மா பக்கம் பக்கமாக அடி பின்னுகிறார்கள். போதாது என்று 61 பக்கத்திற்கு நான் ஸ்டாப் ஆக்சன் வேறு. எப்படா இந்த சண்டை முடியும் என்று டெக்ஸ் ரசிகர்களே கதறி அழும் வகையில் இப்பாகத்தில் ஆக்சன் இருக்கிறது. நூற்றுக்கணக்காக மெக்ஸிக்க வீரர்கள் செத்துவிழ சிறு சிறு சிராய்புக்களுடன் டெக்ஸ் அண்ட் கோ சலிக்காது அதகளம் புரிவது பரட்டை ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். யப்பா ஒரு வழியாக சண்டை முடிந்தது என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டால் விட்டேனா பார் என மீண்டும் ஒரு ஆக்சன். யப்பா சாமி முடியல. தியாகம், தியாகம், தியாகம் என காரஸ்கோவின் மாளிகையில் போஸ்டர் ஓட்டாத குறையாக கதையின் இறுதியில் தியாகங்கள் பல மெக்ஸிக்க தொப்பி நடனம் ஆடுகின்றன. இருப்பினும் கதையின் முடிவில் மனதில் ஒரு நெகிழ்வான உணர்வு வந்து விடுகிறது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.</div>
<div>
<br /></div>
<div>
<b>மிகப்பெரியதொரு </b>எதிர்பார்ப்பை உருவாக்கி அதை தீர்க்காது நிறைவுபெறும் கதைகளில் இதுவும் ஒன்று. பொசெலியிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அந்த ரகசியம், அந்த திட்டம் எல்லாம் இறுதியில் விழலிற்கு இறைத்த நீராக போனது போன்ற ஒரு உணர்வு உருவாகையில் இப்படியாக இக்கதையை நீட்டி அடித்தது இதற்காகத்தானா எனும் தார்மீக சீற்றம் ஒன்று கண்டிப்பாக உருவாகும். இக்கதையின் சித்திரங்கள் கதைக்கேற்ப மிக சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கார்சனின் கடந்தகால சித்திரங்கள் போலவே உணர்வுகள் சிறப்பாக சித்திரங்களில் உயிர்பெறுகின்றன. தாய்மண்ணை விட்டு பிரிந்து வந்த மனிதர்களின் ஏக்கம், அவர்களின் வாழ்க்கை என்பனவும் சிறப்பாக கூறப்படுகின்றன. கதையின் இன்னொரு சிறப்பம்சம் பாடல்கள். எங்கு ஒரு வாய்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். மரியாச்சிகள் பாடுகிறார்கள், ஷேன் பாடுகிறாள், அயர்லாந்து குழு பாடுகிறார்கள், டொலெரெஸ் பாடுகிறாள், குத்துசண்டை பார்வையாளர்கள் பாடுகிறார்கள் இப்படியாக இது ஒரு சங்கீத ஆக்சன் என்றால் அது மிகையல்ல. டிசம்பர் சங்கீத சீசன் என்கையில் இக்கதையும் அம்மாதத்தில் வெளியாவது பொருத்தமானதே. வெல்ல முடியாதவர்களையும் சில வேளைகளில் நட்பு வீழ்த்திவிடும். ஷேன் அவ்வகையில் வாசகர்கள் மனதில் நிற்பான். வான் வொச்டின் அழகிய முகம் அவனுடன் என்றுமே பயணிக்கட்டும் வெல்லப்படாதவனாக.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83455949961703226572014-10-05T12:16:00.000+02:002014-10-05T12:16:35.419+02:00புரட்சியின் இறுதி வீரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBCnSRPHkWFZFePR9D4B3Gqf77eE22QYSm5n0NNC4DCEz7kq5XbKksaWx6KbCFT__oIkW-R3He0PfMqeM3DIdCl-XU79VsCO_ojy917gzDnh2uCkiv6yvGNCSx1H99S3HhVzKRSBpb6en-/s1600/291408272X-large.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBCnSRPHkWFZFePR9D4B3Gqf77eE22QYSm5n0NNC4DCEz7kq5XbKksaWx6KbCFT__oIkW-R3He0PfMqeM3DIdCl-XU79VsCO_ojy917gzDnh2uCkiv6yvGNCSx1H99S3HhVzKRSBpb6en-/s1600/291408272X-large.jpg" height="400" width="283" /></a></div>
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ர பிம்பமோ - 17</span></b><br />
<b><br /></b>
<b>ஜெனரல் </b>டேவிஸின் தந்தியை பெற்றுக் கொள்ளும் டெக்ஸும், கார்சனும் அரிசோனாவிலிருந்து வெர்ஜினியாவின் தலைநகரான ரிச்மொண்டுக்கு கிளம்பி செல்கிறார்கள். தந்தியில் எந்த தகவல்களையும் வழங்காது விடும் ஜெனரல் டேவிஸ் மிகவும் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் அந்த விடயம் என்ன என்பதை அறிந்திடும் ஆர்வம் ரயிலில் பயணிக்கும் இரு ரேஞ்சர்களின் மனதிலும் பசித்திருக்கும் கேள்வியாக கூடவே வருகிறது ..<br />
<br />
<b>TEX Special </b>கதை வரிசையின் பதினான்காவது ஆல்பமான <b>Le Dernier</b> <b>Rebelle </b>வாசகர்களை வேகமாக தன்னுள் உள்ளிழுக்கும் கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்கள் வெர்ஜினியாவின் ரப்பா ஹனோக் ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் எழிலான பகுதிகளில் ஆரம்பமாகிறது. மலைகளும், அதில் பசுமையின் விரல்களாக நீண்ட மரங்களும், அவற்றின் நலத்தை கேட்பதில் அலுத்து விடாத மலைக்காற்றும், அந்த காற்றில் ஏறிப்பயணிக்கும் அந்நிலவெளிக்குரிய வாசமும் என ஆரம்ப பக்கங்களின் சித்திரங்கள் அப்பகுதியில் வாசகனும் பயணம் செல்வது போன்ற ஒரு நிலைக்கு அவனை இட்டு வருகின்றன ஆனால் அவன் கவனத்தை திசை திருப்புவதுபோல ஆற்றின் அருகில் நீண்டு செல்லும் ரயில்பாதையில் வருகிறது ஒரு ரயில் வண்டி. அதில் பயணித்து கொண்டிருக்கும் யூனியன் வீரர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். வானத்தை கூரைகளாக கொண்டிருக்கும் திறந்த பெட்டிகளில் பயணிக்கும் ஒருவன் மலைக்காற்றின் குளிரை வெறுத்துக் கொள்கிறான். மூடப்பட்ட பெட்டிகளினுள் சக வீரர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வீரன் ஒருவன் அவன் உட்காந்திருக்கும் ஆயுதப்பெட்டிகள் உட்காருவதற்கு வசதியாக இல்லை என குறைப்பட்டு கொள்கிறான். ரயில் பயணித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் சில மனிதர்கள் ரயில்பாதையிலிருந்து ஒரு தண்டவாளத்தை அகற்றுவதில் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
<b>ரயில் </b>ஓட்டுனர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக, கச்சிதமான அந்த இறுதி தருணத்தில் தண்டவாளம் அகற்றப்பட வேகத்துடன் வந்த ரயில் அதே வேகத்துடன் தன் பாதைவிட்டு விலகி வீழ்கிறது. ரயிலில் பயணித்தவர்களின் வேதனை ஒலிகள் அமைதியான அந்த நிலவெளியின் கீறல்களாக ஒலிக்கின்றன. ரயிலைக் கவிழ்த்த மனிதர்கள் தம் துப்பாக்கிகளால் அந்தக் கீறல்களை இல்லாது ஆக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவர்கூட மிச்சமிராது ரயில் பயணிகள் கொல்லப்படுகிறார்கள். ரயிலில் ஏற்றி வரப்பட்ட ஆயுதங்களுக்காக ரயிலை கவிழ்த்து படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் அவற்றை ரப்பா ஹனோக் ஆற்றின் வழியாக எடுத்து செல்கிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLFvGeuPe3NAzo02uP0zvOe1VYQyCv_VAAlU37_dYQpPkw0Ex2p0Y5dd8TLnNcpG_5TWv6eCuVJDyQwuo7unEt6jSXblTGLognyE0I_P8CSDpdY66QxEi88ilkwtfw452SpUECbql1zzty/s1600/dr1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLFvGeuPe3NAzo02uP0zvOe1VYQyCv_VAAlU37_dYQpPkw0Ex2p0Y5dd8TLnNcpG_5TWv6eCuVJDyQwuo7unEt6jSXblTGLognyE0I_P8CSDpdY66QxEi88ilkwtfw452SpUECbql1zzty/s1600/dr1.jpg" height="320" width="225" /></a></div>
<b>இவ்வகையான </b>கொலை, கொள்ளை, வழிப்பறி தாக்குதல் சம்பவங்கள் புதிதானவை அல்ல. கடந்த ஒரு வருட காலமாக இவ்வகை நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ ஒழுங்குடன் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றை செய்வது ஒரு குழுதான் என்பதை ரிச்மொண்ட் வந்து சேரும் டெக்ஸ் & கார்சனிடம் விளக்குகிறார் ஜெனரல் டேவிஸ். சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், தம் லட்சிய கொள்கைகளில் இருந்து விடுபடாத சில கான்பெடரேட் புரட்சியாளர்கள் இவ்வகையான நடவடிக்கைகளால் மீண்டும் யூனியனுக்கு எதிராக ஒரு புரட்சியை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளே இவை என்பதையும் அவர் ரேஞ்சர்களிடம் விளக்குகிறார். யுத்த பாதிப்புக்களும், இழப்புக்களும், வலிகளும் இன்னும் ஆறியிருக்காத அந்த மண்ணில் இந்த குழுவிற்கு எதிரான ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அப்பகுதி மக்களின் ஆதரவை புரட்சியாளர் குழுவிற்கு மேலும் ஈட்டி தருவதுடன் யூனியன் மீதான வெறுப்பை இன்னும் அதிகரிக்க செய்யும் என்பதையும் டேவிஸ் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் குதிரை வண்டியினுள் விபரிக்கிறார். தாக்குதல் நடைபெற்ற இடங்களை கருத்தில் கொண்டு புரட்சியாளர்கள் குழுவின் மறைவிடம் செனண்டாவோ ஆற்றுப் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தையும் அவர் முன்வைக்கிறார். அம்மறைவிடத்தை கண்டுபிடித்து ரத்தம் சிந்தாது புரட்சியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க பொருத்தமானவர்கள் டெக்ஸும், கார்சனுமே என்பதாலேயே அவர்களுக்கு தந்தியை அனுப்பியதாகவும் தனது நீண்ட விளக்கங்களை முடிக்கிறார் ஜெனரல் டேவிஸ்.<br />
<br />
<b>ஆனால் </b>ரேஞ்சர்கள் இருவருக்கும் இந்த நிலவெளி புதிதான ஒன்று. அவர்களின் சாகசங்களில் இருந்து தொலைவில் இருக்கும் இந்த பகுதியில் ஒரு புரட்சிக் குழுவின் மறைவிடத்தை கண்டுபிடிப்பது என்பது இலகுவான ஒன்றல்ல என்பதை அவர்கள் உடனே ஜெனரல் டேவிஸிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கும் ஒரு திட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் ஜெனரல் டேவிஸ், ஜான் ஃப்ரெமொண்ட் எனும் மனிதனுடன் டெக்ஸ் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்கிறார்.<br />
<br />
<b>ஜான் ஃப்ரெமொண்ட்</b> முன்னாள் கான்பெடரேட் அதிகாரி. கம் ஸ்பிரிங் ஆயுதக்கிட்டங்கியை புரட்சியாளர்கள் தாக்கியபோது இடம்பெற்ற மோதலில் காயமுற்று, கைதாகி பீட்டர்ஸ்பெர்க் சிறையில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவன். இப்படியான ஒருவனுடன் பழகி, அவன் நம்பிக்கையை வென்று அவன் மூலமாக புரட்சியாளர்களின் மறைவிடத்தை அறிய டெக்ஸ் முயல வேண்டும் என்பதே டேவிஸ் முன்வைக்கும் திட்டம். ரேஞ்சர்களும், டேவிஸும் பயணிக்கும் குதிரை வண்டியும் விரைந்து கொண்டிருப்பது பீட்டர்ஸ்பெர்க் சிறைச்சாலையை நோக்கித்தான். ஆக சிறையில் இருக்கும் ஜான் ஃப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு டெக்ஸ் பாத்திரமாக வேண்டின் அந்த சிறைக்கு டெக்ஸும் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளியாக செல்வதை தவிர வேறு சிறப்பான வழி உண்டோ டெக்ஸ் வாசக மன்றமே!<br />
<br />
<b>இந்த </b>தருணத்தில் என் கண்களில் இருந்து ரப்பா ஹனோக் வழிந்து கொண்டிருந்தது. என் அன்பு ரேஞ்சர், நீதியின் காவலன், அநீதியின் எமன், ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்குரல் ஜெயிலுக்கு கைதியாக போவதா! அய்யகோ வானமே வையமே மேற்கின் மறையுரு பிரபஞ்சமே இது என்ன சோதனை. உயிரும் ஒடுங்கி ஆன்மாவும் நடுங்கி அழுதேன் அய்யா, டெக்ஸ் நீதான் என் பசுமைக் கொய்யா என தீடிர் கவிதை என்னுள் பீரிட்டது. ஆனாலும் நான்கு பேருக்கு நல்லது என்றால் நான் நரகத்துக்கும் செல்வேன் என அன்பு தலைவர் டெக்ஸ் அரிசோனா பெரும்பீஜ எருது சலூனில் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்தது. மனதை அமைதியாக்கி கொண்டு கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு சில விஷமிகள் இப்படி எத்தனை கதை படித்திருக்கிறோம், வில்லன் குகை இருக்குமிடத்தை அறிய வில்லன்களுடன் நட்பாக பழகி, அவர்கள் நம்பிக்கையை பெற்று, அவர்களுடன் வில்லனின் குகைக்கு செல்வது என்பது ஆதிவாசி டெக்னிக் என கிண்டல் அடிக்கலாம். அந்த விஷமிகளுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் சொல்வது உண்மை! இது ஒரு அரதப்பழைய கிழிந்த பீத்தல் தேய்வழக்கே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT5M40avzaDAnU0PzOPa9MlxPCnmOq6LzPNp0hmzyyS4b72O5unwaQO7eRTqcIRvFDjCWcm56ZWaoRC8horFEAOQR9q1Dmbc2_QUnxxz2zpdcTvYxPKm4ZohBSjwgUgihHLtGyxxI13eLB/s1600/dr2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT5M40avzaDAnU0PzOPa9MlxPCnmOq6LzPNp0hmzyyS4b72O5unwaQO7eRTqcIRvFDjCWcm56ZWaoRC8horFEAOQR9q1Dmbc2_QUnxxz2zpdcTvYxPKm4ZohBSjwgUgihHLtGyxxI13eLB/s1600/dr2.jpg" height="320" width="224" /></a></div>
<b>இப்படி </b>ஒரு கதைக்களத்தை உருவாக்கி இருப்பவர் டெக்ஸின் ஆஸ்தான கதையாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி. நல்ல கதைகளையும் உருவாக்கும் ஆற்றல் பெற்ற கதாசிரியரான நிஸ்ஸி அந்த ஆற்றலை எல்லா கதைகளிலும் பயன்படுத்துவதில்லை என்பதை பூதவேட்டை போன்ற கதைகளை படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். கதையின் ஆரம்பத்தில் மிக வேகமான ஆறாக செல்லும் கதைசொல்லல் டெக்ஸ் சிறைக்கு கைதியாக ஆக்ட் குடுக்க செல்கிறார் எனும் இடத்தில் அணைகட்டி நின்று விடுகிறது. கைதியாக வாசலில் இறங்கும் டெக்ஸ், தலைமைக் காவலன் மாக்ஸனுடன் விடும் சவால்களும், பஞ்சுகளும் எரிமலை சீறல் எனில் அதன் பின் அவர் அடங்குவதாக நடிக்கும் இடங்களும், பின்னர் ப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளும் பாதிவழியில் கீழே விழுந்த ராக்கெட்டுகளாக உருவெடுக்கின்றன.<br />
<br />
<b>புரட்சியாளன் </b>ப்ரெமொன்டின் நம்பிக்கையை வென்று, அவனுடன் சிறையிலிருந்து தப்பிசென்று, புரட்சியாளர்களின் பாச்றையை டெக்ஸ் கண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியும் வரையிலான நீண்ட பகுதியில் அதிரடி என எதுவும் இல்லை. ஒரே வள வள வள. கதாகாலேட்சேபம் ஒன்றில் போய் அமர்ந்துவிட்ட உணர்வு உருவாகி பூவாகி காயாகி கனியாகி விழுந்து விதையாகி விருட்சமாகி வரும்வரை பேசுகிறார்கள். ஒரு வழியாக எதிர்பாராமைகளின் சங்கமத்தால் ஒரு முடிவை தந்து கதையை முடித்து வைக்கிறார்கள். அதுவும் அந்த இறுதி துரத்தல் காட்சி போல ஒரு சலிப்பான அனுபவத்தை எந்த டெக்ஸ் கதையும் இதுவரை தந்தது இல்லை. அந்த கட்டத்தில் மந்திரவாதிபோல தன் சட்டைப் பையிலிருந்து டைனமைட்டுகளை எடுப்பார் பாருங்கள் ... அய்யா நாம் படிப்பது டெக்ஸ் கதை என்பது எமக்கு தெரியும் ஆனால் அதற்காக இப்படியா!<br />
<br />
<b>கதாசிரியர் </b>நிஸ்ஸி, ஜான் ப்ரெமொண்ட் பாத்திரம் வழியாக இலட்சியங்களை தொலைத்து விட்ட, தன்னை இன்னும் சரியாக அறிந்திராத ஒரு மனிதனை தீட்டி செல்கிறார். இக்கதையின் இரு ஆறுதல்களின் ஒன்று ப்ரெமொண்ட் பாத்திரமே. இருப்பினும் அப்பாத்திரத்தை இன்னும் மெருகுடன் தந்திருக்கலாம். கதையின் முடிவில் டெக்ஸும் தன் மனதில் ப்ரெமொண்ட் என்றும் இருப்பான் என உறுதியாக சொல்வார். அப்படி ப்ரெமொண்ட் என்ன செய்தான் என்பதை கதையை படித்து அறிவதே சிறப்பானது. நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு மனிதம் இருக்கிறது. அது வெளிப்படும் தருணங்களும் அதன் விழைவுகளும் நம்மை யாரென்று சரியாக அடையாளப்படுத்தி விடக்கூடியவை. அவ்வகையில் ப்ரெமொண்ட் டெக்ஸைப் போலவே படிப்பவர் மனதிலும் சிறிது காலமேனும் புரட்சியின் இறுதி வீரனாக நின்றிருக்க கூடிய ஒரு சிறு பாத்திரமே.<br />
<br />
<b>இதைதாண்டி </b>இந்த கதையில் எந்த சிலிர்ப்பும், மயிர்கூச்சும், சுகாபனுபவமும் இல்லை. கதைக்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் காலின் வில்சன். பரட்டையின் பால்ய கால சித்திரவதைகள் தொடரில் சித்திரங்களில் அசத்தியவர் வில்சன். கதையில் வரும் டெக்ஸ் அங்காங்கே பரட்டைபோல தோற்றம் தருகையில் புத்தகத்தை தகனமாக்கிவிடலாமா எனும் உணர்வை தடுப்பது சிரமமாக இருந்தது. மலைக்காடுகள், மலைகள் எனும் நிலவெளியில் பின்னி எடுக்கிறார் வில்சன். டெக்ஸ், கார்சன் சக பாத்திரங்கள் என அப்பாத்திரங்களை தன் தூரிகையின் தீட்டல்களால் சிறப்பாக கம்பீரப்படுத்தி இருக்கிறார் அவர். இருப்பினும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அவர் சிறப்பாக அதற்குரிய உணர்வுகளை தர திணறியிருக்கிறார். பக்கத்தின் மூன்றில் இரண்டு பங்கை பிடிக்கும் சித்திர கட்டங்களில் பெரும்பான்மையானவை ஏமாற்றத்தையே தருகின்றன இருப்பினும் இக்கதையின் இரண்டாவது ஆறுதல் அவர் சித்திரங்களே. டெக்ஸ் ஸ்பெசல் கதைவரிசைகளில் சுமாரிற்கும் கீழான சுவாரஸ்யம் கொண்ட கதைகளில் மீண்டும் ஒன்று இது என்பதை தவிர வேறில்லை. புரட்சியின் இறுதி வீரன் ப்ரெமெண்டா இல்லை தலை டெக்ஸா என ஒரு கேள்வி கதையை படித்து முடிக்கும்போது உங்களில் எழுந்தால் ...... சபாஷ் பாராட்டுக்கள், உங்களிற்கான நவஹோ எருதுக் கம்பள விருது அதிக தூரத்தில் இல்லை!<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1422733275383646022014-09-13T16:59:00.001+02:002014-09-13T17:02:10.089+02:00ஏறக்குறைய ஒரு புனிதன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd96hxG0CVVC2nTgb6Ppn1TFSTNBJ0DW5RbInOlCq75R8PYYD-94aYhnv8fp7kMxBjBAUdaj4rujbKyq9Z_9-AmPY7iUBrC5O5paNfG_HBf8O-f5SoouHFiWXPgn3bKK2DRlffvPtoNzIy/s1600/betty-affiche.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd96hxG0CVVC2nTgb6Ppn1TFSTNBJ0DW5RbInOlCq75R8PYYD-94aYhnv8fp7kMxBjBAUdaj4rujbKyq9Z_9-AmPY7iUBrC5O5paNfG_HBf8O-f5SoouHFiWXPgn3bKK2DRlffvPtoNzIy/s1600/betty-affiche.jpg" height="320" width="213" /></a></div>
<b>ஜானதிபதி</b> வாலி ஷெரிடானிடம் இருந்து பதக்கமும், ராணுவத்தில் பதவி உயர்வும் பெறும் Betty யை சிறப்பு ராணுவ நடவடிக்கை ஒன்றிற்காக சான் மிகுவெலுக்கு வரும்படி பணிக்கிறார் ஜெனரல் காரிங்டன். சான் மிகுவெலுக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்யும் விமானம் கடத்தப்படுகிறது ... அடர் காடுகளிற்குள் SPADS விசேட அதிரடிப்படை பிரிவிலிருந்து விலகிச்சென்ற ராணுவத்தினர் கைகளில் பணயக்கைதிகள் ஆகிறார்கள் ஜெனரல் காரிங்டன் குழுவினர் ...<br />
<br />
<b>Betty </b>யின் பெயரை தமிழில் எழுதுவதை போல ஒரு இம்சை இல்லை. ஒன்று பெட்டி அல்லது வெட்டி என்று எழுத வேண்டும். பெட்டி நாயகியின் பெயர் என்றால் வெட்டி என<b> XIII - Mystery </b>- <b>Betty Barnowsky</b> ஆல்பத்திற்கு பெயரை வைக்கலாம். XIII மிஸ்டரி கதைவரிசையின் இந்த ஏழாவது ஆல்பத்தின் கதையை<b> Joel Callède</b> ம், சித்திரங்களை <b>Sylvain Vallée</b> ம் உருவாக்கியுள்ளார்கள்.<br />
<br />
<b>ஜனாதிபதியிடமிருந்து </b>அசாத்திய வீரச்செயல்களிற்கான பதக்கம், அதன்பின்பாக ராணுவத்திடமிருந்து வரும் பதவியுயர்வு அதன் கூடவே வரும் அதிரடி நடவடிக்கைக்கான அழைப்பு என ஆரம்பமாகும் கதை, Betty க்கும் அவள் சகோதரிக்குமிடையில் இருக்கும் முறுகிய உறவையும் காட்டுகிறது. ஏன் அந்த இணக்கமற்ற சகோதர உறவு காட்டப்படுகிறது என்பதை வாசிப்பின் முடிவில் கேள்வியாக்கினால் Betty க்கு ஆதரவாக அன்பாக யாரும் இல்லை, அவள் தோள்சாய ஒரு இடமில்லை என்பதை வாசகர்களுக்கு சொல்லவே என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை. அதிரடி நடவடிக்கைக்கு செல்லும் முன்பாக Betty தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறாள்.<br />
<br />
<b>கருக்கலைப்பு </b>என்பது Betty க்கு புதிதானது அல்ல. அதன் மூலம் அவமானங்களை அவள் வாழ்வில் சந்தித்து கடந்தே வந்திருக்கிறாள். கையில் ஒரு டாலர்கூட இல்லாது வீதிவீதியாக அவள் அலையும் ந்யூயார்க்கின் பனிவிழும் ஒரு இரவிலேயே அவள் ராணுவத்தில் இணைந்து கொள்வது எனும் முடிவிற்கு வருகிறாள். தற்கொலைக்கு பதிலாக அவள் ராணுவத்தை தெரிவு செய்து கொள்கிறாள். குடும்பமும், சமூகமும் அவளுக்கு வழங்க முடியாத ஒன்றை அவள் ராணுவத்தில் பெற்று கொள்கிறாள். அல்லது அவ்வாறான ஒரு பிரமையை அவள் தன்னுள் உருவாக்கி கொள்கிறாள். பெண்ணாக வெளியுலகில் ஒரு வாழ்வை அவளால் உறுதியாக அடையாளப்படுத்த முடியாது போனாலும் ராணுவத்தில் பதவிகளின் உச்சங்களை தொட்டு அமரும் ஒரு வாழ்க்கை அவள் முன் இருக்கவே செய்கிறது. ஆனால் ராணுவத்தின் இன்னொரு முகத்தையும் அவள் காணும் வாய்ப்பு தென்னமரிக்க அடர்காடுகளில் அவள் அதிரடி நடவடிக்கைகளில் முன்பு இயங்கியபோதும் பின் பணயக்கைதியாக இருக்கும்போது கிடைக்கவே செய்கிறது. ஆனால் தாய்மை என்பது பெண்களிற்கு உணரச்செய்வது வேறொன்று. அதன் அர்த்தத்தை கதையில் மேஜர் ஜோன்ஸ், மூன்றுமுறை கருக்களை கலைத்த அனுபவம் கொண்ட Betty க்கு அடையாளம் காட்டுகிறாள். ஜோன்ஸ் தன் வயிற்றில் பட்ட காயம் ஒன்று அவள் என்றுமே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவளாக அவளை ஆக்கிவிடுகிறது என்பதை ஜோன்ஸ் தெரியப்படுத்தும்போது தன் கருவை கலைக்ககூடாது என்பதில் Betty உறுதியாகி விடுகிறாள்.<br />
<br />
<b>ஆகவே </b>உணர்ச்சிகரமான இந்த சூழ்நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். கருவுற்ற ஒரு இளம்பெண், அடர்காடுகளில் தறிகெட்டு வாழும் முரட்டு மனிதர்கள் கையில் பணயக்கைதியாக! எப்படி அவள் அவர்கள் பிடியில் இருந்து தப்ப போகிறாள்? தன் கருவை அவள் எப்படி இவ்வகையான சூழலில் காப்பாற்ற போகிறாள்? இந்தக் கேள்விகளுக்கு கதாசிரியர் ஜொயெல் காலெட்டின் கதை சொல்லும் பதில்கள் ஆழமும், அர்த்தமும் நீர்த்து போனவையாக உள்ளன. மிக உணர்ச்சிகரமாகவும், மனதை தொட்டுவிடும் வகையிலும் உருவாக்கியிருக்க வேண்டிய கதையை முரட்டு மூடர்கள் மத்தியில் அகப்பட்ட இளம்பெண்ணின் தத்தளிப்பு என்பதாக, அசட்டுத்தனமான சம்பவகோர்வைகளுடன் கதாசிரியர் வழங்கி இருக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNPMLVnNusKqGRixNVaWu4h59ombJWIwZkSJVck-EyHWmrJGXcLgfTBR6Ykw9tO54nGttude-pHHiHRNUnKvGay3zJ8XvWbe6_ELVMS25GTxusV1GlvNxBNCPvfQk2mTyjJmd58SdLP-WX/s1600/bet.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNPMLVnNusKqGRixNVaWu4h59ombJWIwZkSJVck-EyHWmrJGXcLgfTBR6Ykw9tO54nGttude-pHHiHRNUnKvGay3zJ8XvWbe6_ELVMS25GTxusV1GlvNxBNCPvfQk2mTyjJmd58SdLP-WX/s1600/bet.jpg" height="320" width="236" /></a></div>
<b>Betty </b>யின் கருவுக்கு காரணமானவர் யார் என்பதை நண்பர்கள் இலகுவில் ஊகித்து விடலாம். XIII தொடரில் அதிக பெண்களை புணர்ந்தவர் யாரோ அவரே அக்கருவின் பிரம்மன். அதுகுறித்து கண்டிப்பாக அவருக்கு நினைவில் ஏதும் இல்லை. அவரின் அந்த நினைவாற்றல் மிகவும் பிரசித்தமானது என்பதை இங்கு சொல்லும் அவசியம் உண்டு. ஆனால் Betty ன் மனம் அவள் கருவுற்ற செய்தியை அறியுமுன் நாடும் உள்ளம் <b>Armand de Preseau </b>உடையதாக சொல்லப்படுகிறது. ஒரு இரவே அவன் மாளிகையில் தங்கினாலும் ஆர்மாண்ட் அவள்மீது பதித்த அந்த கனிவான பார்வையின் பின் அவள் உணர்ந்ததும், மெல்ல நடக்கும் தயக்கத்தின் மயக்கத்தில் புரிந்ததும் என்ன? எவ்வாறு அவள் தன் புகலிடத்தின் முகவரியை முன்னுணர்ந்தாள். அவள் விழிகள் இதயத்தின் ஆழங்களில் நீந்தும் உணர்வுகளை ஆழச்சென்று காணும் ஆற்றல் கொண்டவையா. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் சில்வெய்ன் வலே வரைந்திருக்கும் Bettyn விழிகளே இதற்கான பதில். அதே சமயம் கதையின் சித்திரங்கள் முழுதும் அதகளம் என்றும் இங்கு எழுதிவிட முடியாது.<br />
<br />
<b>ஜெனரல் </b>காரிங்டன் பெண்டகனின் முக்கிய அதிகாரி. அவரை கடத்தி பணயக்கைதியாக்கி அமெரிக்க அரசிடமிருந்து சில விடயங்களை பெற்றுக்கொள்ள விழைபவர்கள் எப்படியான புத்திசாலிகளாக இருக்க வேண்டும். ஆனால் தென்னமரிக்காவின் அடர்காடுகளில் SPADS ஐ விட்டு விலகி வந்து ஆட்சிகவிழ்ப்பில் பங்கேற்றவர்களாக காட்டப்படும் ராணுவத்தினரிடம் புத்திசாலித்தனத்தை தவிர பாக்கி எல்லாமும் இருக்க்கிறது. குரூரம், வெறி, வக்கிரம், வன்முறை என பட்டியலிட்டால் இவற்றை எல்லாம் விஞ்சி செல்லும் முட்டாள்தனமே அவர்களிடம் கதையில் வீர்யமாக எழுந்து நிற்கிறது... இப்படியான முட்டாள்களிடமிருந்து தப்பி செல்லாவிடில் காரிங்டன் ஜெனரலாக இருந்து என்ன பயன் ஆனால் தப்பி செல்லும் முறைகளும் அதற்கான சந்தர்பங்களும், Betty ன் இளவயிறு குறிவைத்து தாக்கப்படும் தருணங்களும் கதையை ஒரு மட்டமான நாடகச்சுவைக்குள் மூழ்க வைக்கின்றன...<br />
<br />
திருப்பங்கள் என்ற பெயரில் இக்கதையில் வருவது எல்லாம் திருப்பங்கள் என்றால் திருப்பங்களிற்கு என்ன பெயர் சொல்வதாம்?! கதையில் வரும் ஒரே மனதைதொடும் மனிதர் ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே. ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன். ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே Betty தன் வாழ்வில் கண்ட அற்புதம். XIII Mystery கதை வரிசையில் மீண்டும் ஒரு மொக்கை.<br />
<div>
<br /></div>
</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63777824229764193282014-08-10T12:40:00.003+02:002014-08-10T12:40:41.030+02:00திகில் பள்ளதாக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg93b9YwAdBBryblYqWWxGo6K7YFqqAr89dXX-K1_IRibn3_AhdKwNXugfJXqBVey0ASR1yqs1FgD92heZCl4xnjS5_6sXq_dQYdsk3TEadkLZwP2vZzzT0R0qwhoZGTVUjJqrzpP4xlqY9/s1600/9782353256006_cg.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg93b9YwAdBBryblYqWWxGo6K7YFqqAr89dXX-K1_IRibn3_AhdKwNXugfJXqBVey0ASR1yqs1FgD92heZCl4xnjS5_6sXq_dQYdsk3TEadkLZwP2vZzzT0R0qwhoZGTVUjJqrzpP4xlqY9/s1600/9782353256006_cg.jpg" height="400" width="295" /></a></div>
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ர பிம்பமோ - 16 </span></b><br />
<b><br /></b>
