tag:blogger.com,1999:blog-2858306095029043871.post5944827115068422273..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: அன்புடன்..நரகத்திலிருந்து..கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67583500290108218242009-03-11T21:05:00.000+01:002009-03-11T21:05:00.000+01:00டேவிட், உங்கள் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்க...டேவிட், உங்கள் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் என் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.<BR/><BR/>புலா சுலாகி, உங்கள் விளக்கத்தினால் தெளிவுற்றேன், மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.<BR/><BR/>ரஃபிக், காமிக்ஸ்களிற்கு தான் நீங்கள் முன்னுரிமை தருவீர்கள் என்பதில் ஐயமில்லை. படத்தை ரசித்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். மீண்டும் வந்து கருத்துக்களைப் பதிந்து சென்றதிற்கு என் நன்றிகள்.<BR/><BR/>பதிவைப்படித்தும், கருத்துக்களை இட்டும் என்னை ஊக்குவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52707884554030806392009-03-06T10:55:00.000+01:002009-03-06T10:55:00.000+01:00காதலரே, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் என்...காதலரே, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் என்றுமே தனி மனிதன் துதி பாடுபவன் அல்ல. அதோடு தனி மனிதன் துவேஷம் கொள்வதும் என் பாணி கிடையாது. படைப்பாளிகளை வெறுத்து, ஒதுக்குவதை விட, அவர்கள் படைப்புகளை விமர்சிப்பதே சிறந்த காமிக்ஸ் ரசிகனுக்கு அழகு. அவ்வடிப்படையிலேயே நான் ஆலன் மூர் பற்றிய என் கருத்தை தெரிவித்தேன். சென்ற பதிவில் நான் வாண்டட் என்று கூறி இருப்பதை வாட்ச்மேன் என்றும், 300 ஐ (அது ஃப்ராங் மில்லர் காவியம் என்று இப்போது தான் உறைத்தது) விலக்கியும் படிக்கவும்.<BR/><BR/>நீங்கள் கூறிய நாவல்களை படிக்க முயற்சிக்கிறேன். ஆனால் சமீபத்தில் வாங்கிய காமிக்ஸ் கட்டே ஒரு பலகை முழுவதும் ஆக்ரமித்து கொண்டுள்ளது. ஆகவே, அவற்றுக்கே முன்னுரிமை :)<BR/><BR/>One Flew Over படத்தை தருவித்து விட்டேன். பார்த்து விட்டு பின்பு கருத்தை வெளியிடுகிறேன். உங்கள் படைப்புகள் 1000 பக்கத்தையும் ஒரு பக்கத்தில் தாரளமாக விமர்சிக்குமே, அதில் எனக்கு ஐயமே கிடையாது.<BR/><BR/>ராகா என்று அடித்ததே அதற்காக தானே. இந்த வார கடைசிக்குள் அந்த வலைப்பூ புதிய பதிவை பெறும்.<BR/><BR/><B>ரஃபிக் ராஜா</B><BR/><B><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">காமிக்கியல்</A></B> & <B><A HREF="http://ranicomics.blogspot.com/" REL="nofollow">ராகா</A></B>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23894533399808605592009-03-03T05:45:00.000+01:002009-03-03T05:45:00.000+01:00Attack On the Srilankan Team:Thilan Samaraveera, O...Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.