<b>எல்லாம்</b> வல்ல சக்தியானது மனிதர்களை ஆச்சர்யப்பட வைக்கும் திறமைகளுடன் இயங்க வைத்திருந்தாலும் அந்த திறமைகள் மீற முடியா எல்லை என ஒன்று எப்போதும் உண்டு. அந்த எல்லைகளை அசாதரணமாக மீறும் மனிதர்களை வரலாறு பெருமையுடன் நினைவுகூர்வதுண்டு. சுறா படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்து கண்ணீர் விட்டு நெகிழும் ஒரு ரசிகனை வரலாறு தன் நினைவில் பொதிந்து காலம் கடந்து தூக்கி செல்லுமா எனும் கேள்வியை நம்முள் நாமே கேட்டுப் பார்த்தால் எல்லாம் வல்ல சக்தியையே ஆட்டிவிடக்கூடிய விடை ஒன்று அங்கு உருப்பெறும். ஆனால் வரலாறு கண்டிப்பானது , கறாரானது, சில நியதிகளுக்குட்பட்டு தன் வரிகளில் மனிதர்களின் பெயர்களை பதிப்பது. ஆகவேதான் வரலாற்று ஏடுகளில் மேற்கூறப்பட்ட போன்ற மனிதர்களின் சாதனைகள் இடம்பெறுவது இல்லை. பறவைக்கு பறக்கும் உயரம் எல்லை, மனிதனுக்கு அவன் கால்கள் இறக்கும் இடம் எல்லை, ஆனால் எம் மேல் ஆழியின் பிரதிபலிப்பாய் படர்ந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் காலவெளிக்கு எதுதான் எல்லை? சொன்னவர்கள் யார்? சொல்லப்போபவர்கள் யார்? வரலாற்றில் அவர் பெயர்கள் பதியும் நாள் எது? ஆனால் சாதாரண டெக்ஸ் வாசகன் நான் பெருமேற்கின் வீரசாகசவினோத எல்லைகளை தன் ஒவ்வொரு பயணத்தின்போதும் மீறிச்சென்று வரலாற்றின் வரிகளை சுழித்து நழுவி பெருமேற்கின் பேராத்துமா மதுசேலத்தின் மர்மப்புன்னகையில் கலக்கும் அந்நாயகனின் இன்னொரு வரி எழுத வந்தேன்.<br />
<br />
<b>நான்</b> இன்று எழுதப்போகும் வரி <b>TEX Special n°9 ல்</b> இடம்பெற்றிருக்கும் கதையான <b>La Vallée de la Terreur</b> என்பதன் கதையை சொல்லும். பயமும், திகிலும், மர்மமும், இருளும், வஞ்சமும் பிரம்மாண்டமான கோட்டைகளினுளும், மலைக்காடுகளிலும், வான்வாய்திறந்து பொழியும் பெருமழையினுளும், நிலவு இரவை தன் வெள்ளிரசக்கரங்களால் நனைக்கும் இரவுகளிலும் ஓயாது தொடர்ந்து மனிதர்களின் வாழ்வை அவற்றின் இருள் ஊறிய கரங்களினுள் அள்ளி அடக்க துடிக்கும் நிகழ்வை சொல்லும்.<br />
<br />
<b>யுபா</b> பள்ளத்தாக்கில் கனிம அகழ்வை நடாத்தி கொண்டிருக்கும் சுரங்க உரிமையாளர்களிற்கு ஒரு மர்ம அமைப்பு எச்சரிக்கைகளை விடுக்கிறது. அந்த பிரதேசத்தை விட்டு, தம் சுரங்கங்கள் , சொத்துகள் என்பவற்றை விட்டு அந்த சுரங்க உரிமையாளர்கள் நீங்கிச் செல்லாவிடின் மர்ம அமைப்பு தந்த எச்சரிக்கையானது மரணசாசனமாக மாறிவிடுகிறது. இந்த மர்ம அமைப்பின் பெயர் அவெஞ்சர்ஸ். யுபா பள்ளத்தாக்கின் சுரங்க உரிமையாளர்களை குறி வைக்கும் இந்த அமைப்பு, அங்கு வாழும் மனிதர்களின் மனங்களிலும் திகிலை குடியேற்றி வைக்கிறது. சுரங்க உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை விற்று விட்டு விலக, சுரங்கத்தில் பணியாற்றிய மனிதர்கள் வேலைகளை இழக்கிறார்கள். வேறு வேலைகள் கிடைக்காத நிலையில் அவர்களும் பள்ளத்தாக்கை விட்டு தம் வாழ்வின் நீட்சிக்காக வேறு இடம் செல்ல தயாராகிறார்கள். இவ்வாறாக யுபா பள்ளத்தாக்கை மனிதர்கள் அதிகம் புழங்கிடாத ஒரு இடமாக மாற்ற அவெஞ்சர்ஸ் அமைப்பு முனைப்புடன் செயல்படுகிறது.<br />
<br />
<b>யுபா</b> கிராமத்தின் ஷெரீஃபோ அவெஞ்சர்ஸின் நடவடிக்கைகளை தடுக்க முடியாதவராக இருக்கிறார். மிக கச்சிதமான திட்டங்களுடன் தம் நடவடிக்கைகளையும் கொலைகளையும் நடாத்தி செல்லும் அவெஞ்சர்ஸை முறியடிக்கும் திறமையும், ஆட்பலமும் அவரிடம் இல்லை. கவர்னர் அனுப்பி வைத்த இரு விசாரணை அதிகாரிகளும் அவெஞ்சர்ஸ் அவர்களுக்கு வழங்கிய மிரட்டல்கள் காரணமாக பள்ளத்தாக்கைவிட்டு விரைவாக வெளியேறி அப்பகுதிக்கு மீண்டும் வருவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். இவ்வகையான ஒரு தருணத்தில் மினா ஷட்டர் எனும் பெண்ணிற்கு அவெஞ்சர்கள் எச்சரிக்கையை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய எச்சரிக்கையின் பின்பாகவும் மினா ஷட்டர் அப்பகுதியை விட்டு விலகி செல்ல முன்வருவது இல்லை. தன் தந்தை ஜான் ஷட்டரினை கவனிக்கும் முக்கிய பொறுப்பு தன் உயிரைவிட முதன்மையானது என்பதால் அவெஞ்சர்ஸின் எச்சரிக்கையை அவள் உதாசீனம் செய்து விடுகிறாள். ஆனால் மினாவின் கணவன் உல்ரிச் தன் நண்பனும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ பொலிஸ் அதிகாரியுமான டாம் டெல்வினிடம் தனக்கு உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறான். டாம் டெல்வின் நேரடியாக இச்சிக்கலில் தலையிட முடியாத நிலையில் பெருமேற்கின் பெரும் சிங்கம் டெக்ஸை இவ்விவாகரத்தை பொறுப்பேற்க வேண்டுமேன வேண்டுகோள் வைக்க சிங்கம் அதை ஏற்று கொண்டு கார்சனுடன் புறப்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihAjRhbmjhvk2AOlbOTeKc4q9untkgs-IHVdv-Iw-nmdhYHVpj1OLOyAtV61AakADJBMtHssvP5Axm1CiEyw9XhIanTMdsxMueQlmxGOm1BNFsP6UolBFS_Sw6L8Ze9sMB1Xy377Tbc9R6/s1600/vall1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihAjRhbmjhvk2AOlbOTeKc4q9untkgs-IHVdv-Iw-nmdhYHVpj1OLOyAtV61AakADJBMtHssvP5Axm1CiEyw9XhIanTMdsxMueQlmxGOm1BNFsP6UolBFS_Sw6L8Ze9sMB1Xy377Tbc9R6/s1600/vall1.jpg" height="320" width="231" /></a></div>
<b>கதை </b>ஆரம்பிக்கும் பக்கங்களே திகிலை வாசகருக்குள் நுழைத்து விடுவதில் சுலப வெற்றி கண்டு விடுகிறது. மலைக்காட்டு பிரதேசம் ஒன்றில் அடைமழை அடித்து பெய்ய அந்த மழையின் கோடுகளோடு கலந்து வரும் அவெஞ்சர்ஸ் கொலைகாரர்களின் தோற்றங்களும், அசைவுகளும், இருளுடனும், மின்னலுடனும் கலந்து பார்வையில் அச்சத்தின் மையை கரைக்கின்றன. வானில் வெட்டும் மின்னல் போலவே வடிவம் கொண்ட அவெஞ்சர்களின் கத்தியும் மின்னல் ஒளியில் பிரகாசித்து மனிதர்களின் உடலை ஊடுருவி வெளியேறுகிறது. அவெஞ்சர்கள் துப்பாக்கிகளை உபயோகிப்பது இல்லை என்பது அவர்களின் தனித்துவமான பாங்காக கதையில் சொல்லப்படுகிறது. இக்கதையில் டெக்ஸும், கார்சனும் உயிர்பிழைப்பதற்குகூட அதுவே காரணமாகவும் இருக்கிறது என்பதை டெக்ஸின் தீவிர வாசகர்கள் கதை நகர்வில் புரிந்து கொள்வார்கள். அதாவது பெருமேற்கின் ஒதுக்குப்புற பள்ளத்தாக்கு ஒன்றில் வேலையற்று அலையும் அல்லக்கை குழு ஒன்றுடன் டெக்ஸ் இங்கு மோதுவது இல்லை. ஹவாய் பழங்குடியினரான ஹனாக்குகள், மற்றும் குடியேறிகளான சீனர்கள் இவர்களால் ஆனதே அவெஞ்சர்ஸ் அமைப்பு. இங்கு ப்ரூஸ் லீயின் மூதாதையரோடு டெக்ஸ் மோதுகிறார் என்பதை வரிகளிற்கு இடையில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். காலந்தோறும் கடலோடி வலிமைபெற்ற திடமனிதர்கள் ஹனாக்குகள். அவர்கள் உடல்கள் எல்லாம் நடமாடும் ஓவியங்கள். உடலில் பச்சை குத்துவது என்பது அவர்கள் மரபு. அந்த பச்சையே அவர்களுக்கு ஒரு பயங்கரமான தோற்றத்தை தந்து அச்சத்தையும் திகிலையும் கதையில் உபரியாக கலக்கிறது. இதை மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார் இக்கதைக்கு சித்திரங்களை செதுக்கியிருக்கும் மாக்னஸ் எனும் பெயரில் பரவலாக அறியப்படும் சித்திரக் கலைஞரான <b>Roberto</b> <b>Raviola.</b><br />
<br />
<b>உண்மையில் </b>இக்கதையை காப்பாற்றுவதே அவர் சித்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இக்கதை வெளியாகியபோது அவர் உயிருடன் இல்லை என்பது வேதனையான ஒரு தகவல் [1996]. பொனெலி டெக்ஸ் கதைக்கு பணியாற்ற மாக்னஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது கெடுவாக தந்த காலம் மூன்று வருடங்கள். ஆனால் மாக்னஸ் எடுத்துக் கொண்டதோ ஏழு வருடங்கள். அவர் அர்ப்பணிப்பு அவ்வாறானது. மலைகளில் இரவும், பகலும் ஒரு போன்ற சித்திரங்களை அளிப்பது இல்லை எனக் கூறும் மாக்னஸ், தான் வாழ்ந்திருந்த வனப்பகுதியான காஸ்டெல் டெல் தியோவில் இரவு, பகல், அந்தி, புலரி என இயற்கையை அவதானித்து, ஒவ்வொரு கட்டத்திற்கும் வெகுவாக அது எடுக்ககூடிய காலத்தை தந்து இக்கதையை பூரணமாக்கி தந்திருக்கிறார். இக்கதையின் சித்திரங்களை நீங்கள் பார்க்கும்போது மாக்னெஸின் அர்ப்பணிப்பு உங்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும். மாக்னெஸை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டதற்காக அமோசன் காட்டிலிருந்து அவர் மரண செய்தியை அறிந்த பொனெலி எழுதிய கடிதத்தில் தன் வருத்தங்களை பகிர்ந்து இருக்கிறார். இக்கதையில் வரும் ஒவ்வொரு இலையிலும் மாக்னெஸ் தன் அர்ப்பணிப்பை, சித்திரம் என்பதன் முழுமையைக் கலைஞன் காணும்வரை நடாத்தக்கூடிய யுத்தத்தை பதித்து சென்றிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் கார்சன் வினோதமான ஒரு தோற்றத்தை எம்மனதில் வரையலாம். வழமைக்கு மாறாக விரியும் கார்சனின் விழிகளில் வியப்பு, அலட்டல், பொருமல் என உணர்வுகளும் மிகையாகவே விரியும். கன்னங்கள் ஓட்டிய, இறுக்கமான மிடுக்கான உடல் கொண்ட டெக்ஸ், கதையில் அவர் உடல் காட்டும் மொழி, அவர் அதிரடி ஆக்சன் என அனைத்தும் வேறுபட்டு எதார்த்தத்திற்கும் கனவிற்கும் இடையிலான ஒரு தளத்தில் கதையின் பாத்திரங்கள் மிதப்பது போன்ற உணர்வை மாக்னஸின் சித்திரங்கள் உறுதியாக பதிக்கின்றன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfXtYYFPobQ3ucl3REr6GJPHV0hofabifec0SSmSIy68R5CwVyTr4MkGWk8CNK1dqOnKKyEnVAK9up4Eozl3-7qPehWaDXBjlKF-m__q3FjRESGLdknxv-ZqV9-haIx-1YCSKvW9zbhloG/s1600/vall2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfXtYYFPobQ3ucl3REr6GJPHV0hofabifec0SSmSIy68R5CwVyTr4MkGWk8CNK1dqOnKKyEnVAK9up4Eozl3-7qPehWaDXBjlKF-m__q3FjRESGLdknxv-ZqV9-haIx-1YCSKvW9zbhloG/s1600/vall2.jpg" height="320" width="229" /></a></div>
<b>மாக்னஸ் </b>தன் சித்திரங்களில், மீன்களின் சிறு செதில்கள் வலையாக விரிவது போன்ற வடிவில் பின்னணிக் காட்சிகளையும், வரையப்படும் பொருட்களின் ஒளிச்செறிவுகளையும் வரையறுக்கும் பாங்கை கொண்டவராக இருக்கிறார். அந்த சிறு செதில்கள், அல்லது வலைக்கண்ணிகள் இலைகளாக, கிளைகளாக, மரங்களாக, வனமாக, மலையாக, பள்ளத்தாக்காக, இருளாக, அதை எதிர்க்கும் ஒளியாக என மந்திர வித்தை காட்டி விளையாடுகிறது. இரவொன்றின்போது இரவையும், ஒளியையும் அவற்றின் எதிர்குணங்களையும் மாக்னஸ் பாகுபோல பக்கங்களில் வடித்திருக்கிறார். தன்னையும் ஒரு சிறு பாத்திரமாக அவர் கதையில் வரைந்திருக்கிறார். சில சமயங்களில் நாடகமொன்றின் மிகையான நடிப்புபோல உணர்வைதரும் அவர் சித்திரங்கள் மறுகணம் பச்சோந்தி ஒன்றின் மறையுடல் போல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கின்றன. ஒரே தாவலில் இலகுவாக அவர் சித்திரங்களை தாண்டி செல்ல முடியாது. கூடாது. அது முறையல்ல. அவர் உழைப்பு நேரத்தை எடுத்து கொண்டதுபோல அவர் உழைப்பை ரசிக்கவும் ஒருவர் நேரத்தை தந்தேயாகவேண்டும். அதுதான் நாம் அவருக்கு தரக்கூடிய ஒரு அஞ்சலியாகவும் இருக்ககூடும்.<br />
<br />
<b>உல்ரிச்சுடன் </b>யுபா பள்ளத்தாக்கை அடையும் டெக்ஸ் தன் விசாரணைகளை ஆரம்பிக்கிறார். அவர் மோதுவது அவர் போலவே ஒரு உறுதியான மனிதனுடன் என்பதை அவர் அறிந்து கொள்கிறார். ஆகவே மேலும் உறுதியுடனும், தன் உள்ளுணர்வின் துணையுடனும் அவர் தன் விசாரணைகளை தொடர்கிறார். கதையில் மினாவின் தந்தையான ஜான் ஷட்டரின் வரலாறும் உண்டு. நிஜமாக நடந்த கதையது. சுவிஸிலிருந்து புதிய உலகிற்கு வந்து கலிபோர்னியாவின் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட ஒரு மனிதன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஒரு கனிமத்தால் இழந்து நின்ற சோகமான கதையது. அந்தக் கனிமம் தங்கம். பல மனிதர்களை செல்வத்தின் உச்சபடிகளுக்கு உயர்த்தி சென்ற தங்கமானது ஜான் ஷட்டரை அப்படிகளின் கீழ் போட்டு மிதித்தது என்பது என்ன ஒரு முரண்நகை. மெக்ஸிக்க அதிகாரிகளின் அனுமதியுடன் அவன் உருவாக்கிய பெரும் குடியேற்ற நிலம், தங்கத்தை வேட்டையாட வந்தவர்களாலும், புதிய சட்ட மாற்றங்களாலும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, அவன் குடும்பம் அழிக்கப்பட்டு தன் ஒரே மகளுடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி எண்ணி ஒடுங்கிப் போகும் ஜான் ஷட்டரின் உயிரின் மூச்சு நின்றிருப்பது வஞ்சம் எனும் சித்திரத்தின் முழுமையைக் காணும் நாளிற்காக.<br />
<br />
<b>ஆனால்</b> தன் மகளிற்கே கொலை எச்சரிக்கை அனுப்பும் அளவிற்கு கொடியவனா ஜான் ஷட்டர்? டெக்ஸ் கேட்பதும் இதைத்தான். இதனாலேயே அவர் வேறு கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறார். அவர் விடைகள் இட்டு செல்லும் இடங்களும், மனிதர்களும் அவரை வேரறுக்கவே விழைகிறார்கள். ஜான் ஷட்டர் அவெஞ்சர்ஸின் தலைவனாக இருக்க முடியாது என சொல்லும் டெக்ஸின் உள்ளுணர்வு அவரை பொனெர் எனும் மனிதனுடன் எதிர்கொள்ள வைக்கிறது. டெக்ஸ் நீ கில்லி ஆனால் நான் கில்லிக்கு கில்லி என்பவனாகிறான் பொனெர். பாதாம் விழிகள் கொண்ட சீன அழகி மே லிங்கின் அழகினூடு அடங்கி அடிபணியும் ஜான் ஷட்டர் மேலும் மர்மத்தை கூட்ட அழகான பெண்ணாக இருந்தாலும் தன் கடமையிலிருந்து வழுவாத டெக்ஸ் சீன அழகியின் பின் மர்மங்களின் இருள் முடிச்சை அவிழ்க்கும் வழியை தேடுகிறார். ஆனால் அவருக்கு கிடைக்கும் பதில்கள் அவரையும், கார்சனையும் ஏன் அவர் யுவா பள்ளத்தாக்கிற்கு வரக்காரணமாக இருந்த மினா, உல்ரிச் தம்பதிகளையும் மரணத்தின் அருகாமைக்கு இட்டு செல்ல வீறாப்புடன் போராடுகிறது.<br />
<br />
<b>ஆனால்</b>... ஆனால் கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி கதையின் முதற்பாதியில் உருவாக்கிய எதிர்பார்ப்புக்களை எல்லாம் கதையின் பிற்பாதியில் சரித்து விடுகிறார். ஆடை ஒவ்வொன்றாக அவிழ, அவிழ உள்ளே ஒருவன் எதிர்பார்த்திருந்த இளமை அழகு முதுமை தோற்றம் காட்டினால் ஏற்படும் ஏமாற்றமே கதையின் இறுதிப்பகுதி வழங்கும் அனுபவமாகும். கில்லிக்கு கில்லி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று தொண்டையின் நரம்புகள் புடைக்க, விழிக்குழியிலிருந்து விழிபிதுங்க வசனம் பேசியவர்கள் எல்லாம் மழை நின்றபின் இலையிலிருந்து விழும் நீர்த்துளிபோல மாறுவது இயல்பாக இல்லை. விறுவிறுப்பான திருப்பங்களையும், எதிர்பாரா சம்பவங்களையும் தருவதற்கு பதிலாக புளித்துபோன முற்றுகையை வாசகருக்கு பரிமாற ஆரம்பித்து அதில் படுமோசமாக வழுக்குகிறார் கதாசிரியர் நிஸ்ஸி. தீவிர டெக்ஸ் ரசிகர்கள் வேண்டும் அம்சங்களை தவிர்த்து ஒரு திகில் கலந்த மர்மத்துடன் கதையை அவர் கதையை முற்பாதியில் சொல்லியிருந்தாலும் அவை எல்லாம் மலிவான நாடகத்தனமாக கதை எடுக்கும் திருப்பத்தில் அடிபட்டு போகின்றன. மாக்னெஸின் அற்புதமான சித்திரங்களுக்காகவே பேசப்படும் கதை இது. அது உண்மை அன்றி வேறில்லை. நிஸ்ஸியின் சுமாரிற்கும் கீழான கதைகளில் இக்கதையும் ஒன்று என்பதும் உண்மையே.<br />
<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-27816389699172069612014-07-26T18:07:00.000+02:002014-07-26T18:08:03.440+02:00க்ரீன்ஃபால்ஸ் திரும்புதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6-hLXLDeCqn5HYSzlbV1vFoRNJIuGEUYpNSbJ4obqr7WVOJmy0DoOjQUC9uzsyr2Fm9BuTKIuudzRtBGBxmS7zq4FgFjChKf1V_kl1zA4PIpjovoul_rPEq4zGcsryYDLPRnFKeVwcbm5/s1600/9782505017998~v~XIII_22___Retour_a_Greenfalls.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6-hLXLDeCqn5HYSzlbV1vFoRNJIuGEUYpNSbJ4obqr7WVOJmy0DoOjQUC9uzsyr2Fm9BuTKIuudzRtBGBxmS7zq4FgFjChKf1V_kl1zA4PIpjovoul_rPEq4zGcsryYDLPRnFKeVwcbm5/s1600/9782505017998~v~XIII_22___Retour_a_Greenfalls.jpg" height="320" width="241" /></a></div>
<b>ஆப்கானிஸ்தானின்</b> கிழக்கே அமைந்திருக்கும் பனிசிஸ்தானில் தீவிரவாதிகளின் குகையொன்றில் கறுப்பு கரும்பு கட்டழகு இரும்பு ஜோன்ஸை சிறைமீட்க வந்து சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்லேனை தம் வழிக்கு கொண்டு வருவதென்பது சிரமமான ஒன்றாகவே இருக்கும் என்பது <b>USAFE </b>அறியாதது அல்ல. ஆகவே அதற்காக அவர்கள் ஒரு சிறு விளையாட்டை தங்கள் ஏஜெண்ட் யூலியானா மூலம் ஆட வைப்பார்கள்.<br />
<br />
<b>மறதி</b> அங்கிள் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் சிறையறைக்கு வெளியே அமெரிக்காவின் வரைபடம் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும். முகத்தில் மக்லேன் தழும்பு போட்டாலும் அழகைக் கீழே இன்னும் போடாத யூலியானா பெண்களை கவுரவிக்கும் வகையில் அவ்வரைபடத்தை நோக்கி கையால் வீசக்கூடிய ஒரு சிறு அம்பை வீசும்படியாக காலனல் ஜோன்ஸை கேட்பாள். சற்று தயங்கும் கறுப்பு கமலம் தன் வெண்டை விரல்களால் நிறுத்தப்பட்ட அமெரிக்காவை நோக்கி சிறு அம்பை வீசும். அந்த அம்பு சென்று தைக்கும் இடம் பெரும்பாலான அமெரிக்கர்களே அறியாத ஒரு தொலை நகராகவும் இருக்கும். இரு நாட்களின் பின் அந்நகரில் பள்ளி மாணாக்கர்களின் பேருந்து வண்டியில் ஏறும் ஒரு மனிதன் சராமாரியாக குழந்தைகளை நோக்கி துப்பாக்கியை இயக்க அச்சம்பவம் உலகெங்கும் காட்சி ஊடகங்கள் வழி பயணிக்கும். அப்பயணம் மக் அண்ட் கம்பனி சிறை வைக்கப்பட்டிருக்கும் மலைக்குகையையும் வந்து தன்னை காட்சிப்படுத்தும்.<br />
<br />
<b>தமது </b>உயிரை துச்சமென மதித்து தியாகம் செய்திடக்கூடியவர்கள்தான் மக் அன்ட் கம்பனி ஆனால் அப்பாவி உயிர்கள் பலியாக தாம் காரணமாக இருக்ககூடாது என்பதிலும் அவர்கள் உறுதியுடையவர்களே. வேறு வழியின்றி யூலியானாவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வருகிறார் மக்லேன். இவ்வாறுதான் <b>XIII</b> ன் இரண்டாம் சுற்றின் மூன்றாவது ஆல்பமான <b>Retour à Greenfalls </b>ஆரம்பிக்கிறது. உலகமெங்கும் வெகுவாக தேடப்பட்டு வரும் நபரான மக்லேன் எவ்வாறு அமெரிக்க மண் திரும்புகிறார் என்பதற்கு நீங்கள் இப்பதிவை படிக்க வேண்டியது அவசியமில்லை பார்த்தாலே போதுமானதாகும். அவர் திரும்பும் முறையில் பல பொருட்கள் அமெரிக்க மண்ணை வந்து சேர்ந்திருக்கின்றன. USAFE அமைப்பின் செல்வாக்கு பாயும் இடங்களை கதையில் பார்க்கும்போது அவர்களிற்கு இது ஒரு சாதாரண விடயமாகவே இருக்கும். முன்னைய ஆல்பத்தை போல மக்லேன் வெகு இயல்பாக விமானநிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிரித்தபடியே தாண்டி வரவில்லை எனும் நிம்மதியுடன் கதையை தொடர இங்கு வாய்ப்பு தரப்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFAH3rlQL_3UHXmzUVofdvdFRSRvRm06JH9T5EBtYsJdslH2OqPkjQ9EYseWL7oWWbz5GheuQnSC7O4b2P9IW8WYfuxMRAXpupeMgOLuHA45pGitCXMXPZguB42xM0MBUDLwx2kC66oLjZ/s1600/greenfalls.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFAH3rlQL_3UHXmzUVofdvdFRSRvRm06JH9T5EBtYsJdslH2OqPkjQ9EYseWL7oWWbz5GheuQnSC7O4b2P9IW8WYfuxMRAXpupeMgOLuHA45pGitCXMXPZguB42xM0MBUDLwx2kC66oLjZ/s1600/greenfalls.jpg" height="320" width="240" /></a></div>
<b>அதே </b>சமயத்தில் கவர்ச்சி குண்டு <b>Betty</b> அமெரிக்க மண்ணில் தன் தேடலை தொடர்கிறாள். சான் பிரான்ஸிஸ்கோ சென்று சில தகவல்களையும், நிழற்படங்களையும் சேகரிக்கிறாள். சண்டா மொனிக்காவில் <b>NO MEN NO BRA </b>எனும் கவர்ச்சி விடுதியில் ஜோனதன் ப்ளை பயணித்த பஸ்ஸின் ட்ரைவர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்கிறாள். மக்லேனுக்கு பரிசாக கிடைக்கும் ஒரு முத்தத்தையும் தன் இதழ்களில் ஏந்திக் கொள்கிறாள். காரை வாடகைக்கு எடுத்தாலும், விமானத்தை வாடகைக்கு அமர்த்தினாலும் தன் சொந்த பெயரில் உள்ள கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்கிறாள். இது FBI ன் கணிணிகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. வழமைபோலவே உள்ளூர் காவல்துறையிடமிருந்து பெரும்பாலான சமயங்களில் பெட்டி தப்பி செல்கிறாள். அவளை கோட்டை விட்ட FBI ஏஜெண்டுகள் உள்ளூர் பொலிசாரின் திறமையின்மையை விமர்சித்தவாறே தங்கள் கோட் சூட் மீது கெட்ச்சப் கொட்டாதவாறு பர்கர் சாப்பிட்டு பெட்டியை தேடி ஓடி மீண்டும் அவளை கோட் சூட் கசங்காது கோட்டை விடுகிறார்கள். இக்கதை FBI மற்றும் அமெரிக்க புறநகர் பொலிசாரை கிண்டல் அடிக்கும் நோக்கம் கொண்டதா எனும் சந்தேகம் எழுவது இவ்வகையான சமயங்களில் இயல்பான ஒன்றாகி விடுகிறது.<br />
<br />
<b>அமெரிக்க</b> மண் வரும் மக்லேனுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவர் நாடிச் சென்ற உளவியல் மருத்துவியான சூசான் லெவின்சன் USAFE உடன் சேர்ந்து பணியாற்ற வேண்டி அழுத்தம் தரப்பட்டிருப்பதை அவன் அறிகிறான். சூசானும் அவள் தந்தையும் இணைந்து நடத்தும் பரிசோதனைகளால் நினைவுக்கு கொண்டு வரமுடியாதிருந்த தன் கடந்தகாலத்தின் பகுதிகளுக்கு மீண்டும் செல்ல ஆரம்பிக்கிறான் மக்லேன். கதையின் இந்த ஆல்பத்தில் ஏன் USAFE மக்லேனின் நினைவுகளை துழாவி மீட்க விரும்புகிறது என்பது தெளிவாக்கப்படுகிறது. மேஃப்ளவர் கப்பலில் பயணித்தவர்களிற்கிடையே ஏற்பட்ட சில விரும்பதகாத நிகழ்வுகள், அவை எவ்வாறு காலம் காலமாக ஒரு தேடலை முக்கியமானதாக ஆக்கின, இத்தேடலிற்கும் மக்லேனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்பன கதையின் ஓட்டத்தில் அம்பலமாக்கப்பட்டு விடுகின்றன. மக்லேன் இன்னும் ஓட வேண்டும் என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது. அதற்கேற்ப மக்லேனும், பெட்டியும் தனித்தோ அல்லது சேர்ந்தோ ஓடுகிறார்கள். அதிரடிப்படை நுட்பங்களை உபயோகிக்கிறார்கள். ரகசியமொன்றினை அறிய க்ரீன்பால்ஸ் திரும்புகிறார்கள். ஷெல்பர்ன் குடியிருப்பு அமெரிக்க பூர்வகுடிகளை அமெரிக்க இனவாதத்திலிருந்து மீட்கிறார்கள். அவர்கள் தேடி வந்த ரகசியம் அவர்கள் கைகளுக்கு வருவதற்காக அவர்கள் சில காயங்களை தாங்கிக் கொள்கிறார்கள்.<br />
<br />
<b>முடிவாக</b> மேலும் ஒரு முடிச்சுடன், மக்லேன் ஓட வேண்டி இருக்கிறது. புனித ஆண்ட்ரு அனாதைவிடுதியில் சிறுவயது மக்லேனை தேடி வந்து க்ரீன்ஃபால்ஸிற்கு அழைத்து சென்ற அம்மனிதனைத் தேடி, USAFE க்கு எதிராக இயங்கும் வேறு அமைப்புக்களை தேடி வாசகர்களும் ஓட வேண்டிய நிலைக்கு கதையின் இறுதியில் தள்ளப்படுகிறார்கள். வழமையான XIII கதை வரிசைக்குரிய ஆழமற்ற கதைசொல்லல், தர்க்கமற்ற சம்பவ கோர்வைகள் எனும் பராம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டாலும் கதை விறுவிறுப்பாகவே நகர்கிறது. சித்திரங்களில் ஜிகுனோவ் சந்தேகமேயில்லாமல் அடி பின்னி இருக்கிறார். அழகுகளின் மார்பழகுகளை காட்சியாக்கும் வழக்கம் இரண்டாம் சுற்றில் இல்லை என்பதும் கதையில் தெளிவாகிறது. XIII ல் புதுமையான ஆச்சர்யங்களை அறிமுகம் செய்யமாட்டார்களா எனும் கேள்விக்கு இந்த ஆல்பமும் பிடிவாதமாக எதிர்மறை பதிலொன்றையே தந்து நிற்கிறது.</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78410895992314159152014-06-21T18:02:00.000+02:002014-06-21T18:02:07.485+02:00சட்டம் ஸ்டார்க்கர் கையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCgcYxXLuRNlhiXBIxqZwwEUpYJt3MPyfgrXGxDS_Cdap1Gua8MllmJMCxp6xXfGqz5qeH9l7VgLJ4lIWYnQxYuV1W9g2zr1xK0IXIUkhjUTZSZqqjkNZjx1AIFbc89v4QnKkTalRdisn7/s1600/Couv_208813.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCgcYxXLuRNlhiXBIxqZwwEUpYJt3MPyfgrXGxDS_Cdap1Gua8MllmJMCxp6xXfGqz5qeH9l7VgLJ4lIWYnQxYuV1W9g2zr1xK0IXIUkhjUTZSZqqjkNZjx1AIFbc89v4QnKkTalRdisn7/s1600/Couv_208813.jpg" height="320" width="227" /></a></div>
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ர பிம்பமோ - 15</span></b><br />
<b><br /></b>
<b>நிக் லூயிஸ்</b> எனும் கேடியை தேடி தெற்கு கொலராடோவிற்கு வரும் டெக்ஸ் வில்லர் வழியில் தறிகெட்டு ஓடிச்செல்லும் ஒரு கோச்சு வண்டியை தற்செயலாக காண நேரிடுகிறது. குதிரைகள் ஓடும் ஓட்டத்திலிருந்தே கோச்சு வண்டியில் ஏடாகூடமாக ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை ஊகிக்கும் பெருமேற்கின் இளஞ்சிங்கம் கோச்சு வண்டியை விரட்டி செல்கிறது. சிங்கத்தின் ஊகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோலவே கோச்சு வண்டியின் ஓட்டுநர் தன் இருக்கையிலேயே பரமபதம் சென்று இருக்கிறார். பலத்த போராட்டத்தின் பின்பாக வண்டியை நிறுத்தி ஆராயும் டெக்ஸ் வில்லர் வண்டியினுள் பயணிகள் எவரும் இல்லை என்பதை காண்கிறார். ஆனால் பெருமேற்கின் துடிதுடிப்பான ஷெர்லாக்கான டெக்ஸின் மனம் பரபரக்கிறது. கோச்சு வண்டியின் கூரையில் இருக்கும் பயண லக்கேஜ்களுக்கு சொந்தமானவர்கள் எங்கோ இருந்தே ஆக வேண்டும் என டெக்ஸிடம் அது முன்வேனில் செங்குருவிபோல டிவிட் சொல்கிறது. வண்டி வந்த பாதையின் தடத்தில் செல்லும் தல டெக்ஸ் அவ்வண்டியில் பயணித்த பயணிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு கொள்கிறார். படுகொலை நடாத்தப்பட்டிருக்கும் பாணி அவர் தேடிவந்த கேடியான நிக் லூயிஸின் கைவண்ணத்தை ஒத்திருப்பதையும் அவதானித்து கொள்கிறார். அந்த தருணத்தில் சட்டம் மூன்று குதிரைகளில் டெக்ஸை நோக்கி விரைந்து வருகிறது.... வந்து கொண்டிருக்கும் சட்டத்திற்கு பெருமேற்கின் நீதிதேவனான டெக்ஸ் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை வாசக யூவர் ஆனர்கள் குறித்துக் கொள்ள வேண்டுகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXAyZmfU1C26a0LhrjNeMlovZQrkh9UVHIoY5CjEijSo18Al8zgYczsU8DPoS_qpwPcc2PM-8oUQBgSewDK_PL1AkvVlPmPM5ADhHzEs3bo0yQUAVZuFX_RRgT3k4iDhEY-RZqXCpSO9wF/s1600/LDS1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXAyZmfU1C26a0LhrjNeMlovZQrkh9UVHIoY5CjEijSo18Al8zgYczsU8DPoS_qpwPcc2PM-8oUQBgSewDK_PL1AkvVlPmPM5ADhHzEs3bo0yQUAVZuFX_RRgT3k4iDhEY-RZqXCpSO9wF/s1600/LDS1.jpg" height="320" width="224" /></a></div>
<b>அழகான</b> முன்வேனிலின் இதமான காற்றில் சுருளிச் சூறாவளியாக பறக்கும் கோச்சு வண்டியில் சடலமாக அதன் ஒட்டுனர். <b>TEX MAXI N° 16 </b> ன் கதையான <b>Le</b> <b>Loi de Starker </b>ன் திகிலான, சூடான, பரபரப்பான, இளமையான அறிமுகத்திற்கு மேலும் சூடேற்றவது போல அமைகிறது டெக்ஸ் வில்லர் அந்த கோச்சு வண்டியை துரத்தி செல்லும் காட்சி. ஆறு குதிரைகள். காற்றிற்கு வேகத்தை கற்பிக்கும் பேராசிரியர்கள் போல விரைந்து கொண்டிருக்கின்றன. அவ்வண்டியை எப்படியாவது நிறுத்த அதன் பின் விரையும் டெக்ஸ். வாசக அன்பர்கள் தம் மனத்திரையில் இந்த ஆக்சேன் சேஸிங்கை ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். தன் குதிரையிலிருந்து கோச்சு வண்டிக்கு பாய்வார் பாருங்கள் [ இதை அதே மனத்திரையில் ஸ்லோமோசனில் ஓட்டிப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன்]. பார்க்க இரு கண்கள் போதாது என்றால் அது பொய். அங்கு ஆரம்பிக்கும் அதகளம் இக்கதை நடக்கும் ப்ளாக் ஃபால்ஸ் பகுதியைவிட்டு டெக்ஸ் புறப்பட்டு செல்லும்வரை நீடிக்கும் என்றால் அது .... மெய்.<br />
<br />
<b>குதிரைகளில்</b> ஏறி வந்த சட்டங்களில் ஒருவன் ப்ளாக் ஃபால்ஸ் நகர ஷெரீஃபான கிரிகரி ஸ்டார்க்கர். தன் பாணியில் ப்ளாக் ஃபால்ஸில் சட்ட பரிபாலனம் செய்து நீதி மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுபவன். டெக்ஸின் பெயரைக் கேட்டதுமே குதிரையை விட்டு கீழே இறங்கி விடுகிறான். டெக்ஸ் ஒரு பகுதிக்கு செல்வதற்கு இரு நாட்களின் முன்பே அவர் புகழ் அங்கு சென்று விடும் என்பது வாசக சமுத்திரம் அறியாத ஒன்றல்ல. சுமூகமான அறிமுகத்தின் பின்பாக டெக்ஸ் பயணிகளை கொலை செய்த கேடிகளின் தடத்தில் பயணிக்க ஸ்டார்க்கர் பயணிகளின் சடலங்களோடு ப்ளாக் ஃபால்ஸ் நகரம் நோக்கி விரைகிறான். ஆனால் விதி இவர்கள் இருவர்களின் பாதைகளையும் ஒன்றாக்கி அதில் அவர்களை ஒருவரை ஒருவர் நோக்கி பயணிக்க வைத்து விடுகிறது.<br />
<br />
<b>கேடிகளின்</b> தடமானது ஒரு தருணத்தில் மறைந்துவிட ப்ளாக் ஃபால்ஸ் நகர் நோக்கி வருகிறார் டெக்ஸ். நகர மக்கள் முன்னிலையில் உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கரின் உரையை கேட்கவும் அவதானிக்கவும் செய்கிறார். அந்தக் கணத்திலேயே ஸ்டார்க்கர் ஒரு மகா நடிகன் என்பதை அவர் கணித்தும் விடுகிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXQYeGFzNLQW2TqZlPxZElC6BbbgX3VZaUqADGDztfe9uTgerH4mFzt5Bihx9GWDTtKOFZVg_4ZVyWDqKTxjtlL76PwnJ2xsGcpWQAWWjc4bwi7D8PFEaBwm-VWMw91paJDwvX3ydhw8mY/s1600/lds2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXQYeGFzNLQW2TqZlPxZElC6BbbgX3VZaUqADGDztfe9uTgerH4mFzt5Bihx9GWDTtKOFZVg_4ZVyWDqKTxjtlL76PwnJ2xsGcpWQAWWjc4bwi7D8PFEaBwm-VWMw91paJDwvX3ydhw8mY/s1600/lds2.jpg" height="320" width="217" /></a></div>
<b>நகரின்</b> சலூனில் இலவச பீர் தந்து டெக்ஸை வரவேற்கும் காட்சியில் டெக்ஸின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை. சான்ஸே இல்லை. சாட்சாத் ஜெமினி கணேசன் புன்னகைதான். அந்தப் புன்னகை ஆவியாகாமலேயே ஸ்டார்க்கரின் உரையை கேட்கப் போய் அங்கு ப்ளாக் ஃபால்ஸ் நகர மக்கள் தம் ஷெரீஃப் மீது கொண்டிருக்கும் அபிமானத்தையும் அறிந்து கொள்கிறார். ப்ளாக் ஃபால்ஸ் நகரை அண்மித்த பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் அதை தடுக்க, ஒழிக்க, அழிக்க தீபோல செயற்படும் ஸ்டார்க்கர், இவை டெக்ஸ் மனதின் ஓரத்தில் ஐயங்களை விதைக்கின்றன. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாது அந்நியன் ஒருவன் ஒரு நகரின் சூப்பர் ஷெரீஃப்பை குற்றம் சாட்ட முடியுமா? அது அந்த அந்நியனிற்கு எதிரான ஒரு அலையாக மாறி அந்த அந்நியனிற்கு சேதங்களை விளைவிக்காதா? ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு டெக்ஸ் வந்து சேரும் இரவன்றே அவரை அந்நகரிலிருந்து வெளியேற வைக்கும் நிகழ்வுகளும் ஆரம்பமாகி விடுகின்றன. டெக்ஸை நகரிலிருந்து வெளியேற வைப்பதில் ஸ்டார்க்கர் வெற்றியும் காண்கிறான். ஆனால் டெக்ஸ் நகரிலிருந்து மட்டும்தான் வெளியேறுகிறார். கோச்சு வண்டிப் பயணிகள் படுகொலையான விவகாரத்தில் இருந்து அல்ல. இந்த சமயத்தில்தான் ஒரு கோழிக்கூட்டில் இரு சேவல்கள் இருக்ககூடாது எனும் அட்டகாசமான பஞ்சை வாசகர்கள் டெக்ஸ் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.<br />
<br />
<b>ஸ்டார்க்கர்</b> எப்படியான ஒரு தருணத்தில் ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்கு ஷெரீஃபாக உருவாகினான் என்பதும் கதையில் நான் லினியார் பாணியில் விளக்கப்படுகிறது. ரவுடிகள் கையில் சுடுபட்டு சாகும் முன்னைய ப்ளாக் ஃபால்ஸ் ஷெரீஃப். பயத்திலும், திகிலிலும் அடங்கி ஒடுங்கும் மக்கள். அட்டகாச ஆட்சி நடத்தும் ரவுடிக் கும்பல். இந்த ரவுடிக் கும்பலை போட்டு தள்ளும் ஸ்டார்க்கர். அவனை பெரிய வீரனாக கருதி, ஏற்று தம் நகரின் மேயர், நீதிபதி, ஷெரீஃப் என அனைத்து பதவிகளையும் ஒப்படைத்து விடும் நகர மக்கள் அவன் பின்னணி என்ன என்பது குறித்து ஒரு கேள்வி கூட எழுப்புவது இல்லை. ரவுடிக்கு நீதி ரவுடியால்தான் எனும் பெருமேற்கின் உன்னதமான தத்துவமானது உறுதிபடும் ஸ்தலம் ப்ளாக் ஃபால்ஸ். ஆனால் ரவுடிக்கெல்லாம் ரவுடி எங்கள் தலை என்பதும் உறுதிபடும் இடமும் ப்ளாக் ஃபால்ஸ் தான் டெக்ஸின் அன்பு ரசிகர்களே.<br />
<br />
<b>ப்ளாக் ஃபால்ஸ்</b> நகரை விட்டு வெளியேறும் டெக்ஸ் தன் தேடல்களை தொடர்கிறார். அவரின் தேடல்கள் ஸ்டார்க்கரை மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க செய்கிறது. அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு, கார்த்திக் தோள்கள் உரசிக் கொள்வதுபோல ஸ்டார்க்கரும், டெக்ஸும் உரசிக் கொள்கிறார்கள். டெக்ஸின் தேடல்கள் எல்லாம் ஸ்டார்க்கரை நோக்கியே விரலைக் காட்டுகின்றன. ஸ்டார்க்கரின் நகர்வுகள் எல்லாம் டெக்ஸை குழிக்குள் இறக்குவதற்கான முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த காய் நகர்வுகள் எல்லாம் வாசகனை டெக்ஸின் ஆக்சன் அதிரடிக்குள் உயிருடன் புதைப்பதாகவே அமைகின்றன. ஆனால் டெக்ஸ் அடங்குவது இல்லை. வாசகன் உயிருடன் புதைக்கப்பட்ட பின்னும் அவரின் வின்செஸ்டரின் ஓசைகள் அவன் காதில் தொடரிசையாக ஒலிக்கும் வண்ணம் அவர் தன் கடமையை சிறப்பாகவே ஆற்றுகிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyHBYaP43kj1G4VoPn_Zist3dZAnhcNoYQnACVIMnjFbCch_w9FekS9vUm8BxKKAeCWk3zYUNr27_w7OToKux51YOry5539gBA4v-4GSrk8KudsZI_mRgQ5N4Bzh7yumYg0XwT_S487P45/s1600/lds3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyHBYaP43kj1G4VoPn_Zist3dZAnhcNoYQnACVIMnjFbCch_w9FekS9vUm8BxKKAeCWk3zYUNr27_w7OToKux51YOry5539gBA4v-4GSrk8KudsZI_mRgQ5N4Bzh7yumYg0XwT_S487P45/s1600/lds3.jpg" height="320" width="221" /></a></div>
<b>ஸ்டார்க்கரின்</b> டெப்யூட்டிகளை துவம்சம் செய்வது, துவம்சம் செய்த டெப்யூட்டி ஒருவனின் உயிரை காப்பாற்றுவது, இறந்த உடல்போல் ஆற்றில் மிதப்பது, ரகசிய தகவல்களை சொல்ல முன்வருபவர்கள் போட்டுத்தள்ளப்பட்ட பின்பாக அவர்களை காண செல்வது, தாமதமாக வந்து விட்டோமே என வருத்தப்படுவது, நிக் லூயிஸை படிய வைப்பது, நிற வெறியர்கள் மீது கரி பூசுவது, பின் அவர்களிற்காக இருளில் காத்திருந்து அதிர்ச்சி தருவது, மர ஆலையின் முரட்டு நபருடனான சூடான மோதல், ஸ்டார்க்கரை ஓயாது தன் நடவடிக்கைகளால் சீண்டல் இப்படி இன்னம் பல வகையான இயக்கவோட்டங்களால் அடி பின்னி எடுக்கிறார் டெக்ஸ். ஒரு வகையில் டெக்ஸ் இங்கு ஸ்டார்க்கரை உளவியல் ரீதியாக தாக்குகிறார் என்பது மிகையல்ல. கதையில் சில பகுதிகளில் தனது நகரம், தனது சட்டம், நீதி என ஸ்டார்க்கர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டார்க்கரை குறித்து டெக்ஸ் கூறும் சில வரிகளை இங்கு தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். புற்றில் ஒளிந்திருக்கும் பாம்பை வெளியேற வைக்க வேண்டுமெனில் அதை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையில் டெக்ஸ் சீண்டும் சீண்டலில் பாம்பு சுரங்கம் தோண்டி மெக்ஸிக்கோவிற்கு சென்றுவிடும் என்பதும் டெக்ஸின் வாசக வெள்ளம் அறியாத ஒன்றல்ல.<br />
<br />
<b>கதையின்</b> சிறுகூறாக நிறவெறி கையாளப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து போராடி கறுப்பின மக்களின் நீதிக்கரமாக டெக்ஸ் செயற்படுவதாக கதை சுட்டி நிற்கிறது. கறுப்பினத்தவரின் உதவியாலேயே டெக்ஸ் கதையின் மர்மத்தின் முக்கிய தகவலை அறிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. கறுப்பின குடும்பம் ஒன்றின் நலனிற்காக டெக்ஸ் செய்யும் சில செயல்கள் பில் கேட்ஸையே வெட்கம் கொள்ள வைப்பதாக உள்ளன.<br />
<br />
<b>கதையில்</b> பெரும்பகுதியில் டெக்ஸ் தனி ஆவர்த்தனம் செய்கிறார். இறுதிப்பகுதியில் கவுரவ வேடம் மேஜர் சுந்தர்ராஜன் என்பது போல கார்சன் வந்து சேர்கிறார். டெக்ஸை ப்ளாக் ஃபால்ஸ் நகரிற்குள் இழுத்து போட்டுத் தள்ள ஸ்டார்க்கர் கார்சனை உபயோகித்து கொள்கிறான். கார்சனைக் காப்பாற்ற டெக்ஸ் எவ்விதமாக நகரில் நுழைகிறார் என்பதே இக்கதையின் கதாசிரியர் <b>Tito Faraci </b>அவர்களின் கற்பனை வளத்தை காட்டி விடும். சமகால உத்திகளுடன் டெக்ஸ் கதைகள் புதுப்பிக்கப்படுகையிலேயே அது சுவையான புதிதான அனுபவத்தை வாசகர்களிற்கு வழங்கும் என்பதில் டிட்டோ பராசிக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர் வழங்கியிருக்கும் கதை தெளிவாக்கி விடுகிறது. டெக்ஸ் கதை எனும் சூத்திரவடிவிற்கு பழகிப் போய்விட்ட வாசகபரப்பு இதில் அதிக ஏமாற்றம் காண்பது இல்லை எனினும் புதுமையான ஒரு அனுபவம் மறுக்கப்படும் எந்த தருணமும் டெக்ஸ் தன் குதிரையில் பின்னோக்கியே பயணிக்கிறார் மன்மதலீலை கமல்போல என்பதை சொல்லவும் வேண்டுமா. கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் ஆர்ஜெண்டின சித்திரக் கலைஞர் மிகுவெல் ஏஞ்சல் ரெப்பெட்டோ. அவரின் சித்திரங்கள் சிவாஜியின் ஓவர் ஆக்டிங் எப்படி திரைப்படங்களில் பொருந்திப் போகுமோ அப்படி கதைக்கு பொருந்தி வந்திருக்கிறது. குறிப்பாக ஸ்டார்க்கரின் முகபாவனைகள், அவன் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலையில் வாசகர்களின் உணர்வுகளை ஓவர் ஆக்டிங் செய்ய வைத்து விடுகிறது. நிலவியல் அழகை தருகிறேன் எனும் போர்வையில் ஆங்காங்கே சில பறவைகள், பிராணிகளை காட்சிப்படுத்துவதை தவிர ரெப்பெட்டோ சிறப்பாக எதனையும் செய்து விடுவது இல்லை.<br />
<br />
<b>இப்படியாக</b> ஆழமற்ற கதைகளும், ஓவர் ஆக்டிங் சித்திரங்களுடனும் வரும் டெக்ஸ் மேக்ஸி கதைகள் அக்கதை வரிசைகளுக்கு பெருமை சேர்ப்பதாக அமையப் போவது இல்லை. பொனெலி நிறுவனம் வருடம் ஒரு மேக்ஸி என்பதை ஒரு கடமையாக செய்ய ஆரம்பித்து விட்டதோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிரெஞ்சு மொழியில் டெக்ஸ் கதைகளை வெளியிடும் பதிப்பகம் இவ்வருட இறுதியுடன் பெரும்பாலும் டெக்ஸ் கதைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவ்வகையான கதைகள் அதை விரைவில் நிறைவேற்றி வைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இத்தாலியர்களுக்கும் பஸ்டாவும், பிஸ்ஸாவும், நமக்கு சாதமும் அலுப்பது இல்லை. அவரவர் சுவை அவரவர்க்கு. என்னைப் போன்ற டெக்ஸின் டைஹார்ட் விசிறிகள் மட்டுமே இக்கதையை கண்ணீர் விட்டு ரசிக்க முடியும்.<br />
<br />
<b>சமர்ப்பணம்.</b><br />
<b>நான் ஒரு போலி டெக்ஸ் விசிறி என வதந்தி பரப்புவர்களுக்கு</b>.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70920062534069426922014-06-01T07:05:00.000+02:002014-06-01T07:05:04.686+02:00Gone Girl<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw6p1zDgSAI7JVyYHi953fC4tEHUW0DwAbI8g0GVpCvXt98fFc7SX4bXSOzrVzhy6tV4qNjP7NLRctnnk9sFG2gNIHdGr-JHibRS8cBkK2NC4DWDfp6NMS82IcUN6t1DP6YPigegVS1NIt/s1600/gone-girl-review_320.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw6p1zDgSAI7JVyYHi953fC4tEHUW0DwAbI8g0GVpCvXt98fFc7SX4bXSOzrVzhy6tV4qNjP7NLRctnnk9sFG2gNIHdGr-JHibRS8cBkK2NC4DWDfp6NMS82IcUN6t1DP6YPigegVS1NIt/s1600/gone-girl-review_320.jpg" height="320" width="210" /></a></div>
<b>திருமண</b> நினைவுநாளன்று மனைவி வீட்டிலிருந்து காணாமல் போனால் ஒரு கணவனின் நிலை எவ்வாறாக இருக்கும்? எல்லா கணவர்களின் உணர்வுகளும் ஒரே மாதிரியாக இருக்காது என்பது உண்மையாயினும் திருமணாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியான நிலையில் வீடு திரும்பும் நிக் டன் தன் மனைவி காணாமல் போய்விட்டாள் என்பதை அறியும்போது அக்கறையான கணவன் ஒருவன் கொள்ளக்கூடிய நிலையை விட சற்று குறைந்த அதிர்ச்சி நிலை கொண்டவனாகவே <b>Gone Girl </b>நாவலில் கதாசிரியை <b> Gillian Flynn</b> ஆல் சித்தரிக்கப்படுகிறான். அவனை சூழ்ந்திருப்பவர்களும் தொடரும் நாட்களில் அதையே உணர்கிறார்கள். மனைவி காணாமல் போகும் நிகழ்வுகளில் முதல் சந்தேக நபராக கணவர்களே காவல்துறையால் கருதப்படுகிறார்கள். கணவனை சந்தேகத்திற்கு இடமற்ற ஒருவன் என தெளிவு செய்த பின்பாகவே விசாரணைகள் ஏனைய திசைகளில் முனைப்பு பெறுகிறது. ஆனால் நிக் டன்னை பொறுத்த வரையில் அவனை சுற்றி சந்தேகங்கள் வலுப்பெறவே செய்கின்றன.<br />
<br />
<b>நிக் டன்</b> ஒரு இதழியலாளன். விருந்து ஒன்றில் அமியுடன் அறிமுகமாகி பின் அது திருமணத்தில் முடிகிறது. அமி இதழ்களில் உளவியல் கணிப்புக்களை கேள்வி பதில் வடிவ புதிர்களாக எழுதுபவள். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள். இணைய ஊடகத்தின் வளர்ச்சி இருவரையுமே அவர்களின் வேலையை இழக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க்கை அதன் அர்த்தமிழக்கும் ஆரம்பத்தை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் நிக்கின் தாய் புற்றுநோய்க்குள்ளாக அவளை தன் தங்கையுடன் சேர்ந்து பராமரிக்கும் முகமாக தன் பிறந்த ஊரான காத்ஹேஜிற்கு தன் மனைவியுடன் நீயூயார்க் நகரை விட்டு வந்து சேர்கிறான் நிக்.<br />
<br />
<b>நிக்கும்</b>, அமியும் கதையின் ஆரம்பத்தில் மிகப் பொருத்தமான ஒரு ஜோடியாகவே காட்டப்படுகிறார்கள். வாழ்க்கையும் மகிழ்வான ஓன்றாகவே இருக்கிறது. இணைய ஊடகத்தின் ஆதிக்கம் எப்படி அச்சு ஊடகத்தை பலவீனமாக்கியதோ, அப்பலவீனம் எப்படி பல இதழியலாளர்களை வேலையை விட்டு நீக்கியதோ, அவ்வூடகவியலாளர்கள் தம் நாட்களை பின் எப்படி கழித்தார்களோ என்பது இங்கு நிக், அமி ஜோடி வழியாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அமியின் நாட்குறிப்புக்கள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு புறம் அமி காணாமல் போனதன் பின்னான நிகழ்வுகள் பயணிக்க மறுபுறம் அமியின் நாட்குறிப்புக்கள் நிக்கிற்காக அவள் என்ன சமரசங்கள் செய்தாள் என்பதை கூறுகிறது. தம் திருமணம் தோல்வியுறக்கூடாது என்பதற்காக அவள் எடுத்த முடிவுகளை விபரிக்கிறது. நிக் எப்படியான ஒரு சுயநலக்காரன் எனும் பிம்பத்தை தன் சொற்களால் செதுக்குகிறது. படிப்படியாக அமியின் நாட்குறிப்பு நிக் எனும் பாத்திரத்தின் மீதான எதிர்மறை உணர்வுகளை நாவலில் உருவாக்க ஆரம்பிக்கிறது.<br />
<br />
<b>மறுபுறம்</b> நிக் தன் மனைவி காணாமல் போனது முதல் சில விடயங்களை ஏனையவர்களிடமிருந்து மறைப்பவனாகவே இருக்கிறான். பொய்களையும் சொல்கிறான். இருப்பினும் அவன் மனைவி காணாமல் போன நிகழ்வு அவனிடம் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அவளுக்கு என்ன ஆயிற்று எனும் கேள்வி அவனிடம் எழவே செய்கிறது. ஆனால் தொடரும் விசாரணைகளும் சாட்சிகளும் அவனுக்கு சாதகமாக இருப்பது இல்லை. அவன் கூறக்கூடிய பொய்களையும், மறைக்க விரும்பும் தகவல்களையும் மறுபுறம் அமியின் நாட்குறிப்பு தெளிவாக்கி கொண்டே இருக்கிறது. காவல்துறையின் சந்தேகம், ஊடகங்களில் நிக் மீதான வெறுப்பு அலை, கார்த்ஹேஜ் எனுமிடத்தில் வாழ்ந்திருப்பவர்களின் எண்ணங்கள் எல்லாம் நிக்கையே அவன் மனைவியின் மறைவுடன் தொடர்பு படுத்தி நிற்கின்றன... நிக்கிற்கும் அவன் மனைவி அமியின் மறைவிற்கும் தொடர்பு உண்டா?! நிக் என்ன ஆனான்? அவன் மனைவி அமி என்ன ஆனாள்?! இக்கேள்விகளிற்கான விடைகளாக நீளும் கதை வழமையான வெகுஜன திரில்லர்கள் வழங்கும் முடிவிலிருந்து விலகியே நிற்கிறது.<br />
<br />
<b>அச்சு</b> ஊடகத்தின் மடிவு, வாசகர்களை இழந்த வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் நிலை, வீட்டுக் கடன் திட்டத்தால் முடங்கிப்போன ஒரு நகர், வேலையிலா திண்டாட்டத்தின் விளைவுகள், ந்யூயார்க் மற்றும் காத்ஹேஜ் எனும் இரு நகரில் வாழ்ந்திருக்க கூடிய மனிதர்களின் வாழ்வியல் முறைகள் இவற்றினூடு தன் கதையை சிறப்பாக சொல்கிறார் கதாசிரியை ஜில்லியன் ஃப்ளைன். ஆரம்ப பக்கங்களில் கதை சற்று வேகமின்றி நகர்ந்தாலும் படிப்படியாக அது புதிர்களையும், சுழல்களையும், அவற்றால் சூழப்பட்ட திருமண உறவுகளையும் கச்சிதமாக விபரிக்கிறது. கதையின் பாதியில் வரும் ஒரு திருப்பத்தின் பின் கதை எடுக்கும் வேகம் அபரிமிதமானது. வாசிப்பதை நிறுத்த இயலாத ஒரு நிலை ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது. இக்கதையில் வரும் ஒரு பாத்திரம் என்னை மிகவும் அச்சத்துக்கு உள்ளாக்கியது. எம் சமூகம் எவ்வகையான மனிதர்களை உருவாக்கி செல்கிறது எனும் அச்சமே அது.<br />
<br />
<b>புத்திசாலித்தனமும்</b>, அவதானிப்பும், திட்டமிடலும் எவ்வகையான விளைவுகளை ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படுத்தகூடும் என்பது நாவலின் முடிவுவரை திகிலை தரக்கூடியதாகவே இருக்கிறது. தகவல் கிட்டங்கிகளாக மட்டும் மாறிவிட்ட இன்றைய ஊடகங்கள் எவ்விதமான திறமைசாலிகளை உருவாக்க முடியும் என்பதும் இங்கு ஒரு பார்வையாக விரிகிறது. காவற்துறையின் இயலாமை, காட்சி ஊடகங்கள் ஒரு மனிதன் மீது உருவாக்ககூடிய வெறுப்பு அலை, அதன்மீது சுகமாக பயணிக்கும் பாமர சமூகம், சமூகத்தின் அபிமானத்தின் வழி இன்று மனம் தடுமாறக்கூடிய ஜூரிகள் என ஒரு குற்றத்தின் பின்பான சிறப்பான ஒரு அலசலாகவும் இந்நாவலை பார்க்கலாம். <b>Gone Girl</b> நம்ப முடியாத எதார்த்தம் ஒன்றின் சமரசங்கள் நம் சமூகத்தின் விழுமியங்கள், அறங்கள் மீது எள்ளலான புன்னகையுடன் வேரூன்றுவதைக் காட்டி நிற்கிறது.<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58495049574621558922014-05-18T06:35:00.000+02:002014-05-18T06:35:43.768+02:00கறுப்பு ட்ராகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0YHnK_h231FG2IUUub_a85dSAMBtdt0-RuN-ZuKGun8pqyutRM7cjJzFbN_rnts5hN3WSCpi9Gebd7EgN882NRhMfknght-1x6s-6FX0NQYhydnCQW53QTv3lYu4wu3OFVaskOzaKVgvh/s1600/Dragonero.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0YHnK_h231FG2IUUub_a85dSAMBtdt0-RuN-ZuKGun8pqyutRM7cjJzFbN_rnts5hN3WSCpi9Gebd7EgN882NRhMfknght-1x6s-6FX0NQYhydnCQW53QTv3lYu4wu3OFVaskOzaKVgvh/s1600/Dragonero.jpg" height="320" width="225" /></a></div>
<b>எரோண்டார்</b> எனும் ராஜ்யத்தின் தொன்மங்கள் ஏறக்குறைய 1500 வருடங்களுக்கு முன்பாக எல்ஃபுகளும், ட்ராகன்களும் இயற்கையுடன் ஒத்திசைந்து பெரும் வனப்பரப்பில் வாழ்ந்திருந்தார்கள் என்கிறது. இவர்கள் வாழ்ந்திருந்த மண், ட்ராகன்களின் பூமி என அழைக்கப்பட்டது. இருள் உலகில் இருந்து இவ்வுலகினுள் பிரவேசித்த தீயசக்திகள் ட்ராகன்களை அழிக்க ஆரம்பித்தன, எல்ஃபுகளை தம் சக்தியினால் அடிமைகளாக்கி தமக்கு துணையாக போரிடும் ஒரு புதிய இனமாக உருவாக்கின, சில நூற்றாண்டுகளாக ட்ராகன்களின் பூமி மீதும் அங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் மீதும் தம் ஆதிக்கத்தை நிறுவின. இந்த தீய சக்திகளுக்கு எதிராக மந்திரவாதிகள், அறிவியல்வாதிகள், அரசுகள், ட்ராகன்கள் ஓன்றாக இணைந்து போரிட்டன.<br />
<br />
<b>பெரும்</b> யுத்தம் ஒன்றின் முடிவில் தீயசக்திகள் அவர்களின் இருள் உலகிற்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் இவ்வுலகிற்குள் பிரவேசித்த வழிகளின் மேல் ட்ராகன்கள் வீழ்ந்து மடிந்தன. அந்த ட்ராகன்களின் உடலில் இருந்து சிந்திய குருதி பெரும் கற்தூண்களாக உருமாறி தீயசக்திகள் இவ்வுலகில் நுழைவதற்கான பாதைகளை தடை செய்தன. போரின் பின்பு இவ்வுலகில் எஞ்சியிருந்த ட்ராகன்கள் தம் வாழ்ந்திருந்த பூமியைவிட்டு வேறிடங்கள் நோக்கி சென்றன. மந்திரவாதிகளுக்கும், அறிவியலாளர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உருவாகின. மந்திரவாதிகளுக்கு இடையிலும் வேறுபாடுகள் உருவாகின. சில மந்திரவாதிகள் நன்மையின் பக்கமிருந்து விலகிச் சென்றார்கள். இவர்கள் மந்திரவாத அமைப்புக்களிலிருந்து விலக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.<br />
<br />
<b>அறிவியலாளர்களோ </b>அரசின் அதிகாரங்களை தமக்கு நெருங்கியதாக ஆக்கி கொண்டு மந்திரவாதிகளையும், அவர்கள் சக்திகளையும் தொலைவில் வைக்க எல்லா வழிகளையும் முயன்றார்கள். ட்ராகன்களின் பூமியையும் எரோண்டார் ராஜ்யத்தையும் பிரிக்கும் வண்ணம் ஒரு பெரும் சுவர் எல்லையில் எழுப்பபட்டது. இச்சுவரில் அமைந்த காவல் அரண்களில் இருந்த காவல்படையானது ட்ராகன்களின் பூமியில் வாழ்ந்திருக்ககூடிய தீயசக்திகள் எரோண்டாருக்குள் நுழைய முடியாது தடுப்பதை தன் கடமையாக கொண்டிருந்தது.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN5T8fTFI2eGXjooUj-Fil6T1_nWSxeqSGDGRh-8oOvhyLZR3CwNWg-qGZuz4U8f39KP9q1uOpA5g94EG8Fec32GQKLxVRloyax94DY4PzCKl3kgFLiILIbjACQ8ddkbPsOhPAUGPThv-2/s1600/813_1.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN5T8fTFI2eGXjooUj-Fil6T1_nWSxeqSGDGRh-8oOvhyLZR3CwNWg-qGZuz4U8f39KP9q1uOpA5g94EG8Fec32GQKLxVRloyax94DY4PzCKl3kgFLiILIbjACQ8ddkbPsOhPAUGPThv-2/s1600/813_1.jpg" height="225" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">செரா, க்மோர், இயான், மிர்வா, அல்பென்</td></tr>
</tbody></table>
<b>ஆனால் </b>ட்ராகன்களின் குருதியால் உருவான கற்தூண்கள் தீடீரென நொருங்கி விழ ஆரம்பிக்கின்றன... அதன் வழியாக இருள் உலக தீய சக்திகளுக்கு இடப்பட்டிருந்த தடை பலவீனமடைய ஆரம்பிக்கிறது. இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை ஆராய அறிவியலாளர்கள் சார்பாக மிர்வா எனும் இளம் பெண் வீராங்கனையும், மந்திரவாதிகள் சார்பாக முதிய மந்திரவாதியான அல்பெனும் ட்ராகன்களின் பூமியின் எல்லையிலிருக்கும் பெரும்சுவரை வந்தடைகிறார்கள். இடிந்து விழும் ட்ராகன்களின் குருதி தூண்களின் பின்பு ஒரு பெரும் தீயசக்தி விழித்து கொண்டிருக்கிறதென்பதை உணரும் மந்திரவாதி அல்பென் தன் உதவிக்கு என சிலரை சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்... பெரும் அழிவை தடுக்கும் சாகசப் பயணம் உருக்கொள்ள ஆரம்பிக்கிறது.<br />
<br />
<b>மந்திரவாதி</b> அல்பென் முதலில் தன் உதவிக்கு அழைத்து தூது அனுப்புவது இயான் எனும் வீரனிடம். கவுரமிக்க ட்ராகன் சம்ஹாரிகளின் வம்சத்தில் வந்தவன் இயான். அரசபடைகளில் பணிபுரிந்து, கடமையின்போது ஏற்பட்ட அசம்பாவிதம் ஒன்றால் தன் பதவியை துறக்கிறான் இயான். அவன் திறமைகளை முற்றிலும் உதறவிரும்பாத அரசு அவனை வேவு பார்க்கவும் வேறு பல சிறப்பு நடவடிக்கைகளிற்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒரு பதவியை வழங்குகிறது. வன்முறைகளிலிருந்து விலகி அமைதியான கடற்துறை நகரான சொலியானில் தன் வாழ்க்கையை கழித்து வரும் இயானிற்கு உற்ற நண்பணாக க்மோர் எனும் ஓர்க் இருக்கிறான். ட்ராகன்களின் பூமியிலிருந்து எரோண்டோரை பிரிக்கும் பெரும்சுவரிற்கு இடியும் குருதிதூண்கள் பற்றிய விவகாரத்தை ஆராய வந்த மிர்வா, இயானின் சகோதரி ஆவாள். கதையில் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிறப்பாக காட்டப்படுகிறது. தனக்கிடப்பட்ட பணியைவிட தன் சகோதரியை காப்பதே முதன்மையானது என நடப்பவன் இயான். அவனின் இந்த போக்கை எதிர்ப்பவள் மிர்வா. கோபமும், பாசமும் சேர்ந்த அந்த உறவு கதையின் இறுதிவரை பேணப்படுகிறது. இயான் எல்லா இன மக்களையும் அவர்கள் மரபுகளையும், மதங்களையும் மதிப்பவனாக கதையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறான். அவன் அரசசேவையிலிருந்து பதவி விலகியதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. அச்சம்பவம் குறித்து சில தகவல்கள் மட்டுமே தரப்படுகிறது. அவற்றை வைத்து தீர்க்கமாக அச்சம்பவத்தை பற்றி ஏதும் அறியமுடியாத நிலையே கதையில் இருக்கிறது. மிர்வாவும் இயானுடன் அச்சம்பவ தருணத்தில் இருந்ததால் அவளைக் காப்பாற்றுவதற்காக அவன் தன் கடமையிலிருந்து தவறியிருக்கலாம் என ஒரு ஊகத்தை உருவாக்கி கொள்ள மட்டுமே முடிகிறது. வழமையான நாயகர்களுக்குரிய அலட்டல்கள் இல்லாத அமைதியான ஒருவனாக இருக்கும் இயான் வீர வசனங்கள், வாய் சவடால்கள் விலக்கப்பட்ட ஒரு பாத்திரமாக கதையில் உலவுகிறான். அதே சமயம் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் தக்க சமயத்தில் அவனால் இயங்க முடியும் என்பதும் முரட்டு அன்னையை அவன் இருள்வனப்பகுதியில் சந்திக்கும் தருணம் தெளிவாக்குகிறது. இயானிடம் ஒரு அபூர்வ வாள் உண்டு. ஆனால் அது அபூர்வமானது என்பது கதையின் இறுதிப்பக்கங்களில்தான் காட்டப்படும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_Tif3-1meDUTpi1RbqXwZaZJu2as7DSDm9j_PJQUJj8ElfsQcrKok0D_YFi9Evqqs0WkNOH8TJfMGsIRwJrG5EIp1gSZFk0_rSHplMZTXh_WkSdxgUdfqzuZjMkPXI7lkiyRjl-70jgvI/s1600/dragonero_024.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_Tif3-1meDUTpi1RbqXwZaZJu2as7DSDm9j_PJQUJj8ElfsQcrKok0D_YFi9Evqqs0WkNOH8TJfMGsIRwJrG5EIp1gSZFk0_rSHplMZTXh_WkSdxgUdfqzuZjMkPXI7lkiyRjl-70jgvI/s1600/dragonero_024.jpg" height="320" width="223" /></a></div>