<BR/><BR/>A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.Ravindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62026351487488557732009-03-02T16:07:00.000+01:002009-03-02T16:07:00.000+01:00ரஃபிக்,குரூரங்கள் வாழ்வில் ஒர் அங்கமாகி விட்ட காலங...ரஃபிக்,<BR/><BR/>குரூரங்கள் வாழ்வில் ஒர் அங்கமாகி விட்ட காலங்களில் வசிக்கிறோம். நிஜ வாழ்வின் குரூரங்கள் கதைகளில் நாம் காண்பதை விட வேதனைகள் தருபவை.<BR/><BR/>காப்பகங்களில் உள்ள மிருகங்களைப் போலவே நாமும் எங்களினுள் உள்ள மிருகங்களைக் பிறரிற்கு காட்டாது வாழப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். என்ன, சில பேர் காட்டி விடுகிறார்கள்.<BR/><BR/>வில்லியம் கடவுள் ஆக விரும்புகிறான். கொலை அவனிற்கு ஒர் தியானம்,அவன் கடவுள் ஆனானா என்பதை விவாதிக்க வேண்டியதில்லை.ஆனால், கடவுளின் பெயரால் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற பலிகளிற்கு மனித சமூகம் தந்த, தந்து கொண்டிருக்கின்ற விளக்கங்கள் தான் என்ன.<BR/><BR/>ஒர் நாயகன், நாயகனாவது அவரவர் பார்வையிலேயே. அதனால் தான் விஜய்க்கும், அஜிதிற்கும் தனி ரசிகர் மன்றங்கள் இங்கு உள்ளன. ஒர் கதாசிரியன் தன் கற்பனை வெளிப்பாட்டில் உருவாக்கும் நாயகர்கள் எல்லாரிற்கும் பிடித்தே ஆக வேண்டும் என்பது ஒர் கட்டாயமல்ல. அலன் மூரை ஒரு கதைக்காக புறந்தள்ளல் நல்லதல்ல.<BR/><BR/>குடும்பத்தினர் எதிர்ப்புத்தெரிவித்தால் தான் என்ன, எழுத்துச் சுதந்திரம் மகத்தானது அல்லவா. <BR/><BR/>ரஃபிக், சிறிய நாவல்கள் மூலம் நீங்கள் உங்கள் வாசிப்பை வளர்க்க வேண்டும். PERFUME- THE STORY OF A MURDERER BY PATRICK SUSKIND சிறிய நாவல் ஆனால் அற்புதமானது. படித்துப் பாருங்கள்.<BR/><BR/>கழுத்திற்கு ஒரு கயிறுவின் இன்னும் சில பக்கங்கள் விரைவில் வெளியாகும்.<BR/><BR/>அழகு, நேர்த்தியை விட அருவருப்பு தரும் திருப்தி மேலானது. எவ்வகை சித்திரங்களையும் கதையின் தரத்திற்காக நீங்கள் ஒரு நாள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நான் நம்புகிறேன்.<BR/><BR/>கதையைப் படிக்கும் போதே டயானா நினைவிற்கு வந்து விட்டார் , அரச குடும்பத்தின் மானத்திற்கு இன்றும் பங்கம் வர விடமாட்டார்கள். பதிவைப் படித்த போதே உங்களிற்கு அவர் நினைவிற்கு வந்தது பற்றி உண்மையிலேயே எனக்கு மகிழ்சி, கதையின் உள்ளடுக்குகளில் இதனையும் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.<BR/><BR/>ONE FLEW OVER THE CUKOOS NEST- BY KEN KESSY எனும் அற்புதமான நாவலைத்தழுவி MILOS FORMAN இயக்கிய, JACK NICHOLSON தன் நடிப்புத்திறமையால் என்னைக் கலங்கடித்த நாவலின் அதே பெயரைக் கொண்ட ஆங்கில திரைப்படத்தின் தழுவலே அத்தமிழ் திரைப்படம். மன்னிக்கவும் பெயர் மறந்து விட்டது. தயவு செய்து ஆங்கில திரைப்படத்தினை ஒர் முறை பாருங்கள் ரஃபிக்.<BR/><BR/>அவ்வரிகள் யாவும் என்னுடையவை, அலன் மூரிற்கு உரிமை கிடையாது.<BR/><BR/>free masonபலிச் சடங்குகளின் வழக்கப்படியே கழுத்து இடமிருந்து வலம் அறுக்கப்படுகிறது. கவுதம் மேனன் அச்சகோதரத்துவத்தை சேர்ந்தவரா என்பது தான் கேள்வி.