<b>வழமையாக</b> ஓர்க்குகள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவையாக சித்தரிக்கப்படுவது இல்லை. சில விதிவிலக்குகள் உண்டு. இக்கதையில் வரும் க்மோர்க் எனும் ஓர்க் அவற்றில் ஒன்று எனலாம். இயானுக்கும், க்மோர்கிற்குமிடையில் சிறுவயதிலேயே நட்பு உருவாவது கதையில் சித்தரிக்கப்படுகிறது இருப்பினும் க்மோர்க் இயானுடன் கூடவே வாழ்ந்து வருவது ஏன் என்பது கதையில் கூறப்படுவது இல்லை. கதையில் விரிவாக கூறப்படாத விடயங்களில் இதுவும் ஒன்று. தொடரும் கதை வரிசைகளில் இவர்களிற்கிடையிலான உறவு விரிவாக ஆராயப்படலாம். க்மோர் புத்தகங்களை விரும்புபவன், நல்ல சமையல்காரன், கோடாரி சண்டையில் தேர்ந்தவன், நகைச்சுவை உணர்வு கொண்டவன், இளகிய மனம் உடையவன் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. பெண் பாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக நெருங்கிவிடுவது க்மோர்க் எனும் ஓர்க்கிற்கு இலகுவான ஒன்றாக இருக்கிறது. கதையின் சில தருணங்கள் க்மோர்க்கை செவ்விந்தியர்களுடன் ஒப்பிடக்கூடியதாக அமைந்திருக்கின்றன. வேட்டையாடி உயிர்பறித்த விலங்கின் ஆன்மாவிற்காக பிரார்த்தித்தல், நல்ல ஓர்க்கு என்பது இறந்துபோன ஓர்க்கு மட்டுமே போன்ற வசனங்கள் எனக்கு செவ்விந்திய பூர்வகுடிகளையே நினைவிற்கு இட்டு வந்தன. வெஸ்டெர்ன்களில் பூர்வகுடிகளுக்கு எதிராக காட்டப்படும் இனவெறியானது க்மோர் எனும் ஓர்க்கின் மீது இக்கதை நெடுகிலும் காட்டப்படுகிறது.<br />
<br />
<b>இயானின்</b> சகோதரியான மிர்வா அறிவியலாளர்கள் அமைப்பை சார்ந்த ஒரு வீராங்கனை. அறிவியல் தொழிநுட்பத்தின் வழியை முன்னிறுத்தி செல்பவள் அவள். அவள் மந்திரங்களை நாடுவது இல்லை. அவள் தொழில்நுட்பத்தின் விளைவுகளை உபயோகிப்பவள். அது ஆயுதங்கள் ஆனாலும் வேவுக் கருவிகள் ஆனாலும் அவள் அறிவியலின் பிரதிநிதியாகவே செயல்படுகிறாள். ஆனால் அறிவியலின் எல்லைகள் எட்டாத இடங்களுக்கு செல்ல மந்திரசக்தி தேவையாக இருக்கிறது. கதையில் அறிவியலும், மந்திரசக்தியும் ஒன்றுக்கொன்று உதவியவாறே தீமைகளை எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. மந்திரவாதி அல்பெனும், மிர்வாவும் வாதம் செய்து கொண்டே ஒருவருக்கொருவர் துணையாக நின்று தீமையை எதிர்க்க முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரின் திறமைகள் மட்டும் அதற்கு போதுமானதாக இருப்பது இல்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5kszJhA0vCceYCvP0l76oarEmu-CF3X807mrc-cEA0g0TEc7RMomoq_c1Di4ctVsIRwDUPPUOkZfRM4lQyi9o2WCBPJESdus9w8PR1K06JHyCCSEGlycnc7MVHiECqipH4ipm6dNSvg7/s1600/dragonero_088.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5kszJhA0vCceYCvP0l76oarEmu-CF3X807mrc-cEA0g0TEc7RMomoq_c1Di4ctVsIRwDUPPUOkZfRM4lQyi9o2WCBPJESdus9w8PR1K06JHyCCSEGlycnc7MVHiECqipH4ipm6dNSvg7/s1600/dragonero_088.jpg" height="320" width="220" /></a></div>
<b>இயானை</b> தன் உதவிக்கு அழைத்த கையோடு மந்திரவாதி அல்பென் தனக்கு ஒரு மெய்பாதுகாவலனை தேடி காவல் அன்னையர் மடத்திற்கு செல்கிறார். பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இம்மடம் மிகவும் கடினமான கட்டுப்பாடுகளை கொண்டது. இவர்களால் உருவாக்கப்படும் மெய்பாதுகாவலர்கள் பெண்கள் மட்டுமே. அவர்களிடம் காணப்படும் அசாத்திய திறமைகள் வியப்பை தரும் வகையில் கதையில் பரிமாறப்பட்டு இருக்கின்றன. காவல் அன்னையர் மடத்தில் எகுபா எனும் பெண், மந்திரவாதி அல்பெனின் பாதுகாவலுக்கு பொறுப்பாக வழங்கபடுகிறாள். மந்திரவாதியின் உயிருக்கு பதிலாக அவள் தன் உயிரை தந்து போராட வேண்டும். தற்பாதுகாப்பு முறைகளிலும், தாக்குதல் முறைகளிலும் சளைக்கவியலா பாத்திரமாக சித்தரிக்கப்படும் எகுபா கதையின் முடிவில் மனதையும் கனக்க வைக்கும் ஒரு நிலைக்கு செல்லும் பாத்திரமாகி விடுகிறாள்.<br />
<br />
<b>மந்திரவாதி</b> அல்பென் தன் முதல் முயற்சியில் சிறிய தோல்வியை தழுவினாலும் தீமைக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது இல்லை. அதற்கு பிறிதொரு வழியை கண்டடையும் அவன், தான் எதிர்த்து போராடப் போவது தன் பரம வைரியான ஜெரானஸ் என்பதையும் அறிந்தவனாகவே இருக்கிறான். தன் புதிய முயற்சிக்கு உதவும் ஒரு பொருளை கொண்டு வர இயானையும், க்மோர்க்கையும் அவன் ஆதிவனத்திற்குள் அனுப்பி வைக்கிறான். ஆதிவனத்தினுள் வாழ்ந்து வரும் எல்ஃபுகள் வீரர்களுக்கு உதவியாக தாவரவியல் அறிவு கொண்ட எல்ஃப் இளநங்கை செராவை அனுப்பி வைக்கிறார்கள். செரா இதன்வழியாக தன் வேர்களை துறந்து செல்லும் ஒரு எல்ஃபாக சித்தரிக்கப்படுகிறாள். ஓர்க்குகளை வனத்திலிருந்து அடித்து விரட்டிய எல்ஃபுகள் வழிவந்தவளுக்கும் ஓர்க்கான க்மோரிற்கும் இடையில் உருவாகும் நட்பு மிக மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான தருணங்களாக அவை இக்கதையில் அமைகிறது. புதிய இனங்களை நோக்கி செல்லும் செராவின் தயக்கமும், அச்சமும் கதையில் தெளிவாக கூறப்படுகிறது. படிப்படியாக அவள் துடுக்கான ஒரு வாயாடி எல்ஃபாக மாறுவதும் ரசிக்கப்படும்படியாக சொல்லப்படுகிறது. அதே போல ஆதிவனத்தில் வரும் மிக முக்கிய பாத்திரமான முரட்டு அன்னை பாத்திரமும் சிறப்பான ஒன்றே. இக்கதையில் நான் விரும்பி ரசித்த பாத்திரங்களில் அப்பாத்திரத்திற்கு தனியிடமுண்டு.<br />
<br />
<b>இவ்வாறாக</b> பல நிலங்கள், மக்கள், மனிதர்கள், விசித்திர விலங்குகள், மலைவாழ் குள்ளர்கள், அவர்களின் ரகசியங்கள், வரலாறுகள் என விரியும் இக்கதை பீட்டர் ஜாக்சன் திரைப்படுத்திய டால்கியனின் நாவல்களின் பின் அனுபவமாக அதிக பிரமிப்பை உருவாக்காமல் போனாலும் குழப்பங்கள், சுழிகள் இல்லாத தெளிவான மிகைபுனை சாகசம் ஒன்றின் சுவையின் ஒரு கணிசமான பகுதியை தரவே செய்கிறது. 2007 ல் இத்தாலிய மொழியில் வெளியான <b>Dragonero </b>எனும் இக்கதை 2014 ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே டார்க் ஹார்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. 286 பக்கங்களில் <b>Dragonero </b>வின் கதாசிரியர்கள் <b>Luca Enoch</b>, <b>Stefano Vietti</b> சிறப்பாகவே செயற்பட்டு இருக்கிறார்கள். சித்திரங்களுக்கு பொறுப்பேற்றிருப்பவர் <b>Giuseppe Matte</b>. பல இடங்களில் அசர வைக்கும் இவர் சித்திரங்கள் சில இடங்களில் ஏதோ அவசரத்தில் வரைந்த உணர்வை ஏற்படுத்துகிறது, அதுவும் மிக முக்கியமான காட்சி ஒன்றி அவர் ஏன் அப்பாணியை கையாண்டார் என்பது ஆச்சர்யமான ஒன்று. காலம் அசையாமல் நிற்கும் தருணமொன்றில் சித்திரங்கள் வேறுபட்டு தெரிய வேண்டும் என ஆசிரியர் குழு முடிவெடுத்திருந்தால் அது வாசகர்களால் ரசிக்கதக்கவொரு விளைவை தரவில்லை என்றே நான் கூறுவேன்.<br />
<br />
<b>மேலும்</b> சாகசத்தின் முடிவுப் பகுதியும் மிகவும் சுருங்கியது போன்ற உணர்வை தருகிறது. கதையை நீடித்து விரிவாக சொல்லியிருக்க வேண்டிய சமயத்தில் அள்ளி முடித்த கொண்டைபோல ஒரு முடிவுப்பகுதி என்பது கதை உருவாக்கிய எதிர்ப்பார்ப்பின் மீது பலமாக மோதி சாய்த்து விடுவதாக இருக்கிறது. முதல் முயற்சி என்பதால் சுருக்கமாக முடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது எடிட்டிங்கில் வெட்டப்பட்டிருக்கலாம் என நானே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதை விட வேறு வழி இல்லை. இறுதியில் ஒரு உச்சவிலங்குடன் நடக்கும் மோதல் இப்படியான ஒரு எளிமையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பது மிகைபுனைவு சாகசமே அதைப்பார்த்து வேதனைக் கண்ணீர் விடும் ஒரு தருணமாகி விடுகிறது. பீட்டர் ஜாக்சனும் இதற்கு ஒரு காரணமே. ஆனால் சாகசம் இக்கதையுடன் நின்று விடவில்லை தொடரும் என்பதுதான் ஆறுதல். ஆம் சென்ற வருடத்திலிருந்து பொனெலி பதிப்பகம் மாத வெளியீடாக இக்கதை வரிசையை வெளியிட ஆரம்பித்து இருக்கிறது. பொனெலி இப்போது தமிழ் மொழியுடன் நல்ல உறவில் இருப்பதால் ஏதோ ஒரு சுபதின சுபவேளையில் கறுப்பு ட்ராகன் தமிழில் சிறகடிக்கலாம் இல்லையா !!!<br />
<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68590237095988525062014-05-11T06:53:00.000+02:002014-05-11T15:52:25.374+02:00Inferno<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX7ZUa6CQfM3coaEWxKZe3Q0QsjfcqN2DRtEouczTi0CLyvC71DuJH9z_oTVdmr7usVMypGnyhCn9d_i0cxkRdXcjY0iIVYbsBSuP_KQd1gaw0HnhWdzg9YhBXJFd5BoR6o7CIGjkIabLq/s1600/couverture-livre-inferno-fr-707x1024.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX7ZUa6CQfM3coaEWxKZe3Q0QsjfcqN2DRtEouczTi0CLyvC71DuJH9z_oTVdmr7usVMypGnyhCn9d_i0cxkRdXcjY0iIVYbsBSuP_KQd1gaw0HnhWdzg9YhBXJFd5BoR6o7CIGjkIabLq/s1600/couverture-livre-inferno-fr-707x1024.jpg" height="320" width="220" /></a></div>
<b>டான் ப்ரவுனின்</b> Inferno நாவல் வெளியான நிகழ்வுடன் அது குறித்த காட்டமான விமர்சனங்களும் இணையத்தில் பரவலாக நிகழ்ந்தன. டான் ப்ரவுனின் வழமையான அமைப்பில் உருவான நாவல், இது ஒரு சுற்றுலா வழிகாட்டி, ஆபத்து ஒன்றை தடுக்க விழைபவன் கட்டிடக்கலையினதோ அல்லது எந்த ஒரு கலைப்படைப்பின் உன்னதத்திலோ தன்னிலை மயங்குவானா, சிரிக்க வைக்கும் கதை சொல்லும் முறை .. இப்படியாக பட்டியல் நீண்டது. இன்றும் இவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். அவ்வகை விமர்சனங்களை நாவலை படித்தவன் எனும் வகையில் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் டான் ப்ரவுன் தன் நாவலில் முக்கிய பேசுபொருளாக கொண்டது குறித்து முன்பு நான் சுட்டிய விமர்சனங்கள் போலவே நானும் பேசப்போவது இல்லை. ஏனெனில் நாவலில் ஒரு பாத்திரம் பேசுவது போலவே எம் முன்னால் இருக்கும் தலையாய பிரச்சினையை நாம் பெரும்பாலும் விலக்கி விட்டு எளிதான பிரச்சினைகள் குறித்து பேசித்தீர்ப்பவர்களாகவே இருக்க முற்படுகிறோம். நாவலை படித்து சில நாட்கள் ஆனபின்னால் நாவலில் டான் ப்ரவுன் சுட்டிக் காட்டிய முக்கிய விடயத்தை என்னாலும் புறக்கணித்துவிட முடிந்திருக்கிறது.<br />
<br />
<b>இவ்வகையான</b> ஒரு புறக்கணிப்பின் காரணமாகவே ராபர்ட் லாங்க்டன் மீண்டும் ஒரு புதிரை விடுவிக்க ஓட வேண்டி இருக்கிறது. இம்முறை அவர் ப்ளோரன்ஸ் நகரில் ஓட ஆரம்பிக்கிறார் அவர் தன் ஓட்டத்தை முடிக்கும்வரை டான் ப்ரவுன் தான் சூவிகரித்துக் கொண்ட வெற்றிப்பாணியில் தன் கதையை சொல்லி செல்கிறார். பெண் துணை இல்லாமல் ராபர்ட் லாங்டன் ஓட முடியுமா?! ஆகவே கூடவே ஒரு பெண் பாத்திரமும் அவருடன் துணையாக ஓடுகிறது. ஒரு நாளுக்குள் புதிர் ஒன்றிற்கு விடை தேட வேண்டிய அவசியம் லாங்டனிற்கு இருக்கிறது ஆனால் அதை அவர் அறிய வாய்ப்பு ஆரம்பத்தில் இருப்பது இல்லை. ஏனெனில் இம்முறை லாங்டனிடம் ஒரு இழப்பை டான் ப்ரவுன் கதையின் ஆரம்பத்தில் உருவாக்கி விடுகிறார் ஆகவே லாங்டன் தன் இழப்பு மர்மத்துடனும், புதிர் மர்மத்துடனும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ஓடுகிறார்.<br />
<br />
<b>தீமையை</b> செய்ய திட்டங்களை முன்னெடுத்தவன் அத்திட்டங்களை யாரேனும் தடுக்கும் வகையில் அது குறித்த தகவல்களை புதிர்போல தந்து செல்வானா எனும் தர்க்கம்சார் கேள்வியும் இந்நாவல் வெளிவந்தபோது எழுந்தது. கதையை படித்து செல்கையில் இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். மனித இனம் குறித்த பொறுப்புக்கள் கொண்ட அமைப்புக்கள் மத்தியில் கிடைக்கும் எதிர்வினைகளால் ஒருவன் அறம்சார்ந்த பார்வையில் மிகவும் மோசமானதும், குரூரமானதும் என கருததக்க ஒரு திட்டத்தை நிகழ்த்த முயல்கிறான். ஆனால் அவன் தரிசனப்பார்வை தாந்தே தன் கவிதை இலக்கியத்தில் விபரித்த நரகத்தினை இவ்வுலகிற்கு கொண்டு வருவதான உருவகமாக இருக்கிறது. இம்முறை எதிர் பாத்திரம் முன்வைக்கும் கருத்துக்களை மறை கழன்ற அறிவுஜீவி எனும் பார்வையுடன் வாசகர்கள் விலக்கி செல்ல முடியாது. அப்பாத்திரம் முன்வைக்கும் தரவுகள் நிகழக்கூடிய ஒன்றின் சாத்தியத்தையே தெளிவுபடுத்துகின்றன. எவ்வாறு சமூகம் நரகம் ஒன்றை நோக்கி இறங்குகிறது என்பதை அப்பாத்திரம் வழியே சொல்கிறார் கதாசிரியர். தாந்தே தான் இறங்கிய நரகத்திலிருந்து வெளியே வந்து விடுகிறார் ஆனால் மனிதகுலம் தான் இறங்கவிருக்கும் நரகிலிருந்து வெளிவருமா என்பதுதான் இங்கு கேள்வி. ஏனெனில் அது குறித்து அக்கறை கொள்ள வேண்டிய அமைப்புக்களிடம் அதற்கான சிறப்பு தீர்வுகள் ஏதும் கிடையாது. எதிர்பாத்திரம் குரூரமான அச்செயலை செய்வதற்கான சித்தாந்தமும் வியக்க வைக்கும் ஒன்றே. அது மனித பரிணாமப் பாதையின் எல்லைகளை காண்பதாகவே இருக்கிறது. இவ்வகையில் இந்தப்பாத்திரம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகவே மாறுகிறது வெறுக்கப்படக்கூடியதாகவல்ல.<br />
<br />
<b>கதை</b> நடக்கும் நகரங்கள் குறித்தும் அங்கிருக்கும் கலைவடிவங்கள் குறித்தும் எனக்கு அதிகம் தெரியாது என்பதால் நாவலில் வரும் தகவல்கள் எனக்கு பிடித்திருந்தது. தாந்தே குறித்தும் அவர் புகழ்பெற்ற படைப்பு குறித்தும் வரும் தகவல்களும் சுவையானவையே. துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டா அதன் இலக்கை மட்டும் அடைய வேண்டும் போகும் வழியில் நமீதாவின் அழகை வர்ணிக்க கூடாது என எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்களுக்கு இந்நாவல் எரிச்சலை வழங்கும் என்பது உண்மை. டான் ப்ரவுனின் வழமையான கதை சொல்லலுக்கு பழகியவர்களுக்கு இங்கு கதை சொல்லலில் புதுமையாக ஏதும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர் சொல்ல வந்த விடயத்தை பல தகவல்களுடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் என்பதும் உண்மைதான். தாந்தே, இன்ஃபெர்னோ, ப்ளோரன்ஸ், வெனிஸ் நிபுணர்கள் விலகிச் செல்ல வேண்டிய வெகுஜன படைப்பு<b> Inferno</b>.</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73263789475866627802014-04-08T18:27:00.000+02:002014-04-08T18:27:11.299+02:00முக்கோணம் இல்லா முச்சந்தி அல்லது நீதி செத்த நிலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv1QGF9tGmpIKrYeBJ_F9rPxyLahffLBqlpL0TetDyaXSeA2n2rT98wN6lICaiFYm2KBxWcc9Q4AVl7I8Y-H9l7Kb6x1DpvtpMlNNKnupdJrQE8dfejTmx3odX2Sg7mv1mTutz6-mAGVPZ/s1600/Couv_163842.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv1QGF9tGmpIKrYeBJ_F9rPxyLahffLBqlpL0TetDyaXSeA2n2rT98wN6lICaiFYm2KBxWcc9Q4AVl7I8Y-H9l7Kb6x1DpvtpMlNNKnupdJrQE8dfejTmx3odX2Sg7mv1mTutz6-mAGVPZ/s1600/Couv_163842.jpg" height="400" width="296" /></a></div>
<b><span style="font-size: x-large;"><br /></span></b>
<b><span style="font-size: x-large;">வதனமோ சந்த்ரபிம்பமோ - 14</span></b><br />
<b><br /></b>
<b>டெக்ஸ் </b>கதைகளின் ரசிகர்களாக இருக்கும் அன்பர்கள் புதியதொரு டெக்ஸ் கதையை படிக்க ஆரம்பிக்கும்போது கடவுளே இது பரட்டை கதையை விட மோசமாக இருக்ககூடாது எனும் வேண்டுதலுடனேயே அதை படிக்க ஆரம்பிக்கிறார்கள். இதில் ஒரு தந்திரம் உண்டு. எந்த பரட்டை கதையுமே டெக்ஸ் கதையை விட மொக்கையாக இருப்பது ஒன்று. பரட்டை கதையை விட மொக்கையாக டெக்ஸ் கதை எதுவுமில்லை என்பது இன்னொன்று. இந்த நம்பிக்கையின் துணையுடனும் எவ்ளோ அடிச்சாலும் நாம தாங்குவோம் எனும் டெக்ஸ் கதைகள் தந்த சிந்தாந்த அனுபவ முதிர்ச்சியுடனும் கைகோர்த்து டெக்ஸ் கதைகளை படித்து செல்கையில் கண்களின் ஓரம் வழிந்திடும் கண்ணீர் கூட ஆனந்தப் பன்னீராகவே வாசம் வீசி எம் சுற்றுச் சூழலை கிறங்க வைக்கும் என்பதை அறியாத டெக்ஸ் ரசிகரும் இங்குண்டோ. அந்த ஆனந்த கிறக்கத்திலே ஊறி பெருமேற்கின் எல்லையற்ற வெளிகளின் வன்காற்றாய் உருமாறி வெஸ்டெர்ன் எனும் தேரேறி வந்திடும் தேவர்களன்றி வேறு யாராக டெக்ஸ் ரசிகர்கள் இன்று இருந்திடவோ இனம் கண்டறியப்படவோ கூடும் என்பதை உரைப்பீரோ பார் உறை பாவலரே!!<br />
<br />
<b>இவ்வாறாக</b> 1989ம் ஆண்டில் இந்தப் புவியில் மலர்ந்திட்ட சிறப்பு மலராம் <b>TEX</b> <b>SPECIAL n°2</b> ன் கதையான <b>Terre sans Loi</b> எவ்வாறு டெக்ஸ் ரசிகர்களை களிப்புற வைக்கிறது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம். கதை வெளியாகி வெள்ளிவிழா காணும் காலம் வந்துவிட்ட பின்பும்கூட ஒரு கதையை படிக்க நாம் தைரியமாக தயாராகிறோம் என்றால் உண்மையாக அது ஒரு காலம் கடந்து நிற்கும் படைப்பு அல்லது கரும்பாறை ஒன்றின் புடைப்பு என்பதை அறியாதவர்கள் அல்ல டெக்ஸ் அபிமானிகள். ராட்சத டெக்ஸ் என இத்தாலியில் இதன் ஆரம்ப காலங்களின் செல்லமாகவும் டெக்ஸ் கதைகளிற்கே உரித்தான செருக்குடனும் அழைக்கப்பட்ட இவ்வகை கதைகள் மாத வெளியீடுகளில் இருந்து தம்மை தனித்து அடையாளம் காட்டுபவையாக இருந்தன. கதை மொக்கையாக இருந்தாலும்கூட ராட்சத டெக்ஸ் 2 ஒரு மொக்கை என இலக்கத்துடன் தனித்து அடையாளம் காணப்படக் கூடியவையாகவும் சுட்டிக் காட்டப்படக் கூடியவையாகவும் இவை இருந்தன என்பதும் இவற்றின் தனித்துவங்களில் ஒன்று.<br />
<br />
<b>இப்போது</b> நீதியில்லா நிலம் எனும் இக்கதையின் தலைப்புக்கு வருவோம். இந்த உலகில் எங்குதான் நீதி வாழ்கிறது எனும் கேள்வியை எழுப்பாத அவநம்பிக்கையாளர்கள் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக அந்த ஊரிற்கு டெக்ஸை அவரின் கூட்டாளிகளுடன் எப்படியாவது ஒரு சாக்கு சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். டெக்ஸ் அந்த ஊரிற்கு போய் ஒரு ஐம்பது பக்கங்களின் பின் அங்கு அதுவரை இல்லாமல் இருந்த நீதி துளிர்விட ஆரம்பித்து டெக்ஸ் அண்ட் கோ குட்பை சொல்லி அந்த ஊரை விட்டு கிளம்பும் நிலையில் ஆயிரமாண்டு விருட்சத்தின் வளர்ச்சியை பெற்றிருக்கும். இப்போது அவநம்பிக்கையாளர்களை ஒரு துச்சப்பார்வை பார்த்து கண்களில் சற்று ஏளனத்தையும் வரவழைத்துக் கொண்டு டேய் போய் சாஃபோர்ட்ல பாருங்கடா நீதி எப்டி கிளை விட்டு நிழல் தருதுங்கிறத என்று சொல்லி விட்டு ஒரு டெக்ஸ் ரசிகன் நிமிர்ந்து நேராக ஒரு நேர்கோட்டு பாதையில் - சூரியன் மறைந்து கொண்டிருக்கும் திசையும் நேரமுமாய் இருந்தால் உசிதம்- கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும். மனதில் எழும் எந்த வசையும் வெளியில் வந்திடாத ஒரு உறங்கும் எரிமலையாக நடப்பது என்பதை கருவறையிலேயே ஒரு டெக்ஸ் ரசிகன் கற்று விட்டிருக்கிறான். ஆக அநீதியின் அந்தப்புரமான சாஃபோர்ட் நகரில் நீதியை தம் காலின் கீழ் போட்டு குத்து பரதம் டிஸ்கோ சல்சா கரகம் டிவிஸ்ட் ஸ்விங் போன்ற இன்னபலவகை நடனங்களை ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு நீசர் கும்பலை அடி பின்னியெடுத்து எவ்வாறு அங்கு நீதி விதையை டெக்ஸ் அண்ட் கோ விதைக்கிறார்கள் என்பதுதான் டெக்ஸ் ஸ்பெசல் 2 ன் மையக்களம் என்பதை டெக்ஸ் அபிமானிகள் லக்கியின் துப்பாக்கி சுடும் வேகத்தைவிட வேகமாக சுட்டிருக்க வேண்டும்.<br />
<br />
<b>க்ராண்ட்</b> கோட்டைக்கு டெக்ஸை அழைத்து யப்பா ஒரு நடை சாஃபோர்ட் வரை போய்ட்டு வாப்பா என காலனல் வெல்ஸ் சொன்னதுதான் தாமதம் டெக்ஸ் உடனடியாக நான் என்ன செய்தாலும் அதை யாரும் எதுவும் கேட்ககூடாது அதற்கு உத்தரவு தாங்கன்னு உறுமும் காட்சியில் டெக்ஸின் ரசிகர்களின் கையில் இருந்த மிக்ஸர் தட்டு கீழே விழுவது உறுதி. தயவுசெய்து மீண்டும் உங்கள் தட்டில் மிக்ஸரை நிரப்பாதீர்கள். ஏனெனில் மிக்ஸர் தட்டு மட்டுமல்ல நீங்களே படித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து தூக்கி எறியப்படும் அளவிற்கு இக்கதையில் ஆக்சன் இருக்கிறது. இந்த ஆக்சன்களை நான்கு கட்டங்களாக இந்தக் கதையில் பிரிக்கலாம்.<br />
<br />
<b>1- சாஃபோர்ட்டில்</b> தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தபின் வாய்பா க்ரீக்கில் வந்து தங்கியிருக்கும் மாக் கார்மிக்கை தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக சந்திக்க செல்லும் டெக்ஸ் அண்ட் கோ, கானாடோ எனும் அப்பாசேயின் தலைமையின் கீழ் இயங்கும் அப்பாசே அடியாள் அணியுடன் அதிரடியாக ஆக்சனில் இறங்கும் ஆக்சன். அப்பாசேக்கள் மலையில் இருந்து குதித்து சீறிப்பாயும் ஆற்றில் சிம்பிளாக நீந்தி செல்வதில் வல்லவர்கள் என்பதை கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி உணர்ச்சிகரமாக நிறுவும் அற்புதமான ஒரு சந்தர்ப்பமாக இது கதையில் அமைகிறது. மேலும் தனக்கு சாஃபோர்டில் நிகழும் அநீதிகள் பற்றிய தகவல்கள் அதிகம் ஏதும் தெரியாது என்றுவிட்டு சாஃபோர்டில் நிகழும் அனைத்தையும் மாக் கார்மிக் புட்டு புட்டு வைக்கும் காமெடி உலகத்தரமான காமெடி என்பதையும் நாம் ஒதுக்கி விடலாகாது.<br />
<br />
<b>2- பால் மாரிசன்</b> எனும் குதிரை வியாபாரியிடம் தகவல் அறியச் செல்லும் டெக்ஸ் அண்ட் கோ தகவல்களை அறிவதற்காக பால் மாரிசன் காங்குடன் போடும் ஆக்சன். ஐந்தடி தூரத்தில் நின்று சுட்டாலும் தோட்டா உங்கள் உடலில் படாமல் நெளிவது எப்படி எனும் பாலபாடத்தின் அரிச்சுவடி தன் கையெழுத்தை இந்த ஆக்சன்களில் கிறுக்குவதை அபாரமாக காட்டி இருக்கிறார்கள்.<br />
<br />
<b>3- ஃபக்கோ சாவேஸ்</b> [ தவறாக உச்சரித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல] பண்டமாற்று நிலையத்தில் வறுத்த இறைச்சி உருளைக்கிழங்கு பொரியல் பீர் என போட்டு தாக்கி செரிமானம் கண்டபின்பாக டெக்ஸ் அண்ட் கோ ஃபக்கோ சாவேஸ் அண்ட் கோவுடன் போடும் ஆக்சன். ஜன்னல்களினூடாக துப்பாக்கிகளை பறிப்பது. ஜன்னல்களிற்கு அப்பால் நிற்பவர்களை சுடுவது. ஜன்னல் அருகே விழுந்து சாவது. ஜன்னல் வழியாக தப்பி ஓடுவது. மூன்றடி தூரத்தில் டெக்ஸ் விழுந்து கிடந்தாலும் டெக்ஸை சுடாமல் டெக்ஸ் பிருஷ்டத்திற்கு அருகே சுட்டு மண் கிளப்புவது என ஆக்சனும் காமெடியும் கலந்து கட்டி நீயா நானா சூப்பர் ஜோடி மேளா நாடாத்தும் ஆக்சன் தருணமாக இது அமைகிறது.<br />
<br />
<b>4. அ] ஃபக்கோ சாவேஸ்</b> பண்டமாற்று நிலையத்திலிருந்து செமகாமெடி கெட்டப் ஒன்றில் டெக்ஸ் அண்ட் கோ கிழட்டு நெட்டின் குதிரை வண்டியில் செல்லும் வழியில் இடைமறிக்கும் கேடி கெவின் க்ராஸ்பி காங்குடனான ஆக்சன். மேற்கில் வரட்சி பெண்களை அடையாளம் காண்பதிலும் நிலவுகிறது என்பதை கதாசிரியர் சூசகமாக கோடிட்டு காட்டும் பகுதி இது. பெண்களால்தான் சும்மா இருந்த அமைதிப் பூங்காக்களில் எல்லாம் மோதல் முளைவிடுகிறது எனும் உண்மையை அப்பட்டமாக கன்னத்தில் அறைந்து கூறும் ஆக்சன் இங்கு குதிரைகள் களைக்கும்வரை ஓடி ஓடி காட்சியாக்கப்படுகிறது. டெக்ஸின் இஸ்பானிய மொழிப்புலமையும் அதை அவர் பிரயோகிக்கும்போது அவர் காட்டும் முகபாவனைகளும் தங்கப்பனையும் ஆஸ்கரும் பெர்லின் தங்கக்கரடியும் சேர்த்து தந்தாலும் கிடைக்காத ஒரு திறமை மேற்கின் சொர்ண்மால்யனாக அவரை அடையாளம் காட்டி நிற்கிறது.<br />
<br />
<b>ஆ] சாஃபோர்ட்</b> சிறையை கேடி கெவின் க்ராஸ்பியும், மெக்ஸிக்க வெடைக்கோழி லோலா சாவேஸும் இணைந்து தாக்கும் ஆக்சன். கதையின் இறுதி ஆக்சன். சும்மா கோழிக்கூட்டுக்குள் அடைபட்ட சிங்கம்போல் டெக்ஸ் அடிபின்னும் காட்சி இது. இந்த ஆக்சனிற்காகவே லோலா சாவேஸ் இறுக்கமான கால்சட்டை அணிந்து வருகிறார். அப்போது அவர் பின்னிளமைகளின் செழிப்பையும் வனப்பையும் தாராளத்தையும் பிரபல சித்திரக் கலைஞர் அல்ஃபெர்டோ ஜியோலிட்டி உணர்பரவசமாக படைத்து எம்மை கிறங்கடித்து விடுகிறார். ஒரு தருணத்தில் ஆக்சனை பார்ப்பதா லோலாவின் பின் லோலாவை பார்ப்பதா என்பதிலேயே நமக்கு லோல் ஆகி விடுகிறது.<br />
<br />
<b>அல்ஃபெர்டோ</b> ஜியோலிட்டி பிரபலமான ஒரு சித்திரக்கலைஞர். சிஸ்கோ கிட், ஸ்டார் ட்ரெக், பிளானட் ஆப் த ஏப்ஸ், லோர்ட் ஜிம், டார்ஸான், ஸோரோ என நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார். காமிக்ஸ் துறையில் வால்ட் டிஸ்னிக்கு பின்பாக எடிசன் விருதை பெற்ற பெருமையும் பெற்றவர். அவர் பாணி தனித்துவமானது, மரபார்ந்தது என்ற போதிலும் அது என்னை அதிகம் கவரவில்லை. அவர் சித்திரங்களை காண்கையில் அது குறித்த ஒரு கிண்டலுணர்வு குளமொன்றின் மேல் அலைந்திடும் துரும்பாக அலைவதை தடுக்க இயல்வதென்பது அடிக்க ஓங்கிய டெக்ஸின் கையை தடுப்பதற்கு சமனாக இருக்கிறது. கார்சனை நடிகர் திலகம் சிவாஜி போலவும் டெக்ஸை ஹிந்திபட டாடி போலவும் வரையும் திறன் அவரின் தனித்துவங்களின் ஒன்று என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.<br />
<br />
<b>மொத்தத்தில்</b> 25 வருடங்களுக்கு முன்பாக வந்த ஒரு வெஸ்டெர்ன் ஆக்சனை சகிக்கும் மனப்பான்மை நிரந்தரமாக உடைய வாசக உள்ளங்களுக்கு இக்கதை ஒரு வரப்பிரசாதமாகும். டெக்ஸ் இவ்வளவு வன்முறையாளராக இதற்கு முன்பு காட்டப்பட்டிருக்கிறாரா தெரியவில்லை. உணர்ச்சியின் வேகத்தில் கார்சனின் கன்னத்தில் ஒன்று போடவும் தயாராக இருக்கும் டெக்ஸை வாசகர்கள் இக்கதையில் சந்திக்கலாம். அடி அடி அடி என்று போட்டு அடிக்கிறார் டெக்ஸ். குதிரைகள் மாடுகள் வல்லூறுகள் என அந்த வறள்நில வாழ் பிராணிகள் எல்லாம் டெக்ஸின் கையில் மாட்டிக் கொண்டவர்களிற்காக கண்ணீர் சிந்துவதை ஒரு அனுபவம் கொண்ட வாசகர் கதையின் சட்டகங்களிற்கு பின்னால் உணர்ந்திட முடியும். மாறாக இக்கதையை படிக்கையில் சொர்க்கலோக பூங்காவனம் ஒன்றின் உள்ளே இருப்பதை போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுமாயின் நீங்கள் உங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொள்ளலாம். உண்மையான டெக்ஸ் ரசிகர் நீங்கள்தான் என்பதற்கான அடையாளம் அதை தவிர்த்து வேறில்லை. இப்பதிவை எழுதி முடிக்கையில் ஆகஸ்டு மாதம் ஜம்பு ஈஸ்ட்மென் கலரில் வருகிறதாமே என என்னிடம் ஒருவர் சந்தேக கேள்வி எழுப்பினார். யாருக்கு தெரியும். ஈஸ்ட்மென் கலரில் வந்தால் ஜம்பு கூட நன்றாக இருக்ககூடுமோ என்னவோ!!</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40800788130938078742014-01-18T11:27:00.001+01:002014-01-18T11:28:24.601+01:006174<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiconEMkEZc99hveoGmCLSAxZntNteUbJCGu6vntS_XU9grEbNLrbBuUeOk1lThqGYDrxfLdLCyN7JzSRan5K6tbDfnOPJVLmiRemRzNvKafCnmBHyn7kCcH_40r-CKehBQ2VDSui1EQpL1/s1600/6174.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiconEMkEZc99hveoGmCLSAxZntNteUbJCGu6vntS_XU9grEbNLrbBuUeOk1lThqGYDrxfLdLCyN7JzSRan5K6tbDfnOPJVLmiRemRzNvKafCnmBHyn7kCcH_40r-CKehBQ2VDSui1EQpL1/s1600/6174.jpg" /></a></div>
<b>பூமியின் </b>மேலே இரு விண்கற்கள் புவிநிலை வட்டப்பாதையின் இரு குறித்த புள்ளிகளில் நிலைபெற்று புவியை வலம்வர ஆரம்பிக்க... வடகொரிய மற்றும் ரஷ்ய போர்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மூன்றாம் உலகப்போரிற்கான சாத்தியம் ஒன்றினை உருவாக்க நகர... தொன்மம் ஒன்றின் பரமரகசியமானது உலகிற்கு தன் முகம் காட்டும் ஆயத்தங்களில் இறங்குகிறது... மனித குலத்தின் அழிவு என்பதே முடிவு என இயங்கும் இச்சக்திகளின் ஆவேச ஆட்டத்திலிருந்து மனிதகுலத்தை காத்திட யாரால்தான் முடியும்? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என பாசத்துடன் முன்வந்து ஒரு நிபுணர் குழுவை தன் 6174 நாவலில் களமிறக்கி இருக்கிறார் நாவலாசிரியர் சுதாகர். அறிந்ததை கொண்டு அறியாததை அறியும் தேடலில், வாழ்ந்திருந்த நம்பிக்கைகள் இறக்க புதிய நம்பிக்கைகள் தொன்மங்களுடன் உயிர்துளிர்க்கும் புனைவில்; வரலாறு, தொன்மம், அறிவியல், சர்வதேச ராஜதந்திர அரசியல், உளவுத்துறைகள், ரகசியக்குழுக்கள், அங்காங்கே தூவப்பட்டிருக்கும் நுட்பமான நகைச்சுவை என இப்பட்டியலை இன்னம் நீளவைக்கும் அளவிற்கு தன் படைப்பை பல்லம்சங்களால் நிரப்பியிருக்கிறார் சுதாகர்.<br />
<br />
<b>நாவலின் </b>ஆரம்பத்தில் கதையானது அழகான சிட்டுக்கள் மத்தியில் தனியாக விடப்பட்ட ஒரு அப்பாவி கணவனின் விழிகளைப்போல காலம்விட்டு காலம் தாவுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பாயும் கதையின் காலம், இடம், வேளை என்பவற்றை ஒரு கனமாக எடுத்திடாது கதையோட்டத்துடன் கலந்துவிடுவது இப்பகுதியில் வாசகர்களிற்கு நலமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கதையின் ஓட்டத்தில் தான் உருவாக்கிய காலப்பாய்ச்சல்கள் எல்லாவற்றிற்குமான காரணங்களை கதையில் விளக்கிவிடுகிறார் சுதாகர். இந்தக் காலப்பாய்ச்சல்களினூடு கதையின் பிரதான பாத்திரங்கள் சென்னையில் ஒன்று கூட கதையும் பாய்ச்சல்களிலிருந்து ஓய்வுபெற்று முன்னோக்கி சீராக நகர ஆரம்பிக்கிறது.<br />
<br />
<b>6174ன் </b>ஆரம்ப பக்கங்களில் சுதாகரின் கதைசொல்லும் பாணி அல்லது அவரின் புனைவு மொழியுடன் ஒன்றிட எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது அந்தக் கதைசொல்லும் பாணியுடன் என்னால் உடனடியாக ஒன்றிட முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு 150 பக்கங்களின் பின்பாக அவருடைய நடையுடன் என்னால் ஒன்றிட முடிந்தது. இடறல்கள் ஏதும் இல்லாமல் கதையோட்டத்துடன் கைகோர்த்திட முடிந்தது. சுதாகரின் கதைமொழி இளமையாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அதனுடன் என்னை இணைத்துக் கொள்ள நானும் என்னை இளமையாக்கிகொள்ள வேண்டியிருந்தது. இளமைகள் ஈடாகிவிட்டநிலையில் ஓட்டத்தில் தடையேதுமிருக்கவில்லை.<br />
<br />
<b>சிதம்பரம் </b>முதல் சிதம்பலம்வரை, மயன் முதல் மாயன்வரை உள்ள தொடர்புகளையும் மேலும் இதுபோன்ற பிற தகவல்களையும் படிப்படியாக வாசகன் முன் பரிமாற ஆரம்பிக்கிறார் சுதாகர். அனகொண்டா எல்லாம் எங்கள் ஊர் சிட்டிசன் என்கிறார். எதிர்த்து ஏதும் மனதில் கேள்வி எழுந்தால் அகராதியை ஆதாரமாக கொண்டு மிரட்டுகிறார். இப்படியாக அவர் அள்ளிப் போடும் தகவல் கோலங்கள் உருவாக்கும் சுவாரஸ்யமானது கதையை வேகமாக நகர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. தேடி எடுத்த தகவல்களை எல்லாம் சீரான பொருத்தத்துடன் தக்க இடங்களில் இடம்பெறசெய்த சுதாகர் பாராட்டிற்குரியவர்.<br />
<br />
<b>கதையானது </b>150 பக்கங்களை தாண்டி கருஞ்சுழி எண் குறித்த விளக்கத்தை எட்டியபின்பாக நாவல் தன் வேகத்தை அதிகரித்து விடுகிறது. மிங்குனிற்கு செல்லும்வரை நாவலின் பக்கங்களை வேகமாக புரட்டுவது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. விறுவிறுப்பாக, எளிதான மொழியில், புரியும்விதமாக இப்படியான ஒரு கதையை தமிழில் சொல்ல முடியும் என சுதாகர் அடித்து சொல்லும் பகுதியாக நாவலின் மத்திய பகுதி அமைகிறது. தமிழ் நாவல்களில் சாதாரணமாக கையாளப்படும் அறிவியல் தகவல்களின் ஆழத்தை இன்னும் ஆழமாக்கிவிட்டு அதை இலகுவாக புரிந்திட செய்வதில் சுதாகர் சிறப்பாக செயற்பட்டு இருக்கிறார். ஆனால் மிங்குனை அடைந்தபின் கதை பகோடாவையும், குளத்தையும், பாதாளத்தையும் சற்று அதிகமாக சுற்றி சுற்றி வருகிறதோ எனும் ஒரு தொய்வையும் நாவல் ஏற்படுத்தியது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.<br />
<br />
<b>மூலக்கூறுகளின் </b>பொருண்மைகளை தரவாக்கி அதன் வழியாக தனிநபரை இனம்காணல், செயற்கை குரல் ஒன்றை புத்திசாலித்தனமாக உருவாக்கல் என சுதாகர் புதிய நுட்பங்களால் திகிலூட்டுகிறார். தோலிற்கு கீழே பதிக்கும் நுண்கருவிகள் பற்றி பேசும் சுதாகர் தமிழ் செய்யுள்களாலும், பாடல்களாலும், வடிவக்கணிதத்தாலும் புதிர்களையும் போடுகிறார். போட்ட புதிர்களை என்னைப்போன்ற வாசகர்களிற்காக அவிழ்க்கவும் செய்கிறார். அவர் செய்யுள் புதிர்களை அவிழ்க்கும்போது என் தமிழ் புலமை குறித்த எண்ணமும் அவிழ்ந்து கீழே வீழ்ந்து விடுகிறது. இத்தரைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது மிக எளிமையான சொற்களிலான செய்யுள்களே எனும்போது தமிழை தவறவிட்ட ஏக்கம் மெதுவாக மனதில் வடிவக்கணித கோலம் போடுகிறது. அவர் நாவல் தமிழை போற்றுகிறது என்றால் அது மிகையல்ல.<br />
<br />
<b>சுதாகர் </b>தன் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட தகவல்களை விளக்குவதில் உள்ள எளிமை அவரின் பலம் என்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு தகவலை தந்துவிட்டு அதை நீங்களே தேடிப்பார்த்து கொள்ளுங்கள் என வீட்டுவேலை தரும் கறாரான ஆசிரியபண்பும் அவரிடம் இருக்கிறது. 1908 ல் சைபீரியாவின் சுங்குஸ்காவில் என்ன நடந்தது என்பதை தேடி அறிந்தால் மட்டுமே சுதாகர் தன் நாவலில் முன்வைக்கும் பேரழிவு குறித்த ஒரு மனச்சித்திரத்தை வாசகன் தன்னுள் உருவாக்கி கொண்டு அந்த பரபரப்புடன் நாவலை தொடர முடியும். இவ்வகையில் நாவலாசிரியனும், வாசகனும் இணைந்து களப்பணியாற்றக்கூடிய பண்பையும் இந்நாவல் கொண்டிருக்கிறது எனலாம்.<br />
<br />
<b>சீலகந்தா</b> மீன்கள் பற்றிய வரலாற்றை கதையில் சுவையாக தருகிறார் சுதாகர். ஏன் அந்த மீன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான விளக்கங்களுடனும் கூடவே நேஷனல் ஜியோகிராபிக் அம்மீன் குறித்து நிகழ்த்திய மிக ரகசியமான ஆய்வு ஒன்றைப்பற்றிய விபரங்களுடனும். அவர் வழங்கியவற்றை படித்தபின் யார் இந்த சீலகந்தா, அவர் எப்படியிருப்பார் என அறிந்துகொள்ளாவிடில் என் தலைக்குள் புகுந்த வண்டு வெளியேறாது என்பது உறுதியானது. கூகிள் இமேஜை தட்டி அதில் வந்த போட்டோவை பார்த்தால்.. சீலகந்தா... நம்புங்கள் காஜல் அகர்வால் இடையை எவ்வளவு கரிசனையுடன் ஒரு ரசிகர் வர்ணிப்பாரோ அப்படியாக சீலகந்தாவை கதையில் வர்ணித்திருக்கிறார் சுதாகர். இதற்காக சீலகந்தா இனமே அவரிற்கு கடமைப்பட்டு இருக்கிறது.<br />
<br />
<b>இவ்வாறாக </b>சற்று பெரிதான எதிர்பார்ப்பை வாசகன் மத்தியில் உருவாக்கும் நாவல் அதன் முழுமையானநிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறதா எனக் கேட்டால் எனது பதில்; முழுமையாக அந்த எதிர்பார்ப்பு நாவலில் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான். அனந்த், ஜானகி இருவரும் அன்னியர்களாக இருந்தாலும் கூட கதையோட்டத்தில் பெரிதான தாக்கங்கள் உருவாகி இருக்குமா என்பது ஒரு கேள்வி. லெமூரியர்கள் புரிந்து கொள்ள எடுக்கும் நேரம் குறித்த நுட்பமான நகைச்சுவை.. ஏன் இவள் லெமூரியாவை கட்டி அழுகிறாள், கிழம் ராவுகிறது போன்றவற்றில் இல்லை. எனக்கு சுதாகரின் நுட்பமான நகைச்சுவைதான் இணக்கமானதாக இருக்கிறது. ஐராவதி நதி இன்னம் முழுமையாக ஆய்வுக்குட்படாத நதி அதன் ஆழத்தில் மர்மமான ஜீவன்கள் வாழ வாய்ப்புண்டு எனும் சுதாகரின் வரிகள் கதையின் உச்சக்கட்டத்தில் தரும் ஆச்சர்யம் கதையை சிறிது பலவீனமாக்குகிறது. தொன்மங்கள், ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பெளதிக வகுப்பறை, டாம் க்ளான்ஸி என விரியும் அந்த கூட்டு உச்சக்கட்டத்தில் நாவல் என்னை விட்டு சற்று விலகி சென்றது என்பதுதான் உண்மை. இதை நான் நேர்மையாக சொல்வதே தமிழ் வாசக பரப்பில் இவ்வளவு துணிச்சலுடன் இப்படியான ஒரு நாவலை தயங்காது முன் வைத்த சுதாகரிற்கு நான் தரும் உண்மையான பாராட்டும் உற்சாகமுமாக இருக்ககூடும். இதே சமயத்தில் சகட்டு மேனிக்கு மேற்கத்தைய எழுத்துக்களுடன் சுதாகரின் எழுத்தை ஒப்பிட்டு அவர் படைப்பின் மீது நியாயமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் பதிவுகளையும் ஒரு வாசகர் அவதானமாக கையாள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்.<br />
<br />
<b>மேற்கத்திய </b>எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பின்பாக உள்ள ஆட்பலமோ, பணப்பலமோ, விளம்பரபலமோ சுதாகரிடம் இல்லை. தன் ஓய்வு நேரத்தில் தன் படைப்புக்கான தேடல்களை செய்து தன் நாவலை அவர் சிறுக சிறுக உருவாக்கி இருப்பார் என்றே நம்புகிறேன். அந்த உழைப்பும் அர்ப்பணமும் அவர் நாவலில் நான் கண்ட சில குறைகளை தாண்டியும் மதிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன். சுதாகரின் உழைப்பிற்குரிய வரவேற்பும், உற்சாசகமும், பாராட்டுமே அவரை மேலும் செய்யுள்களால் புதிர்போட வைக்கும். இவ்வகையான நாவல் ஒரு நல்ல ஆரம்பம். ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார் சுதாகர், அது பெருந்தீயாக மாறி டான் ப்ரவுன்களை எரிக்கட்டும்.<br />
<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68249936115133041092014-01-01T11:22:00.000+01:002014-01-01T11:22:50.244+01:00The Wise Man's Fear - The Goodbye Kiss - Jar City<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuy4MBQ9HrYnl8rneiZ6fl_0kVVBTwE_S9V9dImjwCuSN0Y0DJjdrBzfIrU4B5SXePws49v42-zy0E1dKlNtIf0k4pzOwuRMoN9h0HTGAvNaCh3lobDxGhjlj0PWW6y6pylrFtjJm4Fda5/s1600/200px-The_Wise_Man's_Fear_UK_cover.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuy4MBQ9HrYnl8rneiZ6fl_0kVVBTwE_S9V9dImjwCuSN0Y0DJjdrBzfIrU4B5SXePws49v42-zy0E1dKlNtIf0k4pzOwuRMoN9h0HTGAvNaCh3lobDxGhjlj0PWW6y6pylrFtjJm4Fda5/s320/200px-The_Wise_Man's_Fear_UK_cover.jpg" width="209" /></a></div>
<b><span style="font-size: large;">The Wise Man's Fear</span></b><br />
<b><br /></b>
<b>நீங்கள் </b>படிக்கும் ஒரு நாவல் விறுவிறுப்பான ஒன்றாக ஆன அதன் 600 பக்கங்கள் வரை நீங்கள் சென்றாக வேண்டும் என்றால் உங்கள் நிலை எப்படி இருக்கும். இங்கு 600 பக்கம் என்பது நாவலின் மூன்றில் இரண்டு பகுதி என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.என் நிலையும் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் இங்கு எழுதவே தேவையில்லை.<br />
<br />
<b>அந்த </b>600 பக்கங்கள் வரை கதையின் பிரதான பாத்திரத்துடன் நானும் தேமனே அலைந்து திரிந்தேன். ஹாரிபாட்டர் கதைகளின் சாயல் இப்பகுதிகளில் தெரிவது போல எனக்கு தோன்றியதற்கு பற்றிக் ராத்பஸின் இந்த மிக நீண்ட தட்டையான கற்பனை பதிவே காரணம் என்பேன். Kvothe பள்ளிக்கு காசு செலுத்த கஷ்டப்படுகிறார், மதுவிடுதிகளில் இசைக்கலைஞனாக சிறப்பிக்கிறார், சொல்ல முடியாத ஈர்ப்புடன் ஒரு பெண்ணின் பின் சுற்றுகிறார், செல்வந்த பிரபுவின் வாரிசுடன் தொடர்ந்தும் மோதுகிறார், தன் குடும்பத்தை அழித்த அமானுடர்கள் குறித்த தேடல்களை தொடர்கிறார்... சில மந்திர ஏவல்களை முறியடிக்கும் சம்பவங்களையும், அங்காங்கே காணப்படும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் தவிர்த்து இப்பகுதிகளில் பெரிதாக ஏதும் இல்லை. ஆனால் இவற்றைதானே கதைவரிசையின் முதல் பாகத்திலேயே படித்து விட்டோம். என்ன கொடுமை இது என எண்ணி நான் விம்ம ஆரம்பித்த நேரத்தில் Kvothe ஒரு பயணத்தில் இறங்குகிறார்.<br />
<br />
<b>அப்பயணம் </b>அவரை செவெரென் எனும் இடத்திற்கு கொண்டு செல்கிறது அங்கு அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பானவை. பக்கங்கள் பரபரவென நகர்ந்து 600 பக்க கொடுமைக்கு ஓரளவேனும் நஷ்ட ஈடு தருகின்றன. காடு ஒன்றினுள் நடக்கும் மோதல் காட்சி ஒன்றின் விவரிப்பை கதாசிரியர் சொற்களில் கொண்டு வந்திருக்கும் விதம் அபாரமானது. இதன் பின் கதையில் Kvothe பிற நிலம் ஒன்றில் சென்று அந்த இன மக்களின் தற்காப்பு கலைகளிலும் மொழிகளிலும் பயிற்சி பெற்று குறிப்பிடத்தக்க பெயர் எடுப்பது எல்லாம் பெருசு ஜோர்டானின் கதைகளில் ட்ராகன் ரீ பார்ன் செய்து விட்டார்.<br />
<br />
<b>அடுத்த </b>பாகத்துடன் கதை முடியவில்லை எனில் இக்கதை வரிசையை நான் தொடரப்போவது இல்லை. அடுத்த பாகமானது 1000 பக்கம் என்றால் நான் 600 ம் பக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பிப்பேன்.<br />
<br />
<br />
<b><span style="font-size: large;">The Goodbye Kiss</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixGwHG3EbRVmTcOSxl7EPsN376d5Wj2jpPuYhtPgUEs3zpZUTO7TlFkNNKPHqWaWbvTKHh7gWf8tsq7Nd7-c38zx-JONvlpo_1OiyuuooRUW2HgmGParMbYoZsAwAwTlFtP42E4zF5MXq5/s1600/TGK.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixGwHG3EbRVmTcOSxl7EPsN376d5Wj2jpPuYhtPgUEs3zpZUTO7TlFkNNKPHqWaWbvTKHh7gWf8tsq7Nd7-c38zx-JONvlpo_1OiyuuooRUW2HgmGParMbYoZsAwAwTlFtP42E4zF5MXq5/s320/TGK.jpg" width="209" /></a></div>
<b>போனோமா </b>அலுவல முடிச்சோமான்னு இருக்கனும் என்பார்கள் அனுபவஸ்தர்கள். இத்தாலிய வெகுஜன குற்றப்புனையாசிரியர் Massimo Carloto வின் எழுத்துக்களும் அதைப்போன்றதே. அவர் கதை சொல்லல் தன் பாதையிலிருந்து விலகி பூ பறிக்கவோ அல்லது அந்தி சூரியனின் அழகை சொல்லழகால் கவிப்படுத்தவோ செய்வது இல்லை. கொல்வது மட்டுமே காரியம் என்றால் அவர் எழுத்துக்கள் கொல்வதை மட்டுமே செய்கின்றன. அவ்வகையில் அவர் எழுத்துக்கள் ஆழம் அற்றவையாக இருந்தாலும் பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் குறைந்து போவது இல்லை.<br />
<br />
<b>The Goodbye Kiss</b> நாவல் முன்னாள் தீவிர இடதுசாரி சிந்தனை போராளி ஒருவனின் கதை. இத்தாலியில் நிகழ்ந்த கலகங்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தென்னமெரிக்க கெரில்லாக்களோடு தன்னை இணைக்கும் ஒருவன் மீண்டும் தன் தாய் மண்ணிற்கு திரும்பி, வாழ்க்கையில் வெற்றி பெற ஓடுவதே கதை. அதை அவன் எவ்வாறு செய்கிறான் என்பதை தன் வரிகளில் அதிர்வு குறையாமல் எழுதுகிறார் கார்லோட்டோ.<br />
<br />
<b>தன் </b>போராளி சகாக்களை போட்டுக் கொடுப்பதில் இருந்து அறம், மனச்சாட்சி போன்ற பம்மாத்து வார்த்தைகளை பத்திக்கு பத்தி உயிர் கசிய நசுக்கி கொண்டு பறக்கிறது கதை. வாலிப வயதின் வேகத்தில் இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான் தேடும் ஒரு வாழ்க்கைக்காக எடுக்கும் உரு, ஆணி பதித்த செருப்பால் வாசகனை அடி மேல் அடித்து ரத்த களறியாக்குகிறது. சமூகம் கொண்ட வேடம் யாவையும் துகிலுரித்து வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறது கார்லோட்டாவின் எழுத்துக்கள்.<br />
<br />
<b>விலைமாதர்கள்</b>, போர் குற்றவாளிகள், முன்னாள் போராளிகள், ஊழலில் கொழுத்த சட்ட அதிகாரிகள், குற்ற தலைவர்கள் , புதிய சமூகமொன்றின் நாகரீக குற்றவான்கள் என இத்தாலியின் குற்ற சமூகத்தினூடு வாசகனை கட்டி அவன் உடல் காயம்பட இழுத்து செல்கிறது கதை.<br />
<br />
<b>அமெரிக்க </b>ஹார்ட் பாய்ல்ட்டுகளில் காணப்படும் ஆபத்தான பெண், பெண்கள் மீதான கரிசனம், ஈர்ப்பு , இரக்கம் போன்றவை யாவற்றையும் கால்வாயில் வீசி விட்டு செல்கிறார் கார்லோட்டோ. அவர் கதைகளில் அறம், தர்மம், ஒழுக்கம் ஜெயிப்பது இல்லை. வாழ்க்கை தன் அசுரப்பற்களுடன் இரத்தம் வழிய எள்ளல் புன்னகை மட்டும் செய்கிறது. எளிமையான, வழிதப்பாத, ஆழமற்ற, அட்டகாசமான, வன்மையான எழுத்துக்கு சொந்தக்காரர் கார்லோட்டோ<br />
<br />
<br />
<b><span style="font-size: large;">Jar City</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbWYIpuLe4ZzGQcUvhNfG-dO_m49emqL7Sv9YkCdQMbaUFVtTDVKNExBzy1G3OZpjBDkSw2SPs4CpZDQwQMWq2qxVtobJK6RJZJ1X_4M-7PEFfFJ44mCDGI60MzcVdRP8J_hynP34vo6Cq/s1600/jar-city1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbWYIpuLe4ZzGQcUvhNfG-dO_m49emqL7Sv9YkCdQMbaUFVtTDVKNExBzy1G3OZpjBDkSw2SPs4CpZDQwQMWq2qxVtobJK6RJZJ1X_4M-7PEFfFJ44mCDGI60MzcVdRP8J_hynP34vo6Cq/s320/jar-city1.jpg" width="211" /></a></div>
<b>கொல்பெர்க் </b>எனும் எழுபது வயதுடைய நபர் அவன் வசிக்குமிடத்திலேயே கொலை செய்யப்படுகிறான். கொலையை செய்தவன் புதிரான ஒரு தகவலை கொலை நிகழ்ந்த இடத்தில் விட்டு செல்கிறான். இக்கொலை பற்றிய புலனாய்வை குற்றபிரிவு அதிகாரிகளான எர்லெண்டரும் அவரது சகாக்களும் தம் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்கள்.<br />
<br />
<b>ஐஸ்லாந்து </b>நாட்டின் புகழ்பெற்ற குற்றபுனையாசிரியர்களில்<b> Arnaldur Indridason </b>ஒருவர். அவரின் ஜார் சிட்டி நாவல் ஸ்காண்டினேவிய குற்றபுனைகளின் முக்கிய பண்புகளில் ஒன்றான சமூக அவலங்கள் மீதான பார்வையை தன்னில் தெளிவாக உள்ளடக்கி இருக்கிறது. கொலை செய்யப்படும் கொல்பெர்க் பாத்திரத்தின் பின்பாக உள்ள ரகசியங்கள் வாயிலாக ஐஸ்லாந்து சமூகத்தின் அவலநிலை சிலவற்றை நாவல் விபரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறை என்பது பிரதான முன்வைப்பாக இருந்தாலும், பெற்றோரிற்கும் குழந்தைகளிற்குமான உறவென்பது ஐஸ்லாந்தில் எவ்வாறனதாக இருக்கிறது என்பதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது.<br />
<br />
<b>குற்றங்களிற்கு </b>ஐஸ்லாந்து நீதிமன்றங்களில் கிடைக்கும் தண்டனையின் அளவு எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை கதாசிரியர் தெளிவு படுத்துகிறார். குற்றவாளிகள் விடுமுறைக்காலத்தை கழிப்பது போல தமக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைகளை வரவேற்பதை அவர் வரிகள் சொல்கின்றன. திட்டமிட்ட ஒரு கொலைக்கு இரு வருடங்கள் சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வழங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் இவ்வகையான செயல்களை செய்யும் மனிதர்கள் மத்தியில் அது பலமான மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை எனும் வாதத்தையும் இண்ட்ரிடாசன் தன் வரிகளின் பின்னால் சொல்கிறார்.<br />
<br />
<b>ஐஸ்லாந்து </b>நாட்டில் குற்றவாளிகளின் மீது நீதித்துறையிலிருந்து காவல்துறைவரை ஒரு வகை சட்ட நிர்பந்தத்தின் பேரில் காட்டும் சகிப்புதன்மை வியக்க வைக்கிறது. கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் காவல்துறையிலும், மருத்துவதுறையிலும் இருந்து வரும் மெத்தனப் போக்குகள், அலட்சியமான சேவை மனப்பான்மை இவற்றின் வழியாக பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் இண்ட்ரிடாசனின் கதை பேசுகிறது.<br />
<br />
<b>கொலை</b> குறித்த விசாரணைகள் வழியே வண்புணர்ச்சி எனும் குற்றத்தினால் உடையும் வாழ்க்கைகள் பற்றி மென்மையான சோகத்துடன் கதையை எடுத்து செல்கிறார் கதாசிரியர். மென்மையான ஒரு பெண்ணின் வாழ்க்கை வண்புணர்ச்சி ஒன்றின் பின்பாக கொள்ளும் மாற்றங்கள், அவளின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், அதன் பின் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குழந்தை ஒன்றின் இழப்பு தரும் வேதனைகளை புலனாய்வு வழி உணர ஆரம்பிக்கும் ஒரு மனிதன், தன் மகளுடன் தன் உறவை புதிதாக்கி கொள்ளும் நிலையையும் நாவலில் ஒருவர் காணலாம். அதே வேளையில் தன் மகளை துஷ்பிரயோகம் செய்ய தயங்காத மனிதர்களையும் ஒருவர் கதைசொல்லலில் கண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.<br />
<br />
<b>மனித </b>உடலின் உறுப்புக்களை பரிசோதனை தேவைகளிற்காக போத்தல்களில் போட்டு பாதுகாப்பதுபோல மனிதர்கள் தம்மைபற்றி அறிந்திராத ரகசியங்களும் போத்தல்களில் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரகசியங்களை உடைக்கும் வழி அறிந்தவன் ரகசியங்களை அறிந்து கொள்கிறான். தன் வலி தன்னுடன் முடியட்டும் என்பதற்கான செயல்களில் தன்னை மீறி இறங்குகிறான். வண்புணர்ச்சியானது வாழ்க்கைகளை ரகசியங்கள் இடப்பட்ட போத்தல்களை போல மூடச் செய்கிறது, எங்கோ ஒரு ஆய்வுகூடத்தின் இருண்ட அடுக்கொன்றிற்கு அவற்றை காவிச்சென்று அங்கு அவற்றை மறைத்துக் வைக்க முயல்கிறது ஆனால் அது விதைத்த வாழ்க்கைகள் வினைகளிற்கான ஆதாரங்களை ரகசியங்களுடன் சேர்த்து நொருக்க விழைகின்றன.<br />
<br />
<b>இண்ட்ரிடாசனின் </b>நாவலில் பொதிந்திருக்கும் ஒரு சோகம் கதையை குற்றப்புனை என்பதை தாண்டியும் சற்று ஆழமானதாக்குகிறது. கதையுடன் தொடர்பில்லாத விடயங்களை எல்லாம் கதைக்குள் இழுத்து வந்து சுற்றோ சுற்றென சுற்றி பக்கங்களை அதிகரித்து கதையை சலிப்படைய வைக்காது சிறப்பாக கதையை சொல்கிறார் கதாசிரியர். இண்ட்ரிடாசனின் எழுத்தில் ஒரு வீதம் ஸ்வீடன் குற்றபுனையாசிரியர் ஸ்டெய்க் லார்சனின் எழுத்துக்களில் இருந்திருந்தால் அவர் நாவல்கள் இன்று பெற்றிருக்கும் புகழ் நியாயமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு ஐஸ்லாந்து நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே தெரிகிறது.<br />
<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70226819935082107582013-12-25T13:11:00.000+01:002013-12-25T13:11:48.674+01:00மணல்மேல் கட்டிய பாலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilh0oI6V95cnn3752J-g-8DS6GUxNVlESq-9Et15R4_E-dszQlSO0T2Z8NRK_nrJvQKAmmf_dOAFQkf6PNGUGAxp-0w6GHDiZ-nN4jafbaqChIBVlEM9tiEi2GQ2Bm9DuU5uMZ0_3TFJXA/s1600/manalmal+kaidya+palam-800x1200.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilh0oI6V95cnn3752J-g-8DS6GUxNVlESq-9Et15R4_E-dszQlSO0T2Z8NRK_nrJvQKAmmf_dOAFQkf6PNGUGAxp-0w6GHDiZ-nN4jafbaqChIBVlEM9tiEi2GQ2Bm9DuU5uMZ0_3TFJXA/s320/manalmal+kaidya+palam-800x1200.jpg" width="213" /></a></div>
<div class="MsoNormal">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><b>சிறுவயது </b>முதலே நம் கலாச்சாரம் கதைகள் வழியாக தொன்மங்களை எம்மில் வேரூன்ற செய்திருக்கிறது. அவற்றை உண்மை என்பதாக இலகுவாக நம்பிட சிறுவயதில் அக்கதைகளின் தொடர்ச்சியான கேட்டல் வழிசேர்த்து இருக்கிறது. யேசுவின் திருப்பாடுகளையும், சூரன் போரையும் காட்சியாக கண்டு மகிழவும், மார்கழியின் திருப்பள்ளி எழுச்சி பஜனை மற்றும் கிறிஸ்துமஸ் கரோல் போன்றவற்றையும் தவறா நிகழ்வுகளாக வாழ்தடம் படம் பிடிக்க நான் வளர்ந்து வந்திருக்கிறேன். பள்ளிகளில் பாடங்களாகவும் இவை என்னுடன் வந்திருக்கின்றன. இவற்றை உண்மையான நிகழ்வுகளா இல்லை வெறும் கதைகளா என மனம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் காலத்தில் சிறுவயதில் கேட்ட அக்கதைகள் தோற்றுப் போவது என்பது மனதில் ரகசியமான ஒரு சலனத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. இத்தொன்மங்களை என் நாயக பிம்பங்களாக அல்லது வழிபாட்டின் வடிவங்களாக ஏற்றுக் கொள்ள பழக்கப்பட்டிருக்கிறேன். அப்பழக்கத்தினுடனான முறிவு என்பது வெகுவான காரணங்களை வேண்டி நிற்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">.</span></div>