<BR/><BR/>ஏறக்குறைய 400 பக்கங்களின் கதைச்சுருக்கமே இப்பதிவு. உங்கள் கருத்துக்கள் போன்ற கருத்துக்களிற்காக நான் 1000 பக்கங்களையும் பதிவிடலாம். உங்களின் விரிவான இக் கருத்துக்களிற்காக என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.<BR/><BR/> ராகா என்று புதிய வலைப்பூ ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைத்து ஏமாந்ததுதான் வேடிக்கை.<BR/><BR/>தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-64582741766215364182009-03-02T13:43:00.000+01:002009-03-02T13:43:00.000+01:00கனவுகளின் காதலரே, ஜாக் த ரிப்பர் கதையை நீங்கள் முண...கனவுகளின் காதலரே, ஜாக் த ரிப்பர் கதையை நீங்கள் முண்ணோட்டமாக போட்ட போது கூட, நான் அது இவ்வளவு குரூர வர்ணைகளுடன் இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.<BR/><BR/>காப்பகங்களிள் வளரும் மிருகங்களுக்கு முடிந்த வரை ரத்த வாடை தெரியாத உணவுகளையே படைப்பர் என்றும், அதன் காரணம் அவற்றின் மிருக குணம் வெளி பட்டு விட கூடாது என்பது தான் என்றும் படித்திருக்கிறேன். மனிதனும் மிருகம் தானே, அவனுடைய மூர்க்க குணங்களுக்கு ஒரு அடைப்பு தாள் தான் நம் வாழும் சமூகம் என்று கூறுவர். ஆனால், ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவனின் கூரூர எண்ணங்கள் எவ்வகை பிரதிபலிப்பாக வெளியாகும் என்பதற்கு உதாரணம், ஜாக் த ரிப்பர் தொடரில் வரும் கொளைஞனே. <BR/><BR/>அரச குடும்பத்துகாக கொலை செய்ய ஆரம்பிக்கும் வில்லியம், பிற்பாடு அந்த கொலைகளில் ஒரு அமைதியை தேடி வெறியுடன் காரியமாற்றுவதை படித்த போது நெஞ்சம் பாரம் ஆனது உண்மையே. ரத்தம், ரத்தம், மனிதன், மிருகம்,கடவுள், நித்யம், ரத்தம், ரத்தம் அவனுக்கு பொருந்தும் வாக்கியம்.<BR/><BR/>பிரிட்டிஸ் நாயகர்களை விரும்பிய கூட்டம், ஆலன் மூரை ஒதுக்கி தள்ளலாம். ஆனால், காமிக்ஸ் காவியங்களை, கிராபிக் நாவல் என்ற ஒரு அடைமொழிக்கு பதவி உயர்வு செய்து வைத்ததில் இவர் பங்கு இன்றியமையாதது. வான்டட், 300 போன்ற காவியங்கள் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு. நமது அபிமான கதாபாத்திரங்களை அவர் தவறாக கையாண்டு விட்டார் என்று ஆல்பியன் தொடரை நாம் வெறுத்தாலும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, கதை கருவுடன் பயனித்தால் அந்த கதையும் ஒரு சிறந்த முயற்சி என்று நான் எண்ணுகிறேன். <BR/><BR/>த ஹெல் கதை தொடரில், சரித்திரத்தில் வாழ்ந்த மேல் தட்டு மக்கள், மற்றும் வருமை கோட்டு வாசிகளை அவர் உபயோக படுத்தி இருப்பது, உயர்ந்த சமுதாயம் என்று தன்னை தானே கூறி கொள்ளும் மக்களின் மனசாட்சிக்க ஒரு சவுக்கடி. நிஜ மனிதர்களை கதாபாத்திரங்களாக உலவ விட்டிருப்பது இன்னும் சிறப்பு. அந்த மனிதரின் வாரிசுகள் யாரும் இந்த காமிக்சுக்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்து இருப்பார்களா ? <BR/><BR/>நான் பொதுவாக எழுத்துகள் அதிகம் இருக்கும் எந்த புத்தகத்தையோ, அல்ல பதிவுகளையோ அதிகம் படிப்பதில்லை. நாவல்கள் மேல் என் அபிப்ராயத்துக்கு காரணமும் அதுவே. ஆனால் உங்கள் மொழி நடை, முக்கியமாக இது ஒரு காமிக்ஸ் பற்றிய பதிவு என்பதால் ஆர்வத்துடன் படித்து முடித்தேன், முடிவில், உங்கள் எழுத்துகள் மூலம் ஆலன் மூரின் இந்த காமிக்ஸ் காவியத்தை எனக்கு அறிமுகம் படுத்தியதற்கு நன்றிகள். <BR/><BR/>ஆனால் இந்த கொலை கதையை பற்றி படித்ததில் இருந்து மீள இன்று ஒரு லக்கி லுக் சாகசத்தை வீட்டில் படித்தே தீர வேண்டும் :)<BR/><BR/>எடி காம்ப்வெல் திறமையில் முழுக்க கோடுகளின் மூலம் வெளியான சித்திரங்கள் கிளாசிக் டச்சுடன் இருந்தாலும், ஓவியங்கள் மூலம் ஒரு காமிக்ஸில் ஐக்கியமாகும் எனக்கு இந்த சித்திரங்கள் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை. <BR/><BR/>காதலரே, காமிக்ஸ் பதிவர்களிள் கதையோடு பயணித்து விமர்சிபதில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை. தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் எழுத்துலக பணியை<BR/><BR/>கூடவே பிட் தகவலுக்கு, மற்றும் குஜாலுக்கு ==<BR/><BR/>// விவகாரம் வெளியில் கசியாது இருக்க வேண்டுமாயின் ஆனி மெளனமாக வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறாள் விக்டோரியா மகாராணி //<BR/>ராணிக்கு காதல் பறவைகள் மேல் இருக்கும் கோபம் அடையில்லாதது என்று தோன்றுகிறது. சார்லஸ் டயானா கதையில் நடந்ததும் அது தானே<BR/><BR/>// கொண்டு வரப்படும் ஆனியை தன் சிகிச்சையின் மூலம் பித்துப்பிடித்தவள் ஆக்குகிறான் வில்லியம் //<BR/>இப்படி ஒரு கதையை பிரபு நடித்த ஒரு படத்தில் அவரை நல்லவரில் இருந்த பைத்தியமாக்குவது போல சித்தரித்திருப்பார்கள். அந்த படம் பெயர் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? கதாநாயகியாக சரண்யா மற்றும் டாக்டராக சரத்பாபு தோன்றுவார்கள் அதில். <BR/><BR/>// ஆண்களின் காமத்திற்கும் சுவர்களிற்குமிடையில் உக்கிரமாக நெரிக்கப்படும் அவள் //<BR/>அருமையான வரிகள். இவை புத்தகத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யபட்டதா ? இல்லை காதலரின் சாகஸ சிதறலா ? :) ;)<BR/><BR/>// கத்தியை இடமிருந்து வலமாக இழுத்து பொலியின் கழுத்தினை அறுக்கிறான் வில்லியம் //<BR/>கமலஹாசன் சமீபத்தில் நடித்து வெளி வந்த வேட்டையாடு விளையாடு படத்தில் இரு சைக்கோ டாக்டர்கள் கொலை செய்யும் விதம் இதற்கு கொஞ்சமும் மாற்றம் இல்லை. ஒரு வேளை அந்த படத்திற்கு த ஹெல் தான் மூலமோ?<BR/><BR/><BR/>பி.கு. உங்கள் மின்னஞ்சலுகளுக்காக நான் இன்னும் பதில் அளிக்காமல் இருப்பதற்கு காரணம் வேலை பளுதான். சீக்கிரத்தில் ஒரு பெரிய பதிலை நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் எதிர்பார்ககலாம். <BR/><BR/>அப்பா, இந்த பிண்ணூட்டத்தை தட்டச்சு செய்ய உழைத்த உழைப்பிற்கு நான் ஒரு பதிவே இட்டு இருப்பேன். :)<BR/><BR/><B><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">ÇómícólógÝ</A> & <A HREF="http://ranicomics.blogspot.com/" REL="nofollow">ராகா</A></B>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-57782457019348879692009-02-28T17:07:00.000+01:002009-02-28T17:07:00.000+01:00கிரேப்ஸ் தோட்ட முதலாளி,ஜோஸ் தாத்தாவையாவது விட்டுத்...கிரேப்ஸ் தோட்ட முதலாளி,<BR/><BR/>ஜோஸ் தாத்தாவையாவது விட்டுத்தள்ளிரலாம், ஆனா அந்த வயக்கரா தாத்தா என்ன செய்ஞ்சான் தெரியுமா, 3 பென்சுக்களை இளம் பெண்கள் முன்னால் குலுக்கிக் காட்டுகிறாராம், கலிகாலம் தான், வேறு என்ன சொல்லகனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-19891739930739446592009-02-28T15:20:00.000+01:002009-02-28T15:20:00.000+01:00கனவுகளின் காதலனே, இது உமக்கே நன்றாக இருக்கிறதா? இந...கனவுகளின் காதலனே, <BR/><BR/>இது உமக்கே நன்றாக இருக்கிறதா? இந்த பதிவை படித்ததில் இருந்த ஊரில் உள்ள அனைத்து திராட்சை பழங்களையும் நண்பர் ஜோஸ் வாங்கி குவித்து விட்டாராம். <BR/><BR/>கடந்த ஒரு வாரமாக கையில் திராட்சையுடன் அவர் மார்கட்'ல் நின்று கொண்டு பல இளம் மங்கையரை பயமுருத்துகின்ராராம். என்ன கொடுமை சார் இது? <BR/><BR/>நண்பர் ஜோஸ்'ஆல் பயனடைந்த திராட்சை தோட்ட அதிபர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-31156703866178799912009-02-27T20:52:00.000+01:002009-02-27T20:52:00.000+01:00வணக்கம், மிகவும் திகிலான கதை. உண்மைச்சம்பவம் எனும்...வணக்கம், மிகவும் திகிலான கதை. உண்மைச்சம்பவம் எனும்போது மனதை உலுக்குஹின்றது. காமிக்ஸ்சினூடே வரலாறைச் சொல்லும் போது வாசிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கின்றது.சந்தற்பம் கிடைத்தால் நிச்சயமாக முளுக்கதையையும் படிக்க ஆசைப்படுகின்றேன். தொடருங்கள் உங்கள் எளுதுப் பயணத்தை.tharanihttps://www.blogger.com/profile/11229057640741864019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22632041785149844222009-02-26T18:59:00.000+01:002009-02-26T18:59:00.000+01:00என்னுடைய அழைப்பை ஏற்று உங்களின் வருகைக்கு நன்றி தி...என்னுடைய அழைப்பை ஏற்று உங்களின் வருகைக்கு நன்றி திரு கனவுகளின் காதலனே, <BR/><BR/>பார்த்திபன் நடித்த தமிழ் படம் "இவன்". அதில் திரு டி.பீ கஜேந்திரன் அவர்கள் மிகவும் குள்ளமாக இருப்பார்.அதற்காக அவர் மற்ற படங்களில் எல்லாம் உயரமாக இருப்பாரா என்று வினவ வேண்டாம். குடி போதையில் அவரை பார்த்து பார்த்திபன் "நீ எழுந்து நின்னு பேசு" என்பார். <BR/><BR/>அதற்க்கு அவர் "டேய், நான் நின்னுகிட்டு தாண்டா இருக்கேன்" என்பார். அப்போது அவரை பார்த்து காமெடியாக பார்த்திபன் சொல்லும் வார்த்தை தான் புலா சுலாகி. இதனை நையாண்டியாகவும் கொள்ளலாம். டபுள் மீனிங் ஆகவும் கொள்ளலாம்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56212369754902791412009-02-26T07:48:00.000+01:002009-02-26T07:48:00.000+01:00ஹ்ம்ம்... மிக பெரிய பதிவு தான்.... வேலை பளுவின் வூ...ஹ்ம்ம்... மிக பெரிய பதிவு தான்.... வேலை பளுவின் வூடே முழுக்க படிக்க முடியவில்லை.... மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வார கடைசியில் நீண்ட பின்னூட்டம் இடுகிறேன்.