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">சு</span>.<span style="font-family: "Latha","sans-serif";">கி</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span></b> <span style="font-family: "Latha","sans-serif";">அவர்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைத்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தொகுப்பான</span> <span style="font-family: "Latha","sans-serif";">மணல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மேல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வாழ்வில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இன்னம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நம்பிக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொண்டிருக்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிலவற்றின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நம்பகத்தன்மை</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறித்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">கேள்விகளை</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுப்புகிற</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">நூலாகும்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">அல்லது</span> <span style="font-family: "Latha","sans-serif";">நம்பிக்கை</span> <span style="font-family: "Latha","sans-serif";">இழந்தவை</span> <span style="font-family: "Latha","sans-serif";">பற்றி</span> <span style="font-family: "Latha","sans-serif";">தகவல்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிலவற்றை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தெளிவாக்குகின்ற</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">தொகுப்பாகும்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">நிலவியல்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">தொல்லியல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">போன்ற</span> <span style="font-family: "Latha","sans-serif";">துறைசார்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சான்றுகளுடன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்துக்களை</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகளில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்வைக்கிறார்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">இதுவரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">எம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மனதில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இடம்பெற்றிருந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">பிம்பம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மீதான</span> <span style="font-family: "Latha","sans-serif";">பார்வை</span> <span style="font-family: "Latha","sans-serif";">இவர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகளின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பின்பாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">மாற்றம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொள்கிறது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">சில</span> <span style="font-family: "Latha","sans-serif";">சமயங்களில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">அப்பிம்பங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இல்லாமலும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">போய்விடுகிறது</span>.<o:p></o:p></div>
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span> </b><span style="font-family: "Latha","sans-serif";">தொகுப்பில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இடம்பெறும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">முதல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரையான</span> <span style="font-family: "Latha","sans-serif";">மணல்மேல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இலங்கைக்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இந்தியாவிற்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இடையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ராமர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டியதாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">கூறப்படும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறித்தது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">சில</span> <span style="font-family: "Latha","sans-serif";">வருடங்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாசா</span> <span style="font-family: "Latha","sans-serif";">செய்மதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிழற்படங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">துணையுடன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ராமர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிஜமே</span> <span style="font-family: "Latha","sans-serif";">என</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்வைக்கப்பட்ட</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்துக்களை</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆய்வு</span> <span style="font-family: "Latha","sans-serif";">முடிவுகளாலும்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">சான்றுகளாலும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இக்கட்டுரையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எதிர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொள்கிறார்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ராமர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாலத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டவில்லை</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்றால்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நீரிணையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருக்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">அந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">கடலடி</span> <span style="font-family: "Latha","sans-serif";">மணல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தட்டு</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்ன</span>? <span style="font-family: "Latha","sans-serif";">இதற்கான</span> <span style="font-family: "Latha","sans-serif";">விளக்கத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தெளிவாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">இக்கட்டுரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தருகிறது</span>.</div>
<div class="MsoNormal">
<span style="font-family: "Latha","sans-serif";"><b>வேதங்களிலும்</b></span>, <span style="font-family: "Latha","sans-serif";">வடமொழி</span> <span style="font-family: "Latha","sans-serif";">இலக்கியங்களிலும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறிப்பிடப்படும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சரஸ்வதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆறு</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">காலத்தில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜீவ</span> <span style="font-family: "Latha","sans-serif";">நதியாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஓடி</span> <span style="font-family: "Latha","sans-serif";">இன்று</span> <span style="font-family: "Latha","sans-serif";">மறைந்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">போய்விட்டது</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்பது</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">தகவல்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஹரிஜானா</span>, <span style="font-family: "Latha","sans-serif";">ராஜாஸ்தான்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மாநிலங்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சில</span> <span style="font-family: "Latha","sans-serif";">பகுதிகளை</span> <span style="font-family: "Latha","sans-serif";">செய்மதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">எடுத்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">படங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தரையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருந்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">பார்க்கும்போது</span> <span style="font-family: "Latha","sans-serif";">கண்ணிற்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">தென்படாத</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆற்றுப்படுகைகளை</span> <span style="font-family: "Latha","sans-serif";">காட்டின</span>. <span style="font-family: "Latha","sans-serif";">சரஸ்வதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆறு</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆர்வலர்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இதை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தமக்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">கிடைத்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆதாரமாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொண்டு</span> <span style="font-family: "Latha","sans-serif";">வேதகாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிந்துவெளி</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாகரீகத்திற்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்பானது</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">பலப்படுத்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆரம்பித்தனர்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரனின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சரஸ்வதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">கலாச்சாரமும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிந்துவெளி</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாகரீகமும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">வேதகாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உண்மையிலேயே</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிந்துவெளி</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாகரீகத்திற்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்பானதா</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்பதை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தெளிவாக்க</span> <span style="font-family: "Latha","sans-serif";">முயல்கிறது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஆர்வலர்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆர்வக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குளறுபடிகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறித்தும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சொல்ல</span> <span style="font-family: "Latha","sans-serif";">தயங்கவில்லை</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span>.</div>
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">தமிழகத்தின்</span> </b><span style="font-family: "Latha","sans-serif";">தென்பகுதியில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">நில</span> <span style="font-family: "Latha","sans-serif";">நீட்சி</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்ன</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்பது</span> <span style="font-family: "Latha","sans-serif";">பற்றி</span> <span style="font-family: "Latha","sans-serif";">குமரிக்கண்டம்</span>- <span style="font-family: "Latha","sans-serif";">லெமூரியாக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குழப்பம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">விரிவாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுதுகிறார்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரையாசிரியர்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">தமிழகத்தின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தெற்கே</span> <span style="font-family: "Latha","sans-serif";">கண்டம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">என</span> <span style="font-family: "Latha","sans-serif";">அழைக்கப்படக்கூடிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிலப்பரப்பு</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருந்ததா</span>? <span style="font-family: "Latha","sans-serif";">குமரிக்கண்டம்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">மு</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிலப்பரப்பு</span>, <span style="font-family: "Latha","sans-serif";">லெமூரியாக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கண்டம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இவை</span> <span style="font-family: "Latha","sans-serif";">எல்லாம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒன்றா</span>? <span style="font-family: "Latha","sans-serif";">லெமூரியா</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்தாக்கம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">யாரால்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">எதற்காக</span> <span style="font-family: "Latha","sans-serif";">உருவாக்கப்பட்டது</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்பதை</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆராய</span> <span style="font-family: "Latha","sans-serif";">விழையும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரனின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">மரபு</span> <span style="font-family: "Latha","sans-serif";">மரபாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">பழந்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தமிழ்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இலக்கியம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டி</span> <span style="font-family: "Latha","sans-serif";">வைத்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">கற்பனை</span> <span style="font-family: "Latha","sans-serif";">அடுக்குகளை</span> <span style="font-family: "Latha","sans-serif";">நொருக்கி</span> <span style="font-family: "Latha","sans-serif";">விடுகிறது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தொகுப்பின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மிக</span> <span style="font-family: "Latha","sans-serif";">முக்கியமான</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகளில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒன்றாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">இது</span> <span style="font-family: "Latha","sans-serif";">அமைகிறது</span>.</div>
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">காம்பே</span> </b><span style="font-family: "Latha","sans-serif";">கடலடியில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கண்டுபிடிக்கப்பட்ட</span> <span style="font-family: "Latha","sans-serif";">புரதான</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிதைவுகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வரலாற்றிற்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்பான</span> <span style="font-family: "Latha","sans-serif";">காலத்தவையா</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்பதை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தேட</span> <span style="font-family: "Latha","sans-serif";">விழைகிறது</span> <span style="font-family: "Latha","sans-serif";">காம்பே</span> <span style="font-family: "Latha","sans-serif";">கடலுக்கடியில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கதையா</span>? <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span>. <span style="font-family: "Latha","sans-serif";">கடலடிக்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">எவ்வாறு</span> <span style="font-family: "Latha","sans-serif";">படிவங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வந்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">சேர்ந்திருக்கும்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">கடலடி</span> <span style="font-family: "Latha","sans-serif";">அகழாய்வு</span>, <span style="font-family: "Latha","sans-serif";">நிலத்தடி</span> <span style="font-family: "Latha","sans-serif";">அகழாய்வு</span> <span style="font-family: "Latha","sans-serif";">இவற்றிற்கிடையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உள்ள</span> <span style="font-family: "Latha","sans-serif";">வேறுபாடுகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">என</span> <span style="font-family: "Latha","sans-serif";">சுவையான</span> <span style="font-family: "Latha","sans-serif";">தகவல்களுடன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">காம்பே</span> <span style="font-family: "Latha","sans-serif";">கடலடி</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிதைவுகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறித்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">கேள்விகளையும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வரிகளில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உருவாக்குகிறார்</span>.</div>
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">போளுவாம்பட்டி</span> </b><span style="font-family: "Latha","sans-serif";">புலவர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஐ</span>. <span style="font-family: "Latha","sans-serif";">இராமசாமி</span>, <span style="font-family: "Latha","sans-serif";">பேரூர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருப்புசாமி</span> <span style="font-family: "Latha","sans-serif";">இவர்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருவரும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சேகரித்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">வைத்திருந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">சுடுமண்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஓடுகளில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">காணப்படும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுத்துக்கள்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">சித்திரங்கள்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">கிறுக்கெழுத்துக்கள்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">சங்கேதங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">போன்றவை</span> <span style="font-family: "Latha","sans-serif";">பழந்தமிழ்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுத்துக்களா</span>? <span style="font-family: "Latha","sans-serif";">சங்க</span> <span style="font-family: "Latha","sans-serif";">காலத்தவையா</span>? <span style="font-family: "Latha","sans-serif";">என்பதை</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆராய்ந்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">விடை</span> <span style="font-family: "Latha","sans-serif";">காண்கிறது</span> <span style="font-family: "Latha","sans-serif";">பேரூர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சுடு</span> <span style="font-family: "Latha","sans-serif";">மண்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஓடுகள்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஆச்சர்யங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிறைந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">இது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">இராமசாமி</span>, <span style="font-family: "Latha","sans-serif";">கருப்புசாமி</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருவரினதும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">திறமைகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வியக்க</span> <span style="font-family: "Latha","sans-serif";">வைப்பவையாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருக்கின்றன</span>.</div>
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">சிலப்பதிகாரம்</span> </b><span style="font-family: "Latha","sans-serif";">பற்றி</span> <span style="font-family: "Latha","sans-serif";">அறியாதவர்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருக்க</span> <span style="font-family: "Latha","sans-serif";">முடியாது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஆனால்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிலப்பதிகாரம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறித்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">வரலாற்று</span> <span style="font-family: "Latha","sans-serif";">உண்மைகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்ன</span>? <span style="font-family: "Latha","sans-serif";">சிலப்பதிகாரத்தின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சாயல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொண்ட</span> <span style="font-family: "Latha","sans-serif";">இரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">பழந்தமிழ்க்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கதைகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எவை</span>? <span style="font-family: "Latha","sans-serif";">இளங்கோ</span> <span style="font-family: "Latha","sans-serif";">அடிகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சேரன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">செங்குட்டுவனின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சகோதரராக</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருக்க</span> <span style="font-family: "Latha","sans-serif";">வாய்ப்புக்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உண்டா</span>? <span style="font-family: "Latha","sans-serif";">சிலப்பதிகாரத்தையே</span> <span style="font-family: "Latha","sans-serif";">கேள்விக்குள்ளாக்குகிறது</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஷேக்ஸ்பியர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வரலாறு</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுதினால்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரை</span>.</div>
<div class="MsoNormal">
<b>Chariots of Gods</b> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பிரபல</span> <span style="font-family: "Latha","sans-serif";">நூலை</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுதிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">எரிக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வோன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">டேனிகன்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">வேற்றுலகிலிருந்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">பூமிக்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">வருகை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">கடவுளர்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உதவியாலேயே</span> <span style="font-family: "Latha","sans-serif";">சில</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாகரீங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பரிணாமம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பெற்றது</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொண்டவர்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">கடவுளர்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உதவி</span> <span style="font-family: "Latha","sans-serif";">இல்லாவிடில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பிரமிடுகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">உருவாகியிருக்க</span> <span style="font-family: "Latha","sans-serif";">வாய்ப்பே</span> <span style="font-family: "Latha","sans-serif";">இல்லை</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வைப்பவர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இவர்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">எரிக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வொன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">டெனிகனின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">புரட்டுக்கள்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">அவர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">முன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வைக்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வேற்றுலக</span> <span style="font-family: "Latha","sans-serif";">கடவுளர்களின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பூமி</span> <span style="font-family: "Latha","sans-serif";">விஜயத்திற்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">முரணனா</span> <span style="font-family: "Latha","sans-serif";">சில</span> <span style="font-family: "Latha","sans-serif";">சான்றுகளையும்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">கருத்துக்களையும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ககன</span> <span style="font-family: "Latha","sans-serif";">வெளியிலிருந்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">வந்த</span> <span style="font-family: "Latha","sans-serif";">கடவுளர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரையில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பகிர்கிறார்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">சுவையான</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகளில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இதுவும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஒன்று</span> <span style="font-family: "Latha","sans-serif";">என்பேன்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">எரிக்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வோன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">டேனிகனின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கருத்துக்களில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருக்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இனவுயர்வுவாதம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">குறித்தும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஜெயகரன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிறிதாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">விளக்கம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">தருகிறார்</span>.</div>
<br />
<div class="MsoNormal">
<b><span style="font-family: "Latha","sans-serif";">தொடரும்</span> </b><span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகள்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">பப்புவா</span> <span style="font-family: "Latha","sans-serif";">நியுகினியில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எரிமலை</span> <span style="font-family: "Latha","sans-serif";">விஜயம்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">தமிழகத்தில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">திடீரென</span> <span style="font-family: "Latha","sans-serif";">தோன்றிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">கற்பாறைகளின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மர்மம்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">கொங்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">நாட்டில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிலத்தடி</span> <span style="font-family: "Latha","sans-serif";">நீர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">போன்றவை</span> <span style="font-family: "Latha","sans-serif";">பற்றி</span> <span style="font-family: "Latha","sans-serif";">கூறுகின்றன</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ஆனால்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இவை</span> <span style="font-family: "Latha","sans-serif";">மேற்சொன்ன</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகளின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">அளவிற்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">விறுவிறுப்பானவை</span> <span style="font-family: "Latha","sans-serif";">அல்ல</span>. <span style="font-family: "Latha","sans-serif";">எளிய</span> <span style="font-family: "Latha","sans-serif";">தமிழில்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">ஒரு</span> <span style="font-family: "Latha","sans-serif";">புலன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">விசாரணை</span> <span style="font-family: "Latha","sans-serif";">போல</span> <span style="font-family: "Latha","sans-serif";">விறுவிறுப்புடன்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுதப்பட்டிருக்கும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">இக்கட்டுரைகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">நிலவியல்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">தொல்லியல்</span>, <span style="font-family: "Latha","sans-serif";">வரலாற்றியல்</span> <span style="font-family: "Latha","sans-serif";">போன்றவற்றில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">ஆர்வம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கொண்ட</span> <span style="font-family: "Latha","sans-serif";">வாசகர்களை</span> <span style="font-family: "Latha","sans-serif";">திருப்திப்படுத்தும்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">டாவின்சி</span> <span style="font-family: "Latha","sans-serif";">கோட்</span> <span style="font-family: "Latha","sans-serif";">போல</span> <span style="font-family: "Latha","sans-serif";">தமிழிலும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கதைகள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எழுதலாம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">எண்ணத்தை</span> <span style="font-family: "Latha","sans-serif";">இக்கட்டுரை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தொகுதி</span> <span style="font-family: "Latha","sans-serif";">பலப்படுத்தவே</span> <span style="font-family: "Latha","sans-serif";">செய்கிறது</span>. <span style="font-family: "Latha","sans-serif";">ராமர்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பாலம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டினாரா</span> <span style="font-family: "Latha","sans-serif";">எனும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கேள்விக்கு</span> <span style="font-family: "Latha","sans-serif";">இனி</span> <span style="font-family: "Latha","sans-serif";">உங்கள்</span> <span style="font-family: "Latha","sans-serif";">சிலரின்</span> <span style="font-family: "Latha","sans-serif";">பதில்களிலும்</span> <span style="font-family: "Latha","sans-serif";">மாற்றம்</span> <span style="font-family: "Latha","sans-serif";">வரக்கூடும்</span>. <span style="font-family: "Latha","sans-serif";">சிற்றிதழ்களில்</span> <span style="font-family: "Latha","sans-serif";">கட்டுரைகளாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">வந்தவற்றை</span> <span style="font-family: "Latha","sans-serif";">தொகுத்து</span> <span style="font-family: "Latha","sans-serif";">காலச்சுவடு</span> <span style="font-family: "Latha","sans-serif";">நூலாக</span> <span style="font-family: "Latha","sans-serif";">வெளியிட்டு</span> <span style="font-family: "Latha","sans-serif";">இருக்கிறது</span>.<span lang="fr"><o:p></o:p></span></div>
</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17528565008482467032013-12-16T15:47:00.003+01:002013-12-16T15:57:50.727+01:00Imperium & The Hobbit: The Desolation of Smaug<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFkbHo1Jssc_kBwceYvzGAEayPQX9pNFQYaNBQgYWB0ELXDXg4ujz275jC1kCTmY7pNcGZYMkHzjiWFTpguRqS62rhKzXrV1ywqlP02h9YLgtjGYkTtSrLo7RRZ2-oGrwPxiFC_ISXfk2J/s1600/87185.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFkbHo1Jssc_kBwceYvzGAEayPQX9pNFQYaNBQgYWB0ELXDXg4ujz275jC1kCTmY7pNcGZYMkHzjiWFTpguRqS62rhKzXrV1ywqlP02h9YLgtjGYkTtSrLo7RRZ2-oGrwPxiFC_ISXfk2J/s320/87185.jpg" width="216" /></a><b></b><br />
<b><b><span style="font-size: large;">Imperium</span></b></b><br />
<b><b><span style="font-size: large;"><br /></span></b></b>
<b>சுருக்கெழுத்து </b>என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.<br />
<br />
<b>இம்பிரியம் </b>என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.<br />
<br />
<b>நாவலின் </b>கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.<br />
<br />
<b>நாவலின் </b>ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.<br />
<br />
<b>காலங்கள் </b>மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.<br />
<br />
<b>எவ்வளவுதான் </b>ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.<br />
<br />
<b>ராபார்ட் ஹாரிஸின்</b> எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.<br />
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது<br />
<br />
<b><span style="font-size: large;">The Hobbit: The Desolation of Smaug</span></b><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6EATQYC7X0FVsjJJoxpp_6Cl9Y14a5z3VsPrKCmBefvw1ti8Pnkbg3P8hpyc5CKt0g8vayE8nQrHWG7XSF_iId377qVcl7yLnATSHn6dlJmWMs8nu1kXQiWX7myveM65E6ru0-dCBtMoZ/s1600/desolation_of_smaug_by_umbridge1986-d5riks0.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6EATQYC7X0FVsjJJoxpp_6Cl9Y14a5z3VsPrKCmBefvw1ti8Pnkbg3P8hpyc5CKt0g8vayE8nQrHWG7XSF_iId377qVcl7yLnATSHn6dlJmWMs8nu1kXQiWX7myveM65E6ru0-dCBtMoZ/s320/desolation_of_smaug_by_umbridge1986-d5riks0.jpg" width="214" /></a><b>மாதம்தோறும்</b> நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.<br />
<br />
<b>ஹாபிட்டில்</b> எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.<br />
<br />
<b>நாவலில் </b>மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.<br />
<br />
<b>இதற்கு</b> பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.<br />
<br />
<b>திரைக்கதை </b>படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.<br />
<br />
<b>ஸ்மொக்,</b> அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.<br />
<br />
<b>மொத்தத்தில்</b> ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47885164779446448342013-12-15T09:48:00.001+01:002013-12-15T09:48:54.753+01:00Farseer 2 &3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTtECnpiHuvXPCPHnD76lk2-OyeGhZ5hYmY5k6vCkQSn3rCe4Q9jrprMyh5zp3OHxuvjXlAhkIBtSIAZNXp2O6QgzemDh71p2RGBD0ikNBaantBe8kaQZQLBm9BV3VlrAXuNBt6Hif9IcD/s1600/Royal-Assassin-h-port.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTtECnpiHuvXPCPHnD76lk2-OyeGhZ5hYmY5k6vCkQSn3rCe4Q9jrprMyh5zp3OHxuvjXlAhkIBtSIAZNXp2O6QgzemDh71p2RGBD0ikNBaantBe8kaQZQLBm9BV3VlrAXuNBt6Hif9IcD/s320/Royal-Assassin-h-port.jpg" width="320" /></a></div>
<b><span style="font-size: large;">Royal Assassin</span></b><br />
<b><br /></b>
<b>உடல் </b>நிலை மிகவும் தளர்ந்த நிலையில் மலை ராஜ்ஜியத்தில் தன் தோல்விகளை எண்ணிப்பார்க்கும் ராஜகொலைஞன் ஃபிட்ஸுடனேயே தொலைதிருஷ்டியர் முப்பாக நாவல் வரிசையின் இரண்டாம் பாகத்தை திறக்கிறார் கதாசிரியை ராபின் ஹாப்.<br />
<br />
<b>ஆனால் </b>அந்த உடல் நிலையுடனேயே ஃபிட்ஸ் மீண்டும் பக்கீப்பிற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. மர்மமான ஒரு அயர்ச்சியால் வாடும் அரசன் , கரையோர நிலங்களை சூறையாடி மகிழும் செங்கல கொள்ளையர்களை எதிர்த்து நிற்க துடிக்கும் வெரிட்டி, தன்னிடம் அதிகாரம் வர வேண்டும் என காரியமாற்றும் ரீகல் இவர்களின் மத்தியில் ராஜகொலைஞன் ஃபிட்ஸ் தன் ராஜ விசுவாசத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவன் தர தயாராக உள்ள விலை என்ன? அது அவனை என்ன நிலைக்கு தள்ளப் போகிறது?<br />
<br />
<b>இவற்றிற்கான </b>விடையை தன் ஆடம்பரமற்ற வரிகளில் நாவலில் கொணர்கிறார் ஹாப். காதல், வீரம், தியாகம், விசுவாசம், சதிகள் என்பவற்றின் மத்தியில் தன் முடிவை நோக்கி விரைகிறான் ஃபிட்ஸ். பக்கீப் எனும் இடத்தை விட்டு நகராது அதனுள்ளேயே கதையையும் உணர்வுகளையும் வாசகனுடன் மோத விடுகிறார் ஹாப். அவர் எழுத்துக்களை எல்லாராலும் ரசிக்க முடியாது என்பது தெளிவு. ரசிக்க முடிந்தால் அதன் சுவை இனிது என்பது ஒருவர் பெறும் அறிவு.<br />
<br />
<b>காதல் </b>காட்சிகளில் மீள்கூறல் சற்று அயர்ச்சியை தருகிறது. ஹாப்பின் எழுத்துக்களில் மீள்கூறல் அலல்து எழுதல் ஒரு பண்பாகவே இருக்கிறது என்பேன். விலங்குகள் மீதான பார்வையை தன் எழுத்துக்களில் உயர செய்யவும் ஹாப் முயல்கிறார். விலங்கிற்கும் மனிதனிற்குமான உணர்வு சார்ந்த உறவின் வலிமையை அவர் தன் நாவலில் முக்கியமான ஒரு அங்கமாக்கியிருக்கிறார்.<br />
<br />
<b>கரையோர </b>நிலங்களை தாக்கியழிக்கும் செங்கல கொள்ளையர்கள், அவர்களால் உணர்விலிகளாக ஆக்கப்படும் அந்நிலவாழ் மனிதர்கள், மேலும் இந்நிகழ்வுகளின் பின்னிருக்கும் மர்மம் இப்பாகத்திலும் ஒரு நீளும் இழையாகவே இருக்கிறது. பட்டத்திற்குரிய இளவரசன் வெரிட்டி செங்கல தாக்குதல்களிற்கு எதிராக எடுக்க விழையும் நடவடிக்கைகள், அவற்றில் ஃபிட்ஸின் பங்கு, இவை வழியாக ஆழமாகும் அவர்களிற்கிடையிலான பிணைப்பு என நகரும் கதையில் ஃபிட்ஸின் விசுவாசம் யாரிற்கானது என்பது கேள்வியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. வெரிட்டியின் மனைவி கெட்ரிக்கன் பக்கீப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு ராணியாக ஆகுவதற்குரிய ஆரம்ப அறிகுறிகளும் நாவலில் சொல்லப்படுகிறது. தொலைதிருஷ்டியர்களின் பரம்பரை சொத்தான மனோமந்திரம் குறித்த புரிதல்களும், அபாயங்களும் விரிவாக ஆரம்பிக்கின்றன. எல்டர்லிங்கை மூன்றாம் பாகத்திலும் ஹாப் காட்டமாட்டார் போலிருக்கிறது.<br />
<br />
<b>சிறு வயதில்</b> ஃபிட்ஸை வளர்த்த வுரிச்சிற்கும் ஃபிட்ஸிற்குமிற்கிடையிலான உறவின் உணர்ச்சிகரமான தருணங்கள், ஃபிட்ஸின் தந்தையின் மனைவியான லேடி பேஸன்ஸ், ஃபிட்ஸ் மீது கொண்டிருக்கும் உணர்வுகளுடன் சென்று நெகிழ்வலைகளாக மோதுகின்றன. முதிய ராஜகொலைஞன் சேட் வழமை போலவே மறைவாக இயங்க ராஜாவின் முட்டாளை சுற்றியுள்ள புதிர்கள் விடுபடுமாற்போல இறுகுகிறது. ராஜமுட்டாளின் விசுவாசம் கதையில் மிக சிறப்பாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
<b>அனுபவஸ்தர்களின் </b>ஆலோசனைகள் வழி செயற்பட ஃபிட்ஸ் விழைந்தாலும் நிகழ்வுகளின் ஆட்டங்களின் விளைவால் அவன் தனித்து எடுக்கும் முடிவுகளின் முடிவுகள் எப்படியாக பக்கீப்பையும் அவன் வாழ்க்கையும் மாற்றி அடிக்கிறது என்பதை சலிப்பே இல்லாமல் ஹாப் எழுதுகிறார்.<br />
மெதுவாக நகரும் நாவல் விரைவாக படிக்க தூண்டும் எழுத்தைக் கொண்டிருக்கிறது. உச்சக் கட்டத்தில் வழமை போலவே ராபின் ஹாப்பின் முத்திரை உண்டு. இரண்டாம் பாகத்தின் முடிவில் நான் உடனே தேடியது மூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaA71uW2dBddIGpMCLh9NzDr8cWnqCNUT0gogtuXD_VpbMW8fsqpIWmi-efYPyxywq_KKa9Nb00IxnugKcSFLXp0H6cTcaArfcmT0omNUtSH8XXq2zUsetEdL2HVpnggrW4fWtfF0gf9b3/s1600/Robin_Hobb_-_Assassin's_Quest_Cover.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaA71uW2dBddIGpMCLh9NzDr8cWnqCNUT0gogtuXD_VpbMW8fsqpIWmi-efYPyxywq_KKa9Nb00IxnugKcSFLXp0H6cTcaArfcmT0omNUtSH8XXq2zUsetEdL2HVpnggrW4fWtfF0gf9b3/s320/Robin_Hobb_-_Assassin's_Quest_Cover.jpg" width="200" /></a></div>
<b><span style="font-size: large;">Assassin's Quest</span></b><br />
<br />
ஒரு கதை நல்ல கதையாக இருந்தாலும், உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக இருந்தாலும், சர்வதேசரீதியாக விற்பனையில் உச்சங்களை தொட்டு இருந்தாலும் வாசகனின் மனதை நெருங்கி வராத வகையில் அவை வாசகனிற்கு பிடித்தமானவையாக ஆவது இல்லை.<br />
<br />
ராபின் ஹாப்பின் எழுத்துக்கள் மிகைபுனைவின் உச்சநிலை என நான் எழுதப் போவது இல்லை. என் வாசிப்பு அனுபவத்தின் படி அப்படியான ஒரு உச்சநிலை என்பது தற்காலிகமானதே. இன்று எமக்கு உச்சநிலையை தரும் ஒரு படைப்பானது காலத்தின் நகர்வில் அதன் உச்சநிலையிலிருந்து கீழிறங்குவது இயல்பான ஒன்றே.<br />
<br />
மிகவும் பிரம்மாண்டமான மிகைபுனை கதை வரிசைகளான WOT, ASOIAF போன்றவற்றின் மிகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட படைப்புக்களாகவே ராபின் ஹாப்பின் படைப்புக்கள் இருக்கிறது. ஜோர்டானின் எழுத்துக்களின் கம்பீரமோ, பலமோ அல்லது மார்டினின் எழுத்துக்களின் உக்கிரமோ வன்மமோ ராபின் ஹாப்பின் எழுத்துக்களில் இருப்பது இல்லை. அதேபோல அவர்கள் உருவாக்கிய உலகுகளின் பிரம்மாண்டங்களும், சிக்கலான கதைநகர் களமும் ஹாப்பின் எழுத்துக்களில் காணக்கிடைப்பது இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் மிகைபுனை ரசிகர்களிற்கு அவரின் கதை சொல்லல் பிடிக்குமா என்பதே சந்தேகம்தான். இருப்பினும் அவர் எழுத்துக்கள் என்னை மிகவும் நெருங்கியிருக்கின்றன.<br />
<br />
Farseer முப்பாக நாவல் வரிசையின் மூன்றாவது நாவலான Assassins Quest என் வாசிப்பில் ஒரு அருமையான படைப்பு. பிரதான பாத்திரமான ஃபிட்ஸ் சிவாலெரி மிகைபுனை வரலாற்றில் தன்னை ஒரு சிறப்பான பாத்திரமாக நிரூபிக்கும் படைப்பு. இதற்காக ஃபிட்ஸை ஒரு வீர தீர சாகசனாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பின் எப்படி அவன் சிறப்பான பாத்திரமாகிறான் என்பதை நீங்கள் நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள்.<br />
<br />
கதையின் பிரதான எதிர்பாத்திரமான ரீகலின் மரணம் சம்பவிக்கும் விதம் அபாரமான ஒன்று. நீண்ட கதை சொல்லலில் முன்நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் நினைவு மட்டுமே அதன் மர்மத்தை உடனடியாக அவிழ்க்க முடியும்.<br />
<br />
ஜோர்டானும், மார்ட்டினும் என்னை ரசிக்க பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஹாப் தன் மிகைபுனைவால் என் உள்ளத்தை உணர்ச்சிக் குவியலாக்கி விட்டார். அசாத்திய பொறுமையும், சிறப்பான எழுத்துக்கள் மீதான நேசமும் மட்டுமே அவர் எழுத்தை படிப்பதற்கு உங்களுக்கு துணை வரக்கூடும்.</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33546925125520207402013-09-07T12:07:00.000+02:002013-09-07T12:29:54.632+02:00அடிமைகளின் ஆண்டவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgImnmm3NBRzmHtRdw1kYsrnoy2hZTOTfrYC929XXOajVMQjTw2mIbnq75zBCxA8plDZL4kJEpF8vYezPaulIGVOiKHMLHBWhkzz72q51ScKFkiXF8riFjud3sfgpaliSZZ3H3QNU53Moqm/s1600/Couv_131978.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgImnmm3NBRzmHtRdw1kYsrnoy2hZTOTfrYC929XXOajVMQjTw2mIbnq75zBCxA8plDZL4kJEpF8vYezPaulIGVOiKHMLHBWhkzz72q51ScKFkiXF8riFjud3sfgpaliSZZ3H3QNU53Moqm/s320/Couv_131978.jpg" width="234" /></a></div>
<b><span style="font-size: large;">வதனமோ சந்த்ரபிம்பமோ - 13</span></b><br />
<b><br /></b>
<b>குருவானவர் </b>மத்தியோவின் கடிதம் கண்டு சான் ஹுவான் மடத்திற்கு விரையும் டெக்ஸ், அங்கு வாழ்ந்திருந்த மூன்று சிறுவர்கள் கடத்தி செல்லப்பட்டிருப்பது குறித்து அறிந்து கொள்கிறார். குருவானவர் மத்தியோ மற்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் கண்ட வண்டி ஓட்டியான சேவியர் ஆகியோர் வழங்கும் தகவல்களை அடுத்து டெக்ஸ் தன் சகா கார்சன் சகிதம் நோகலெஸ் நகரில் தன் விசாரணையை ஆரம்பிப்பதற்காக புறப்படுகிறார்....<br />
<br />
<b>டெக்ஸ் </b>பரட்டை அல்ல. எந்த வேலையும் ஆற்றாது கள்ளியின் நிழலில் கவிழ்ந்து கிடந்து மதுப்புளிப்பின் கனாக் காண! டெக்ஸிற்கு நின்றால் நிமிர்ந்தால் நடந்தால் இடறினால் 1008 வேலை இருக்கிறது. தமிழில் வேறு உயிரை எடுப்பது போல பேசியாக வேண்டிய தார்மீக கடமை வேறு!! உதிரியாக. ஒரு கதை முடிவதற்குள் டெக்ஸ் அடுத்த விசாரணைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேரமே நேரத்தை பார்த்து தலையை பிறாண்ட வைக்கும் டெக்ஸின் டைம்டேபிளில் குருவானவர் மத்தியோவிற்கும் இடம் இருக்கிறது என்றால் அவர் டெக்ஸிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்களில் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதை உலகெங்குமிருக்கும் டெக்ஸின் ரஸிக சமுத்திரம் இக்கதையை படிக்காமலே சொல்லி விடும். குருவானவர் மத்தியோ எவ்வாறு டெக்ஸின் விஐபி பட்டியலில் இடம்பிடித்தார் என்பதை டெக்ஸே கார்சனிடம் சான் ஹூவான் மடத்திற்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கூறுவார். அமெரிக்க மண்ணின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சென்று மடங்களை அமைத்த துறவிகள் மதத்தை பரப்புவதோடு மட்டும் நின்று விடாது வழியற்ற மக்களின் வாழ்க்கைகளை முன்னேற்றுவதிலும் பங்குபற்றியதை டெக்ஸ் கார்சனிற்கு கூறும் கதை அதனுள் கொண்டிருக்கும்.<br />
<br />