<BR/><BR/><B><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">ÇómícólógÝ</A></B>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84535875377332450062009-02-25T16:53:00.000+01:002009-02-25T16:53:00.000+01:00நண்பர் ஸ்டீவ் ஹாலந்து என்று மாறறி படிக்கவும்.நண்பர் ஸ்டீவ் ஹாலந்து என்று மாறறி படிக்கவும்.தமிழ் காமிக்ஸ் உலகம்https://www.blogger.com/profile/12321180473317832620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78906837154980789232009-02-25T16:51:00.000+01:002009-02-25T16:51:00.000+01:00வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு உண்மையை கூறி இருக்க...வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு உண்மையை கூறி இருக்கும் கனவுகளின் காதலனே (இளைய தளபதி கிங் விஸ்வா),<BR/><BR/>நீங்கள் கூறுவது உண்மையாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் நான் படித்த ஆலன் மூர் கதைகள் (சிலவே ஆகினும்) மொக்கையாக இருந்ததுவே காரணம். <BR/><BR/>ஆனால், நீங்களும் நண்பி ஸ்டீவ் ஹாலந்தும் ஆலன் மூறை பற்றி உயர்வாகவ்ரி கூறுகிறீர்கள். எனவே அடுத்த முறை முயற்சி செய்கிறேன். <BR/><BR/>பல தளங்களில் இருந்து சிறப்பான காமிக்ஸ் கதைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் உங்கள் பணி அரியது. தொடருங்கள்.<BR/><BR/>கிங் விஸ்வா.தமிழ் காமிக்ஸ் உலகம்https://www.blogger.com/profile/12321180473317832620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-62404592378568541942009-02-25T16:37:00.000+01:002009-02-25T16:37:00.000+01:00இளைய தளபதி கிங் விஸ்வா அவர்கட்கு,முதன்மைக் கருத்து...இளைய தளபதி கிங் விஸ்வா அவர்கட்கு,<BR/><BR/>முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி, மரியினதும், கேத்தியினதும் சுட்டிகள் மேல் க்ளிக்கினால் அவர்களிற்கு நடந்த கொடுமையின் போட்டோக்கள் இருக்கின்றன, பார்க்க விரும்பினால் பாருங்கள். அதனுடன் ஒப்பிடுகையில் என் பதிவின் வன்முறையின் அலகு குறைவானதே. தயங்கி தயங்கியே இப் பதிவினைத் தயார் செய்தேன்.நண்பர்களின் வரவேற்பை பற்றி எண்ணினாலும், இக்கதையை நான் பதிவிடா விட்டால் அது என் மனசாட்சிக்கு செய்த துரோகம் ஆகிவிடும். நண்பர்களிற்கு இயன்ற வரை தரமான காமிக்ஸ்களை அறிமுகம் செய்தலே என் நோக்கம். இப்பதிவின் மூலம் அதனை மீள வலியுறுத்தி இருக்கின்றேன். அலன் மூரைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் மாறும், ஏனெனில் வாட்ச்மேனைப் படிக்கும் வரையில் என் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் இடையேயிருந்த வித்தியாசம் மிகச்சிறிதே. வன்முறையை நீங்கள் உணர்ந்தால் அது எடி காம்ப்வெல்லினதும், மூரினதும் வெற்றி. கதையிலிருந்து விடுபட எனக்கு உதவியது லக்கிலூக்கின் கழுத்திற்கு ஒர் கயிறு.<BR/><BR/>நீங்கள் கூறிய தொடர்கள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நிச்சயமாக நேர அவகாசங்களின் படி அவற்றை பற்றியும் படித்தால் போயிற்று.