<b>கதையில்</b> இரு குருவானவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒருவர் மத்தியோ, அடுத்தவர் எலிசியோ. ஒருவர் கதையை ஆரம்பித்து வைப்பதிலும் அடுத்தவர் கதையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்த செய்வதிலும் உதவுவார்கள். ஆக <b>TEX Special n° 17 </b>ஆக க்ளோடியோ நிஸ்ஸியின் எழுத்தில் உருவாகியிருக்கும் <b>Marchands D'Esclaves </b>கதை, மதம் பரப்ப சென்ற குருவானவர்களிற்கான ஒரு சிறு சமர்ப்பணம் என்றே எண்ண வைக்கிறது. மதம் பரப்பும் செயல் நீடிக்க வேண்டும், தம் அரவணைப்பின் கீழ் வந்த வழியற்றவர்களை நடுத்தெருவில் வீசி விட்டு செல்லக்கூடாது என்பதற்காக இந்த துறவிகள் சென்றிருக்ககூடிய சில எல்லைகளை தன் கற்பனையில் வடிக்கிறார் நிஸ்ஸி. இதில் எலிசியோ செல்லும் எல்லை சற்று மிகையான ஒன்றாக தோன்றினாலும் கதைக்கு அது சுவை தருவதாகவே இருக்கிறது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOrb_5e1QzVBJHLnZ8EerqTjFdwTzSPwWv1AYTOUbn07KZzCZophk2U6Vasm3t4mZOM1Iw6wfzUCLamYIyOttrTg4DPvfxWqU3f9kSQB_hj_38YXcpeL9rIHvU9QL0gos9BYK-BT0_hl5a/s1600/me1.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOrb_5e1QzVBJHLnZ8EerqTjFdwTzSPwWv1AYTOUbn07KZzCZophk2U6Vasm3t4mZOM1Iw6wfzUCLamYIyOttrTg4DPvfxWqU3f9kSQB_hj_38YXcpeL9rIHvU9QL0gos9BYK-BT0_hl5a/s200/me1.jpg" width="140" /></a></div>
<b>டெக்ஸின் </b>விசாரணைகள் நோகலெஸில் ஆரம்பிக்கும்போது அவரின் கேள்விகளிற்கான விடைகள் இலகுவில் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விடைகள் உண்மையாக அமைவது இல்லை. இது குறித்து மத்தியோ ஏற்கனவே தந்த தகவல்கள் டெக்ஸின் மனதில் காதல் ஹைக்கூவாக நகர்ந்து அவர் கோபத்தின் டிகிரியை எரிமலையொன்றின் ஆழ்மனதின் ஆணிவேரின் கொதிப்பிற்கு இட்டுச் செல்லும் வேளைகளில் கதையில் அதிரடி வெடிக்கிறது. உண்மை வேண்டும் எனில் டெக்ஸ் தன் விசாரணை முறைகளின் எல்லைக் கற்களை இடம் மாற்றுவார். அவர் கற்களை நகர்த்தும் முறைகளிற்கேற்ப உண்மைகளும் இடம் மாறிக் கொள்கிறது. இருப்பினும் மிகவும் தந்திரமான மனிதர்களின் திட்டங்களையும் டெக்ஸ் நோகலெஸில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தந்திரமான மனிதர்களையும் அவர் தன் தந்திரத்தால் மயக்கிடும் அவசியமிருக்கிறது. ஆனால் டெக்ஸின் தந்திரம் பலிக்காது போகும்போதுதானே கதையில் விறுவிறுப்பும் பரபரப்பும் தொற்றிக் கொள்ள முடியும். டெக்ஸின் கணிப்புகளிற்கு மாறாக கதையில் திருப்பங்கள் வரும்போது கதை டெக்ஸின் குதிரையின் பின்புறத்தில் பதமாக ஒரு தட்டு தட்டி வேகத்தை அதிகரிக்க வைக்கிறது.<br />
<br />
<b>நோகலெஸிலிருந்து </b>மெக்ஸிக்க எல்லையில் அமைந்திருக்கும் நகரான ஹெர்மொசிலோவை டெக்ஸும் கார்சனும் சென்று சேர்வதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் திறமைக்கு சமனான பலம் கொண்டவையாக இருக்கின்றன. சில தந்திரங்களில் புராண நெடி அடித்தாலும் டெக்ஸிற்காக அவற்றை நாம் மன்னிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறோம். தான் செய்யும் காரியம் குறித்து எந்த ஆதாரமும் இருக்ககூடாது என இயங்கும் ஒரு மனிதனிற்கு எதிராக டெக்ஸும் கார்சனும் உயிரைப் பணயம் வைத்து போராட வேண்டியிருக்கிறது. ஹெர்மசிலோவில் ஒரு பத்திரிகையாளர் சொல்வார் ... டெக்ஸ் நீங்க எப்ப மெக்ஸிக்கோ வந்தாலும் பத்திரிகைகளில தலைப்பு செய்தி ஆகிடுறீங்க .... உண்மைதான் ஹெர்மசிலோவின் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெறும் துப்பாக்கி மோதலில் தோட்டாக்கள் உயிர்வாங்கும் கவிதை எழுதுகின்றன. முதல் பரிசு வெல்பவர் டெக்ஸ். தோற்பதும் அவர்தான். அவர் தேடி வந்த தகவலும் குறைப்பிரசவமாக தன் உயிரை விட்டு விடுகிறது. இந்தவேளையில்தான் எலிசியோ கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை உருவாக்குபவராக உருப்பெறுகிறார். கதையின் நீட்சியில் எலிசியோ பாத்திரத்தின் உறுதி தெளிவாக்கப்பட்டாலும் இறுதியில் டெக்ஸின் உறுதி வெல்வதாக காட்டப்படுகையில் எலிசியோ பாத்திரம் மீது உருவான எதிர்பார்ப்பு சற்று குறையவே செய்யும். இறைவனின் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் உறுதி ஒரு உயிரை எடுத்தல் எனும் எல்லைக் கோட்டில் தயங்கும் எனில் அங்கு இறைவன் அனுப்பி வைத்த ஆண்டவனாக இருப்பவர் எங்கள் நாயகன் டெக்ஸ்தான்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Su5_ylkjNM6YPqQljcWXwCvx1nIAvugGQBMqDnAG2bmpG30jupKrI0Kq3em-edvQOvqfZw6_h8kic0ZJkU8gwDWIqmIXG3YDHoyv07tTcGq_x_jc-1GyJ28YApwkojW1Z_X7bLcYNu56/s1600/me2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Su5_ylkjNM6YPqQljcWXwCvx1nIAvugGQBMqDnAG2bmpG30jupKrI0Kq3em-edvQOvqfZw6_h8kic0ZJkU8gwDWIqmIXG3YDHoyv07tTcGq_x_jc-1GyJ28YApwkojW1Z_X7bLcYNu56/s200/me2.jpg" width="139" /></a></div>
<b>உலகில் </b>சமூகங்கள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்தே அடிமைகளும் இருந்து வருகிறார்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள். கதையில் ஒரு தருணத்தில் பிரதான எதிர்பாத்திரமான டான் மானுவல் ஒப்ரகொன்..... லாபம் அதிகரிக்கிறது எனில்<b> எந்த </b>முதலாளியும் அது எப்படி வருகிறது என்பதை பொருட்படுத்தமாட்டான்.... எனும் அற்புதமான உண்மையை சொல்வான். இதில் எந்த ஊரிலும் பேதம் இருக்காது. இன்றைய நாட்களிலும் அதன் சுயரூபத்திலும் அல்லது மாற்றுரூபங்களிலும் மனிதர்களின் லாபங்களிற்காக அடிமைத்தனம் என்பது வாழ்ந்தே வருகிறது. நாகரீக வளர்ச்சிக்கேற்ப அது அலங்கார சாயங்களை பூசியவாறே வழியற்றவர்களை உறிஞ்சுகிறது. அதன் உதவியால் கொழுக்கும் மனிதர்களின் அதிகார பலங்கள் அவற்றை ஆண்டாண்டு காலமெல்லாம் வாழ வைப்பதாகவே இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் நான்கூட ஒரு அடிமைதான்!!<br />
<br />
<b>பைபிளில் </b>எகிப்தியர்களின் அடிமைத்தளையிலிருந்து மோயீசன் மனிதர்களை மீட்டதாக ஒரு கதை இருக்கிறது. மீட்கப்பட்டு சென்ற மனிதர்கள் இன்று மற்றவர்களிற்கு சுதந்திரத்தையா வழங்கி விட்டார்கள் என இன்றைய நிலையில் கேட்டுப்பார்த்தால் வேடிக்கையான ஒரு பதிலை நாம் உருவாக்கலாம். ஆள்பவன் என்பவன் இருக்கையில் ஆளப்படுபவன் என்பவனும் இருந்தேயாக வேண்டும் அல்லவா. ஆனால் பைபிளில் மோயீசனைப் போல இந்த உலகிலும் அவ்வப்போது சில மனிதர்கள் உருவாகுவார்கள். இக்கதையில் மோயீசனாக டெக்ஸ். அவர் எவ்வாறு செவ்வனான திட்டங்களுடன் இயங்கும் டான் மானுவல் ஒப்ரகொனை முறியடிக்கிறார் என்பதை டெக்ஸ் கதைகளின் சகல அம்சங்களுடனும் இக்கதை வாசகர்களிடம் எடுத்து வருகிறது.<br />
<br />
<b>கதையின் </b>சித்திரப் பொறுப்பு மிகப்பிரபலமான ஸ்பெயின் கலைஞர்<b> Manfred Sommer</b> இடம் வழங்கப்பட்டிருக்கிறது. சித்திரக்கதைகளிற்கு வரைவதை குறைத்துக் கொண்டு ஓவியக் கலையில் தன் திறமையை கலந்து கொண்டிருந்த மான்ஃப்ரெட் சமர் இக்கதைக்கு பொனெலியின் வேண்டுகோளின் பேரில் வரைந்ததன் பின் மீண்டும் சித்திரக் கதைகளிற்காக வரையும் ஆர்வம் தூண்டப்பெற்றார். பக்கங்களில் தன் பெயரை அழகான ஒப்பமாக பதிப்பதோடு மட்டும் நின்று விடாது தன் திறமையால் டெக்ஸ் கதையின் சித்திரங்களை அழுத்தமாக பதித்திருக்கிறார் சமர். அவர் படைத்திருக்கும் டெக்ஸினதும், கார்சனினதும் கம்பீரங்களை கண்ணயர பார்த்து மகிழலாம். அதுவும் சில காட்சிகளில் இரு ரேஞ்சர்களிலும் அவர்களின் வயதிற்கு ஒத்துவராத வாலிபம் துள்ளி விளையாடுகிறது. எதிர்பாத்திரமான டான் மானுவலை சமர் உருவாக்கி வடித்திருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் க்ளாஸான ஒரு எதிர்பாத்திரம் அவன். மெக்ஸிக்கர்கள், கதை பயணிக்கும் பகுதிகளின் நிலவியல், அடிமைக் களம், சண்டைக்காட்சிகள் என பிளந்து கட்டியிருக்கிறார் சமர். நிஸ்ஸியின் வேகமான கதையும் சமரின் கம்பீரமான சித்திரங்களும் கலந்து கட்டி அடிக்கும் இக்கதை டெக்ஸ் ரஸிக ரஞ்சன சபா டாப் லிஸ்டில் தன் இடத்தை சிரமமின்றி தேடிக்கொள்ளும்.<br />
<br />
<br /></div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23605500464458354712013-09-01T08:15:00.000+02:002013-09-07T12:18:25.593+02:00செமினொல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr> <td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2oJIzxRkdftZB66VfeIW6qzhAkinSljUHq1twhxHdipu2EHDKAxdJ3ue8_-9vFfinXF14XU2Su8w3-MTDmBqZkDKfHpl0UntyuYqoZkbIdvSOaVWczEcxf-wz7IN2wUMocRyoSSTgBA3k/s1600/1084686-gf.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2oJIzxRkdftZB66VfeIW6qzhAkinSljUHq1twhxHdipu2EHDKAxdJ3ue8_-9vFfinXF14XU2Su8w3-MTDmBqZkDKfHpl0UntyuYqoZkbIdvSOaVWczEcxf-wz7IN2wUMocRyoSSTgBA3k/s400/1084686-gf.jpg" width="281" /></a></td> </tr>
<tr> <td class="tr-caption" style="text-align: center;"><br /></td> </tr>
</tbody></table>
<br />
<strong><span style="font-size: large;">வதனமோ சந்த்ரபிம்பமோ - 12 </span></strong><br />
<strong><br /></strong>
<strong>லூசியானாவில்</strong> அமைந்திருக்கும் ஃபோர்ட் பிளிஸில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மரணதண்டனைக் கைதியான ஓச்சாலாவை டெக்ஸாஸிற்கு மீள்விசாரணைக்கு இட்டு செல்வதற்காக கார்சன் சகிதம் அங்கு வருகை தருகிறார் டெக்ஸ். தன் பாதுகாப்பின் கீழ் அழைத்து செல்ல வேண்டிய நபரான ஓச்சாலா குறித்த தகவல்களை ஃபோர்ட் பிளிஸின் மேலதிகாரியிடம் இருந்து டெக்ஸ் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் லோங் நைஃப் எனும் தன் சகாவின் உதவியுடன் ஃபோர்ட் பிளிஸிலிருந்து தப்பி செல்கிறான் ஓச்சாலா……<br />
<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>பெருமேற்கின் நம்பர் 1 நாயகனான டெக்ஸ்</strong>, தன் பொறுப்பான பாதுகாவலின் கீழ் ஒரு கைதியை எங்காவது இட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது எனும் தகவலிலேயே டெக்ஸின் பாசமிகு வாசக சமுத்திரமானது டெக்ஸ் செல்லப்போகும் வழியில் காத்திருக்கும் அதிரடிகளை எண்ணி ஆவல் கொள்ளும், நுரையலை கிளப்பி ஆர்ப்பரிக்கும். அப்பாசச் சமுத்திரத்தின் கனவானது ஓச்சாலா, கோட்டைக் காவலிலிருந்து தப்பியோடியிராவிடில் நிறைவேறியிருக்கவேகூடும். ஆனால் இத்தாலிய Fumetti வரலாற்றில் <strong>Storia del West</strong> எனும் பெருந்தொடர் உருவாக காரணமாக இருந்த கதாசிரியரான <strong>Gino D’Antonio</strong> இக்கதையின் சுவாரஸ்யத்திற்கு சுவையேற்றும் விதமாக ஓச்சாலாவை தேடி வேட்டையாடும் கதையாக <strong>TEX Special n°22</strong> ன் <strong>Seminoles</strong> ஐ உருவாக்கி அதை டெக்ஸின் வாசக சமுத்திரத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>இரு</strong> கொலைகளிற்காக மரணதண்டனை வழங்கப்பட்ட கைதியொருவனை அமெரிக்க ஜனாதிபதி வழங்கும் அழுத்தத்தின் பேரிலேயே டெக்ஸாஸ் நோக்கி அழைத்து செல்ல வருகிறார் டெக்ஸ். ஒரு சாதாரண செவ்விந்தியனிற்கு வழங்கப்பட்ட தண்டனையை டெக்ஸாஸில் மீள்விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன, இதில் அமெரிக்க சனாதிபதியின் தலையீட்டிற்கு காரணம் என்ன எனும் கேள்விகள் டெக்ஸ் மனதில் எழாமல் இல்லை. ஆனால் தனது மேலதிகாரிகளினதும், ஜனாதிபதியனதும் உத்தரவுகளை அவரால் உடனடியாக மறுத்துவிட முடிவது இல்லை. தன் பாதுகாப்பின் கீழ் டெக்ஸாஸ் செல்ல வேண்டிய ஓச்சாலா தன் கழுகுக் கண்கள் முன்பாகவே பெருநிலப்புல்வெளி முயல்போல் தப்பியோடும்போது டெக்ஸிற்கு இருப்பதும், தெரிந்ததும் ஒரே வழிதான். மனித வேட்டை. டெக்ஸ் தப்பி ஓடிய கைதியை உயிருடன் பிடித்து நீதியின் முன்பாக நிறுத்த விரும்புகிறார். ஆனால் ஓச்சாலாவின் உயிர் தன் கைகளினாலேயே போகவேண்டும் எனும் முனைப்புடன் ஓச்சாலாவை வேட்டையாடக் கிளம்புகிறான் இன்னொருவன். நாய்மனிதன் என பட்டப்பெயர் பெற்ற அம்மனிதனின் பெயர் லாபார்ஜ்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>பூர்வகுடிகளின்</strong> இனவழிப்பானது உக்கிரம் பெற்றபோது அவர்கள் தம் வாழ்நிலங்களிலிருந்து விலகி தாம் பாதுகாப்பாக வாழக்கூடிய பகுதிகளில் புகலிடம் தேடிக் கொண்டார்கள். இவ்வாறாக ஃப்ளோரிடாவின் சதுப்புநிலக்காட்டுப் பகுதிகளில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வந்து குடியேறிய க்ரீக் பூர்வகுடிகளின் வழிவந்தவர்களே செமினோல்கள். செமினோல்கள் என்பதற்கு ஓடிச் சென்றவர்கள், கட்டுக்கடங்காதவர்கள், சுதந்திரிகள் எனும் அர்த்தங்கள் உண்டு. <strong>Everglades </strong>எனப்படும் இந்த சதுப்புவனப் பகுதியானது அடர் தாவரச் செழுமையும், நிலப்பரப்பைவிட அதிகமான நீர்ப்பரப்பையும், அபாயகரமான இரைகொல்லிகளையும், புதைமணல் கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த, மனிதர்களால் இலகுவாக உள்நுழைந்துவிட முடியாத ஒரு வனமாக இருந்தது. இயற்கை தன் நுட்பத்தால் உருவாக்கிய இந்த பாதுகாப்பு வலயத்தினுள்ளே சென்று புகலிடம் தேடிக் கொண்டவர்கள் செமினோல்கள் மட்டுமல்ல அமெரிக்க தெற்கின் நிலக்கிழார்களின் கீழ் அடிமைகளாக இருந்து விடுதலை வேண்டி தப்பி சென்ற கறுப்பினத்தவர்களும் எவெர்கிலேட்ஸ் சதுப்பு வனத்தினுள் ஆழமாக சென்று மறைந்து வாழ்ந்தார்கள். இவ்வாறாக தப்பி ஓடி எவெர்கிலேட்ஸினுள் தஞ்சம் புகுந்த கறுப்பினத்தவர்களை செமினோல்கள் தம்மிடையே வரவேற்று அவர்களையும் தங்களில் ஒருவராக அங்கீகரித்தார்கள்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><a href="http://lh4.ggpht.com/-r2RsLKJGQS8/Ug9olKIgIiI/AAAAAAAAFtA/SOXK4gm1aQE/s1600-h/semi1%25255B3%25255D.jpg" target="_blank"><img align="right" alt="semi1" border="0" height="244" src="http://lh6.ggpht.com/--zw15Fqa-9U/Ug9ol7g7o9I/AAAAAAAAFtI/2t8NrdPIpf0/semi1_thumb%25255B1%25255D.jpg?imgmax=800" style="background-image: none; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; display: inline; float: right; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="semi1" width="177" /></a>இவ்வாறாக</strong> ஒதுங்கி இயற்கையின் பாதுகாப்பினுள் வாழ்ந்திருந்த பூர்வகுடிகளையும் தேடியழிக்க ராணுவம் நடவடிக்கைகளில் இறங்கியபோது அவர்களின் பிரதான எதிரியாக உருப்பெற்றது எவெர்கிலேட்ஸ் எனும் இந்த சதுப்புவனமே. இவ்வனப்பகுதியில் வழியைக் கண்டுபிடிப்பது ராணுவத்திற்கு மிகச்சிரமமான ஒன்றாக இருந்தது. வனத்தின் அடர்வுக்குள் மறைந்திருந்து தாக்கி மறையும் பூர்வகுடிகள் கூடவே இரைகொல்லிகள், புதைமணல்கள், எதிர்பாராமல் வந்து தாக்கும் நோய்கள் என அச்சூழலே அவர்களை எதிர்த்து தாக்கியது. அவர்கள் எதிர்கொண்ட இவ்வகையான தடங்கல்களை தவிர்க்கும் பொருட்டு இச்சதுப்புவனத்தினூடாக தம்மை சிரமங்கள் இன்றி வழிநடாத்தி செல்லக்கூடிய வழிகாட்டிகளின் சேவைகளை நாடிச் சென்றார்கள். அவ்வகையான வழிகாட்டிகளில் திறமையும், குரூரமும் ஒருங்கே படைத்த ஒருவனே லாபார்ஜ்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>வழிகாட்டிகளில்</strong> பெரும்பாலானவர்கள் ராணுவம் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி அவர்களை ஆபத்துகளை விலக்கி அழைத்து செல்பவர்களாகவே இருப்பார்கள். மோதல்கள் உருவாகும் சமயங்களிலே அவர்கள் ராணுவத்தின் பக்கமாக நின்று மோதுவார்கள். ஆனால் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கும் முன்பாகவே பூர்வகுடிகளின் தலைத்தொலிகளை வேட்டையாடி அதில் இன்பம் காண்பவனாக இருந்தவன் லாபார்ஜ். பூர்வகுடிகளை கொன்றொழிப்பதிலேயே அவன் மகிழ்ச்சி உதயமாகிறது. தன் இளமையில் ராணுவத்திற்கு தன் சேவையை வழங்கி அவன் அழித்தொழித்த பூர்வகுடிகளின் வாழ்க்கைகள் அதிகமே. இந்த செயலிற்கு துணையாக எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தில் பூர்வகுடிகளை மோப்பம் பிடித்து கண்டறிய அவன் சில நாய்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். மிகத்திறமையாக மோப்பம் பிடிக்கும் இந்நாய்கள் லாபார்ஜின் கட்டளைப்படி மனிதர்களை உயிருடன் குதறிக் கிழித்துப்போடும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன. இந்நாய்களுடனான நெருக்கமும், உறவும் லாபார்ஜையும் அந்நாய்களைப் போலவே மோப்பம் பிடிக்க கூடியவனாகவும், நுட்பமாக தடயங்களை தேடிச் செல்லக்கூடியவனாகவும் படிப்படியாக உருவாக்கியது. அந்நாட்களில் குரூரத்தில் சிறந்தது நாய்களா அல்லது லாபார்ஜா எனும் கேள்விக்கு விடையறிவது இலகுவான ஒன்றாக இருந்ததில்லை. கதையின் ஒரு தருணத்தில் செமினோல்களின் கிராமத்தில் நாய்களே இல்லை எனும் படிமம் முன்வைக்கப்படும்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><a href="http://lh5.ggpht.com/-nfv__WUsLX8/Ug9onN2JQeI/AAAAAAAAFtQ/LGIvIrd32DU/s1600-h/sem1%25255B3%25255D.jpg" target="_blank"><img align="left" alt="sem1" border="0" height="244" src="http://lh3.ggpht.com/-gqbzowbJTGg/Ug9onvel7EI/AAAAAAAAFtY/-xindJDvb_E/sem1_thumb%25255B1%25255D.jpg?imgmax=800" style="background-image: none; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; display: inline; float: left; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="sem1" width="177" /></a>டெக்ஸின்</strong> கதைகளின் எதிர்பாத்திரங்கள் எமகாதகர்களாக இருக்கின்ற வேளையில் கதைகளின் வேகமும், விறுவிறுப்பும் கணிசமான அளவில் அதிகரித்துவிடும். லாபார்ஜ் தன் குரூரம் வழியே டெக்ஸ் வாசகர்களின் மனதில் தன்னை நிறுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம். ஓச்சாலா மீது அவன் கொள்ளும் கொலைவெறி மிகவும் வேடிக்கையான ஒன்றாகவே கதையின் ஆரம்பத்தில் வாசகர்களிற்கு தோற்றம் தரும். ஓச்சாலா கைது செய்யப்படக் காரணமானவன் லாபார்ஜ்தான். அந்த சம்பவத்தின்போது லாபார்ஜை நோக்கி ஓச்சாலா துப்பாக்கி பிரயோகம் செய்கிறான். லாபார்ஜுடன் கூடவே சென்றிருந்த ராணுவவீரர்கள் ஓச்சாலாவின் துப்பாக்கி பிரயோகத்தை தற்பாதுகாப்பு என்பதாக கருதுகிறார்கள். ஆனால் லாபார்ஜோ அது தன்மீது நடாத்தப்பட்ட கொலைத்தாக்குதல் என்பதாக தீர்மானித்துக் கொள்கிறான். அக்கணம்முதலே ஓச்சாலா மீதான கொலைவெறி லாபார்ஜினுள் ஒரு மூர்க்கமான விலங்குபோல நடைபயில ஆரம்பிக்கிறது. கோட்டை காவலிலிருந்து ஓச்சாலா தப்பிச் சென்று விடும்போது அவனைத் தேடி டெக்ஸிற்கு முன்பாக செல்பவர்களில் லாபார்ஜும் இருக்கிறான். ஒரு தருணத்தில் ராணுவத்தினரை உதறிவிட்டு ஓச்சாலாவை தன் தனிப்பட்ட பிரச்சனையாக கொண்டு தனியாகவே ஓச்சாலாவை வேட்டையாடும் முயற்சிகளை ஆரம்பிக்கிறான்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>வயதில்</strong> முதுமை சற்றே வந்தேறி அமர்ந்துவிட்டாலும் கதையில் டெக்ஸிற்கு பெரும் தலைவலியாக அமைவது லாபார்ஜ்தான். ஆனால் கதையின் வில்லன் லாபார்ஜ் இல்லை. டெக்ஸ்தான். லாபார்ஜிற்கு அவர் செய்யும் செயல்களையும் அவற்றில் ஒலிக்கும் தொனிகளையும் அவதானிக்கும்போது அவரை ஒரு நாயகன் எனச் சொல்ல முடியாது. வயதான நிலையில், தனக்கு துணையாக நாய்களும் இல்லாத நிலையில், ஓச்சாலாவைவிட டெக்ஸை கொல்லும் வெறி தன்னுள் நீர்மட்டம்போல உயர உயர பெருமேற்கின் பெருநாயகனான டெக்ஸின் மிரட்டல்கள் முன் மடிந்துவிடாது மனவுறுதியுடன் தன் இலக்கு நோக்கி குரூரமிழக்காது பயணிக்கும் லாபார்ஜ் இக்கதையின் உச்ச நட்சத்திரம் என்றால் அது மிகையல்ல.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>காவலில்</strong> இருந்து தப்பியோடிய ஓச்சாலா ஒரு செமினொல். எனவே அவன் லூசியானாவிலிருந்து எவெர்கிலேட்ஸ் நோக்கி விரைகிறான். லாபார்ஜ் அவனை பின் தொடர்வதை தடுப்பதோடு அவனை தான் பின் தொடர்வதையும் டெக்ஸ் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எவெர்கிலேட்ஸ் சதுப்புவனத்தின் ஆழமான பகுதியில் வாழ்ந்திருந்த ஓச்சாலா லூசியானா நோக்கி வந்ததிற்கும் அவன் அங்கு ஆற்றிய கொலைகளிற்கும் காரணம் என்ன எனும் கேள்வி டெக்ஸ் மனதில் எழுகிறது. அதற்கான காரணங்களை தன் கதையோட்டத்துடன் சலிப்பின்றி விபரிக்கிறார் கதாசிரியர் ஜினோ ட அண்டோனியோ. அது என்ன என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளும் தருணம் யார் யாரால் வேட்டையாடப்படுகிறார்கள் எனும் கேள்வியின் விடையானது மெல்ல மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>டெக்ஸ்</strong> வாழ்ந்திருக்கும் மேற்கானது தான் உருவாக்கிய மேற்கிலிருந்து வேறுபட்ட ஒன்று எனச் சொன்னவர் இக்கதையின் கதாசிரியரான ட அண்டோனியோ. அவரின் Storia del West பெருமேற்கு குறித்த சித்திரக்கதை படைப்புக்களில் மிக முக்கியமான ஒன்றாகும். 1967 களில் அவர் ஆரம்பித்த மேற்கின் கதை எனும் அத்தொடர் பல சித்திரக் கலைஞர்களின் திறமையான ஒத்துழைப்புடன் 1980 வரை தொடர்ந்து நிறைவுற்றது. ஏறக்குறைய 7500 பக்கங்கள் கொண்ட தொடரிது. எனினும் பொனெலியின் வேண்டுகோளிற்கிணங்கி ட அண்டோனியொ உருவாக்கியிருக்கும் இந்தக் கதை டெக்ஸ் கதைகளின் வழமையாகிய மிகையான தர்க்க மீறல்களை தன்னில் இயன்றளவு விலக்கி கொள்ள முயன்றிருக்கிறது ஆனால் முழுமையாக அல்ல. ஓச்சாலா, லாபார்ஜ் போன்ற பாத்திரங்களை அவர் டெக்ஸை விட மிக சிறப்பானவைகளாக உருவாக்கி இருக்கிறார். டெக்ஸை ஒரு முரட்டு மனிதனாக காட்டுவதில் ட அண்டோனியா வெற்றி பெற்றிருக்கிறார். கார்சனிற்கு இக்கதையில் அதிக பங்கு கிடையாது. கதையின் ஆரம்ப பகுதியிலேயே காலில் அடிபட்டவராக ஃபோர்ட் பிளிஸில் சிகிச்சை பெற சென்று அங்கு தங்கி விடுகிறார் அவர். கார்சனின் இடத்தை இட்டு நிரப்ப யேசு எனும் வழிகாட்டியை தன் உதவிக்கு சேர்த்துக் கொள்கிறார் டெக்ஸ். அடர் சதுப்புவனமான எவெர்கிலேட்ஸில் டெக்ஸிற்கு வழிகாட்டியாக செயற்படுபவன் யேசு எனும் கறுப்பு இனத்தவனே. ப்ளோரிடாவின் சதுப்புக்காடுகளினுள் டெக்ஸ் ஏற்கனவே டிஸ்கோ டான்ஸ் ஆடியிருந்தாலும் லாபார்ஜிற்கு எதிராக தனக்கு ஒரு துணை தேவை என்பதை அவர் கதையில் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><a href="http://lh6.ggpht.com/-N8Qs9li8yLc/Ug9oo31Dj4I/AAAAAAAAFtg/otVX3IB0Rcc/s1600-h/sem2%25255B6%25255D.jpg" target="_blank"><img align="right" alt="sem2" border="0" height="244" src="http://lh5.ggpht.com/-W5BSJ7opx5o/Ug9opYB4VuI/AAAAAAAAFtk/aITQs3Wy3_Q/sem2_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" style="background-image: none; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-right-width: 0px; border-top-width: 0px; display: inline; float: right; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;" title="sem2" width="174" /></a>எவெர்கிலேட்ஸின்</strong> சிட்டிசனான ஒரு ராட்சத முதலையுடன் டெக்ஸ் கட்டிப்பிடித்து போடும் சண்டை பசுபிக் ரிம் கைஜு மோதல் காட்சிகளை மிக்கி மவுஸ் கார்ட்டூன் நிலைக்கு படியிறக்கி விடுகிறது. இச்சண்டைக்காட்சியை பார்த்த ஒரு கைஜு இந்த மவராசான் கிட்ட நான் அடிபடனும், அவர் கைல நான் சாவனும் என தன் உளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆற்றில் மிதந்தபடியே ராட்சத முதலை டெக்ஸ் நீ ஆம்பளயா இருந்தா உள்ள ஒத்தைக்கு ஒத்தை வாடா என சவால்விட பதிலுக்கு டெக்ஸ் விடும் பஞ்ச் டயலாக்கில் சுனாமிகளை உருவாக்ககூடிய ஐந்து பூமியதிர்ச்சிகளின் சக்தி அடங்கி அதிர்ந்து எவெர்கிலேட்ஸையே ஆடச்செய்கிறது. அப்புறம் அந்த முதலைக்கு என்ன ஆச்சு என நீங்கள் உங்கள் மனதில் கேள்வி எழுப்பினால் இதுவரையில் தலைவர் டெக்ஸின் கதைகளை படித்திராத அபாக்கியசாலிகள் நீங்கள் என்பது இங்கு உறுதியாகிறது.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong>ட அண்டோனியோ</strong> எழுதியிருக்கும் கதையின் முக்கிய திருப்பங்கள் நிகழும் எவெர்கிலேட்ஸ் பகுதிகளை அப்படியே வாசகரிடம் சித்திரங்களில் வழங்கியிருப்பவர் <strong>Lucio Filippucci</strong>. மர்ம மனிதன் மார்டின் கதைகளிற்கு சித்திரங்களை வரைபவர்களில் ஒருவர் இவர். மிகத் தெளிவான கோடுகள் வழியாகவும் கறுப்பு, வெள்ளை வண்ணங்களின் செறிவு வேறுபாடு, ஒளிசேர்முறை வழியாகவும் சிறப்பான சித்திரங்களை அவர் இக்கதைக்கு வழங்கியிருக்கிறார். அதுவும் எவெர்கிலேட்ஸ் பகுதிக்குள் கதை நுழைந்துவிட்ட பின்பாக பின்னி எடுத்து இருக்கிறார் மனிதர். அடர்காட்டின் தாவரச்செழுமையை ஊடறுத்துக் கொண்டு ஒளிப்பட்டையாக நீளும் சூரியன் வாசகர் மனதில் இலகுவாக இடம் பிடிக்கிறான். சதுப்புவனச்சூழலை அவர் வரைந்து வழங்கியிருக்கும் திறமையில் ஒரு சில கணங்கள் நிலைத்து அதில் அவர் சேர்த்துக் கொண்டிருக்கும் தகவல்களையும் அதற்கு பின்பாகவுள்ள அவர் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தெளிவாக ஒருவரால் அவதானித்திட முடியும். லாபார்ஜ் எனும் பாத்திரத்திற்கு ஃபிலிபூஸ்ஸி உயிர் தந்திருக்கும் விதம் அபாரமானது. குறிப்பாக அவனது முகம். கொலைவெறி நடனமிட, அவன் முகத்தில் ஏளனமாக நளினக்கோலமிடும் குரூரமும் அவன் முகபாவனைகளும் வாசகர்கள் நினைவில் சிறிது காலம் நிலைக்கவே செய்யும். செமினோல் பூர்வகுடிகள், அவர்கள் வாழிடங்கள் போன்றவற்றையும் நுட்பமான தகவல்களுடன் அவர் சித்திரங்களாக உருவாக்கியிருக்கிறார். சித்திரங்களும், கதையும் இணைந்து டெக்ஸின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அரிதான கதைகளில் செமினோலிற்கும் இடமுண்டு.</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
</div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
</div>
</div>
கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com5