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-92211065458106333412009-02-25T15:59:00.000+01:002009-02-25T15:59:00.000+01:00கனவுகளின் காதலனே,உங்கள் எழுத்திலேயே இவ்வளவு வன்மம்...கனவுகளின் காதலனே,<BR/><BR/>உங்கள் எழுத்திலேயே இவ்வளவு வன்மம் தெளிக்கிறதே, கதையில் எவ்வளவு இருக்கும்? <BR/><BR/>இந்த கதை யுத்தியை (கதையுடன் வரலாற்று சம்பவங்களை இணைப்பது) டாவின்சி கோட் தொடரிலும் அமைந்து இருப்பதை கவனித்தீரா? <BR/><BR/>சமீப காலங்களில் இப்படி வரலாற்று உண்மைகளுடன் இணைக்கப் பட்ட கதைகள் பெரும் வெற்றியை பெற்று உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.(Martin Mystery Also)<BR/><BR/>எனக்கு பிடித்த சில சீரிஸ்: <BR/><BR/>டார்க் ஸ்கைஸ்: பிரபல தொலைக் காட்சி தொடராக வந்த இதன் புத்தக வடிவமும் என்னை கவர்ந்தது. கடந்த பத்து வருடங்களில் நான் தேடி வாங்கிய ஒரே ஆங்கில நாவல் இது தான். கென்னடி மரணத்தை ஏலியன் வருகையுடன் இணைத்து எழுதப்பட்ட கதை இது. பின்னர் AXN'ல் பதினெட்டு வாரங்கள் தொடராக வந்தது. என்னுடைய கல்லூரி நாட்களில் பார்த்த தொடர். இப்போதும் கூட H.B.O .வில் முதல் இரண்டு பாகத்தை ஒலி பரப்பும்போது தவறாமல் பார்கிறேன். <BR/><BR/>இதன் சுட்டி இதோ:http://en.wikipedia.org/wiki/Dark_Skies<BR/><BR/>பார்ஸ்ட் வேவ்: நாஸ்ட்ரேடெமஸ் கூறிய கருத்துக்களில் உள்ள உண்மைகளை தற்கால நிலைமைக்கு பிரித்து அதன் மூலம் ஏலியன் வருகையை தடுக்க நினைக்கும் ஒரு மனிதனின் போராட்டம் தான் இந்த கதை. இதன் சுட்டி இதோ: http://en.wikipedia.org/wiki/First_Wave_(TV_series)<BR/><BR/>நீங்கள் இந்த தொடரை பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? <BR/><BR/>முடிந்தால் இந்த தொடர்களை படியுங்கள்.<BR/><BR/>கிங் விஸ்வா.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3943032172953526462009-02-25T14:48:00.000+01:002009-02-25T14:48:00.000+01:00அருமை நண்பர் கனவுகளின் காதலனே,நாந்தான் முதலில் கமெ...அருமை நண்பர் கனவுகளின் காதலனே,<BR/><BR/>நாந்தான் முதலில் கமெண்ட் இடும் பெருமையை பெறுகிறேன். இப்போது சில விஷயங்கள்:<BR/><BR/>நான் எப்போதுமே ஆலன் மூர் ரசிகன் அல்ல. அதனால் அவரின் கதைகள் என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது.அதற்காக நான் வருத்தப்பட்டதும் கிடையாது. <BR/><BR/>ஆனால் எடி கம்பெல் அவரின் சித்திர கலை மிகவும் அருமை என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.<BR/><BR/>இந்த கதையின் திரைப் படம் அவ்வளவு சிறப்பானது அல்ல என்பது என் கருத்து (என் அபிமான ஜானி டெப் நடித்து இருந்தாலும் கூட)<BR/><BR/>நீங்கள் திகில் காமிக்ஸ் இதழின் இரண்டாவது இதழை படித்து இருகிறீர்களா? அதில் டிராகுலா மற்றும் ஜாக் த ரிப்பர் ஆகியோரை மைய்யமாக கொண்டு ஒரு சிறுகதையும் வந்தது.<BR/><BR/>கிங் விஸ்வா.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com